தமிழ்ச் சமூகத்தில் மறவர் சாதி - முனைவர். எŠ.கதிர்வேல்

ஒரு வரலாற்று மாணவன் என்ற முறையில் தமிழ்க்கலாச்சாரத்துக்குச் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ள வளமும் ஆழமும் மிக்க திருநெல்வேலியின் சரித்திரம் எப்போதும் என்னைப் பெரிதும் ஈர்ப்பதுண்டு.

எந்த ஒரு பிரதேசத்தையும் போலவே திருநெல்வேலியின் சீர்மையும் சிறப்புகளும் சில தோல்விகளோடும், விரும்பத்தகாதனவற்றோடும் கலந்தே இருக்கின்றன. இது நம்மை மனம் குலையச் செய்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான், ஒரு வரலாற்றாளரின் பொறுப்பு மிகவும் அதிகமாகிறது. இன்றைய சமூகக் கொந்தளிப்புகளுக்கு உண்மையான மூலகாரணங்களாகத் திகழ்கிற சமூகக் கட்டமைப்பின் பலவீனங்களை ஒரு வரலாற்றாளர் (கடந்த காலம் குறித்த தனது பரந்து விரிந்த ஞானத்தின் மூலம்) சரியாகச் சுட்டிக் காட்ட முடியும்.

இன்று மோதுகிற இரு சமூகக் குழுக்களான மறவர்கள் மற்றும் தலித்துக்கள் சமூக வாழ்வில் நடந்து கொள்கிற விதம் (Behaviour patterns) குறித்து ஆய்வு செய்வது இன்றைய காலத்தின் தேவையாகும்.

தலித் மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் பல ஆய்வுகள் அறிவுத்தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், மறவர்களின் உணர்ச்சி வேகத்துக்கும் ஆக்கிரமிப்பு மனோபாவத்துக்கும் காரணமான சரித்திரப் பின்னணி என்ன என்பதைப் புரிந்து கொள்ள இதுவரை எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

READ MORE...

No comments: