0 c
டிஜிட்டல் காமெராவை ஸ்கேன்னராக பயன்படுத்துவது எப்படி?

அச்சு ஆவணங்களில் இருந்து எழுத்துகளை பிரித்தெடுக்க


தமிழில் பிடிஎப் செய்யலாம்…

தமிழ்ச் சமூகத்தில் மறவர் சாதி - முனைவர். எŠ.கதிர்வேல்


வட ஈழ மறவர் மான்மியம்

கள்ளர். என்பது. தப்பான. விளக்கத்தில். நோக்கப் படுகிறது.

காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்

எளிய தமிழில் கணினி புத்தகங்கள்

DEVAR LIBRARY

இலவசமாய் கிடைக்கும் சில பயனுள்ள மென்பொருட்கள்

இன்டர்நெட் தளத்தில் இலவசமாக நமக்குப் பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றின் பயன்பாடுகள் பலவகையாகும். இலவச டிவி, ஆடியோ மற்றும் வீடியோ வசதி, கம்ப்யூட்டரில் ஆட்டோ ஹாட் கீ அமைப்பு என இவை பல்வேறு வகைகளாகும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.* டவுண்லோட் மேனேஜர்இன்டர்நெட்டினை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு புரோகிராமையாவது டவுண்லோட் செய்கிறார்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது. எத்தனை வைரஸ் பயமுறுத்தல் இருந்தாலும் இலவசம் மற்றும் புதிய பயன்பாடு என்று தெரிந்தவுடன் அந்த புரோகிராமினை இறக் கிப் பார்க்கத்தான் மனசு துடிக்கிறது. இவ்வாறு டவுண் லோட் செய்திடும் புரோகிராம் களை பலர் தங்கள் கம்ப்யூட்டர் டிரைவ் களில் அப்படியே சாப்ட்வேர் ஸ்டோர் ரூம் தயார் செய்து வைத்துவிடுகின்றனர். 45 சதவிகிதம் பேரே பயன்படுத்துகின்றனர்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்*

ஒர்பிட் டவுன்லோடர்

இதில் டவுண் லோட் சம்பந்தப்பட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. டவுண்லோட் செய்யப்படும் புரோகிராமினைப் பிரித்து டவுண்லோட் செய்வது, ஒரே பைலுக்கு பல மிர்ரர் பைல்களை உருவாக்குவது, யு–ட்யூப் போன்ற வீடியோ தளங்களிலிருந்து பிளாஷ் வீடியோக்களை டவுண்லோட் செய் வது, இதற்கான பிட் டாரண்ட் சப்போர்ட் என இது தரும் வசதிகள் நீண்டு கொண்டே போகின் றன. டவுண்லோட் செய்யப்படும் புரோகிராம் ஸிப் பைலாக இருந் தால் அதில் என்ன என்ன பைல்கள் உள்ளன என்று பார்த்து நமக்குத் தேவயான பைல்களை மட்டும் டவுண்லோட் செய்திடும் வசதி குறிப்பிட்டுச் சொல்லக் கூடியதாகும்.

இதனைப் பயன்படுத்தி டவுண்லோட் செய்தவர்கள் அளித்துள்ள கருத்துக்களை இந்த தளத்தின் சமுதாய தளப்பிரிவில் படிக்கலாம். மிகவும் பயனுள்ளவையாகவும் இந்த புரோகிராமினைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ளன. அண்மையில் தரப்படும் இந்த FDM புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுவதுமாக ஸ்கேன் செய்து நீங்கள் வைத்துள்ள புரோகிராம்கள் அனைத்தும் லேட்டஸ்ட் புரோகிராம்களா என்று சோதனை செய்து அப்படி இல்லை என்றால் அவற்றை அப்டேட் செய்வதற்கான வழிகளையும் தருகிறது. ஆனால் FDM போல கூடுதலான வசதிகள் இதில் இல்லை.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2.உங்கள் இஷ்டத்திற்கு ஷார்ட் கட் கீகம்ப்யூட்டர் வந்ததிலிருந்து நேரம் மிச்சம் செய்வதற்கும், குறைந்த உழைப்பிற்கும் பல வழிகளை நாம் பெற்று வருகிறோம். அந்த வகையில் கீ போர்டு ஷார்ட் கட் கீகளை அந்த அந்த அப்ளிகேஷன் புரோகிராம்களே தந்து வருகின்றன. எம்.எஸ். ஆபீஸ் மற்றும் பிரவுசர்கள் அனைத்திற்கும் ஹாட் கீகள் உள்ளன.இருப்பினும் நம் வசதிக்கு நாம் விரும்பும் வகையில் இந்த ஆட்டோ ஹாட் கீகள் அமைந்தால் இன்னும் வசதியாக இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம், விரும்புகிறோம். அந்த வகையில் நமக்கு உதவிட கிடைப்பது Auto Hotkey என்னும் அப்ளிகேஷன் புரோகிராம். இதன் மூலம் எந்த கீ இணைப்புகளிலும் நீங்கள் விரும்பும்செயல்பாட்டினை அமைத்துப் பயன்படுத்தலாம். அத்துடன் இந்த புரோகிராம் உங்கள் கீ போர்டு மற்றும் மவுஸ் பயன்பாட்டினை பதிவு செய்து அவற்றை நீங்கள் விரும்பும் எத்தனை முறையும் சுருக்கமாகச் செயல்படுத்த உதவிடுகிறது.

இந்த புரோகிராம் தன்னுடைய ஸ்கிரிப்டிங் மொழியைப் பயன்படுத்துகிறது. இதை உணர்ந்து பயன் படுத்துவதும் எளிது. தெரிந்து கொண்டால் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் நம்மால் ஆட்டோ ஹாட் கீ களை அமைக்கலாம். இந்த ஸ்கிரிப்டிங் மொழியைக் கட்டாயம் கற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்பதில்லை. இந்த புரோகிராம் தரும் ஆட்டோ ஸ்கிரிப்ட் ரைட்டர் உங்களுக்காக மேக்ரோக்களைப் பதிவு செய்கிறது.ஆட்டோ ஹாட் கீ புரோகிராமினை இன்ஸ்டால் செய்தவுடன் உங்களுக்குப் பிடித்த அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறக்க ஆட்டோ ஹாட் கீகளை உருவாக்கலாம். எடுத்துக் காட்டாக Windows + W இணைந்து எம்.எஸ்.வேர்டைத் திறக்குமாறு செய்திடலாம். இப்படியே பல புரோகிராம்களுக்கான ஹாட் கீகளை அமைக்கலாம். ஆனால் இந்த புரோகிராமின் முழு பயனை அடைய இதன் ஸ்கிரிப்டிங் மொழியை புரிந்து கொள்வது நல்லது. இதற்கான வழிகாட்டியும் இந்த தளத்தில் உள்ளது. நீங்கள் உருவாக்கும் ஹாட் கீகளை எடுத்துச் சென்று பயன்படுத்தும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு ஸ்கிரிப்டையும் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக உருவாக்கலாம். அதன் மீது ரைட் கிளிக் செய்து Compile script என்பதில் கிளிக் செய்தால் அது ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக உருவாகும். இந்த பைலை எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.இவை அனைத்தும் புதிய கம்ப்யூட்டரில் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு உங்களுக்கு உதவிடும். Exit கொடுத்தால் இவற்றிலிருந்து வெளியேறலாம். புதிய அந்த கம்ப்யூட்டரில் எந்த பாதிப்பையும் ஏற்படுத் தாது.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்இதே போன்ற இன்னொரு புரோகிராம் உள்ளது. ஆனாலும் ஆட்டோ ஹாட் கீ போல அனைத்து வசதிகளையும் தரும் வேறு புரோகிராம் எதுவும் இல்லை என்றே கூறலாம்.தரவிறக்கம் செய்ய : கிளிக் செய்யவும்

3.இலவச டிவி புரோகிராம்இன்டர்நெட் இணைப்பு வசதி குறைந்த கட்டணத்தில் கிடைப்பதால் (மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இங்கு மிக மிக அதிகம்தான்) பலரும் இதன் மூலம் அனைத்து வசதிகளையும் பெற எண்ணுகின்றனர். அவ்வகையில் டிவி மற்றும் திரைப்படங்களையும் பார்க்க துடிக்கின்றனர். உங்களிடம் மத்திய நிலை வேகத்தில் இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்தால் இது சாத்தியமே. இந்த வகையில் நமக்கு உதவிடுவது Joost என்னும் புரோகிராம் ஆகும்.

முற்றிலும் இலவச டிவி தரும் புரோகிராம் என இதனைக் கூறலாம். மேலே குறிப்பிட்டுள்ள தளத்திலிருந்து Joost புரோகிராமினை டவுண்லோட் செய்து கொள்ளவும். இந்த கிளையண்ட் புரோகிராம் மூலம் உலகெங்கும் உள்ள டிவி நிகழ்ச்சிகளைக் காண முடிகிறது. (ஆனால் எத்தனை நிகழ்ச்சிகளை நாம் பார்த்து புரிந்து ரசிக்க முடியும் என்பது வேறு விஷயம்) இதன் மூலம் கிடைக்கும் வீடியோவின் தன்மை அவ்வளவு சிறப்பாக இருக்குமா என்பது நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களைப் பொறுத்து உள்ளது. இருந்தாலும் பார்க்க சகிக்க முடியாத அளவில் இது அமைவதில்லை.இது தரும் சேனல்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் அசந்து போவீர்கள். மொத்தம் 480 சேனல்களைத் தருகிறது. இதனை வகை வகையாகப் பிரித்தும் பார்க்கலாம். காமெடி, கார்ட்டூன், டாகுமெண்டரி என வகைகளும் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு சேனலிலும் உங்களுக்குப் பிடித்த படக் காட்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை இணைத்து பார்க்கும் வகையில் அமைத்துக் கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.இந்த Joost புரோகிராமின் சிறப்பு நாம் கேட்பதை வழங்குவதுதான். நாம் விரும்புவதை நாம் தேர்ந்தெடுக்கும் நேரத்தில் தருகிறது. எப்போது வேண்டுமானாலும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை மூடிவிடலாம். ஆனால் ஒரு சின்ன பிரச்னை உள்ளது. விளம்பரங்களையும் நாம் பார்த்தே ஆக வேண்டும். ஏனென்றால் அவை தரும் நிதி பலத்தில் தான் இந்த இலவச டிவி புரோகிராம் இயங்குகிறது. அதனால் என்ன! இங்கு நாம் கேபிளுக்குப் பணம் கட்டிப் பார்க்கையில் எத்தனை விளம்பரங்கள் வருகின்றன என்று நீங்கள் அங்கலாய்ப்பது தெரிகிறது. எனவே குறுக்கிடும் விளம்பரங்களுக்குப் பழகிய நமக்கு Joost தரும் விளம்பரங்கள் ஒரு பொருட்டே அல்ல. இதே போல இன்னொரு தளம் இதுவரை எனக்குத் தென்படவில்லை.தள முகவரி :இங்கே கிளிக் செய்யவும்

4.சிடிக்களில் எழுத நம்முடைய கம்ப்யூட்டர்களில் சிடி மற்றும் டிவிடி ரைட்டர்களை நிறுவுகையில் அதனுடன் வரும் நீரோ சிடி ரைட்டிங் புரோகிராமுடன் பழகிப் போன நமக்கு அதே போல மற்ற புரோகிராம்கள் குறித்து எண்ணுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. இருந்தாலும் நீரோ போலவே, அதன் வசதிகளுக்கு இணையான வசதிகளைத் தரும் இலவச புரோகிராம்களும் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

சிடி மற்றும் டிவிடிக்களில் தகவல்களை எழுத CD Burner XP என்றொரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. சிடி, டிவிடி மற்றும் புளுரே டிஸ்க்குகளில் நீரோ போலவே அனைத்து வகை தகவல்களையும் எழுதுகிறது. ஐ.எஸ்.ஓ. இமேஜ்களை சிடிக்களில் அமைத்துத் தருகிறது. ஆடியோ சிடிக்களை உருவாக்குகிறது.

இப்படி நீரோ நமக்குத் தரும் அனைத்து செயல்பாடுகளையும் தருகிறது. இதனுடைய இன்டர்பேஸும் மிகவும் எளிமையானதாக இருக்கிறது. ஜஸ்ட் ட்ராக் அண்ட் ட்ராப் என்ற முறையில் அமைந்துள்ளது. 2.8 எம்பி அளவிலான இந்த பைல் அநாவசியமாக எந்த தகவலையும் எழுதிவைப்பதில்லை. சிடிக்களின் இடத்தை வேஸ்ட் செய்வதில்லை. இதனைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டீர்கள் என்றால் நிச்சயம் நீரோ புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்வது குறித்து யோசிக்கத் தொடங்கிவிடுவீர்கள் என்பது உறுதி.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

5. உங்கள் கம்ப்யூட்டரைத் தூக்கிச் செல்ல

நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது. ஏன், லேப் டாப் கம்ப்யூட்டரைக் கூடத் தூக்கிச் செல்வது எளிதான காரியம் இல்லை. யு.எஸ்.பி. டிரைவைத்தான் எடுத்துக் செல்கிறோம். இதனால் நாம் வேறு ஒருவரின் அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில் அதன் டெஸ்க் டாப், சூழ்நிலை ஆகியவை நமக்கு அந்நியமான ஒரு வேலை தளத்தைத் தருகிறது. அப்படியானால் நாம் பாக்கெட்டில் போட்டுச் செல்லும் யு.எஸ்.பி. டிரைவில் நம் கம்ப்யூட்டரின் சூழ்நிலையை நமக்குத் தரும் வகையில் அமைத்திட முடியுமா? ஆம், முடியும்.

இதற்கு ஒரு வழியாகத்தான் MojoPac என்னும் புரோகிராம் நமக்குக் கிடைக்கிறது. . மிக எளிதாக இதனை உங்கள் யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த கம்ப்யூட்டரில் உங்கள் டிரைவை இணைத்துச் செயல்படுத்தத் தொடங்கினாலும் அது உடனே உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் சூழ்நிலையைத் தருகிறது. இதனால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இந்த MojoPac புரோகிராம் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி ஒரு புதிய சூழ்நிலையை உருவாக்குகிறது. உங்கள் யு.எஸ்.பி. டிரைவ் உங்களின் இ: டிரைவாக மாறுகிறது.இதனால் எந்த கம்ப் யூட்டரில் இதனைப் பயன்படுத்துகிறீர்களோ அதில் உள்ள புரோகிராம்களுக்கு உங்களுக்கு அனுமதி கிடைக்காது. ஆனால் அதே நேரத்தில் உங்களுக்குத் தேவயான புரோகிராம்களை நீங்கள் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராம்கள் நீங்கள் எங்கெல்லாம் இந்த டிரைவை இணைத்துப் பயன் படுத்துகிறீர்களோ அங்கெல் லாம் கிடைக்கும்.இதன் வேகத்தை அதிக பட்சம் பயன் படுத்த வேண்டும் என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து அதில் யு.எஸ்.பி. டிரைவ் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் பிராபர்ட்டீஸ் கிளிக் செய்திடவும். இதில் ஹார்ட்வேர் என்னும் பகுதியில் யு.எஸ்.பி. டிரைவைத் தேர்ந்தெடுத்து அதில் புராபர்ட்டீஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ஏற்கனவே ே “Optimize for quick removal” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். இதற்குப் பதிலாக “Optimize for Performance” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். MojoPac போல செயல்படும் புரோகிராம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.தரவிறக்கம் செய்ய :இங்கே கிளிக் செய்யவும்ஆனால் நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம்களை எளிதில் எடுத்துச் சென்று பயன்படுத்த Portable Apps Suite என்னும் புரோகிராம் கிடைக்கிறது.தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்இலவசமாய் எவ்வளவோ இணையத்தில் கிடைக்கின்றன.மேலே தரப்பட்டுள்ள மென்பொருட்களை ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது தெரியாமலும் இருக்கலாம். உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தரவிறக்கி கொள்ளுங்கள்.thanks to : http://www.honeytamilonline.co.cc/2009/07/blog-post_13.html

டிஜிட்டல் காமெராவை ஸ்கேன்னராக பயன்படுத்துவது எப்படி?

0 c
டிஜிட்டல் காமெராவை ஸ்கேன்னராக பயன்படுத்துவது எப்படி?

உங்களிடம் ஸ்கேன்ன்னர் இல்லை. ஒரு ஆவணத்தை(Document) ஸ்கேன் செய்ய வேண்டும். உங்களிடம் டிஜிட்டல் கேமரா / நல்ல மொபைல் போன் கேமரா இருக்கிறதா? கவலையை விடுங்கள். நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டிய ஆவணத்தை புகைப்படம் எடுத்து கொள்ளுங்கள். Snapter என்ற மென்பொருள் மூலம் ஸ்கேன் காப்பி நீங்கள் பெற்று கொள்ள முடியும்.

இந்த மென்பொருளை இந்த லின்க்கில் சென்று(http://snapter.atiz.com/snapter.exe) தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது பற்றி மேலும் விபரங்களை இங்கே பாருங்கள்.

அச்சு ஆவணங்களில் இருந்து எழுத்துகளை பிரித்தெடுக்க

0 c
அச்சு ஆவணங்களில் இருந்து எழுத்துகளை பிரித்தெடுக்க
கல்லூரி இறுதி ஆண்டுகளில் ப்ராஜெக்ட் செய்யும் போது பெரும்பாலானோர் ப்ராஜெக்ட் அறிக்கை ( Project Report) முந்தய வருட மாணவர்களின் அறிக்கையை வாங்கி நமக்கு ஏற்றவாறு காப்பி செய்து உபயோகித்து இருப்போம். முந்தய ஆண்டு மாணவர் Word Document (.DOC) ஆக கொடுத்து இருந்தால் சிக்கல் இல்லை. வேண்டுபவற்றை காப்பி பேஸ்ட் செய்து கொள்ளலாம். சிலர் பழைய ப்ராஜெக்ட் புத்தகத்தை தூக்கி கொடுப்பர். அனைத்தையும் டைப் செய்து முடிப்பதற்குள் ஒரு வழியாகி விடும்.

சில ஸ்கேன் செய்யப்பட்ட கோப்புகள் பட வடிவில் இருக்கும். அவற்றில் உள்ள எழுத்துக்களை, வாக்கியங்கள் நமக்கு சில இடங்களில் உபயோகிக்க தேவைப்படும். அந்நேரத்தில் அவற்றில் டைப் செய்ய வேண்டி இருக்கும். அதே போல் நாளிதழ்கள், பத்திரிக்கைகளில் மற்றும் அச்சு புத்தகங்களில் உள்ள எழுத்துகளை இணையத்தில் ஏற்ற விரும்பினால் அவை முழுவதையும் டைப் செய்ய வேண்டி இருக்கும். அதே போல் பல எழுத்து படைப்புகள் இணையத்தில் பட வடிவில் கிடைக்கும். அதில் உள்ள எழுத்துகளை காப்பி செய்யவோ, எடிட் செய்யவோ நம்மால் முடியாது.

இது போன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு உதவ TopOCR என்ற இலவச மென்பொருள் இருக்கிறது. இந்த லின்க்கில் சென்று (http://www.topocr.com/topocr.exe)இந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளவும்.

நம்மிடம்
டிஜிட்டல் கேமரா அல்லது ஸ்கானர் இருந்தால் போதும். நமக்கு தேவையான அச்சு வடிவத்தை (ப்ராஜெக்ட் ரிப்போர்ட் / அச்சு புத்தக பக்கம்) டிஜிட்டல் கேமரா மூலம் புகைப்படம் எடுத்தோ அல்லது ஸ்கானர் மூலம் ஸ்கேன் செய்தோ பட வடிவமாக (JPG) சேமித்து கொள்ளுங்கள்


TopOCR மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். File ---> Open மூலம் நீங்கள் சேமித்து வைத்துள்ள பட வடிவ (JPG) திறங்கள் . வலது புற விண்டோவில் நீங்கள் ஸ்கேன் செய்து வைத்துள்ள படத்தில் உள்ள எழுத்துக்கள் நீங்கள் எடிட் செய்வதற்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு கிடைக்கும். அவற்றை நீங்கள் காப்பி செய்து Word போன்றவற்றில் உபயோகித்து கொள்ளலாம்.


பழைய புத்தகங்களையோ, அச்சு வடிவங்களையோ கணினிக்கு ஏற்ற எடிட் செய்ய கூடிய எழுத்து வடிவமாக மாற்றுவதில் இந்த மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். முழுமையாக டைப் செய்யும் கால விரயத்தை மிச்சம் செய்யும்.

இது ஆங்கில பக்கங்களில் மட்டுமே வேலை செய்கிறது. தமிழில் இது போன்று பொன்விழி என்ற மென்பொருள் இருப்பதாக நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் தெரிவித்து உள்ளார். அந்த மென்பொருளுக்கான விபரங்கள் , தரவிறக்கம்செய்வதற்கான லிங்க் இதோ .
(http://ildc.gov.in/GIST/htm/ocr_spell.htm)
thanks www.tvs50.blogspot.com

தமிழில் பிடிஎப் செய்யலாம்…

0 c
பிடிஎப்(pdf) என்பது Portable Document File என்பதன் சுருக்கமாகும்.

இதுவரை தமிழ் இணையதளங்கள் பல்வேறு எழுத்துருக்களில் இயங்கி வந்தன. இன்றைய நிலையில் யுனிகோடு என்னும் ஒருங்குறி முறைக்கு மாறிவருகின்றன. அன்று முதல் இன்று வரை தமிழ் இணையதளங்களில் தோன்றும் எழுத்துருச் சிக்கலின் தீர்வுகளில் தனித்தன்மையுடன் விளங்குவது பிடிஎப் என்னும் முறையாகும். அடாப் ரீடர் வாயிலாக இந்த பிடிஎப் கோப்புகளைப் படிக்கமுடியும்.இதற்கென வேறு எழுத்துருக்கள் தேவையில்லை என்பதால் பலராலும் விரும்பத்தக்கதாக பிடிஎப் இன்றுவரை விளங்கி வருகிறது.மேலும் ஆயிரக்கணக்கான பக்கங்களை ஒரு புள்ளிக்குள் அடக்கி வைத்திருப்பதாக இம்முறை விளங்குவது குறிப்பிடத்தக்கது.இதனால் ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களைப் பல்வேறு இணையதளங்கள் இன்று இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளன.

பல்வேறு இணையதளங்கள் இலவசமாக வேர்டு உள்ளிட்ட தரவுகளை பிடிஎப் முறைக்கு மாற்றித்தருகின்றன. இவ்விணையதளங்களுக்குச் சென்று மாற்ற வேண்டிய தரவுகளை உள்ளிட்டு நம் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தால் சில மணித்துளிகளில் நம் மின்னஞ்சலுக்கு நம் பிடிஎப் கோப்புகள் வந்து விடும்.இவ்விணையதளங்களில் மாற்றித்தரப்படும் பிடிஎப் கோப்புகள் ஆங்கில முறைக்கு மிகவும் பயனுள்ளதாகவும் எவ்விதமான சிக்கலுமின்றி உள்ளன.ஆனால் தமிழ்த்தரவுகளை இவ்விணையதளங்களின் வாயிலாக பிடிஎப்பாக மாற்றும் போது தமிழ் எழுத்துருக்கள் சிதைந்து காணப்படும் நிலையே இன்று வரை உள்ளது.மேலும் இணைய இணைப்பில் மட்டுமே பிடிஎப் கோப்புகளை உருவாக்கும் நிலை இருந்தது.இதற்கு மாற்றாக இணைய இணைப்பு இல்லாத நிலையிலும் தமிழ் பிடிஎப் கோப்புகளை நாமே உருவாக்குவதற்காக ஒரு மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது.

(http://getitfreely.co.cc/content/cute-pdf-creater//" )

இவ்விணையதளத்துக்குச் செல்ல வேண்டும். அங்கு முதல் பக்கத்தில் கிடைக்கும் Converter, Cute pdf writer என்னும் இரு மென்பொருள்களையும் பதிவிறக்கிக் கொள்ளவேண்டும்.இணையத்தில் நிறுவிக் கொள்ளவேண்டும் முதலில் கன்வெர்டரையும், பிறகு கியூட் பிடிஎப் ரைட்டரையும பதிவிறக்கவும். மாற்றித் பதிவிறக்கினால் சிக்கல் ஏற்படும்.

நாம் பிடிஎப் செய்யவேண்டிய தமிழ்த் தரவுகளை திறந்துகொள்ளவும் (எம்.எஸ் வேர்டு) (File>Print) பின் அந்தக் கோப்பில் இடது மேல்பக்க மூலைப்பகுதியில் உள்ள பைல் செல்லவும், அதன் கீழ் உள்ள பிரிண்ட் பகுதியைச் சொடுக்கினால் Print Window தோன்றும் அதில் டிராப் டவுன் லிஸ்ட் பாக்ஸ் தோன்றும். அதில் Cute pdf writer ஐத் தெரிவு செய்து பிரிண்ட் கொடுக்கவும். கோப்பு தயாரிக்கப்பட்டு சில நொடிகளில் எங்கு சேமிக்கவேண்டும் என்று தோன்றும். இடத்தைச் சுட்டினால் கோப்பு சேமிக்கப்பட்டுவிடும்.

எவ்விதமான எழுத்துருச் சிக்கலுமின்றி இணைய இணைப்பே இல்லாமல், இலவசமாகத் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் பிடிஎப் கோப்பினை எந்த இணையதளத்திலும் சிக்கலின்றித் திறந்து பயன்படுத்தலாம். இதனைப் படிக்க அடாப் ரீடர் மட்டும் அக்கணினியில் இருக்கவேண்டும்
thanks : http://gunathamizh.blogspot.com/2009/05/blog-post_01.html

தமிழ்ச் சமூகத்தில் மறவர் சாதி - முனைவர். எŠ.கதிர்வேல்

0 c

ஒரு வரலாற்று மாணவன் என்ற முறையில் தமிழ்க்கலாச்சாரத்துக்குச் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ள வளமும் ஆழமும் மிக்க திருநெல்வேலியின் சரித்திரம் எப்போதும் என்னைப் பெரிதும் ஈர்ப்பதுண்டு.

எந்த ஒரு பிரதேசத்தையும் போலவே திருநெல்வேலியின் சீர்மையும் சிறப்புகளும் சில தோல்விகளோடும், விரும்பத்தகாதனவற்றோடும் கலந்தே இருக்கின்றன. இது நம்மை மனம் குலையச் செய்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான், ஒரு வரலாற்றாளரின் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது. இன்றைய சமூகக் கொந்தளிப்புகளுக்கு உண்மையான மூலகாரணங்களாகத் திகழ்கிற சமூகக் கட்டமைப்பின் பலவீனங்களை ஒரு வரலாற்றாளர் (கடந்த காலம் குறித்த தனது பரந்து விரிந்த ஞானத்தின் மூலம்) சரியாகச் சுட்டிக் காட்ட முடியும்.

இன்று மோதுகிற இரு சமூகக் குழுக்களான மறவர்கள் மற்றும் தலித்துக்கள் சமூக வாழ்வில் நடந்து கொள்கிற விதம் (Behaviour patterns) குறித்து ஆய்வு செய்வது இன்றைய காலத்தின் தேவையாகும்.

தலித் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் பல ஆய்வுகள் அறிவுத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், மறவர்களின் உணர்ச்சி வேகத்துக்கும் ஆக்கிரமிப்பு மனோபாவத்துக்கும் காரணமான சரித்திரப் பின்னணி என்ன என்பதைப் புரிந்து கொள்ள இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

READ MORE...
0 c
book: 25

வட ஈழ மறவர் மான்மியம்

முத்தமிழ்காத்த முடி மன்னரின் கொடிபறக்கவும், குடை சிறக்கவும், கொற்றந்தழைக்கவும் வித்திட்ட பெருமை படைவீரர்களானமறவர்குலப் பெருங்குடிமக்களையே முதற்கண் சாரும்.

இக்குலத்தவர்களின் வாள்வலிக்குந் தோள்வலிக்கும், வயமிகுந்த ஆள்வலிக்கும் எட்டாத தேசத்து அட்டதிசை மன்னரும் பட்டாங்கில் அஞ்சிப்பயந்தனர்.

Read full book click here

book 26
மறவர் உறவு முறை
எழுத்தாளர் / தொகுப்பாளர் : சின்னத்தம்பி.எம்.ஏ
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூன் 2002)
விலை : 150 .00 In Rs
பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 368
ISBN :
பதிப்பகம் : இளவழகன் பதிப்பகம்
முகவரி : 16, முதல் தளம்ஞ இரண்டாவது தெரு

பாலாஜி நகர்

சென்னை 600014

இந்தியா
உறவுமுறையானது, தனது வீச்சையும் வீரியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகின்ற காலமிது. மரத்தை மண்ணோடு சேர்த்துப் பிடித்து பிணைத்துக் கொண்டிருக்கும் ஆணி வேராகவும், பக்க வேர்களாகவும் உற்றார் உறவினர், குடும்பத்தைச் சமூகத்தோடு சேர்த்துப் பிடித்து பிணைத்துக் கொண்டிருந்த காலத்தில் உறவு முறையானது கொடிகாட்டிப் பறந்துகொண்டிருந்தது......
thanks to http://www.xn--clc1b1aa7ftbmw.com/final.aspx?id=VB0002576
0 c
hint:1
கள்ளர். என்பது. தப்பான. விளக்கத்தில். நோக்கப் படுகிறது.

http://www.tamilmanam.net/services/pdf/m_thiratti_single_pdf.php?id=229871&a.pdf
0 c
காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம்

நாயக்கர் வரலாற்றை முந்நூற்றி ஐம்பது பக்கம் எழுத தெரிந்த வெங்கடேசனுக்கு கள்ளர் வரலாற்றினை பூர்வீகத்திலிருந்து எழுத பத்து பக்கம் ஒதுக்க கூட முடியவில்லை.

நாயக்கர்களின் பூர்வீகம் பற்றி இத்தனை விபரமாக பெருமையுடன் சொல்ல முடிந்தவர் மதுரையை சுற்றியும் தமிழகம் எங்கும் உள்ள கள்ளர்களின் தாய்நிலம் எது?

வறண்ட பகுதிகளில் ஏன் தங்கள் வாழ்க்கையை அமைத்து கொண்டார்கள். சங்க இலக்கியத்தில் வரும் ஆறலை கள்ளர்களும் இன்றுள்ள கள்ளர்களும் ஒன்றா? கள்ளர்களின் பூர்வீக தொழில் திருடுதல் என்பது எவ்வளவு பெரிய பொய். ஏன் கள்ளர்கள் ஒடுக்கப்பட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகளின் மீது அக்கறை கொள்ளவேயில்லை


அவருக்கு கள்ளர்களின் வாழ்க்கை அவலங்களை விடவும் அவர்கள் இரவில் களவு செய்யப்போவதில் தான் அதிகமான சுவராஸ்யமிருக்கிறது. இதை தான் காலம்காலமாக தமிழ் சினிமா காட்டி வருகிறது. திருடன் எப்பேர்பட்ட காவலையும் மீறி திருடிவிடுவான். அவனை போலீஸôல் ஒருநாளும் பிடிக்கவே முடியாது. திருடன் அதி புத்திசாலி.

இருட்டிலும் அவனுக்கு கண் தெரியும் , அவன் ஒரு மாயாவி என்று தமிழ் சினிமா கட்டிய பிம்பத்திற்கும் அசலான கள்ளர்களின் வாழ்க்கைக்கு எவ்வளவோ வேறுபாடு இருக்கிறது.


மதுரையை சுற்றிய கள்ளர் கிராமங்களில் வாழ்ந்து வருபவர்களிடம் பேசிப்பாருங்கள். எவ்வளவு வாழ்க்கை அவலங்களை அவர்கள் கடந்து வந்திருக்கிறார்கள். எத்தனை ரணங்கள், வலிகள் அவர்களிடம் மறைந்திருக்கின்றன என்று புரியும்.

.READ MORE...