பல்லவர்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010


பல்லவர்  தம்மைப் 'பரத்வாச கோத்திரத்தார்' எனக் கூறுதல் கட்டுக்கதை. இவர்கள் சிறந்த சத்திரியரே. கதம்பமயூர சன்மன் இவர்களைப் 'பல்லவ சத்திரியர்' என்று கூறியதாகத் தாளகுண்டாக் கல்வெட்டு கூறுகிறது. எனவே, பல்லவர் சத்திரியர் ஆவர். அவர்கள் வாகாடகர், சாலங்காயனர் முதலிய பிற அரச மரபினரோடு தொடர்பு கொண்டனர். ஆயின், தமிழ்வேந்தர் ஆர், வேம்பு, பனை இவற்றைத் தம் மரபுக்கு அடையாளமாகக் கொண்டவாறே ஆந்திர நாட்டிலிருந்து வந்த பல்லவரும் தமிழ் முறை பற்றித் தம்மைப் (பல்லவக்கொடி - தொண்டைக்கொடி பற்றிப்) பல்லவர் என அழைத்துக் கொண்டனர் ஆவர். (57)

காடவர் முதலிய பெயர்கள்

காடவன், காடவர்கோன், காடுவெட்டி என்பன பல்லவர்க்குப் பிற்காலத்தில் வந்த பெயர்கள். கி.பி. 8ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே பல்லவர் கல்வெட்டுகளில் இவை பயில்கின்றன; வேற்றரசர் கல்வெட்டுகளிலும் வருகின்றன. எனவே, இப்பட்டங்கள் தமிழ் மக்களால் இடப்பட்டதாகல் வேண்டும். பல்லவர் காடுகளை அழித்து நாடாக்கினமை இதனால் நன்கு புலனாகிறது. (58)

பின்குறிப்புகள்

48. Vide Dr.S.K.Aiyangar's Int to "The Pallavas of Kanchi" by R.Gopalan

49. D.Sircar's Successors of the Satavahanas, pp.97-140

50. Ibid. pp. 73,82,83

51. Ibid pp.163-165

52. Dr.K.Gopalachari's 'Early History of the Andhra country', pp.151-159

53. D.Sircar's Successors of the Satavahanas, pp.56,52

54. Ibid, Iat pp.3-4

55. 'பப்ப' என்பது 'அப்பன்' என்னும் பொருளது. இச்சொல் பல பட்டயங்களில் வருதல் கண்கூடு ஆதலின், இஃது ஒரு மனிதன் பெயரன்று. எனவே, சிவஸ்கந்தவர்மன் தந்தை பெயர் இன்னதென்பது தெரியவில்லை. Vide. D. Sircar's Successors of the Satavahanas, p.183-184, and Dr. G. Minzkshi's "Administration and Social Life under the Pallavas" pp.6-10

56. Vide Dr.S.K.Aiyangar's Valuable Introduction to the "Pallavas of the Kanchi", by R.Gopalan.

57. Dr.C.Minakshi's "Administration and Social Life under the Pallavas", pp 12-13


THE_WAR_THAT_CHANGED_TAMILIAN_HISTORY
பழந்தமிழ்நாடு
1. மதுரை
2 தஞ்சை
3. வஞ்சி
4. திருச்சிராப்பள்ளி
5. காஞ்சி


பழம்பாடல்களில் பழமொழிகள் உவமைகள் முதலியவற்றை எடுத்தாள்வது குறித்து முன்பு ஒரு மடலில் கண்டோம்.

சுந்தமூர்த்தி நாயனார் திருப்புறம்ப்ம் என்னும் தலத்து ஈசனைப் பற்றி பாடிய திருப்பதிகம் ஒன்று உண்டு.

திருப்புறம்பயம் என்னும் ஊர் ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க ஊர். தமிழகத்தின் வரலாற்றையே மாற்றிவிட்ட போர் ஒன்று அங்கு நடைபெற்றது. மூன்று பேரரசுகளின் விதி அந்தப் போரில் நிர்ணயிக்கப்பட்டு புதிய பேரரசு ஒன்றினுக்கு வித்திடப்பட்டது.

பாடலைப் பார்ப்போம்.

படையெலாம் பகடு ஏற ஆளினும்
பவ்வம் சூழ்ந்தரசு ஆளினும்
கடையெலாம் பிணைதேரைவால்
கவலாதெழு மட நெஞ்சமே
மடையெலாம் கழுநீர் மலர்ந்து
மருங்கெலாம் கரும்பாடத்தேன்
படையெலாம் நாறுசோலைப்
புறம்பயந்தொழப் போதுமே

இதில் நாம் கவனிக்கவேண்டியது இந்த வரியை -

'கடையெலாம் பிணை தேரைவால்'

பாடலின் கருத்து இது:

'படைகளெல்லாம் யானைகளின்மீது வரக்கூடிய அளவுக்கு ஆண்டாலும், ஆளப்படும் அரசு நான்கு கடல்களையும் எல்லையாகக்கொண்டு பரந்துவிரிந்திருக்கூடிய அளவுக்குப் பேரரசாக இருந்து, அதனை ஆண்டாலும், அதெல்லாம் போகும் காலத்தில் தேரையின் வால் போலக் காணாமல் போய்விடும்.
ஆகவே திருப்புறம்பயத்தின் ஈசனை தொழவேண்டும். அதுவே நித்தியம'்.

இதிலுள்ள நயம் அந்த தேரையின் வால். அதுதான் கவனத்தை ஈர்த்தது.
தேரை, தவளை முதலியவை Amphibia என்னும் உயிரின வகுப்பைச் சேர்ந்தவை. பிறவியில் முதல் பாதியை முழுக்க முழுக்கத் தண்ணீருக்குள் இருந்து கழிக்கும். மீனைப் போல செவுளைக ்கொண்டு நீரிலுள்ள பிராணவாயுவை சுவாசித்துக்கொண்டு உயிர்வாழும். அப்போது அதற்கு மீனைப்போலவே வாலும் இருக்கும். அதனை Tadpole என்று குறிப்பிடுவார்கள். பிற்பாதியில் பெரிதாகும்போது நுரையீரல் வளர்ந்துவிடும். ஆகவே நீருக்கு வெளியில் வந்து காற்று மண்டலத்தின் பிராணவாயுவை சுவாசித்து உயிர் வாழும்.
தேரை பெரிதாகப் பெரிதாக அதன் வால் குறைந்துகொண்டே வந்து மறைந்துபோய்விடும்.
அதுபோலவே போகூழ் காலத்தின்போல் தேரையின்வால் மறைவதுபோல் பேரரசும் பெருவாழ்வும் மறைந்துபோய்விடும் என்பது பாடலின் கருத்து.
இதில் உள்ள உவமை: 'கடையெலாம் பிணை தேரைவால்'
திருப்புறம்பயம் அல்லது திருப்புறம்பியம் என்பது கும்பகோணத்துக்கு அருகிலுள்ளதோர் ஊர்.
கிபி 880-ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற போர் திருப்புறம்பியப்போர் என்று குறிப்பிடப்படும்.
கடைச்சங்க காலம் என்பது கிபி 285-உடன் முடிவுக்கு வந்துவிட்டது.
கடற்கோள், புயல்கள், கடலில் நிகழ்ந்த எரிமலைக்குமுறல், கடலுக்குள் நிலச்சரிவு என்ற பலவித காரணங்களாலும் பனிப்படலங்கள் உருகியதால் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வினாலும் தமிழகத்தில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. பாண்டிநாட்டின் கணிசமான முக்கியமான பகுதிகள் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டன. மக்கள் தொகை வெகுவாகக்குறைந்தது. மக்களும் கூட்டங்கூட்டமாகக் குடி பெயர்ந்தனர்.
பத்து தலைமுறைகளுக்கு இந்த நிலை நீடித்தது.
சங்க கால சமுதாய வாழ்வியல் அழிந்துபோனது.
அப்போதிருந்த மூவேந்தர்கள் என்னும் முடியுடை வேந்தர்களான சோழர், பாண்டியர், சேரர் ஆகியோர் வலுவிழந்துபோயினர்.

இந்த சமயத்தில் பல குடியினர் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்து அதனைக் கைப்பற்றி, மேலும் மேலும் குடியேறி, புதிய அரசுகளைத் தோற்றுவித்தனர்.
முக்கியமாகக் களப்பிரர் என்னும் குடியினர் தமிழகத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அவர்களின் காலத்தில் தமிழர்களின் பழைய நாகரிகம் மாறிப் போனது.
பார்த்தியாவிலிருந்து வந்த பல்லவர், பாணர், சகர் முதலிய குடியினர் இந்தியாவில் பரவலாயினர். பல்லவர் என்போர் ஆந்திரப் பேரரசு நிலவிய காலத்தில் அவர்களின் உயர் அதிகாரிகளாகவும் படைத ்தலைவர்களாகவும் கவர்னர்களாகவும் இருந்தனர். பின்னர் அவர்கள் ஆந்திராவில் வடபெண்ணை ஆற்றினருகில் தனிநாடு உருவாக்கிக்கொண்டனர். அங்கிருந்து தெற்கேயுள்ள தமிழ்நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றினர். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு பல்லவ அரசை ஏற்படுத்தினர். தொண்டை மண்டலத்தின் பெரும் பகுதி காடாக இருந்தது. அதனைத் திருத்தி விவசாய நிலங்களாக்கி நாட்டை வளப்படுத்தினர். இதன் காரணமாக அவர்களுக்குக் 'காடுவெட்டி' என்றும் 'காடவர்' என்றும் பெயர் ஏற்பட்டது. அப்போதிருந்த பல
குடிநாடுகளைக் கைப்பற்றி பல்லவர்கள் தங்களின் மேலாண்மையை நிலை நிறுத்திக்கொண்டனர்.
சிம்ம விஷ்ணு என்னும் பல்லவன் காலத்தில் தமிழகத்தில் பல்லவர்கள் மிக வலுவாக தாபித்துக்கொண்டுவிட்டனர்
தென்கிழக்காசியாவிலும் பல்லவத்தின் செல்வாக்குப் பரவியது.

பொதுவாகவே இந்திய நாட்டில் இருந்த மன்னர்களுக்கும் மக்களுக்கும் போர்க்குணம் மிகுந்திருந்தது. ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் இரண்டு மூன்று நாடுகளிலோ பேரரசுகளிலோ சிதறியிருப்பார்கள்.

கோல்கொண்டாவைச் சேர்ந்த மராத்தியரும் பீஜாப்பூரைச் சேர்ந்த மராத்தியரும் சிவாஜி வகையறா மராத்தியரும் ஒருவருடன் ஒருவர் போரிடுவார்கள். கோல்கொண்டாவைச் சேர்ந்த தெலுங்கர்களும் பீஜாப்பூர் தெலுங்கர்களும் விஜயநகரத் தெலுங்கர்களைப் போட்டு மொத்துவார்கள். அப்போது ராஜமஹேந்திரத்துத் தெலுங்கர்கள் ஏதாவது பக்கத்தில் சேர்வார்கள். அல்லது தமக்கு ஏதும் லாபமிருக்கிறதா என்று பார்ப்பார்கள். கன்னடிகரும் வரலாற்றுக் காலமுழுவதிலும் இரண்டு மூன்று நாடுகளில் சிதறியிருந்தார்கள். பிரிட்டிஷ் இந்தியாவில்கூட அவர்கள் பாம்பே, மெட்ராஸ், மைசூர், ஹைதராபாத், பீடார், மராத்தா சமஸ்தானங்கள் முதலியவற்றில் இருந்தார்கள். இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரே கர்நாடகாவில் ஒன்று சேர்ந்தார்கள்.

சங்க காலத்தில் சேரர்கள் சோழர்கள், பாண்டியர்கள், அதியமான்கள், தொண்டைமான்கள், பதினெண்குடி வேளிர்கள், தங்களுக்குள் போரிட்டுக்கொண்டேயிருந்தார்கள். 'நான்மொழிக் கோசர்' போன்றோர் ஏதாவது ஒரு பக்கம் இருபபர்கள். சில சமயங்களில் 'வம்ப மோரியர்', 'முனையெதிர் வடுகர்' வந்து மாட்டுவார்கள். அப்போது 'ட்ரமிட தேச சங்காத்தம்' என்ற பெயரில் கூட்டணி அமைத்துப் போரிடுவார்கள்.


இதேதான் பல்லவர் காலத்திலும் நடைபெற்றது.
சாளுக்கியர் vs பல்லவர், பல்லவர் vs பாண்டியர், பல்லவர் vs இலங்கை, பாண்டியர் vs சேரர் என்று போர்கள் நடந்தவண்ணமிருந்தன. சாளுக்கியர்களை ராஷ்ட்ரகூடர்ஒடுக்கியபின்னர் அவர்களும் இதே மாதிரி கட்சி கட்டிக்கொண்டு போரிட்டனர்.
இது ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டும் நடந்தவையல்ல.
கிபி 600-இலிருந்து 900 வரைக்கும் இதே கதைதான்.
http://illamsingam.blogspot.com/2010/08/blog-post_17.html

No comments: