கிராமத்தின் தேவைகள்---5

0 c

கேபிள் மூலம் இணைய இணைப்பு தேவை

90% வீடுகளில் தற்போது தொலைக்காட்சி ஒரு பொழுது
போக்கு சாதாணமாக இருக்கின்றது. தொழில் செய்ய விரும்புவோர் கேபிள் வழி
இணைய தொடர்பு (Cable Internet using DOCSIS) கொடுத்தால் கிராமத்தில்
அனைவருக்கும் உதவியாக இருக்கும்.  


அது மட்டுமன்றி 90% மக்கள் வெளிநாட்டு தொடர்பு உள்ளவர்கள். வெளி
நாட்டுக்கு தொடர்பு கொள்ளவும் அவை எளிதாக இருக்கும்.  

தொலைபேசி இணைப்பகத்தில் "ஒளி இழை" (fiber optic
telephone exchange) தொடர்பு உள்ளது. BSNL மூலம் கேபிள்லில் இணையத்தை
இணைப்பதற்கு அவை உதவியாக இருக்கும்.


நன்றி  :http://needs.kasangadu.com/

கிராமத்தின் தேவைகள்---4

1 c

சூரிய சக்தி குழு விநியோகிப்பாளர்கள் தேவை

சூரிய சக்தி மூலம் குறைந்த செலவில் மின்சாரம்
எடுக்க தற்போது தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளது.  

தற்போதுள்ள இத்துறையில் உள்ள முன்னோடி நிறுவனத்தை பற்றி இங்கே
காணலாம்.

கிராமத்தின் தேவைகள்---3

1 c

குடும்பத்தில் ஒருவருக்கு வருடம் முழுவதும் வேலை வாய்ப்பு தேவை

அரசாங்கத்தின் வருடத்திற்கு நூறு
நாள் வேலைவாய்ப்பு திட்டம் (NREGA)
கிராமத்திற்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.

வருடம் முழுவதும் வேலை வைப்பு
கிடைக்கும் வகையில் தொழில் ரீதியாகவோ அல்லது அரசு வேலைவாய்ப்பு மூலம்
செய்தால் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பங்களின் வாழ்க்கைக்கு பெரிதும்
உதவியாய் இருக்கும்.

கிராமத்தின் தேவைகள்---2

1 c

தானியங்கி வானிலை நிலையம் தேவை

தானியங்கி வானிலை நிலையம் தேவை. அரசாங்கம்
அளிக்கும் வானிலை அறிக்கைகள் வாழ்க்கைக்கு உபயோகமற்றதாக அமைகின்றது. நாளை
முழுவதும் மழை என்றால் மறுநாள் முற்றிலும் சுல் என்று வெயில் அடிக்கும்.
வெயில் என்றால் மழை பொழியும்.


மனிதன் இவ்வாறு செய்யும் வேலைகளில் குறைகள்
இருக்கும் என்பதற்காக தான் தானியங்கி வானிலை நிறுவனங்கள் அதை நிவர்த்தி
செய்ய இருக்கின்றன. எங்கள் கிராமத்திற்கு அது அவசியம் ஒன்று தேவை. அதோடு

கிராமத்தின் தேவைகள்---1

0 c

சோழர் செப்பேடுகள் கண்டுபிடிப்பு

0 c
பிற்காலச் சோழர்களின் சரித்திரம் அடங்கிய பழங்கால செப்பேடுகள் மயிலாடுதுறையை ஒட்டிய கிராமம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில், மயிலாடுதுறையிலிருந்து ஆனதாண்டவபுரம் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது.
தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை மூலம் இந்தக் கோயிலில் முன் மண்டபம் கட்டும் பணிக்காக குழி தோண்டியபோது, பத்து அடி ஆழத்தில் சோழர் காலத்தைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செப்பேடுகள், 12 செப்புத் திருமேனிகள், பூசைப் பொருள்கள், வாத்தியக் கருவிகள், போன்றவை கிடைத்துள்ளன.
கிடைத்துள்ள புதிய செப்பேடுகள் மூலம் பல்லவர்களிடமிருந்து தஞ்சாவூரை சோழர்கள் கைப்பற்றியதாக, ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
முத்தரையர்கள் என்ற சிறு மன்னர்களிடமிருந்து தஞ்சையை சோழர்கள் கைப்பற்றியதாகவே இது வரை வரலாற்று ஆசிரியர்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால் இந்த செப்பேடுகள் தஞ்சை பற்றி முன்பு அறியப்படாத விபரங்களைத் தருவதாகவும் ஆய்வாளரும் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனருமான ரா.நாகசாமி தமிழோசையிடம் தெரிவித்தார் .
தற்போது கிடைத்திருப்பவைதான் இந்தியாவிலேயே இதுவரையில்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான செப்பேட்டுத் தொகுதிகள் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்செப்பேடுகள் தமிழிலும் சமஸ்கிரத்திலும் எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த செப்பேடுகள் கிபி 1053 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி கூறியுள்ளார்.
இந்த செப்பேடுகளை கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்த இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகனான இரண்டாவது ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார்.
இந்த செப்பேடுகள் செய்யுள் வடிவில் எழுதப்பட்டுள்ளதாகவும், போரை நேரில் பார்த்த ஒருவர் அதை வருணிப்பதுபோல இந்த தகவல்கள் அமைந்துள்ளன என்றும் நாகசாமி குறிப்பிட்டார்.
http://www.bbc.co.uk/tamil/news/story/2010/06/100619_cholainscriptionsfound.shtml

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

0 c
கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் செல்வத்தை சுரண்டியது என்று பள்ளியிலும் பத்திரிக்கைகளிளும் படித்து இருக்கிறோம். ஆனால் அது எவ்வாறு பொருளாதார மற்றும் தொழில் ரீதியாக இந்தியாவை சுரண்டியது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெளிவாக தெரியாது.வரலாற்றை தெளிவாக தெரிந்து வைத்து கொள்வது பிழைகளை திரும்பி செய்வதை தவிர்க்குமல்லாவா?

கடல் வழி வாணிபம் என்பது பல காலமாக பணம் கொழிக்கும் தொழிலாக இருந்தது.அரசாங்கங்களும் தங்கள் நாட்டு வணிபர்களின் தடையற்ற வியாபாரத்திற்காக பல வழிகளிலும் உதவி வந்தனர்.தற்போது இருப்பது போல் மின்னனு பொருட்கள், கார்கள் போன்றவை அந்த காலத்தில் இல்லை. எனவே அந்த கால வணிபம் என்பது வாசனை பொருட்கள் சார்ந்த உணவு பொருட்கள், துணிகள், ஆடம்பர பொருட்கள் சார்ந்ததாகவே இருந்து.பல நுற்றாண்டுகளாக ஜாவா, இந்தோனிசியா, இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் வாசனை பொருட்களுக்கும் சீனா மற்றும் இந்திய துணி வகைக்களுக்கும் உலக சந்தையில் பெரும் மதிப்பு இருந்தது.இந்த வாசனை பொருட்கள் வியாபாரத்தில் தங்களது நாட்டை சேர்ந்த வணிபர்களின் உதவிக்காக போரை நடத்துவது பல காலமாக நடைமுறையில் இருந்துள்ளது.பல நூறு ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் ஜவா,சுமத்திரா போன்ற நாடுகளின் மேல் நடத்தபட்ட போர், உலக வரலாற்றில் வியாபாரத்திற்காக நடத்தபட்ட போர்களில் ஒன்று.

இந்தியா,சீனா, இந்தோனிசியா போன்ற நாடுகளில் இருந்து வியாபார பொருட்களை அய்ரோப்பாவிற்கு கொண்டு செல்ல இரு வழிகள் இருந்தது. ஒன்று பட்டு பாதை(Silk Route) எனப்படும் சீனா,மத்திய ஆசியா வழியாக செல்லும் நில வழி பாதை. மற்றொன்று அரேபியா வரை கடல் வழியும் அங்கிருந்து அய்ரோப்பாவிற்கு தொடர்ந்து செல்லும் நில வழி பாதை.இந்த இரு பாதைகளில் வியாபாரம் நடந்தாலும் எகிப்து மற்றும் அரேபியர்களை தாண்டி செல்ல வேண்டி இருந்ததால் அவர்களது ஆதிக்கம் அதிகம் இருந்தது.

எகிப்து மற்றும் அராபியர்களின் கட்டுபாட்டில் இருந்த வாசனை பொருட்கள் வாணிபம், இந்தியாவிற்கு கடல் வழி கண்டு பிடிக்க பட்ட பின் அய்ரோப்பியர்களின் கட்டுபாட்டிற்கு வர தொடங்கியது.நிலம் மற்றும் கடல் மூலம் வாணிபம் நடந்த வரை, ஆசியாவில் இருந்த பல நாடுகளில் இருந்த வணிபர்கள் இடைதரகர்களாக இருந்து லாபத்தின் பெரும் பகுதியை அனுபவித்து வந்தனர். முழுமையான கடல் வழி வாணிபம் தொடங்க பட்ட பின் ஒட்டு மொத்த லாபமும் அய்ரோப்பிய வாணிபர்களின் கைக்கு போக தொடங்கியது.

கடல் வழி கண்டு பிடிக்க பட்ட பின், ஆசியாவிற்கிடையேயான வாசனை பொருட்கள் வாணிபம் முதலில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஸ்பெயின் நாட்டினர் வசம் இருந்தது. ஸ்பெயின் நாட்டினர் இங்கிலாந்திற்கு எதிராக கடல் வழி போரை தொடுத்து 1588ம் ஆண்டு தோல்வி அடைந்தனர். இந்த சமயத்தில் டச்சுகாரர்களால் டச்சு கிழக்கிந்திய கம்பெனியும் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனியும் ஆரம்பிக்க பட்டது. இவை இரண்டும் தான் முதன் முதலில் தொடங்க பட்ட பன்னாட்டு கம்பெனிகள் எனலாம்.1600ம் ஆண்டு டிசம்பர் 31ம் நாள் கிழக்கிந்திய கம்பெனி தொடங்க பட்டது. அது ஆரம்பிக்க பட்ட போது அதன் பெயர் Governor and Company of Merchants of London Trading into the East Indies.ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு கப்பலின் கடல் பிரயாணமும் தனி தனி வியாபாரம் போல் எடுத்து கொள்ள பட்டு அதற்கென்று தனி முதலீட்டாளர்கள் இருந்தனர்.பின்னர் 1657ம் ஆண்டு தற்போதைய பெரிய கம்பெனிகள் போல் பங்குகளை தனியாருக்கு வினியோகித்து கூட்டு பங்கு வணிக முறையில் செயல்பட்டு வந்தது.

பல கம்பினிகள் ஆரம்பிக்க பட்டால் போட்டி ஏற்பட்டு விலை குறைந்து லாபம் கிடைக்காது என்பதால் டச்சு மற்றும் ஆங்கிலேய அரசுகள் அந்த இரு கம்பெனிகளுக்கும் வாசனை பொருள் வாணிபத்திற்கு தனியுரிமை கொடுத்தது.1615 ம் ஆண்டு முகலாய மன்னர் ஜகாங்கீருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து சூரத் நகரில் கிழக்கிந்திய கம்பெனி தன் தொழிற்சாலை மற்றும் தளத்தை அமைத்து கொள்ள அனுமதி அளிக்கபட்டது.அதன் பிறகு பல நகரங்களில் கிழக்கிந்திய கம்பெனி தன் தொழிற்சாலையை தொடங்கியது(சென்னையில் 1639 ம் வருடம்). 1647 ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி 23 நகரங்களில் தன் தொழிற்சாலைகளை தொடங்கி இருந்தது.வியாபரத்தில் ஈடுபட்ட கிழக்கிந்திய கம்பெனிக்கு நாடுகளின் மீது போர் தொடுக்கவும்,ஆட்சி அமைக்கவும், தனி படையை வைத்து கொள்ளவும் 1670ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் அனுமதி அளித்தார். கிழக்கிந்திய கம்பெனி ஒரு சாதாரன கம்பெனியாக இருந்தாலும், இந்த முடிவின் விளைவாக பிற்காலத்தில் 20% உலக மக்கள் தொகையை ஆளவும், இங்கிலாந்தை விட அதிக அளவு வருமானத்தை ஈட்டவும் , சுமார் 250000 பேர் கொண்ட படையை வைத்து நடத்தவும் வழி வகுத்தது.
thanks
http://tamilfuser.blogspot.com/2010/06/1.html

நாடு ---- கூற்றம்

0 c
தஞ்சையின் சுற்றுப்புற பகுதிகள் நாடு என்ற அமைப்பின் கீழ் நிர்வாக வசதிக்காக சோழர்கள் காலத்தில் இருந்தே இருந்து வருவதாக தெரிகிறது. இந்த நாடு என்ற அமைப்பில் 18 கிராமங்கள் அடங்கியது ஒரு நாடாக கருதப்படும்.

நான்கு நாடுகள் அடங்கியது ஒரு கூற்றம் என்றும் சோழர்கள் காலத்தில் இருந்ததாக எங்கோ படித்திருக்கிறேன். இந்த நிர்வாக அமைப்பின் படி ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒன்றிலிருந்து நான்கைந்து நாட்டாமைகள் இருப்பார்கள்.அதாவது ஆதிகாலத்தில் ஒருவருக்கு மூன்று குழந்தைகள், அந்த மூவரின் குழந்தைகளுக்கு அவரவர் அப்பா நாட்டமை,அப்படியே குடும்பம் பெரிதாகி,ஊராகிவிட்டாலும் இப்போது மூன்று கரைகள், மூன்று நாட்டாமைகள்.

இந்த நாட்டாமை பதவி குடும்பத்தில் மூத்த ஆண் வாரிசுகளுக்கு சென்றுவிடும். இவர்கள் கிராமத்தில் கோவில் திருவிழா வரி வசூலிப்பது, ஊர் ஏரி குளங்களை மராமத்து செய்வது,பொதுச்சொத்துகளை பாதுகாப்பது, மற்றும் ஊரில் எழும் சிறிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பது போன்றவைகளை செய்யும் நிர்வாகிகள்.இந்த நாட்டுக்கு ஒரு பெரிய நாட்டாமை இருப்பார் இவரை நாட்டம்பலம் என்று அழைப்பார்கள்.நாட்டுக்குள் அடங்கிய இரண்டு ஊருக்குள் பிரச்சினை என்றால் தீர்வுக்கு அம்பலங்கள் சேர்ந்து தீர்வு காண முயல்வார்கள்.எனக்கு தெரிந்தவரை இந்த நாட்டாமைகள் ஊரைவிட்டி ஒதுக்கிவைத்தல் போன்ற சினிமாவில் வரும் தீர்ப்புகள் சொல்பவர்கள் அல்ல.பிரச்சினைகளை காவல்துறை,வெட்டு குத்து என்று செல்லாமல் தடுக்கும் ஒரு நிர்வாகிகள்.

இந்த நான்கு நாடு அமைப்பில்(கூற்றம்) ஒன்று தலைநகரம் அந்த நாடு வளநாடு என்று அழைக்கப்படும் உதாரணம்- காசவளநாடு, கோநகர் நாடு, தென்னவநாடு,கீழ்வேங்கை நாடு என நினைக்கிறேன். இதில் காசவளநாடு தலைநகரம்.காசவளநாட்டைச் சேர்ந்தவர்கள் தம் ஆளுகைக்கு உட்பட்ட மூன்று நாடுகளிலும் திருமண உறவு வைத்துக்கொள்ளமாட்டார்கள்.(இப்போ ஆளுகையெல்லாம் கிடையாது)பொதுவாக திருமணங்கள் 90% அந்த நாட்டுக்குள்ளேயே முடிந்துவிடும், சில திருமணங்கள் நாடு தாண்டி நடக்கக்கூடும். இது போல நிறைய நாடுகள் உண்டு. உதாரணம்- பாப்பாநாடு,ஒரத்தநாடு,பைங்காநாடு..

இதிலும் இந்த வளநாட்டுக்காரர்கள் அறுத்துக்கட்ட மாட்டார்கள்.(கைம்பெண் மறுமணம்). மற்ற மூன்று நாடுகளில் கைம்பெண் மறுமணம் தொண்று தொட்டே உண்டு. ஒரு நாட்டுக்காரர்கள் மற்ற நாட்டுக்காரர்களின் பழக்க வழக்கங்களை நக்கல் செய்வது கலையின் ஆரம்பம் இங்கே.

நாட்டுத்திருவிழாக்கள் களைகட்டும் பெரிய திருவிழா இவை நாட்டின் தலைநகரில் இருக்கும் கோவிலில் நடக்கும், தஞ்சை மாவட்ட இளைஞர்கள் இம்மாதிரி திருவிழாவிற்கு கோவிலுக்கு செல்வர் பக்தியால் அல்ல. அங்கே வரும் இளைஞிகளை கணக்கு பண்ண.சில இளைஞிகள் விழலாம், தவறினால் இளைஞர்களுக்கு விழும்.பெரும்பாலும் இரண்டாவதே நடக்கும் ஏனென்றால் பெண்களுக்கு வரும் காவல் அப்படி இருக்கும்.மற்ற நேரங்களில் கோவிலில் சீட்டு விளையாட செல்லுவார்கள்.

மேலே சொன்ன அனைத்தும் ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே பொருந்தும். மைனாரிட்டி ஜாதியாக இருந்தால் அவர்களுக்கும் ஒரு அம்பலம் இருப்பார்,பெரும்பாலான கோவில்களில் அவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்படும், தேங்காய் மூடியும் வாழைப்பழமும்தான்.பெரும்பாண்மை சாதியிலும் வீட்டோட மாப்பிள்ளையா வந்து குடியேறுபவர்களுக்கு தேங்காய் மூடி கிடைக்க வாய்ப்பே இல்லை.ஏனென்றால் இவர்கள் அந்த ஊரின் வந்தேரிகள்.).

ஜாதியின் வீரியம் குறைந்து காணப்பட்டாலும் அந்த கட்டமைப்பு இன்னும் உள்ளது என்பதை மறுக்க முடியாது.அந்த கட்டமைப்பில் சட்டம் போட்டு ஒழிக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் பொருளாதார/வழிபாட்டு உரிமை கொண்டு வர முடியும் அதற்கான பதிவை பின்னர் எழுதுகிறேன். சாதிசூழ் உலகு என்ற பெயரில் பதிவர் நடைவண்டியின் பதிவு தெளிவாக உள்ளது,எனக்கு சில மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் அந்த பதிவில் உள்ளதில் பெரும்பாண்மை மறுக்கமுடியாது.

ந்தியா, இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா... இதெல்லாம் நாடுகள் என்று தெரியும். கப்பலூர், உஞ்சனை, கோனூர்.. போன்ற பெயர்களிலும் 'நாடுகள்' இருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கக்கூடும். ஆனால் உண்மை. தமிழகத்தின் பல பகுதிகள் நாடுகளாக பிரிவுற்றிருக்கின்றன. இது நண்பர்கள் பலருக்குப் பழைய செய்தியாகக்கூட இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும், ஒரு ஆவணப்படுத்தும் முயற்சியாகவுமே இந்தக் கட்டுரை.

ஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம், வடுவூர் பகுதியில் அமைந்திருக்கிற கிராமங்கள் அனைத்தும் 'நாடு' என்ற கட்டமைப்புக்குள் உள்ளடங்கி வருகின்றன.

பதினெட்டு அல்லது அதை ஒட்டிய எண்ணிக்கையில் அமைந்த கிராமங்கள், ஒரு நாடாக கருதப்படுகிறது. உதாரணமாக காசவளநாடு என்ற நாட்டிற்குள், பஞ்சநதிகோட்டை, தெக்கூர், புதூர், கோவிலூர், நெல்லுபட்டு, ஆழிவாய்க்கால், காட்டுக்குறிச்சி, கொல்லாங்கரை, வேங்குராயன்குடிகாடு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, நடுவூர், விளார், கண்டிதம்பட்டு, சாமிப்பட்டி... இப்படி நிறைய கிராமங்கள் உண்டு. இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தாங்கள் இன்ன நாட்டுக்கு உட்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்தும்விதமாக தங்கள் ஊருக்கு முன்பு, தங்கள் நாட்டுப் பெயரில் முதல் எழுத்தைப் போட்டுக்கொள்வார்கள்(உ-ம்: கா.புதூர்).

இதே போல கீழ்வேங்கை நாடு, சுந்தரவளநாடு, கோனூர் நாடு.. ஏராளமான நாடுகள் உண்டு. இந்த நாடுகளுக்கு, அதற்குள் அமைந்த ஏதாவது ஒரு கிராமம் தலைமை கிராமமாக இருக்கும். அந்த ஊரில் அந்த நாட்டுக்கென்று ஒரு கோயில் இருக்கும். இந்த நாட்டுக்கோயில்களுக்கு வருடம் ஒருமுறை ஏதாவது ஒரு விழா நாளில் திருவிழா நடக்கும். அந்த நாட்டுக்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து காவடி, பால்குடம் எடுத்து, பல கிலோமீட்டர் தூரம் தூக்கிவருவார்கள். பக்கத்து ஊர்க்காரனை விட சிறப்பாக செய்ய வேண்டும் என்று எல்லா வருடமும், எல்லா ஊர்க்காரர்களும் போட்டி போடுவார்கள். நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு மக்களெல்லாம் திருவிழா பார்க்க வருவார்கள். ஒரு வெட்டுக்குத்தாவது இல்லாமல் எந்த திருவிழாவும் முடியாது. இப்போதும் எல்லாம் நடக்கத்தான் செய்கிறது. மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை குறைந்து கார், டூ வீலர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.. அவ்வளவே.

'ஒவ்வொரு நாட்டுக்கென்றும் ஒரு நாட்டாமை இருப்பார், ஒரு கிராமத்துப் பிரச்னை அவர்களுக்குள் தீர்க்க முடியாமல் கைமீறி போனதென்றால், அந்த நாட்டாமை தலையிட்டு தீர்த்து வைப்பார், அவரது சொல்தான் இறுதி தீர்ப்பு' என்று ஒரு தலைமுறைக்கு முன்பிருந்த நடைமுறையை, இப்போதும் பெருசுகள் பேசிக்கொள்வார்கள். இம்மாதிரியான நாட்டாமை நடைமுறைகள் இப்போதில்லை எனினும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுடன் திருமண உறவுகள் வைத்துக்கொள்வதில்லை என்பதுபோன்ற விதிகள், 90 % ஏற்பாட்டுத் திருமணங்களில் கடைபிடிக்கத்தான்படுகின்றன.

இந்த நாடு என்ற அமைப்பு, கிராமங்களை ஒன்றிணைக்கும் நிர்வாக அமைப்பாக இருந்தாவெனத் தெரியவில்லை.. ஆனால், சாதியைக் கட்டிக்காக்கும் சாதனமாக இருந்திருக்கிறது/ இருக்கிறது என்பது மட்டும் உண்மை. நாட்டுக்கோயில்களுக்கு திருவிழா சமயத்தில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காவடி, பால்குடம் எடுத்துச் செல்வார்கள் என்று பார்த்தோம் இல்லையா..? அதற்காக ஊரெங்கும் ஒரு வீடுவிடாமல் வரி வாங்குவார்கள். குறிப்பிட்ட ரூபாய் அல்லது அதற்கு இணையான அளவில் நெல் என்ற அந்த வரி, எந்த கிராமத்திலும், தலித்துகளிடம் வாங்கப்படுவதில்லை. ஒரு கிராமம் முழுக்க தலித்துகள் வசிக்கிறார்கள் என்றால், அந்த நாட்டுக்கு உட்பட்ட கிராமங்களின் எண்ணிக்கையில் அந்த தலித் கிராமங்களை சேர்க்கவே மாட்டார்கள். உதாரணமாக தெற்கு நத்தம், நாட்டரசன்கோட்டை போன்ற ஊர்களில் முழுக்கவே வசிப்பது தலித்துகள்தான். 'காசவளநாட்டு' கணக்கில் அவற்றை காண முடியாது.

நாடு என்னும் கட்டுமானம் அமைந்திருக்கும் கிராமங்களில் பெரும்பான்மையாக இருப்பது கள்ளர் சாதியைச் சேர்ந்தவர்களே. இவர்கள், தங்கள் சாதி மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள எல்லா காலங்களிலும் இந்த அமைப்பை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பழைய சட்டத்திட்டங்கள் அனைத்தும் காலாவதியாகிவிட்டாலும் தலித்துகளுக்கு எதிரான சமயங்களில் மட்டும் எல்லோருக்கும் சட்டென 'நாட்டு'ப்பற்று வந்துவிடுகிறது.

ஏதாவது ஒரு கிராமத்தில் தலித்துகளுக்கும், கள்ளர் சாதியினருக்கும் பிரச்னை என்று வந்துவிட்டால் முதலில் அவர்கள் செய்வது, 'இனிமேல் தலித்துகளுக்கு உள்ளூரில் வேலை கிடையாது' என்று தடை விதிப்பதுதான். வேறு வழியின்றி பக்கத்து ஊர்களுக்கு வேலைக்குப்போனால் அங்கும்போய், 'ஒரு நாட்டுக்காரன்.. நீங்களே இப்படி செய்யலாமா..?' என்று 'நியாயம்' கேட்டு, அந்த நாட்டுக்குட்பட்ட எந்த கிராமங்களிலும் அவர்களுக்கு வேலை கிடைக்காதபடி செய்தால்தான் அவர்களுக்கு நிம்மதி. பொருளாதார ரீதியாக கள்ளர்களின் வயல்களில் விவசாயக்கூலிகளாக இருக்கும் தலித்துகளால் வேறெதுவும் செய்ய இயலாது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றியிருக்கும் பகுதியில் இந்த நாட்டமைப்பு இப்போதும் முழு அளவில் உயிரோடு இருக்கிறது. உஞ்சனை நாடு, கப்பலூர் நாடு, அஞ்சுக்கோட்டை நாடு, செம்பொன்மாற்றி நாடு, இரவுச்சேரி நாடு.. என்று இந்தப்பகுதி முழுக்கவே நாடுகளாக பிரிவுற்றிருக்கின்றன. தஞ்சையைப் போலல்லாமல் இங்கு, பதினேழரை கிராமங்கள், இருபத்தி இரண்டரை கிராமங்கள் என்று விநோதமான நில அமைப்பில் நாடுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுக்கான தலைவரையும் 'நாட்டு அம்பலம்' என்றழைக்கிறார்கள். திருவாடனை தொகுதியின் நடப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராமசாமிதான் இப்போதைய கப்பலூர் நாட்டுக்கான நாட்டம்பலம் (இதற்கு முன்பு இவரது அப்பா நாட்டம்பலமாக இருந்தார்). அந்த நாட்டுக்குட்பட்ட கிராமங்களின் பிரச்னைகளுக்கு நாட்டம்பலம் சொல்வதே இறுதி தீர்ப்பு. அதை மீறினால் ஊரைவிட்டுத் தள்ளி வைப்பது மாதிரியான நடைமுறைகள் இப்போதும் உயிருடன் இருக்கின்றன.

கண்டதேவி தேரோட்டத்தின்போது தலித்துகளை வடம் பிடிக்கக்கூடாது என்று ஏழரை பண்ணும் கண்டதேவி கிராமம் அமைந்திருப்பது உஞ்சனை நாட்டுக்குள். அந்த சமயத்திலெல்லாம் உஞ்சனை நாட்டு சார்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்துவது இந்த நாட்டம்பலம்தான். பெரும்பான்மை கள்ளர்களும், தலித்துகளும், உடையார்களும் வசிக்கும் இந்த தேவக்கோட்டை வட்டார நாட்டு அமைப்புகளின் நாட்டம்பலமாக கள்ளர் சாதியினர் மட்டுமே வர இயலும்.

இந்த நாட்டமைப்பு செய்த சாதி காக்கும் பணியை தென்பகுதியில் பழைய காலத்தில் செய்தவர்கள் பாளையக்காரர்களும், ஜமீன்களும். இவை இரண்டும் வரி வசூலுக்காக ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றாலும், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதி காக்கும் பணியையும் செய்து வந்திருக்கின்றன. கடம்பூர் ஜமீன், நெற்கட்டும்செவல் ஜமீன், சுரண்டை ஜமீன், வீரகேரளம் புதூர் ஜமீன், ஊத்துமலை ஜமீன் (இவை அனைத்திலும் அதிகாரம் செலுத்தியவர்கள் தேவர்கள்..) என்பதாக தெற்கே இருக்கும் இவற்றிற்கு, நாட்டமைப்பு அளவுக்கு நடைமுறையில் இப்போது உயிரில்லை. பெயருக்கு மட்டும் ஜமீன் குடும்பங்கள் இருக்கின்றன. தேனி மாவட்டத்தின் கண்டமனூர் ஜமீனும், பழநிக்கு அருகேயிருக்கும் நெய்காரப்பட்டி ஜமீனும் கிட்டத்தட்ட இல்லாதொழிந்துவிட்டன.

நாடு என்கிற உட்பிரிவு தோன்றுவதற்க்கு கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வேண்டும். நாம் நம்முடைய தலைமுறையில் சாதிய கட்டுமானத்தை தாங்கிப்பிடிப்பது நாட்டு பஞ்சாயத்துக்கள் என்று பார்த்து வளர்ந்திருந்தாலும்.

இந்த அடுக்குமுறை சமூக அமைப்பை எப்படி உருவாக்கினார்கள்? யார் உருவாக்கினார்கள்? என்ற கேள்விக்கு விடை தேட வேண்டிய அவசியம் இருக்கிறது.
பாரி.அரசு said...
வாடியக்காடு ஜமீன் (அ) மதுக்கூர் ஜமீன் என்ற அமைப்பில் தற்போதைய மதுக்கூர் ஓன்றியத்தின் பெரும்பாலான கிராமங்கள் இருந்தன. அந்த ஜமீனை எதிர்த்து தான் "வாட்டாக்குடி இரணியன்" போராடினார். ஆனால் ஓர் உண்மையை நாம் மறந்து விடுகிறோம் அந்த ஜமீனின் சாதிய கட்டுமானத்திற்க்கு தூபம் போட்டது யார்? மன்னாங்காடு ஐயர் அல்லவா!

பின்னாளில் ஜமீன் முறை ஓழிந்து முசுறி நாடு உருவான பின்பும் மன்னாங்காடு ஐயரின் ஆதிக்கம் இருந்ததே. அவரை ஓடுக்கி பட்டுக்கோட்டைக்கு நகர்த்தி பின்பு பட்டுக்கோட்டையிலிருந்தும் வெளியேற்றியது திராவிட இயக்கத்தின் வெற்றியல்லவா!

இப்படி பாப்பாநாடு ஜமீன், அதற்க்கு கொட்டை தாங்கிய ஐயர். அவற்றை விட்டுவிட்டு நேரிடையாக பார்க்கப்போனால் சாதிய கட்டுமானம் ஏதோ கள்ளர்கள் உருவாக்குவது போல தெரியும்.

பார்ப்பனர்கள் ஆங்கிலேயர் ஆட்சி வரைக்கும் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதையும், பின்னாளில் திராவிட இயக்கத்தால் அவர்கள் ஓடுக்கப்பட்டதையும் கணக்கில் எடுத்துக்கொண்டே தஞ்சை மாவட்டத்தின் சாதிய கட்டுமானத்தை அணுக வேண்டும் என்று நான் எண்ணுகிறேன்.

எம்.எம்.அப்துல்லா said... காசாநாட்டுக்காரர்கள் அறுத்துக் கட்டும் பழக்கம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம்தான். இந்த பெரும்பான்மை சமூகத்தில் பிறநாட்டுக்காரர்கள் போருக்குச் செல்ல இந்த உட்பிரிவு மட்டும் போரில் பங்கு கொள்ளாமல் உள்ளூர் நிர்வாகம்,உள்ளூர்காவல் போன்ற பணிகளை மட்டுமே செய்திருப்பார்கள். எனவே இளம் வயதில் மரணம் என்பது இந்த நாட்டுக்காரர்களிடையே இல்லாமல் இருந்திருக்கும்.அதுகூட அறுத்துக்கட்டும் பழக்கம் ஏற்படாததற்குக் காரணமாக இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கணிப்பும்,கருத்தும். 
நாடோடி இலக்கியன் said... ஆழியூரான்!
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நாடுகளில் ஒன்றான கோனூர் நாட்டில் கள்ளர் சாதியினர்தான் பெரும்பான்மையினர்,ஆனால் நீங்கள் சொல்வது போல் அவர்கள் தலித்துகளை அடக்கி வைப்பதெல்லாம் இல்லை.தலித் வீட்டிற்குச் சென்று கள்ளர் வீட்டு குழந்தைகள் டீயூசன் படிக்கிறார்கள்,தலித் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்கள் ,வசதி படைத்த தலித் நிலத்தில் உயர் சாதியை சார்ந்த கூலித்தொழிளாலிகள் வேலை செய்வதெல்லாம் இப்போ சாதாரணமாகிவிட்டது.நீங்கள் குறிபிடுவது போல் கள்ளர் அதிகம் இருக்கிறார்களே தவிர ஆதிக்கமெல்லாம் செலுத்துவதில்லை.இதை ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் பதிவில் கள்ளர்கள், சாதி வெறியர்கள் போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.
thaanks


http://nadaivandi.blogspot.com/2007/11/part-ii.html

+

'லண்டன் புள்ளியியல் கழகம்

0 c
காலனி நாடுகளை பிரித்தானிய ஏகாதிபத்தியம் தனது ஆளுகைக்குள் ஒடுக்கிவைக்க வளர்த்தெடுத்த ஒரு துறையே புள்ளியியல். 

பிரித்தானிய காலனிய அரசானது 1834-ல் பலதுறை சார்ந்த அறிஞர்களைக் கொண்டு 'லண்டன் புள்ளியியல் கழகத்தை' துவக்குகிறது. இக்கழகத்தை ஆரம்பித்தவர்களில் முக்கியமானவர்கள் பொருளியலாளர் ரிச்சர்ட் ஜோன்ஸ், 
மக்கள்தொகை கோட்பாட்டால் புகழ்பெற்ற தாமஸ் மால்தூஸ் மற்றும் 
கணிப்பொறியின் தந்தை எனப்படும் முதல் கணிப்பொறி எந்திரம் மற்றும் கணக்கிடும் எந்திரத்தை உருவாக்கிய சார்லஸ் பாப்பேஜ் போன்றவர்கள். இந்த மூவரின் பின்னணி இதன் பல்துறை முக்கியத்தவத்தை உணர்த்தும். 
 
புள்ளியியல் ஆய்வினால் எதிர்கொண்ட பெரும் தரவுகளை கணித அடிப்படையில் ஆய்வு செய்வதற்கான தேவைதான் இன்றைய கணிப்பொறி உருவான அடிப்படையாக இருந்துள்ளது. அறிவும் அதிகாரமும் இணையும் இப்புள்ளி முக்கியமானது. அறிவியல் வளர்ச்சி என்பது அதிகாரத்தின் தேவைக்கான திட்டமாகவே உருவாகுகிறது. பின் அது பொதுமக்களின் நலனுக்கானது என்பதான கதைகள் வடிவமைக்கப் படுகின்றன. இந்த வடிவமைப்புகள் அந்த அறிவியல் கண்டுபிடிப்பின் அரசியலை மறைக்கின்றன. சான்றாக கணிப்பொறியின் உச்ச வளர்ச்சியாக இன்று உள்ள இணையம் என்பது அமேரிக்க இராணுவத் தேவைக்காகவே உருவாக்கப்பட்டது என்பது பரவலாக அறியப்பட்டதே.
தொழிற்புரட்சிக்கு பிந்தைய பிரித்தானிய ஏகாதிபத்தியம் காலனிய நாடுகளை ஆள்வதற்கான அறிவை உருவாக்கும் தனது அதிகாரத்தின் ஒரு திட்டமாகவே புள்ளியியலை உருவாக்குகிறது.  வரலாற்ற அறிஞர் நிக்கோலஸ் டிரிக்ஸின் வார்த்தையில் சொன்னால் 'கட்டுப்படுத்துவதற்கான கலாச்சாரத் திட்டம்' (culture project of control) என்பதன் ஒரு பகுதியாக இதனைப் பார்க்கலாம். எனவேதான் ஜனநாயக அரசுகள் புள்ளியியல் அடிப்படையில் தங்களது திட்டங்களை அமைத்துக் கொண்டுள்ளன. 

புள்ளியியலின் அடிப்படை கணக்கெடுப்பு (census) ஆகும். இக்கணக்கெடுப்பு என்பது ஒரு சில கோட்பாடுகள் மற்றும் முன் அணுமானங்களைக் கொண்டே துவக்கப்படுகிறது. மக்களை ஒரு நிலப்பரப்பிற்குள் வைத்து ஆவணப்படுத்துவதே  இதன் முதல் பணியாக உள்ளது. மக்கள் நிலப்பரப்புடன் பிணைக்கப்பட்ட பிறகு அவர்களது மத, தேசிய, இன, மொழி மற்றும் சாதிய அடையாளங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு ஆள்வதற்கான தொழில்நுட்பம் அறியப்படுகிறது. இவ்வாறு எண்ணப்பட்டு, அட்டவணைப்படுத்துவதன் மூலம் மக்களை ஆய்விற்கான தரவுகளாக மாற்றுதலும், மக்களை 'புறவயப்படுத்தும்' செயலும் நடைபெறுகிறது.  அரசுகள் மக்களை எண்ணி கணக்கிட்டு அவர்களது நிகழ்கால வாழ்நிலை, எதிர்காலப் போக்கு என அனைத்தையும் முறைப்படுத்தப்பட்ட ஆய்விற்கு உட்படுத்தி தனது திட்டங்கள், ஆளுகைக்கான விதிமுறைகளை தீர்மானிப்பது புள்ளியியல் என்கிற அறிவியல் வழியாகத்தான். அல்லது எண்ணப்பட்ட உடல்களைக் கொண்டு தனது அதிகார இறையான்மைக்கான கதைகளை கட்டமைத்துக் கொள்கின்றன.   

கணக்கெடுப்புகள் வழியாகவே மனிதர்கள் வகைப்படுத்தப்பட்டு குழுக்களாக கட்டுமைக்கப் படுகிறார்கள். அல்லது மனிதர்கள் குழுக்களாக இயங்கி வருவதை ஒரு வகையினமாக இது மாற்றுகிறது. சாதி, மதம் போன்றவை வாழ்வியல் தளங்களிலிருந்து அரசு அதிகார தளத்திற்கு மாற்றப்பட இது ஒரு காரணமாக உள்ளது. ஒருவகையில் இது கீ்ழ்தட்டில் ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களிடம் ஒருமித்த அடையாளத்தை உருவாக்கி பன்னெடுங்காலமாக ஆதிக்கம் வகி்த்துவந்த மேல்சாதியினரின் அதிகாரத்தை கேள்வி கேட்கக்கூடிய ஜனநாயகத் தளத்தை திறந்துவிட்டுள்ளது. பிறிதொருவகையில் பரந்துபட்ட மக்களை ஆள்வதற்கான நுடபங்களையும் இது கற்றுத் தந்துள்ளது. பிராந்தியரீதியாக செயல்பட்டு வந்த சாதியத்தை இந்தியா முழுவதற்குமானதாக ஒருமுகப்படுத்தியது. பிராந்தியங்களை இந்தியா என்கிற குடியாண்மை அமைப்பிற்குள் கொண்டுவந்தது. பிறகு சாதி, மத, பிராந்தியங்களை கையாள்வதற்கான ஆளுகை முறையை தந்தது. இது பரவலாக பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் தொழில்நுட்பமான 'பிரித்தாளும் ஆளுகை' (divide and rule) முறையாக அறியப்பட்டுள்ளது. ரோமானிய பேரரசின் தொடர்ச்சியாகத் தன்னைக் கருதிக்கொண்ட பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்தத் தொழில்நுட்பத்தை, தனது காலனிய நாடுகளின் மீது பிரயோகிக்க இந்த கணக்கெடுப்புகள் அவசியப்பட்டது. மக்களிடம் குழு அடையாளங்கள் உருவாக இது ஒரு காரணியாக உள்ளது. அல்லது சாதிய மற்றும் மதம்சார்ந்த மன அமைப்பைக் கட்டமைக்க இது காரணமாக உள்ளது.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளை அடிப்படையாகக் கொண்ட புள்ளியியல் ஆய்வுகள் ஒரு ஆளுகைத் தொழில் நுட்பமாக (technology of governmentalizing) செயல்படுகிறது. மக்களை குடிமக்களாக்குவது அந்த அரசின் அல்லது அந்த மக்கள் கூட்டத்தின் தேசியக் கருத்தியல் என்றால் அந்த குடிமக்களை ஆளுகைக்கு உட்படுத்தவது இந்த புள்ளியியல் அறிவியல்தான். அதாவது இந்தியன் என்கிற குடிமக்களை உருவாக்குவது இந்திய தேசியக் கருத்தியல் என்றால் அவர்களை கணக்கிட்டு அரசின் ஆளுகைக்குள்  ஆணாக, பெண்ணாக, சாதியாக, மதமாக, இனமாக, தொழில்ரீதியாக, படித்தவராக, நிறமாக. கிராமத்தவராக இப்படி பல காரணிகளாக வகைப்படுத்தி எண்களால் ஆன செய்தியாக (information) தரவுகளின் அட்டவணைகளாக மாற்றுவது புள்ளியியல்தான். இந்தியாவி்ல் கணக்கெடுப்பு பற்றிய வரலாறு பிரித்தானியரால் துவங்கப்படுகிறது. இந்தியர்களை புரிந்துகொள்ளவும் தங்களது ஆளுகையை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அதற்கான நுட்பதிட்பங்களை வரையறுப்பதற்கும் மட்டுமின்றி வரிவசூல் என்கிற மக்களின் உழைப்பை உறிஞ்சி தனது பொருளியல் நலனை காப்பதற்குமான ஒரே வழி மக்கள்தொகைக் கணக்கெடுப்புத்தான். முதல் குடிமகன் துவங்கி இறுதிக் குடிமகன் வரை எண்ணப்பட்டு அரசின் கண்காணிப்பு வலயத்தை கட்டமைக்கிறது இது.
உலக நாட்டார் இலக்கியங்களை ஆய்வு செய்த சர். ஜேம்ஸ் பிரேசர் பண்டைய காலத்தில் ஆப்ரிக்க, பசிபிக் மற்றும் ஐரோப்பிய பண்பாட்டில் மக்களை எண்ணினால் கெட்ட ஆவிகளின் காதுகளில் அவை விழுந்து மரணத்தை வரவழைக்கும் என்கிற நம்பிக்கை இருந்ததை சுட்டிக்காட்டுகிறார். (The sins of the census -Ernest Neufeld-BNET.com). எண்ணுதல் என்பது பாவமாக கருதப்பட்டது பண்டைய ஹீப்ருக்களிடம். இக்கருத்தை மாற்ற பழைய ஏற்பாட்டில் 'மோசஸிற்கு தனது இன மக்களை எண்ணவும் அவர்களிடம் இறைவனுக்காக (யஹோவா அல்லது லார்ட்) ஒருகுறிப்பிட்ட ஈட்டுத்தொகையை பெறும்படி' கட்டளை இடப்பட்டது பழைய ஏற்பாட்டில்.  மேலும், அதில் இராணுவத்திற்காகவும் இந்த கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது (மேற்படி கட்டுரை).  இக்கருத்திலிருந்து கணக்கெடுப்பு இறையாட்சியோ அல்லது மானுட அரசாட்சியோ எதுவாக  இருந்தாலும், அதன் கீழான சமூகத்தினை பொதுமைப்படுத்தி ஆள்வதற்கான ஆட்சியமைப்பின் அடிப்படையாக இருந்து வந்துள்ளதை புரிந்து கொள்ளலாம்.   

கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு அரசின் கொள்கைகளை வகுப்பதற்கும், வரிவசூல் செய்வதற்கும் அவசியமானது என்று சொல்லப்பட்டுள்ளது (History of Indian Census, Office of the Register General & Census Commisioner, India-HIC). மேலும் அர்த்தசாஸ்திரம் அரசு கணக்கீட்டு முறையில் குறிப்பாக புள்ளியலின் பிறிதொரு துறையான கணக்குப்பதிவியலின் (accounts)  முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசுகிறது.   கணக்குப்பதிவில் இரட்டைப் பதிவுமுறையை அறிமுகப்படுத்துகிறது. கணக்குப்பதிவில் உள்ள சரியான கணக்குகளும், துல்லியமும்தான் ஒரு அரசைச் சிறப்பாக வழிநடத்த முடியும் என்றும் கருவூலங்களில் இந்தப் பதிவேட்டுகளை முறையான கணக்குப்பதிவு தெரிந்த கணக்காயர்களைக் கொண்டு காலவாரியாக பதிப்பிக்க வேண்டும் என்றும் அதனைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் அரசு முறையான ஆட்களைக்கொண்டு நம்பகமான முறைகளில் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. கணக்கில் ஏற்படும் குளறுபடிகள் ஒரு அரசையே திசை திருப்பி சீரழித்துவிடும் என்கிறது. (Kautilya on the scope and methodology of accounting, organizational design and the role of ethics in Ancient India - Sihag, Balbir S).  இந்த அளவிற்கு கணக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அர்த்தசாஸதிரம் அறிவும் அதிகாரமும் இணையும் புள்ளிகள் குறித்து நுட்பமாக அறிந்துள்ளதை அறியமுடிகிறது.  மக்களைக் கணக்கிடுவது, மக்களை ஆள்வதற்கான அரசின் அடிப்படை பணிகளில் ஒன்றாக உள்ளது. ஆக, புள்ளியியல் அரசுடன் பிரிக்க முடியாத ஒன்றாக உள்ளது. 
முகலாயர் காலத்திலும் இந்தக் கணக்கெடுப்புகள் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் அயனி-அக்பரியில் உள்ளது (HIC). இக்கணக்கெடுப்புகளில் தொழில், சொத்து, மக்கள்தொகைப் போன்ற பல முக்கிய காரணிகள் எண்ணப்பட்டுள்ளன. இவைகள் மக்களை ஆள்வதற்குப் பயன்பட்ட போதிலும் பிரதான நோக்கம் வரிவசூல் மற்றும் மக்களை பொதுநோக்கில் பராமரித்தல் என்பதாகவே இருந்துள்ளது. அதாவது ஒரு பொதுநோக்குத் தொழில்நுட்பத்திற்கான (general purpose technologies-GPT) அடிப்படையாக இருந்து வந்துள்ளது. ஆற்றல் மூலங்களைக் கணக்கிடல், வருமானத்தைக் கணக்கெடுத்தல் ஆகிவற்றால் பொது நலன் அடிப்படையிலான சாலை வசதி, கொள்ளை நோய் தற்காப்பு போன்றவற்றிற்கான திட்டமிடலுக்கானதாக நடத்தப்பட்டுள்ளது. இது மக்கள் நல அரசுகளின் (welfare state) அடிப்படை பணியுமாகும். 'கோண் உயர குடி உயரும்' என்பதைப்போல அரசின் மக்கள் பராமரிப்புடன் உறவு கொண்டது. ஒரு அரசின் இருத்தலுக்கும், மக்கள் அரசை ஏற்பதற்கும் இவை அவசியமாகின்றன.
ஆனால், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஒரு பண்புரீதியான மாற்றம் இருந்தது. அது மக்கள் பராமரிப்பு என்கிற பொதுநோக்கு தொழில்நுட்பத்திற்கானது என்பதைவிட தனது காலனிய நாடுகளின் மக்களை புரிந்து கொள்வதற்கும் தனது அதிகார அமைப்பை கட்டமைக்கவும் மக்களை ஆளுகை செய்வதற்கான நுட்பங்களை படிக்கவுமான ஒரு அறிவுக் கட்டமைப்பாகச் செய்யப்பட்டது.  britemp5இச்செயலானது மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டிருந்ததை காணமுடிகிறதுமுகலாயர் காலத்திலும் இந்தக் கணக்கெடுப்புகள் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் அயனி-அக்பரியில் உள்ளது (HIC). இக்கணக்கெடுப்புகளில் தொழில், சொத்து, மக்கள்தொகைப் போன்ற பல முக்கிய காரணிகள் எண்ணப்பட்டுள்ளன. இவைகள் மக்களை ஆள்வதற்குப் பயன்பட்ட போதிலும் பிரதான நோக்கம் வரிவசூல் மற்றும் மக்களை பொதுநோக்கில் பராமரித்தல் என்பதாகவே இருந்துள்ளது. அதாவது ஒரு பொதுநோக்குத் தொழில்நுட்பத்திற்கான (general purpose technologies-GPT) அடிப்படையாக இருந்து வந்துள்ளது. ஆற்றல் மூலங்களைக் கணக்கிடல், வருமானத்தைக் கணக்கெடுத்தல் ஆகிவற்றால் பொது நலன் அடிப்படையிலான சாலை வசதி, கொள்ளை நோய் தற்காப்பு போன்றவற்றிற்கான திட்டமிடலுக்கானதாக நடத்தப்பட்டுள்ளது. இது மக்கள் நல அரசுகளின் (welfare state) அடிப்படை பணியுமாகும். 'கோண் உயர குடி உயரும்' என்பதைப்போல அரசின் மக்கள் பராமரிப்புடன் உறவு கொண்டது. ஒரு அரசின் இருத்தலுக்கும், மக்கள் அரசை ஏற்பதற்கும் இவை அவசியமாகின்றன.
ஆனால், பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஒரு பண்புரீதியான மாற்றம் இருந்தது. அது மக்கள் பராமரிப்பு என்கிற பொதுநோக்கு தொழில்நுட்பத்திற்கானது என்பதைவிட தனது காலனிய நாடுகளின் மக்களை புரிந்து கொள்வதற்கும் தனது அதிகார அமைப்பை கட்டமைக்கவும் மக்களை ஆளுகை செய்வதற்கான நுட்பங்களை படிக்கவுமான ஒரு அறிவுக் கட்டமைப்பாகச் செய்யப்பட்டது.  britemp5இச்செயலானது மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டிருந்ததை காணமுடிகிறது

1.தனக்கு அயலான ஒரு சமூகத்தை புரிந்துகொள்ள முயல்வது 
2. அதனை ஆள்வதற்கான அதிகார விதிகளைக் கண்டறிவது 3.தனது அதிகார அமைப்பிற்கேற்ப காலனிய சமூகத்தை மறுகட்டமைப்பு செய்வது. 

இநத முக்கிய பணிகளை பிரித்தானிய அரசு 10-ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பதன் மூலம் சாத்தியமாக்கிக் கொண்டது. ஒவ்வொரு கணக்கெடுப்பிலும் வெவ்வேறு தரவுகளை இனம், மதம், சாதி, மொழி, பிராந்தியம் என்பதாக முக்கியத்துவப்படுத்தி இந்தக் கட்டமைப்பை சாத்தியப்படுத்தியது. கணக்கெடுப்பிற்கென தனியான நிர்வாக அமைப்புகளை ஆய்வறிஞர்களைக் கொண்ட ஒரு தனித்துறையை உருவாக்கியது. பகுதிவாரியாக மக்கள் ஆவணப்படுத்தப்பட்டார்கள். இந்த ஆவணங்கள் புள்ளியியல் ஆய்வின்படி கணக்கிடப்பட்டு இந்தியா முழுவதற்குமான அட்டவணைகளாக வகைப்படுத்தப்பட்டன.
britemp7 1858-ல் பிரித்தானிய அரசு இந்தியவை தனது நேரடி ஆளுகைக்குள் கொண்டு வந்தவுடன், முதலில் செய்த பணிகளில் ஒன்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆகும். 1857-ற்கு முந்தைய மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் பிரித்தானியரின் கிழக்கிந்திய கம்பெனி பயன்படுத்திய முறை ஏகதேசமானதாகவே இருந்தது(HIC). மக்கள் நெருக்கமான நகரங்களை கணக்கில் கொண்டு  வீட்டிற்கு ஏழு பேர் வீதம் வீடுகள் எண்ணப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய கணக்கெடுப்புகள் மிகை மதிப்பீடுகளாக இருந்ததை பின்னாளைய புள்ளிவிபரங்கள் காட்டின (KH). மக்களை வீடுவீடாகச் சென்று கணக்கிடும் முறை முதன்முதலாக 1865-ல் துவங்கி 1872-ல் முடிக்கப்பட்டது. இக்கணக்கெடுப்பில் பிரித்தானிய அரசும் அதன் கணக்கெடுப்புப் பணியாளர்களும் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்து இந்த கணக்கெடுப்பி்ற்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளது. (Henry Waterfield , ( 1875 ), Memorandum on the Census of British India 1871-72 , London , Eyre and Spottiswoode). இக்கணக்கெடுப்பு இந்தியா முழுமைக்கும் நடத்தப்படவில்லை என்றாலும், இதுதான் துவக்கமாகும். இக்கணக்கெடுப்பில் ஆரிய-நால்வர்ணமுறையை அடிப்படையாகக் கொண்டு, மக்கள்தொகை நான்கு வாணப்பிரிவுகளான பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர்களாக பிரித்துணரப்பட்டு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டது. (மேற்படி அறிக்கை மற்றும் Race, Caste and Tribe in Central India:The Early Origins of Indian Anthropometry - Crispin Bates - RCT).
அடுத்து 1881-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் முதன்முதலாக எடுக்கப்பட்டது.  இந்த கணக்கெடுப்பு வருணமுறையிலிருந்து ஒரு படி மேலாக தொழிலையும், சாதியையும் அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதை அதன் அறிக்கையிலிருந்து அறியமுடிகிறது. (W.Chichele Plowden , ( 1883 ), Report on the Census of British India taken on the 17th February 1881 , London , Eyre and Spottiswoode)  டேனியல் இபுட்சன் என்கிற பிரித்தானிய அதிகாரி வர்ணமுறை தற்காலத்தில் முக்கியத்துவம்  வாய்ந்தவை அல்ல என்றும் தொழில் அடிப்படையில் சாதியத்தை வகைப்படுத்தும் வண்ணம் இந்த கணக்கெடுப்பை நடத்தினார் (RCT). 1891-கணக்கெடுப்பு வர்ணத்திற்கு பதிலாக சாதியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. 1901-கணக்கெடுப்பு மூன்று அடிப்படைகளில் நடத்தப்பட்டதாக கணக்கெடுப்பிற்கான தீர்மாணம் கூறுகிறது (Appendix-1 RCT).  1. இனவியல் 2. உடலை அளவிட்டு பிரிக்கு மானுட-உடல்-அளவியல் (Anthropometry). தோலின் நிறம், மண்டையோட்டு அளவு, மூக்கின் அளவு ஆகியவற்றின் அளவீடுகளைக் கொண்டு செய்யப்பட்டது.  3. புகைப்படங்கள் - அதிக செலவு என்று இது கைவிடப்பட்டது (அறிக்கை1901). இதில் மானுட-உடல்-அளவியல் அடிப்படை  சாதியை இனவரையறைக்குள் கொண்டு சென்ற கணக்கெடுப்பாகும். (H.H. Risley and E.A. Gait , ( 1903 ), REPORT ON THE CENSUS OF INDIA, 1901 , Calcutta , Superintendent of Government Printing). இந்த மானுட-உடல்-அளவியல் முறை என்பது குற்றவியலுடன் உருவாகி இன்று உடல் உறுப்புகளைக் கொண்டு அடையாளப்படுத்தும் பயோமெட்ரிக் என்கிற கண்காணிப்பு எந்திரமாக வளர்ந்துள்ளது என்பது வேறுகதை. இப்படியாக இக்கணக்கெடுப்புகள் படிப்படியாக இந்தியாவின் மையமாக சாதியை வந்தடைந்தன. அதன்பின் 1931-கணக்கெடுப்பு சாதியை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவெங்கும் முழுமையாக எடுக்கப்பட்டது.
சாதி என்பது இந்திய சமூகத்தின் ஒரு பிரத்யேக முறையாக இருந்ததைக் கண்டு முதன்முதலாக 19-ஆம் நூற்றாண்டில் britemp4போர்த்துகீசியர்தான் caste என்கிற சொல்லை பயன்படுத்தினர். இச்சொல் இனம், பிறப்பு, வம்சாவழி என்கிற மூலத்திலிருந்து பெறப்பட்ட சொல் ஆகும்.(KH) இந்த caste-ஐ அதாவது 'சாதி'-யை பிரித்தானியர் எப்படி அணுகினர் என்பதை புரிந்துகொள்வது அவசியம். சாதிகுறித்த பார்வைகளை பிரித்தானிய அரசு இரண்டு மூலங்களிலிருந்து பெற்றது 1. கிறித்துவ மிஷனரிகளிடம் இருந்து. அவர்கள் சாதி தங்களது மத சுவிசேஷப் பிரச்சாரத்தை பலவீனப்படுத்தக் கூடியதாக இருப்பதால் சாதியை வெளிப்படையாக விமாசித்தவர்கள் 2. இந்திய சமூகத்தை புரிந்துகொள்வதற்கான ஒரு தொழில்நுட்பமாக இயங்கிய கீழ்திசைப்பள்ளிகள் (Oriental schools), தங்களது பிரதிகளிலிருந்து உருவாக்கி வைத்திருந்த இந்தியர்கள் பற்றிய ஒருபடித்தான கற்பிதங்களான  'கீழ்த்திசை ஏதேச்சாதிகாரம்' மற்றும் 'கிராம குடியரசுகள்' என்பவையே. (Castes in Minds - Nicholas Dirks).  இவை ஏற்படுத்தியப் பார்வைகளை பிரித்தானியர்கள் தங்களது இனவியல் வரையறைகள் வழியாகவே புரிந்து கொண்டனர்.

பொதுவாக மனித குல வரலாற்றை பிரித்தானியர்கள் இன (race) அடிப்படையிலேயே வரையறுத்து வந்தனர். 1844-ல் "எல்லாமே இனம்தான், அதற்கப்பால் வேறு உண்மையே இல்லையா" என்று பிரித்தானிய அரசின் பார்வையை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய டிஸ்ரிலி, 1872-ல் பிரித்தானிய பிரதமரான பின், 1880-ல் 'இனம்தான் வரலாற்றின் திறவுகோல்' என்றார் (KH). பிரித்தானியர்களின் அடிப்படை பார்வை இனவாத அடிப்படையிலானது என்பதற்கு இது ஒரு சான்று.  இனவாத கற்பிதங்களான உயர்வு, தாழ்வு மற்றும் தூய்மைவாதம்  இந்தியாவில் வர்ணாசிரம வடிவில் நடைமுறையில் இருந்ததால் ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட பார்வை அவர்களிடமும் உருவாகுகிறது. இந் நடைமுறையி்ல் பார்ப்பனியர்கள் தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்துள்ளதை காண்கின்றனர். இதில் இனஆதிக்க கருத்தியலின் அடிப்படையான தூய்மைவாதம், “பிறரை“ ஒதுக்கல் ஆகியவை இருப்பதை காணும் அவர்கள் சாதியின் மத அடிப்படைகளையும், இந்தியர்களின் மதம் மற்றும் உலகு பற்றிய பார்வைகளின் வித்தியாசத்தையும் உணராமல் இனவாத அடிப்படையில் சாதியை மறுசங்கேதப்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய சாதிமுறை கர்மக் கோட்பாட்டுன் இணைந்து சாதிய கர்மத்தை சரியாகப் பின்பற்றுவதே மோட்சத்திற்கான வழி என்கிற மதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கண்ணோட்டத்தை தங்களது இனவாத தூய்மை அடிப்படையில் புரிந்துகொண்டு மறுவரையறை செய்கிறார்கள். அதாவது தங்களது அரசாட்சிக்கு ஏற்ப அதன் நிர்வாகப் பணிக்குத் தேவையான ஆட்களை எடு்ப்பதற்கு சாதியம் அல்லது வர்ணமுறை தடையாக இல்லாமல் வீரமரபு சாதிகள், வீரமரபற்ற சாதிகள் என்பதாக பிரித்து வீரமரபுள்ள சாதிகளாக உள்ள சத்ரியப் பின்னணி சாதிகளிலிருந்து தனது இராணுவத்திற்கு ஆள் எடுக்கிறார்கள். அதேபோல் மற்ற நிர்வாகங்களுக்கு வீரமரபற்ற, அதேசமயம் திறனுள்ளவர்களாக குறிக்கப்பட்டு மேல் தட்டில் உள்ள பார்ப்பனர்களை நிர்வாகத்திற்கு கொண்டுவருகிறார்கள்.
 
இதிலிருந்து நாம் ஒரு கருத்தைப் பெறலாம். சாதி என்பது நிலவுடமையின் அடிப்படையில் நிலத்துடன் கட்டப்பட்டிருந்த உடல்களை (territorialize) பிரித்தானிய காலனிய அரசானது வெளி-நீக்கம் (deterritorialization) செய்து தனது அதிகார வெளிக்குள் மறு-வெளியாக்கம் (reterritorialization) செய்கிறது. அல்லது பிரித்தானிய அரசிற்கு இராணுவ சேவை செய்வதற்கான மன அமைப்பை இந்தியரது மதம் சார்ந்த உணர்வைத் தாண்டி கட்டமைக்கிறது. இதன் ஒரு பக்கவிளைவையே 1857- எழுச்சிக்குப் பிறகு எதிர்கொள்கிறது. இவ்வெழுச்சிக்குப்பின் இந்திய சமூகத்தை தனது நேரடி ஆளுகைக்குள் கொண்டுவருகிறது. இதன் விளைவாகவே 1857-ற்கு பிறகு நடத்திய 1872 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் வயது, பாலினம், மதம், சாதி, இனம், கணக்குழு, தொழில் என அனைத்தும் தொகுக்கப்பட்டதின் பின்னணியை நோக்க வேண்டி உள்ளது. இந்த முதல் கணக்கெடுப்பில் ருசிகரமான விஷயம் இராஜபுத்திரர்கள், சத்திரியர்கள் 5.6 மில்லியன் அவர்களைவிட பிராமணர்கள் எண்ணிக்கை 10.1 மில்லியன் இருமடங்காக இருந்தது என்பது (அறிக்கை 1872). 
 
வங்காள கமிஷனராக இருந்த பிவர்லியால் நடத்தி முடிக்கப்பட்ட 1872-ஆம் ஆண்டு  கணக்கெடுப்பில் எடுக்ப்பட்ட தேவையற்ற இந்த விபரங்கள் ஏன்? என்கிற கேள்விக்கு பிரித்தானிய அரசு முன்வைத்த பதில் பேரிடர்கள் நிகழும்போது மக்களை காப்பாற்றவே என்பதுதான். இந்த பதில் மேலோட்டமானது என்பது புரிந்து கொள்ளக்கூடியதே. உண்மையில் பிரித்தானியரின் நோக்கம் மத, இன, சாதி அடிப்படையில் சமூகத்தை பட்டியலிட்டுவிட்டால், சாதி அடிப்படையிலோ மத அல்லது இன அடிப்படையிலோ வரக்கூடிய அரசு  எதிர்ப்புகளைப் புரிந்து கொள்வதும் அதை அடக்குவதற்கான வழிமுறைகளை கண்டடைவதும்தான்.(KH) அதாவது சிப்பாய் கலகம் அல்லது இந்திய ராணுவ எழுச்சி இந்த கணக்கெடுப்பிற்கான கருத்தியல் கட்டுமானத்தை அல்லது வழிகாட்டுதலை தந்துள்ளது எனலாம். அதாவது சிப்பாய் எழுச்சி ஒருவகை அரசியல் நனவிலியாக (political unconcious) செயல்பட்டிருக்கிறது எனலாம்.
The Gleaners சமூகத்தின் யதார்த்த நிலமைகளை இக்கணக்கெடுப்புகள் மாற்றின. சான்றாக, பெங்காலில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் தாழ்சாதி இந்துக்களாக பதியவைக்கப்பட்டனர். 1895-ல் பாசல்-இ-ராப் என்பவர் இத்தவறைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். முக்கியமான விஷயம் என்னவென்றால், குழு அடையாளம் கட்டமைக்கப்பட்டதை இது சொல்கிறது என்பதுதான் (KH). அதேபோல் 1901 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் மாஹ்தான் என்கிற சாதியினர் ஒரு  விவசாயம் சார்ந்த சாதியாக கணக்கில் பதியவைக்கப்பட்டனர். இராணுவத்தில் சேர ராஜபுத்திரர்களாக இருக்க வேண்டும் என்கிற காலனிய சட்டத்தினால் தங்களையும் ராஜபுத்திரர்களாக பதியவைக்க கோரிக்கை விடுத்தனர். இதில் தங்களது சாதிகளை உயர்சாதி மரபில் அடையாளம் காண விளைவதைக் காண்கிறோம். இவ்வாறாக, ஒவ்வொரு சாதியும் தனது அடையாளத்தை உருவாக்க, வரலாற்றுப் பெருமிதம் என்கிற தனது மரபைத் தேடும் “வேர் தேடி அரசியல்“ கட்டமைக்கப்பட்டது. இதன் ஒரு தொடர்ச்சியே இன்றும் வேர் தேடிச் சென்று  தங்களது பெருமித வரலாற்றைக் கட்டமைக்கும் குழு அடையாள அரசியலாக உள்ளது. இது மேற்-திசைவாதத்தின் அடிப்படையான 'வரலாற்று உணர்வை' இந்திய மக்களிடம் கட்டமைக்க முயன்றது. அல்லது இந்தியாவில் வரலாறு என்கிற ஒரு அறிவுத்துறையைக் கட்டமைத்தது என்றால் மிகையாகாது? இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை என்கிற வாதம் இந்த அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டது.    
 
மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் வழியாக தங்களை ஒரு குறிப்பிட்ட அடையாளத்திற்குள் திணித்துக் கொள்ளாமல் இருந்த மக்கள், தரவுகளாக அட்டவணைப்படுத்தி அரசின் நேரடி கண்காணிப்பிற்குள்ளும், அடையாள அரசியலுக்குள்ளும், இதில் பங்குபெற்றதன் மூலம் அரசின் அதிகார வெளிக்குள்ளும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள.  இதில் மற்றொரு கருத்தையும் சுட்டிக்காட்டுகிறார் கெவின் அதாவது பிரித்தானியர் தங்களுக்கு சேவகம் செய்வதற்கான மக்கள் பிரிவினைரைப் பெறுவதற்காக சாதியரீதியான திறமை, குணங்கள் ஆகியவற்றை வகைப்படுத்தவும் இது பயன்பட்டது (KH).  அதாவது, அரசின் நிர்வாக எந்திரத்தை கட்டமைப்பதற்கான நிர்வாகிகளை பெற இந்த சாதியரீதியான பிரிவினை பயன்பட்டது. இந்திய சமூகத்தில் தகுதி, திறமை போன்ற மதிப்பீடுகள் பிறப்பின் அடிப்படையிலானவை என்பதை பிரித்தானிய அரசு அப்படியே ஏற்றுக்கொண்டது என்பதுதான்.

  அதாவது, காயாஸத்தர்கள் கிளரிக்கல் மற்றும் எழுத்தராக பணிபுரிவதற்கும் ராஜபுத்திரர்கள இராணுவப் பணி புரிவதற்கும் அவர்களது பிறப்பு அடிப்படையிலான சாதியே காரணமாக சமூக மனத்தில் எழுதப்பட்டது. சாதியின் உடலரசியல் மறுவரையறை செய்யப்பட்டது. வீரமரபும் குற்றமும் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டு காலனிய அரசிற்கு விசுவாசமாக இல்லாத சாதிப் பிரிவினரான கள்ளர், மறவர் மற்றும் பிஹில்ஸ் (bhils) என்பவர்களை குற்றப்பரம்பரையாக வரையறுத்ததை டிரிக்ஸ் சுட்டிக்காட்டுகிறார். இதன் விளைவாக குற்றப்பரம்பரை தடை சட்டத்தை (Criminal Tribal Acts) 1871-ல் கொண்டு வருகிறது பிரித்தானிய அரசு. வர்ணமும் சாதியும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டவை என்கிற மனுதர்ம வாதம் (1881-அறிக்கை பக்கம் 18-ல் மனுவை சுட்டிக்காட்டி இதனை விவாதிக்கிறது) அப்படியே மண்டையோட்டியல் (phrenology) மற்றும் புள்ளியியல் என்கிற அறிவியல் ஆய்வுகள் வழியாக காலனிய அரசால் உள்வாங்கப்படுகிறது. நால்வர்ண முறையானது சாதிகளின் கணக்கெடுப்பில் மூவர்ணமாக சுருங்குகிறது. இடைப்பட்ட சத்ரிய மற்றும் வைசிய வர்ணம் இடைசாதிகளாகவும் பிரமணர்கள் உயர்சாதியாகவும் தலித்துகள் தாழ்சாதியாகவும் ஒரு பொதுமைப்படுத்தப்பட்ட அடையாளத்திற்குள் கொண்டுவரப்படுகின்றனர்.

  http://jamalantamil.blogspot.com/2008/05/1.html

  

ஒரே உலகம்--சுவாமி அய்யப்பனின் தோற்றுவாய்--கே.பி.எஸ்.-மேனன்

0 c

மிரட்டலும் புராணப் புரட்டும்-அய்யப்பன் கதை

கேரளத்து மேனன்களுக்கு பண்டித நேருவிடம் செல்வாக்கு உண்டு. அவர்களிடமிருந்த கடமையு-ணர்வும் அறிவார்ந்த சிந்தனைகளுமே அதற்குக் காரணம். வி.கே.மேனன் என்ற கிருஷ்ண மேனன், கே.பி.எஸ்.-மேனன் என சுருக்கி அழைக்கப்-பட்ட சங்குண்ணி மேனன் போன்-றோர் அந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பார்கள்.
வெளிநாட்டு உறவு இலாகா-வில் சாதாரண எழுத்தராகச் சேர்ந்த கே.பி.எஸ்மேனன், ருஷ்ய நாட்டுத் தூதுவராக பதவி உயர்ந்தார். எதையும் ஒளிவு மறைவின்றித் துணிவுடன் சிந்தித்துச் செயல்பட்டதாலேயே, முன்னேற்றம் அவரைத் தேடி வந்தது.
இவர் ஆங்கிலத்திலே பல நூற்கள் படைத்தவர். அதில் ஒன்றே டிநே றடிசடன (ஒரே உலகம்) என்ற புத்தகம் அதற்கு நியாய-மாகக் கிடைக்க வேண்டிய புகழும் பாராட்டும் கிடைக்காது போனதற்கு அறிவுலகம் வருந்த வேண்டும்.
அதிலே கேரளாவில் தாய்மை என்பது உண்மை; தந்தையர் நிலை என்பது நிச்சயமற்றது என எழுதி கேரள மக்களின் மனக் க-சப்-புக்கு ஆளானதால், பல சிறப்பான தகவல்கள் அடங்கிய அப்புத்தகம் பலத்த சர்ச்சைக்கு ஆட்பட்டு, மறைக்கப்பட்டது.
அதிலே ஒன்றுதான் சுவாமி அய்யப்பனின் தோற்றுவாய். மலையாள நாடான சேர நாடு, ஒட்டியிருந்த பாண்டிய நாட்டால் பலவகையில் பாதிக்கப்பட்டதைப் பன்மொழிப்-புலவர் கா.அப்பாத்-துரையார் தான் எழுதிய தென்னாட்டுப் போர்க்களங்கள் என்ற நூலில் தெளிவாக விவரித்துள்ளார். மதுரையை ஆண்ட நாயக்க வம்ச ராணி மங்கம்மா, திருவிதாங்கூர் பாளையத்தாரிடம் கப்பம் வசூலித்து ஆண்டதாக சரித்திரச் சான்று உண்டு. ஒருமுறை வரிகட்ட திருவிதாங்கூர் தவறியதால், ராணி மங்கம்மா படை-யெடுத்துப் போய் கப்பம் வசூலித்தாக சரித்திரத் தடயம் உள்ளது.
பின்னால் நிகழ்ந்த அரசியல் விபத்துகளால், சேர நாடு தளை அறுத்தது. ஆனாலும் பாண்டிய நாட்டில் பஞ்சம், வறுமை தலைவிரிக்க, அப்பகுதி மக்களான கள்ளர், மறவர், அகம்படியர், வெள்ளாளர் தங்கள் பிழைப்புக்காக சேர நாட்டு எல்லையோரப் பகுதியில் புகுந்து ஆடு, மாடு, பெண்கள் மற்றும் செல்வங்களைச் சூறையாடுவதை வழக்கமாகக் கொண்டனர்.
கேரளத்து ஆண் மக்கள் வீரத்திலே தொய்வு என்பதாலும், எல்லை தாண்டி பாண்டி மக்கள் உடல் பலமிக்கவர்கள் என்பதால் எதிர்த்துப் போரிட முடியாக் கேரளத்தார் ஒரு சூழ்ச்சி திட்டம் வகுத்ததாக கே.பி.எஸ்.மேனன் எழுதுகிறார்.
 
பாண்டிய நாட்டை நோக்கியிருந்த தங்கள் மலையின் உச்சியில் கோரமான முகமும் கையில் கொடுவாளும் தாங்கிய அய்யனாரப்பனைச் சிலையாக வடித்து இந்த எல்லையைத் தாண்டிவரும் எதிரிக்குக் கண் குருடாகி விடும். கைகால் முடங்கிவிடும் எனக் கதைகட்டி, மாந்திரீப் புகழ் கேரளத்தார் புனைந்துரைத்தனர். இன்றைய அய்யப்பன், அன்றைய அய்யனாரப்பனே என்று எழுதுகிறார் கே.பி.எஸ். இந்த மூடப் பயமுறுத்தலால், தமிழகப் பகுதியிலிருந்து, ஊடுறுவல் சற்றே குறைந்ததாம்.
ஒரு காலத்தில் தமிழனை மிரட்டவே படைக்கப்பட்ட அய்யப்பனை, இன்று கோடி கோடியாய் கொட்டிக் குளிப்பாட்டும் தமிழர்கள் நிலைகுறித்து அழுவதா? சிரிப்பதா?

பொன்னமராவதி

0 c
பொன்னமராவதி என்னும் கோனாட்டைச் சேர்ந்த ஊரின் தலைவராகிய பொய்சொல்லாதேவன் என்னும் கள்ளர் மரபினரின் தலைவரிடம் இதுகுறித்து ஒரு சாசனம் இருந்தது. புதுக்கோட்டை அரசினரிடம் அந்த சாசனம் சேர்ப்பிக்கப்பட்டது.

thanks
http://kambanadippodi.blogspot.com/2009/03/blog-post_3643.html

கண்டதேவி தேரோட்ட சிக்கல்

0 c
நாம் கண்டதேவி என்ற குக்கிராமத்தின், மிகச் சிக்கலான பின்னணியை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது...

மதுரை தேவகோட்டை சாலையில், ராம் நகரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் உள்ளே தள்ளி இருக்கிறது கண்டதேவி. இங்குள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக கருதப்பட்டு வருகிறது. அய்நூறுக்கும் குறைவான குடும்பங்களே வசிக்கும் சிறு கிராமம்தான் என்றாலும் சாதி இவ்வூருக்கு ‘சிறப்புத் தகுதியை' பெற்றுத் தந்திருக்கிறது. முன்னூறுக்கும் மேற்பட்ட கள்ளர் குடும்பங்கள் வசிக்கும் கண்டதேவியில் பள்ளர், பறையர், நாடார், பார்ப்பனர், பிள்ளை, ஆசாரி, வேளார், வளையர் எனப் பல சாதியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

கண்டதேவி மக்களின் முக்கியமான தொழில் விவசாயம். குறிப்பாக, தலித் மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை மய்யமாகக் கொண்டது. விவசாயம் சார்ந்த வேறு சில தொழில்களில் தலித் மக்கள் ஈடுபட்டு வந்தாலும், பொருளாதார ரீதியாக அவை பெரிதளவு உதவவில்லை. அதே வேளை, கள்ளர்களின் வியாபாரத் தளம் மிகவும் பலமிக்கது. தேவகோட்டையில் இருக்கும் அத்தனை பெரிய கடைகளும் கள்ளர்களுக்கானது என்ற வகையில் அவர்களின் பொருளாதார நிலை பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை.கண்டதேவியிலும் அதைச் சுற்றிலும் உள்ள நிலங்கள் 65 சதவிகிதத்திற்கும் மேல் கள்ளர்களிடமே இருக்கிறது. அவர்களுக்கு அடுத்ததாக தலித் மக்களிடம் 25 சதவிகித நிலங்கள் உள்ளன. நிலம் பற்றி பேசும்போது, இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்: கோயில் பெயரில் இருக்கும் சுமார் முன்னூறு ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை இப்போது கள்ளர்கள் கையகப்படுத்தியுள்ளனர்.

விடுதலை பெற்று நம் நாடு ஜனநாயகமானதாக மாறி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் இன்னும் அங்கு ‘நாடு' முறை நடைமுறையில் இருப்பதுதான் கண்டதேவியின் தனித்துவ பிரச்சனை

நிர்வாக வசதிக்காக இந்தியாவை கிராமம், பஞ்சாயத்து, ஒன்றியம், வட்டம், மாவட்டம், மாநிலம் என்று பிரித்திருப்பது போல மன்னராட்சியில் நிர்வாக வசதிக்காக, 22 1/2, 32 1/2, 42 1/2, 64 1/2, 96 1/2 என்று கிராமங்களை ஒன்றிணைத்து நாடுகளாகப் பிரித்தனர். இதற்கு வாரிசு முறையில் ஒரு அம்பலம் நியமிக்கப்பட்டிருந்தார். மன்னரின் சார்பாக வரி வசூல் செய்வதும், ஊர் பஞ்சாயத்து செய்வதும், அரசுக்கு தேவைப்படுகிறபோது படைக்கு ஆள் அனுப்புவதும் இவர்களுடைய வேலை. தலித் மக்கள் அம்பலங்களாக இருந்ததில்லை. பெரும்பாலும் கள்ளர்கள்தான்.

கண்டதேவியைச் சுற்றி உஞ்சனை, செம்பொன்மாரி, தென்னிலை, இரவுசேரி என நான்கு நாடுகள் உள்ளன. இந்திய துணைக் கண்ட அரசின் சமஸ்தானங்கள் இணைக்கப்பட்ட பிறகு, எல்லா பகுதிகளும் இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டன. ஆனாலும் விடுதலைக்குப் பிறகு காலாவதியாகிப் போன ‘நாடு' நிறையை கள்ளர்கள் இன்னும் கைவிட்ட பாடில்லை. காரணம், அம்பலங்களாக இருந்து அனுபவிக்கும் அதிகார சுகத்தைத் துறப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. நாடு அதிகாரம் இருப்பதால், அம்பலங்கள் அரசர்களைப் போல வலம் வருகிறார்கள். அவர்களை மீறி அங்கு ஒரு அணுவும் அசையாது.

http://oomaiyinkural.blogspot.com/2009/09/blog-post_4517.html

காதல் ?

0 c
பழநி சாலைப்புதூர் அழகாபுரியில் வசித்து வந்தவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த அம்மாபட்டியன் மகன் பத்ரகாளி (வயது 25). பத்ரகாளியும், பழநி சண்முகாநதி பகுதியைச் சேர்ந்த கள்ளர் சமூகத்தவரான சீனிவாசனின் (வயது 65) மகள் ஸ்ரீபிரியா (வயது 21)-வும் வெவ்வேறு கல்லூரியில் பி.எட் பட்ட வகுப்பு படித்து வந்த நிலையில், பழநி அருகே அழகாபுரியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பயிற்சி ஆசிரியர்களாக கடந்த ஆண்டு வேலை செய்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதற்கு ஸ்ரீபிரியா வீட்டினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி பத்ரகாளியும், ஸ்ரீபிரியாவும் சேலத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்து பழநியில் இருந்த வீட்டைக் காலி செய்து தமது குடும்பத்தாருடன் திருச்சிக்குச் சென்றுவிட்ட சீனிவாசன், புதுமணத் தம்பதிகளை தானும் தனது உறவினர்கள் மூலமும் மிரட்டியுள்ளார்.

எனவே பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீபிரியா தமக்குப் பாதுகாப்புக் கோரி மனுக் கொடுத்திருந்தார். பாதுகாப்புக் கருதி உடுமலை அருகே மடத்துக்குளம் தேவேந்திரர் வீதியில் உள்ள பத்ரகாளியின் அக்கா ராணி வீட்டில் பத்ரகாளியும், ஸ்ரீபிரியாவும் தங்கியிருந்தனர்.

கடந்த 4-ம் தேதி சீனிவாசன், அவரது உறவினர்கள் ஆசைத்தம்பி என்கிற ராஜ்கண்ணன் (27), பண்ணாடி (30) ஆகியோர் மடத்துக்குளத்துக்கு வந்து ஸ்ரீபிரியாவைச் சந்தித்துள்ளனர். திருச்சியில் அம்மாவின் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால் நேரில் வந்து பார்த்துச் செல்லும்படி அவர்கள் அழைத்துள்ளனர்.

அப்போது பத்ரகாளி வெளியே சென்றிருந்தார். எனவே இவர்கள் அழைப்பதில் சந்தேகம் அடைந்த ஸ்ரீபிரியா நேரில் வர மறுத்ததுடன் வேண்டுமானால் செல்போனில் பேசுவதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் மீண்டும் வந்துள்ளனர். அங்கிருந்த ராணி மற்றும் பக்கத்து வீட்டுப் பெண் இருவரையும் பக்கத்தில் இருந்த அறையில் தள்ளி கதவைத் பூட்டிவிட்டு ஸ்ரீபிரியாவின் கழுத்து, மார்பு, அடிவயிறு பகுதியில் சரமாரியாகக் கத்தியால் குத்தினர். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீபிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாதி கவுரவத்தை மீறி தலித் இளைஞரை திருமணம் செய்வதா? என்ற ஆத்திரத்தில் இந்தக் கொ
லையைச் செய்து விட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

உடுமலை டிஎஸ்பி ராஜா தலைமையில் போலீசார் தீவிரமாகத் தேடி வியாழக்கிழமை ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன், ஆசைத்தம்பி, பண்ணாடி மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீபிரியாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்குப் பின் அவரது கணவர் பத்ரகாளி குடும்பத்தாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதேபோன்று இப்பகுதியில் 'சாதி கௌரவத்தை' பாதுகாக்கிறோம் என்று கூறிக்கொண்டு, கடந்த 2 ஆண்டு காலத்தில் மட்டும் 7 'கவுரவ' கொலைகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

thanks
http://sengkodi.blogspot.com/2009/11/blog-post_11.html

வல்லம்பர்

0 c
எங்கள் பக்க கிராமங்களில் (சிவகங்கை,புதுக்கோட்டை,இராமநாதபுர மாவட்ட கிராமங்கள்)


வல்லம்பர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி 'பாலையநாடு' என்றும்
கள்ளர் சமூகம் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்கள் 'கள்ள நாடு' என்றும்,
மறவர் சமூகம் வசிக்கும் கிராமப்பகுதிகளை 'மறவர் சீமை' என்றும் பிரிவுகள் உண்டு.

இதில் எங்கள் வல்லம்பர் சமூக மக்களில் மேலின வல்லம்பர், கீழின வல்லம்பர் என்ற இரு பிரிவுகள் உண்டு. இதன் பொருள் மேற்கத்திய கிராம மக்கள்,கிழக்கத்திய கிராமமக்கள் என்பது.எங்கள் மேலின வல்லம்பர் மக்கள் வாழும் பதினாறு கிராமங்களை பாலைய நாடு என்கின்றனர்.நாங்கள் கொள்ளக்,கொடுக்க என்று எல்லா உறவுகளையும் இந்தப் பதினாறு ஊர்களுக்குள் தான் வைத்துக்கொள்வோம். இந்தப் பதினாறு ஊர் மக்களும் உலகின் எல்லா இடங்களிலும் பல்கிப் பெருகி உள்ளனர்.இப்போது சில ஆண்டுகளுக்கு முன் கீழின,மேலின மக்கள் ஒன்று கூடி உறவுகளை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

           எங்கள் கிராமங்களில் நகரத்தார் மக்களின் கொடையால் தடுக்கி விழுந்த இடமெல்லாம் மேல்,உயர் நிலைப்பள்ளிகள்,மகளீர்,இருபாலரும் படிக்கும் கல்லூரிகள். அதனால் 1950க்குப் பிறகு எங்கள் ஊரில் படித்த மக்கள் அதிகம்.எங்களின் பதினாறு கிராமங்களில் நான் பிறந்த ஊர் பாலையூர் - கண்டனூர்.(நடுவண் அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களின் ஊர்) இந்த ஊரில் ஒரு வருடம் விளையும். ஒரு வருடம் விளையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிழைப்புத் தேடி எங்கள் மக்களும் புலம் பெயரத்தொடங்கினர்.புலம் பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் கற்ற கல்வி கைகொடுத்தது.நகரத்தார் மக்களுடன் எங்கள் மக்களும் அவர்களோடு உதவியாளர்களாக,கணக்குப்பிள்ளைகளாக அன்னிய தேசங்களுக்கு பொருளீட்டச் சென்றனர்.ஊரில் எஞ்சியிருந்த மக்கள் விவசாயம்,ஆடுகள்,மாடுகள்,கோழிகள் வளர்ப்பில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.இத்தோடு குழந்தைகளைப் பள்ளியனுப்பி படிக்கவைத்துள்ளனர்.வீடு,தோட்டம்,வயல்,கட்டுத்தறி தான் எங்கள் பெண்களின் உலகம்.மாலை நேரம் திரைப்படம்.திரையரங்கம் முன் கூடும் கூட்டம், அதை நம்பி தேநீர்,உணவு விடுதிகள்,பத்திரிக்கை,வார,மாத இதழ்கள்,நாவல்கள்,திரைப்படப்பாடல் புத்தகங்கள் விற்பனை செய்யும் ஒரு புத்தகக்கடை இப்படி ஊரே களையாக இருக்கும். நாங்களும் பிழைப்பிற்காக வேற்று ஊரில் இருந்து, அவ்வப்போது வயல் வேலைக்காகவும்,திருவிழா,உறவுகளில் திருமணங்கள் இப்படி வந்து போவதுண்டு.அப்போதெல்லாம் எங்களைக்கவரும் விசயங்கள் மூன்று.1.கண்மாய்,2.வயல்,3.திரையரங்கம்.நாங்கள் இருந்த ஊரில் திரையரங்கம் இருந்தாலும் கட்டுப்பாடு அதிகம். சொந்த ஊரில் சொந்தங்களின் சலுகை. இப்படி எங்களின் குழந்தைப்பருவ சொர்க்கம்.எல்லா சமூக மக்களும் குறிப்பறிந்து உதவி,இயைந்து வாழ்ந்தார்கள்.

  காலம் மாறியது.மாற்றங்களுக்கு எங்கள் கிராமங்களும் விதிவிலக்கல்ல.எங்கள் ஊரில் எல்லா சமூகத்திலும் கற்றவர்கள் அதிகமாகி,பணப்புழக்கம் அதிகமாகி வாழ்க்கை வசதிகள் பெருகின.தோட்டங்கள் தரிசாகிப் போயின. பசுக்கள் நிறைந்தன.கண்மாய் மழைக்காலத்திலும் நிறையாது போனது. காரணம் கண்மாய்க்கு நீர் வரத்து குறைந்தது.காடு,மேடுகள் மனைகளாகிய காரணம்.கண்மாயில் நீர் குறைந்ததால் ஊரில் இரு சமூக மக்களின் வேறுபாடுகளால் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு.மற்ற சமூக மக்களுக்கு யார் பக்கம் சேருவது என்ற குழப்பம்.இப்படி வயல் வரப்புகளும் தரிசாகி கருவேலமரம் மண்டி முள் காடாய்க் கிடக்கிறது.பசுக்களுக்கு வைக்கோல்,புல் கிடைக்காது கட்டுத்தறிகளும் வெறுமையாயின. இந்த வெறுமைகளை நிரப்ப தொலைக்காட்சிப் பெட்டிகள் வீட்டுக்கு வீடு வருகை தந்தன.திரையரங்கம் நஷ்டத்தில் ஓடுகிறது என்று அதன் உரிமையாளர் அதையும் இழுத்து மூட அதை நம்பியிருந்த உணவகம்,புத்தகக்கடைகளும் தன் கதவுகளை அடைக்க நம்மைப்போல் வெளியூரில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மக்களுக்கு வெறுமையான ஊரைப்பார்த்து துக்கத்தில் தொண்டை அடைக்கிறது.கூடிக்களித்திருந்த,உறவுகளாய் இருந்த எல்லா சமூக மக்களும் பழைய இணக்கமில்லாது அவரவர் வேலை அவரவர்க்கு.

              இந்த வேறுபாடுகளைக் களைய, எங்கள் ஊர் மறுபடி பசுமை பெற எந்த அவதாரத்தை இறைவன் அனுப்புவாரோ? காத்திருக்கிறோம்.

thanks
http://gandhiyagramangal.blogspot.com/2009/12/blog-post_27.html            

மதுரை மாவட்டம் கள்ளர் சமுதாயத்தின் குலதெய்வம்

0 c
ஒச்சாயி என்‌பது ஒச்சாண்டம்மன் தெய்வத்தின் பெயர்.

மதுரை மாவட்டம் கள்ளர் சமுதாயத்தின் குலதெய்வம்..

முக்குலத்தோரின் மூத்த கடவுள்.

மதுரை மீனாட்சி அம்மன் மனித பிறப்பெடுத்து குழந்தை இல்லாத தடியன் தம்பதிக்கு வளர்ப்பு பிள்ளையாக வளர்ந்து பருவயதில் தன்னை தெய்வமாக, அனைவருக்கும் தெரியவைத்து, மறைந்த நொச்சியம்மா - காலப்போக்கில் ஒச்சாயி என்று மாறி, பிறகு ஒச்சாண்டம்மானாக கருமருத்தூரிலும், பாப்பாபட்டியிலும் மற்றும் பல கிராமங்களிலும் சாதிமத பேதமின்றி வழி‌படும்‌ தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

தெய்வ பக்தியாக அந்த சமுதாயத்தில்
தலபிள்ளை ஆண் குழந்தை என்றால்

ஒச்சாத்தேவன், ஒச்சப்பன் என்றும்,

பெண் குழந்தை என்றால்

ஒச்சம்மா, ஒச்சாயி என்றும் பெயர் சூட்டும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக தொன்று தொட்டு வருகிறது.

Kallar

18 c

Todiman_Raja_in_his_Durbar,_Pudukkottai,_1858

Kallar

Kallar (Tamil: கள்ளர்) is one of the three communities which constitute the Mukkalathor confederacy. European eyewitnesses of the 18th century have made mention of Kallars as "a fearless tribe show many signs of independence and non-submission to any form of subjugation". They were expert soldiers and constituted the bulk of Chola and Pandya armies. One of the principal weapons of the Kallars is the boomerang. This has evoked comparisons with the Australian aborigines and vouch for the theory that Kallars were one of the earliest people to inhabit the Indian subcontinent. The principal occupation of Kallars is farming. Kallars are found largely in Madurai, Sivagangai, Thanjavur, Trichy, Theni and Ramanathapuramdistricts of Tamil Nadu. One of their popular deities is Kallazhagar who is a warrior form of Lord Thirumala or Venkadavan. There are various sub-castes of Kallars amongst whom theAmbalakarar is the most important.They were a warklike people who strongly resisted every British attempt to subjugate them. They are found in Madurai and Sivaganga districts. In these districts, each village is headed by an Ambalakarar (president of an assembly) and the Ambalakarars took upon themselves the power to adjudicate disputes that arose among the inhabitants in the "nadu", belonging to different castes. They used to hear complaints, hold inquiries and punish the offenders. They wielded considerable powers to intervene in any kind of transaction or transfer of property among the people. No land could be alienated from one man to another without the permission of the Ambalakarars. Another important Kallar subcaste is the Piramalai Kallar. They are highly conservative and have preserved their customs and traditions to the present day. They are also believed to be the oldest inhabitants of the Tamil country with reports of their presence going back to Tamil literary works of the 4th century B.C. They are found mainly in the districts of Madurai and Theni. Their popular deity is Amman, the Mother Goddess. It is believed that the Maravar people, the Agamudayars, Thanjai Cholarkula Kalla Nattars, Pandiya Vellalars, Chola Vellalars, Chera Vellalar, Vellala Mudaliyars, Agamudaya Mudaliars,Conjeevaram Mudaliars and Udayars have all descended from Kallars.