அனந்தபத்மநாபனின் களஞ்சியம்,

0 c
திருவிதாங்கூர் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா அரசுகளும் வளமான அரசுகளாகவே இருந்திருக்கின்றன என்பதே வரலாற்று உண்மை. அதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.  பருவமழையை நம்பி இருக்கும் இந்தியாவில் அரசுகளும் மக்களும்கூட சேமிப்பை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள். தங்கம் அந்த சேமிப்புக்கான நாணயமாக இருந்தது. ஆலயங்கள் சேமிப்பு மையங்கள். அவை மாபெரும் பஞ்சம்தாங்கும் அமைப்புகள். அந்த ஒட்டுமொத்த அமைப்பே 1750களுக்கு பின் பிரிட்டிஷாரால் இருநூறாண்டுக்காலம் கொள்ளையிடப்பட்டது. அதன் விளைவே இந்தியாவை சூறையாடிய மாபெரும் பஞ்சங்கள்.

பதினெட்டுபட்டி---சுதந்திர விவசாயிகளினாலான கிராம சமூகங்களின் கூட்டமைப்பு

0 c
பழைய இந்திய பொருளியல் அமைப்பு பற்றியும் , நிதி நிர்வாகம் பற்றியும் நீங்கள் வாசிகக் ஆரம்பித்தால் மலைமலையாக இருக்கின்றன நூல்கள்.

இங்கிருந்த கிராமப்பொருளியல் அமைப்பு பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்தும்கூட சிதையாமல் இருந்தது என்பது வரலாறு.

அவற்றில் பஞ்சம்தாங்கும் சமூகஅமைப்புகள் இருந்தன. பிரிட்டிஷாரின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான சுரண்டல் மூலமே கிராமப்பொருளியல் அழிந்தது.

கண்டுகொள்ளாத இந்திய தூதரகமும் அவதிப்படும் தமிழர்களும்!

0 c
JULY 30, சென்னை:  நல்ல வேலை கிடைக்கும், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்று மலேசியா சென்றவர்கள் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டு, முறையான ஆவணங்கள் இல்லாததால் மலேசிய முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்

0 c

தமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.

இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.

ஸ்ரீராஜராஜீஸ்வரம்” எ னும் தஞ்சை பெரிய கோயில்

0 c
தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்
தஞ்சை வெ.கோபாலன்
25 Sep 2010 அச்சிட
தஞ்சாவூர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோழர்களின் தலைநகரம். இங்குதான் கடைச்சோழர்கள் எனப்படும் விஜயாலயனின் வம்சத்தினர் சோழ நாட்டை ஆண்டு வந்தார்கள். இங்குதான் விஜயாலயன் தங்கள் குலதெய்வமான நிசும்பசூதனிக்கு ஓர் ஆலயம் எடுத்து வழிபட்டான். அவனது வழித்தோன்றல்கள் பற்பல போர்களில் வெற்றி பெற்று தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றினர்.

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஒரு அற்புத சிற்பம்

0 c

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஒரு அற்புத சிற்பம்



தஞ்சாவூர் பெரிய கோவிலின் முகமண்டபத்து வாயிலில் உள்ள துவார பாலகர் சிலை காட்டும் தத்துவம் அற்புதமானது.துவாரபாலகரின் காலடியில் கிடக்கும் பாம்பு ஒன்று யானையை விழுங்குவதாக சிலை வடிக்கப்பட்டுள்ளது. யானையை விழுங்கும் பாம்பின் உருவத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பாம்பு சுற்றியிருக்கும் துவாரபாலகரின் கதாயுதத்தின் அளவை கற்பனை செய்துகொள்ளுங்கள்.

கடத்தப்படும் பெண்களும், குழந்தைகளும் அதிர்ச்சி ரிப்போர்ட்!

0 c

JUNE 30, உலகில், 127 நாடுகளிலிருந்து, ஆண்டு ஒன்றுக்கு, பெண்கள், குழந்தைகள் என, 25 லட்சம் பேர் கடத்தப்படுவதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 52 சதவீதம் பேர் கிராமவாசிகள்-மொத்த மக்கள் தொகை 7,21,38,958

0 c
சென்னை: தமிழக மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள்.

இராணுவ தொழிலில் நான்---கேணல் ஹரிகரன்

0 c
இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றியவர் கேணல் ஹரிகரன். ட்ரான்ஸ்கரண்ஸ் இணையத்தளத்தில் வாசகர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு கேணல் ஹரிகரன் பதிலளித்துள்ளார்.

அவற்றிலிருது சில கருத்துகள் 

கொங்கிவயல் ஸ்ரீமுத்துகருப்பைய்யா ஆண்டவர்

0 c


ஒரு நாள் இந்த சாயபு, முத்துகருப்பைய்யா வீட்டு வாசல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அன்றைய தினம் முத்துகருப்பைய்யா வீட்டில் உள்ள அனைவரும் படு சோகமாக இருந்தனர். காரணம்- அவர்கள் வீட்டில் வளர்ந்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று திடீரென இறந்து விட்டது. வீட்டில் சோகமாக அமர்ந்திருந்த முத்துகருப்பைய்யாவைத் தன் அருகே அழைத்த சாயபு, சோகத்துக்கான காரணம் கேட்டார். அதற்கு முத்துகருப்பைய்யா, “எங்க வீட்டுல ஆசையா வளர்த்த ஆட்டுக்குட்டி திடீர்னு செத்துப் போச்சு. அதான் வீட்டுல இருக்கிற எல்லாரும் சோகமாக இருக்காங்க” என்றார்.

Rate This

ஸ்ரீமுத்துகருப்பய்யா ஆண்டவர்
ஸ்ரீமுத்துகருப்பய்யா ஆண்டவர்

இந்திய கிராமங்களும் இடம்பெயரும் மக்களும்

0 c



First Published : 18 Jul 2011 01:24:04 AM IST





பரம்பரைகளின் பின் பரம்பரைகள் வேருடன் சாய்கின்றன. புரட்சிகளின் பின் புரட்சிகள் உருவாகின்றன. ஆனால், கிராம சமுதாயங்கள் மாற்றம் காண்பதே இல்லை. இக்கருத்து இன்றைக்கு, நேற்றைக்கு கூறப்பட்டதல்ல. 1832-ம் ஆண்டு இந்திய கிராமங்களைப் பற்றி சார்லஸ் மெட்காஃப் என்பவர் கூறியவை தாம் இவை.மேலும் கிராமங்கள் சின்னஞ்சிறு குடியரசுகள் எனவும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்தையும் உள்ளடக்கியவை என்பதோடு அநேகமாக அந்நியர்களின் உதவியின்றியே செயல்படும் தன்மை கொண்டவை என்றும் இந்தியாவின் ஊரகங்களைப் பற்றி இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற "ஹவுஸ் ஆப் காமன்ஸ்' எனும் கீழ்சபைக்கு 1832-ல் சார்லஸ் மெட்காஃப் சமர்ப்பித்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.ஏறக்குறைய இந்திய கிராமங்களைப் பற்றிய காந்தியடிகளின் கனவும் இதுதான். கிராமங்களின் தன்னிறைவு மற்றும் பொருளாதார விடுதலை குறித்த காந்தியத் தத்துவமும், சார்லஸ் மெட்காஃபின் கருத்துகளும் மிக நெருங்கிய தொடர்புடையவையே.
180 ஆண்டுகள் நிறைவடையப் போகும் தருவாயில் சார்லஸ் மெட்காஃபின் கூற்றின் இன்றையநிலை என்ன என்று கேட்டால், இந்திய கிராமங்களின் முகம் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளது என்பதை ஒப்புக்கொண்டு தானாக வேண்டும்.இந்திய கிராமங்களில் நல்ல பலமாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஆளில்லாத லெவல் கிராஸிங், வாகனம்

அரிசி சோறு... ஆட்டுக்கறி குழம்பு... அமர்க்களப்படும் ஆடி மொய் விருந்து!!

0 c
ஆடிமாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களை கட்டும். பொங்கல் வைக்கவும், பால் குடம் எடுக்கவும், கூழ் ஊத்தவும் கூட்டம் கூட்டமாய் மக்கள் படை எடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

பத்து வாழ்க்கைத் திறன்கள்

0 c
பத்து  வாழ்க்கைத்  திறன்கள் நம்  ஒவ்வொருவருக்கும்  தேவை  என்று உலக  சுகாதாரநிறுவனம்  வரையறுத்திருக்கிறது.

 தன்னை அறிதல்,
தன்னைப் போல்  பிறரைஉணர்தல்,
இன்னொருவருடன்  சரியாக உறவாடக்  கற்றல்,
உரையாடக்  கற்றல்,
எதையும்  கேள்வி  கேட்கப்  பழகுதல்,
எதற்கும்  நாமே  பதில்  தேடப்  பழகுதல்,
தெளிவாக  முடிவெடுத்தல்,
சிக்கல்களை  அவிழ்த்தல்,
உணர்ச்சிகளை உணர்ந்து கொள்ளுதல்,
அழுத்தங்களை  லேசாக்குதல்

ராஜராஜ சோழன் மெய்கீர்த்தி

0 c

Rajaraja Cholan Meikeerthi

Narration by Thirumalai Vinjamoor Venkatesh, Thanks Venkatesh

ஸ்வஸ்தி ஸ்ரீ
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்

போருக்கு பின் - 1 - மக்கள் மனநிலை

0 c
 ஐரோப்பாவுக்கும் , வன்னிக்கும் இடைவெளிகள் மேலும் அதிகரிக்கின்றது...


   சிறிலிங்கம் 

புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தொடர்பாகப் பேச்சு வந்தபோது ஒரு நண்பர் சொன்ன தகவல் கவனத்திற்குரியதாக இருந்தது. புலிகளின் காலத்தில் போராட்டத்துக்கெனப் புலம்பெயர் தமிழர்கள் தாராளமாக உதவினார்கள். இவர்கள் அனைவரும்

உடையாண்டியம்மா சங்கரக்குட்டி தேவர்

0 c

கோவில்பட்டியிலிருந்து ஏழாயிரம்பண்ணை செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர் வெம்பக்கோட்டை என்னும் கிராமம். இங்கு தேவர் சாதியினரால் வழிபடப்படும் உடையாண்டியம்மா, சங்கரக்குட்டித்தேவர் கோவில், ஊரின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றங்கரையில் அமைந்துள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் தமிழ்ப்புலமை

0 c
தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அறியாதார் யாருமிருக்க முடியாது. 50, 60 வயதைக் கடந்தவர்களுக்கு அவரது தேசீயமும் தெய்வீகமும் நன்றாகவே தெரிந்திருக்கும். இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு ஜாதித் தலைவராகவே தெரியும் (உபயம் -- ஓட்டு வங்கியை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்ட குறுகிய புத்தி அரசியல் கட்சிகள்

கலப்பு திருமணம் - சில பார்வைகள்

0 c
கள்ளபிரான்November 6, 2009 at 2:19 pm
4
ஒன்றும் புதுமையில்லை. I am not shocked. இது வெறும் சாதிப்பிரச்னையில்லை.ஆணாதிக்கமும் சேர்ந்த ஒன்று. கள்ளர் ஜாதியினரோ, மற்றும் பலஜாதியனர், தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், கருதுவது என்னவென்றால், தங்கள் ஜாதி தங்களுக்கு எப்படி வந்ததோ அப்படியே வரும் தலைமுறைகளுக்கும் போய் சேரவேண்டும என்பதுதான். எப்படி சேர்ப்பது? அதற்குத்தான் இருக்கிறது கருப்பை. அது யாருக்கும் சொந்தம்? ஜாதிக்குத்தான் சொந்தம். அவளுக்கு அல்ல. கருக்கலைப்பு

சாதி Caste - உண்மையில் இருக்கிறது.

0 c

இந்தியாவில் இதற்குப் பெயர் ---------------  சாதி.

ஆப்பிரிக்காவில் - இதற்குப் பெயர் ---------- Tribe.

வளைகுடாப் பகுதியில் இதற்குப் பெயர்---- Family.

அமெரிக்காவில் இதற்குப் பெயர் --------------இனம் (கருப்பு - வெள்ளை).

http://hayyram.blogspot.com/2010/06/blog-post.html

வரலாறு வேண்டுவது சார்பற்ற தன்மையையே

0 c
எதிர்வினை

மு. பழனி இராகுலதாசன், தேவகோட்டை


மதிப்புரைப் பகுதியில் பழ. அதியமான் முன்னுரைச் செய்தியாகத் தந்துள்ள தகவல்கள் பொருத்தமானவை அல்ல. 1957 செப்டம்பர், 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் தேவர் “மறவர்” சார்பாகக் கலந்துகொள்ளவில்லை. இது ஒரு சாதிக் கலவரம் என்று காட்டுவதற்காக, காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் பெருந்தலைவர் காமராசரின் அரசாங்கமும் செய்த சூட்சுமமான உபாயங்களைப் புரிந்துகொண்ட தேவர் “நான் இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் கலந்துகொள்கிறேன்”

மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்

0 c
Thinnai
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=206021710&format=html&edition_id=20060217

மதமாற்றங்களை தடுக்கும் சட்டத்திற்கான தேவையும் நியாயமும்

(முனைவர்) நீதியரசர் பி.வேணுகோபால் (ஓய்வு)

எனது தலைமையிலான மண்டைகாடு கலவரங்கள் குறித்த விசாரணை குழு மதமாற்றங்களை தடைசெய்யும் ஒரு சட்டத்தினை 1983 இலேயே பரிந்துரை செய்தது. அண்மையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்து (பின்னர் அரசியல் நிர்பந்தங்களால் நீக்கிவிட்ட) கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தினை சரியான கோணத்தில் அறிந்துகொள்ள (அன்றைய) விசாரணைக்குழு மதமாற்றத் தடைச்சட்டத்தினை பரிந்துரை செய்யுமாறு தூண்டிய பின்புலத்தையும் சூழலையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மானியத்தை எரிக்கும் பெட்ரோல்

0 c


மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 0
குறைந்தஅதி சிறந்த 
உலகமயம் தன் கொடூரக் கதிர்வீச்சை இந்தியா மீது 1992 இல் பாய்ச்சியது. அன்று முதல் மக்கள் நல அரசின் அங்கங்கள் ஒவ்வொன்றாக செயலிழந்து வருகின்றன. உலகமயத்தின் கடும் விதிமுறைகளுடன் வந்த ஒன்றுதான் அரசு மானியங்களைப் படிப்படியாக நிறுத்த வேண்டும் என்பது. பல துறைகள் அதைக் கச்சிதமாக செய்ய, அந்தந்த துறைகளில் தனியார் முதலீடு உள்ளே நுழைகிறது. இதைத்தான் "தகுந்த இசைவான முதலீட்டுச் சூழல்' என உள்நாட்டு - வெளிநாட்டு முதலாளிகள் அழைக்கின்றனர்.
கல்வி, சுகாதாரம், உடல்நலம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து என எங்கும் தனியார், எதிலும் தனியார் என அவர்களின் பரிமாணம்தான்! ஒரே மூச்சில் ஒரு துறையிலிருந்து அரசாங்கம் வெளியேற முடியாது என்பதால், கடந்த 20 ஆண்டுகளில் அதனை படிப்படியாக செய்து வருகிறார்கள். அவர்கள் நுழைய முடியாத துறைகள் இன்னும் உள்ளன. தனியார் ரயில்கள், தனியார் ராணுவம், தனியாரிடம் அரசு நிர்வாகம் என எது நடந்தாலும் இனி வியப்பில்லை. அப்படித்தான் எண்ணெய் விலை உயர்வு சார்ந்த பிரச்சனையும்! 2002 இல் மானியங்கள் குறைப்பு அறிவிக்கப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வழங்கப்படும் மானிய அளவு குறைக்கப்பட்டது; மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மட்டும் மானிய விலையில் தொடரும் என அறிவிக்கப்பட்டது. எண்ணெய் விலையை நிர்ணயிக்க ஒரு புதிய ஏற்பாடு வகுக்கப்பட்டது - Administrative Pricing Mechanism.
petrol_370ரங்கராஜன் குழு 2005 இல் அமைக்கப்பட்டு, பெட்ரோலிய பொருட்களின் விலை - வரி நிர்ணயம் குறித்து ஆய்வு நிகழ்த்தப்பட்டது. பெட்ரோலிய நிறுவனங்களில் இருந்து வெளியேறும் பொழுது உள்ள விலைக்கு, ஒரு வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என அக்குழு பரிந்துரைத்தது. 2009 இல் அமைக்கப்பட்ட கிரித் பாரிக் குழு,

கிழக்கிந்திய கம்பெனி--- திட்டமிடல் கொஞ்சம்... திருட்டுத்தனம்

0 c
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் வந்தது நாடு பிடிக்க அல்ல. அவர்கள் வணிக நோக்கத்திற்காகவே மட்டுமே உள்ளே வந்தனர்.  ஆனால் அவர்களின் எண்ணத்தை மாற்றியதும் நம்மவரே. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். சாதகமான சூழ்நிலை உருவானது.ஆங்கிலேயர்கள் தங்களை ஆட்சியாளர்களாக மாற்றிக் கொண்டனர்.. 

புகையை மறக்க ஒரு இணையதளம்

0 c
மனம் இருந்தால் மார்க்கம் உண்டென்பது புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு பொருந்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம், புகை பிடிப்பவர்கள் பலருக்கும் அந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் அல்லது விருப்பம் இருந்தாலும் அதிலிருந்து விடுபட வழி தெரியாமலேயே தவித்திருக்கின்றனர். சிகரெட் பிடிப்பவர்களை பொறுத்தவரை விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது. கூடுதலாக ஏதாவது தேவை.
.