புலம்பலில் பிரமலைக் கள்ளர்கள்....From Vikatan

1 c

களவாடப்படும் கண்டிஷன் ஜாரி நிலங்கள்!

பஞ்சமி நிலங்கள் விவகாரம் தமிழக அரசியல்வாதிகளை பாடாய்படுத்திக் கொண்டிருப்பது போதாதென்று இப்போது, 'எங்களுக்கு வழங்கப்பட்ட கண்டிஷன் ஜாரி நிலங் களை மீட்டுக் கொடுங்கள்' என்று தென் மாவட்டங்களில் வசிக்கும் பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் ஆர்ப்பரிக்கத் துவங்கியிருக்கிறார்கள். இதை வலியுறுத்தி தேனியில் அந்த சமூகத்தினர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என போராட் டத்தில் குதித்திருப்பதால் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. 
நம்மிடம் பேசிய 'பிரமலைக் கள்ளர் ஜாரி நிலம் மீட்புக் குழு' தலைவர் தமிழரசன்,

''பிரமலைக் கள்ளர் உள்ளிட்ட சில சாதியினருக்கு எதிராக பிரிட்டீஷ் ஆட்சியில் 'கைரேகை' சட்டம் என்ற கொடுமையான சட்டம் அமல் படுத்தப்பட்டது. அதை எதிர்த்து உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூரில் நடந்த கிளர்ச்சியில் 30-க்கும் மேலான வர்களை சுட்டுக் கொன்றது போலீஸ். அப்போது நடந்த கலவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய வருவாய்த் துறை அதிகாரிகள், 'பொருளாதாரரீதியாக முன்னேற செய்தால் பிரமலைக் கள்ளர் சமூகத்தினரை திருட்டுத் தொழிலுக்கு போகவிடாமல் திருத்திவிடலாம்' என அரசுக்கு அறிக்கை கொடுத்தார்கள்.

அதன் அடிப்படையில்தான் 1915-ல் 'கள்ளர் மறு சீரமைப்புத் துறை' உருவாக்கப்பட்டது. அந்தத் துறையின் மூலம் பிரமலைக் கள்ளர்கள் முன்னுக்கு வருவதற்காக நிலமும் வழங்கி னார்கள். அப்படி வழங்கப்பட்ட 'கண்டிஷன் ஜாரி நிலங்களை' விற்கவோ வாங்கவோ கூடாது என்பது அரசாணை. சுதந்திரப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பிரமலைக் கள்ளர்களும் கணிச மான அளவில் பங்கெடுத்தார்கள். அதனால், அவர்கள் எல்லாம் பிரிட்டீஷ் அரசாங்கத்தால் நாலா திசைகளிலும் விரட்டி அடிக்கப்பட்டனர். அப்படி ஓடியவர்களின் ஜாரி நிலங்கள் எல்லாம் அப்போது பிரிட்டீஷ் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த பிற சாதிக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. காலப்போக்கில் விதிகளை மீறி அந்த நிலங்களுக்கு பட்டா மாறு தலும் செய்திருக்கிறார்கள்.
இப்படி அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்டுக் கொடுக்கச் சொல்லி பசும்பொன் தேவர் காலத்திலிருந்தே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஒன்றுகூடினால் வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து விடுவோமோ
என்ற பயத்தில் அரசியல் கட்சியினர் சதி செய்து எங்களைப் பிரித்து விடுகிறார்கள். கண்டிஷன் ஜாரி நிலங்கள் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு கொடுத்ததற்கு, பெரியகுளம் தாலுக்காவில் 800 ஏக்கர், தேனியில் 400 ஏக்கர், ஆண்டிபட்டியில் 300 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இவைகளில் பெரும்பகுதி வேறு சமுதாயத்தினர் பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுவிட்டது!'' என்றார். 

குழுவின் சட்ட ஆலோசகர் முத்துப்பாண்டி, ''போராடிப் பார்த்தும் எந்த நடவடிக்கையும் இல்லாத தால், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கண்டிஷன் ஜாரி நிலங்களில் 'இது கள்ளர் ஜாரி நிலம்' என தட்டிபலகை ஊன்றினோம். அதை போலீஸார் அப்புறப்படுத்தி விட்டார்கள். இப்போது உண்ணாவிரதம் நடத்தியுள்ளோம். இனியும் தீர்வில்லை என்றால் அடுத்தகட்டமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எங்களது இடங்களில் எங்கள் மக்களைக் குடியேற்றும் போராட்டத்தை நடத்துவோம்!'' என்றார்.

வருவாய்த் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ''குறிப்பிட்ட சாதியினருக்கு என்றில்லாமல் நிலமற்ற ஏழை எளியவர்கள் அனைவருக்கும் அப்போது நிலம் வழங்கப்பட்டுள்ளது. பிரமலைக் கள்ளர் ஜாரி நிலங்கள் தற்பொழுது யார் பிடியில் உள்ளது என்ற விவரம் தெரியவில்லை. சம்பந்தப் பட்டவர்கள் உரிய தகவல்களுடன் என்னை சந்தித்தால் அந்த நிலங்கள் அதிகம் உள்ளதாக சொல்லப்படும் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களிடம் பேசி நடவடிக்கை எடுக்கக் காத்திருக்கிறேன்!'' என்றார்.  

இதனிடையே தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தருமர் என்பவர், 'எனது கள்ளர் கண்டிஷன் ஜாரி நிலத்தை கேரளத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக பட்டா மாறுதல் செய்துவிட்டதாக' போலீஸில் புகார் கொடுக்க... சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தருமரை சந்தித்தோம், ''எங்க அப்பா காலத்தில் கண்டிஷன் ஜாரி நிலமாக எங்களுக்கு ஐந்தரை ஏக்கர் கொடுத்தார்கள். என்னைப்போல ஊமையன் தொழுசரலைக்காட்டு மேட்டில் 400 ஏக்கர் கள்ளர், ஆதிராவிடர்களுக்கு கண்டிஷன் ஜாரி நிலம் கொடுத்திருக்காங்க. இந்த நிலங்களை கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவருக்காக ஜான் வி.லிட்டோ, ராணி சேவியர், சேவியர், ஜேம்ஸ் ஆகியோர் பெயர்களில் வாங்கி, பட்டாவும் மாத்திட்டாங்க. என்னிடம் நிலத்தை கேட்டாங்க. நான் கொடுக்கலைன்னதும் அவங்களாவே 2008-ல் போலி ஆவணங்கள் தயாரித்து பட்டா மாறுதல் செய்திட்டாங்க. நான் வருவாய்த் துறையினரிடம் முறையிட்டும் பயனில்லை. நீதிமன்ற உத்தரவு வாங்கிய பின்னரும் வருவாய்த் துறை அமைச்சர் தலையீடு இருப்பதாக சொல்லி போலீஸ் நடவடிக்கை எடுக்கல. இப்ப இருக்கிற எஸ்.பி-யான பாலகிருஷ்ணன்தான் என் பக்கம் உள்ள நியாயத்தைப் புரிஞ்சுக்கிட்டு வழக்குப் போட வைத்திருக்கிறார்!'' என்றார்.

எஸ்.பி-யிடம் பேசினோம். ''கண்டிஷன் ஜாரி நிலங்களை பட்டா மாறுதல், பத்திரப் பதிவு செய்யக்கூடாது. அதை மீறி சட்ட விரோதமாக செயல்பட்டதால்
ஜான் வி.லிட்டோ, ராணி சேவியர், சேவியர், ஜேம்ஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறோம். கூடலூர் ஊமையன் தொழுவில் 400 ஏக்கர் கண்டிஷன் ஜாரி நிலங்களை வாங்கிய இந்த கும்பல், அந்த ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வாங்கியுள்ளதும் எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் மிகப்பெரிய மோசடிகள் நடந்திருப்பதால், இவர் களுக்கு பட்டா மாறுதல் செய்து கொடுக்க உறுதுணையாக இருந்த வருவாய் மற்றும் பத்திரப் பதிவு துறையினர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்!'' என்றார்.

- இரா.முத்துநாகு 
நன்றி : பானு தேவர்
0 c
தங்களது வாழ்க்கையினை வரையறுக்கும் ஓர் அடிப்படை அம்சமாகவே சிறிலங்காவில் வாழும் ஒவ்வொரு தனிமனிதரும் காணியைக் கருதுகிறார்கள்.

குறித்த ஒருவரது காணியின் அமைவிடம் தரும் பெறுமதி மற்றும் அதனை அவர் சொந்தமாக வைத்துருப்பது என்பன அவரது சமூக பெறுமானத்தை காட்டும் சுட்டியே.

திருமணத்திற்கான வாய்ப்பு மற்றும் கல்விகற்பதற்கான வாய்ப்பு என்பவை உள்ளிட்ட குறிப்பட்ட சில அம்சங்களிலும் காணி செல்வாக்குச் செலுத்துகிறது.

குறித்த ஒரு காணியை அவர் வைத்திருப்பதற்கான உறுதியான ஆவணங்கள் இருக்குமிடத்து அது அவரது பொருளாதார மேம்பாட்டுக்கும் துணை புரிகிறது.

குறிப்பாக காணியின் உறுதியைப் பயன்படுத்தி வங்கிகளில் கடனைப் பெற்று வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதோடு வருமானத்தினையும் பெருக்கிக்கொள்ளலாம்.

பொய் கூட்டி எழுதிஇருப்பதால்

0 c
our relation mr.murugesan replay to vinavu article please read this.  any one knows mr.murugesan please inform me with contact no
article
http://www.vinavu.com/2008/10/31/pasumponil/



mr.murugesan  reply


அன்பு நண்பா., வினவு என்று தலைப்பு வைத்ததற்காக இப்படி தாறுமாறாக எழுதினால் எப்படி?
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தேவர் ஜெயந்திக்கு யார், யார்? வருகிறார், அம்பேத்கர் ஜெயந்திக்கு யார் யார்? வருகிறார், அவர்களின் நோக்கம் என்ன?, நிலைமை என்ன? என்று அரசியல்வாதிகளைப் பற்றி எழுதினீர்கள், பரவாயில்லை அது இன்றைய சமுக அரசியல் நிலைமை.

தேவர், தேவர் சாதியின் அடையாளமென்றால் தேவர் சாதியின் அடையாளம் எது?
என்று கேள்வி கேட்டு, நீங்களே இந்த கேள்விக்கு உங்களின் முட்டாள் தனமான பதிலாக,
தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அந்த அடையாளங்கள். —
என்று எழுதி இருக்கிறீர்கள்.


இதில் பொய் கூட்டி எழுதிஇருப்பதால் அதை மறுத்தும், வரலாற்று தென்மையும், அடையாளங்கையும் உங்களுக்கும் இந்த உலக மக்களுக்கும எடுத்து காட்ட வேண்டியது எனது பொறுப்பு.
1) தமிழக அரசர்களில் தொன்மையான மாமன்னன்-ராஜ ராஜ சோழன்(கி.பி.1000) தோன்றிய முத்த தமிழ் குடி- இன்றைய தேவர் இனம். அந்த மாமன்னனிடம் நீங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும் கண்டீர்களா?

2) மதுரையை ஆண்டு, கண்ணகி-கோவலன்-க்கு தவறான நீதியளித்ததால் தன் உயிரை துறந்த மன்னன் நெடுந்செழியநிடமும், நீர் இந்த தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் கண்டீரா?

3) தமிழகத்தை மூவேந்தர்கள் ஆண்ட காலத்தில், எதிரி நாட்டு எல்லைக்குள் சென்று களகம் செய்தவர்- கள்ளர்., எதிரி படையுடன் களத்தில் மரப்போர் புரிந்தவர்-மறவர்., தன்னாட்டுக்குள் எதிரி படை புகாமல் அகத்திணை காத்தவர்- அகமுடையார். இவ்வாறு மூன்றுவகை போர்புரிந்து அனைத்து இன மக்களையும் காத்த இந்த இனத்தில் நீங்கள் காண்பது-தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அல்லவா?

4) மதுரையை நாயக்க மன்னர்கள் ஆண்டு கொண்ட்ருக்கையில், மீனாக்ஷி அம்மன் கோவிலை சூறையாடி அழிக்கும் நோக்கத்தோடு படைஎடுத்து வந்த ஓரங்கஷீபின் தளபதியிடமிருந்து கோவிலினை காப்பாற்றிய இந்த இனத்திடம் நீங்கள் காண்பது -தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அல்லவா?

5) சாதாரண நாட்களில் உணவுக்காக விவசாயம், விவசாயம் சார்த்த தொழில், ஆடு, மாடு மேய்த்தல். வயல்வெளி,கிராமம் என அனைத்து பகுதிக்கும் பகல்-இரவு காவல் என அனைத்து இன மக்கள் உடன் சமுகத்தில் வரைமுரையுடன் வாழ்த்த குடி, அண்டு முதல் இன்று வரை வழக்கில் உள்ள சொல்- ஒருத்தன் நம்பி வந்தா உயிர் கொடுக்கும் தேவன் (உ.ம) மன்னன் கட்டபொம்மன்- ஊமைத்துரை-க்காக தனது உயிர் மட்டுமல்லாது தனது தந்ததியயும் பழி கொடுத்த மாமன்னர்கள் மருதுஇருவர். இவர்களிடம் நீங்கள் காண்பது தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் அல்லவா?

5) இந்தியாவில் வெள்ளையன் ஆண்ட காலத்தில், தமிழகத்தில் இந்த குறிப்பிட்ட இனம் மட்டும் அடங்காமல் நேரடியாக எதிர்த்துக்கொண்டே இருப்பதைக்கண்டு, இந்த இனத்தின் குணாதிசியங்களை பட்டாணியர்கள் மூலமாக தெரிந்து கொண்டு இந்த இனத்தினை அடக்க -குற்றபரம்பறை -எனும் கொடும் சட்டதிம் மூலமாக அடக்கி திருடனாகவும், முரடனாகவும் வெளிப்படுத்தப்பட்ட இந்த இனத்தில் இன்று நீங்கள் காண்பது, தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும் தானா?

6) ஆதி தமிழ் நாட்டில் அனைத்து ஜாதி மக்களுடனும் சரியான வரைமுறையில் பழகிவந்த மக்கள் , இந்தியா முழுவதும் இந்து மதத்தில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகவே ஜாதி பாகுபாடு ஏற்பட்டு தேவர் இன மக்கள் மட்டுமின்றி அனைவரும் இதில் பிரிந்து நினறனர். இதில் தேவர் இனத்தை மட்டும் குறை சொல்வதேன்? . இது இன்று அனைத்து மா வட்டத்திலும், வெவேறு ஜாதி மக்களுக்கும், தாழ்த்த பட்டவர்களுக்கும் உள்ள பிரச்சனை.

7) சில நேரங்களில் இப்பிரச்சனை வர காரணம் இரு ஜாதி ஆண்களும் அடுத்த ஜாதி பெண்களின் மேல் கைவைப்பதால் தான். இதுவே பெரிதாக காரணம் அரசியல்வாதிகளே! இது மறுக்க முடியாத உண்மையல்லவா?, அதற்காக மொத்தமாக தேவர் இனத்தையே, தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கும் சாதி ஆதிக்கமும், பெருமிதமும், வீரமும்தான் என்பது குருட்டு தனம்.

8) மேலும் உமது அடுத்த குற்றச்சாட்டு தேவர் திருமகன் மேல்.
//பசும்பொன் தேவரின் காலத்திலேயே நடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக தேவர் சாதி மக்கள் நடத்திய முதுகளத்தூர் கலவரமும், இம்மானுவேல் படுகொலையும் அவரது ஆதிக்கசாதி அடையாளத்தைப் பறைசாற்ற போதும்.//
அட பாவி, தேவர் திருமகனார்- இந்த இரு சாதிகளுக்கிடையே பிரச்சனை வராமலிருக்க நிறைய செய்திருக்கிறார். மேலும் அவருடைய பெரும்பாலான நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தானமாக கொடுத்தவர். இன்று அவருடைய தம்பி வகையறா வறுமையில் இருக்கின்றனர். \

9) இவ்வளவுக்கப்புறம் ஒரு முக்கிய சேதி. கடந்த வாரத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் டாக்டர். சேதுராமன், தேவரினமும், தேவேந்திரர் இனமும் ஒன்றுதான், இனி ஒற்றுமையாக இருக்க வேண்டுமென பேசிருக்கிறார்.
இதனால் இனிமேலும் ஒட்டு மொத்தமாக தேவரினம் என்று எழுதாமல், தப்பு செய்பவர் பெயரினை மட்டும் குறிப்பிட்டு எழுதவும்.

மதுரை----ஏன் பெண் சிசுக்களைக் கொல்கிறார்கள்

0 c
"முப்பது வருசமாக செஞ்ச பாவம் இப்ப எங்க கிராமத்தையெல்லாம் கதறி அழவக்குதப்பா"

1980ல் தொடங்கி 2010 இன்று வரை நீடிக்கும் ஒரு கொடுமை. கள்ளி பால் ஊற்றி பெண்சிசுகளை கொல்லும் செயல் முக்குலத்துக்கும் பெயர்பெற்ற மதுரையைச் சுற்றியுள்ள 24 கிராமங்களில் இந்த கதறல்கள் கேட்கிறது.



ஏன் பெண் சிசுக்களைக் கொல்கிறார்கள்.

1. பெண் குழந்தைகள் பிறந்தால் வளர்த்து ஆளாக்கி, கட்டிக்கொடுத்து கடைசி வரை செலவு செய்தாக வேண்டும் என்ற பொருளாதார நெருக்கடியே அடிப்படை காரணம்.

2. பெண் குழந்தைகள் பிறக்கும் வீட்டை மற்ற குடும்பத்தினர் ஏலனமாக பார்க்கும் இழிவு.

3. பெண்களைக் கட்டிக்கொடுக்க 1 கிலோ தங்கம் தேவைப்படுகிறது. அதற்கு பின்னரும் தொடரும் வரதட்சனைக் கொடுமை.

4. பெண்களும், ஆண்களுக்கு சமமாக படிப்பதால் இருவருக்கும் நான் பெரிசா! நீ பெரிசா!! என சன்டைப்போட்டுக்கொண்டு மதுரைக்கோர்ட்டுக்கு படியேருகிறார்கள்.

5. நல்ல படிக்கட்டுனு உயர்கல்விக்காக வேறு ஊர்களுக்கு அனுப்பும் போது சாதி மாறி காதலிப்பதால், அதனால் பெற்றோர்களுக்கு ஏற்படும் அசிங்கத்தால் பெற்றோர்கள் தற்கொலை செய்துக்கொள்ளுவது நீடிக்கிறது.



எப்படி கொல்லுகிறார்கள்

1. கள்ளிப்பால் ஊற்றுவது

2. நெல்மணியை ஊட்டுவது

3. கொதிக்க கொதிக்க கோழி சாறு கொடுப்பது.


இதன் எதிர் விளைவு

1. பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால் திருமணத்திற்கு பெண் கிடைப்பதில்லை.

2. சிசு கொலை நடக்கும் ஊர் என்பதால் மற்ற ஊரினர் பெண்கொடுக்க மறுக்கின்றனர்.

3. நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருப்பதால் வாலிபர்கள், மதுரை போன்ற ஊர்களில் இருக்கும் தவறான இடத்திற்கு செல்வதால் பால்வினை நோய்களுக்கு உள்ளாகி ஆரோக்கியம் பாதிக்கும் அவலநிலை உண்டாகிறது.

4. இளைஞர்கள் இளமை இழந்துக்கொண்டிருக்கிறார்கள்



தீர்வு
1. வரதட்சனை இல்லாமல் திருமணம் செய்துக்கொள்வது.


2. பழைய காலம் போல பெண்வீட்டாருக்கு வரதட்சனைக் கொடுத்து திருமணம் செய்துக்கொள்ளுவது.


3. பெண்களை மதிக்கும் பண்பாட்டை உருவாக்குவது.


4. ஆணும், பெண்ணும் சமம் என்ற கருத்தை மக்கள் மனதில் வலுவாக பதியவைப்பது.