தமிழ் படித்த புத்தர்

0 c
ஒரு பொருள் இன்னொரு பொருளோடு நெருக்கமாக இயையும் போதில் - கல்லோடு கல் உரசுதல் -வெப்பக் கருத்தும் ஒளிக் கருத்தும் தோன்றுகின்றன என்றும் - ‘இலங்குதல்’ என்னும் ஒளி குறித்த தமிழ்ச் சொல் இப்படித்தான் தோன்றிற்று என்றும் மொழி இயலாளர்கள் சொல்கிறார்கள்.

இலங்குதல் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதே ‘இலங்கை’ என்னும் சொல்லாகும்.இச் சொல்லையே சிங்களர்கள் ‘லங்கா’ ஆக்கினார்கள்.

விலைவாசி உயர்வு

0 c
இந்தியாவில் உணவுப் பொருள் விலை ஏற்றத்துக்கு இரண்டு, மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவது,       பணவீக்கம். அதாவது, இன்ஃப்ளேஷன். 

இரண்டாவது,  பற்றாக்குறை. 

மூன்றாவது  .   போக்குவரத்துச் செலவு.

பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்

0 c

ருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

கடல்வளமும், நிலவளமும் கார்பரேட் கைகளில்? 100 சதுர கிலோமீட்டர்,75 கிராமங்கள்

0 c

கடந்த திமுக அட்சியின் போது கடலூர் மாவட்டம் துவங்கி நாகை மாவட்ட எல்லைவரை உள்ள கடற்கரை பகுதிகளை மொத்தமாக இந்திய பெரு முதலாளிகளிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் விற்பனை செய்த அவலம் நடந்தது. இந்த பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களை தங்களது கடுமான பணிகளை துவங்கி உள்ளனர். விவசாய நிலங்களும், கடற்கரையும் இந்த நிறுவனங்களால் ஆக்ரமிக்கபட்டன. குறிப்பாக கடலூரில் இந்த ஆக்ரமிப்பு அதிகம் நடத்தது. கிட்டதட்ட 7000 ஏக்கர்& (100 சதுர கிலோமீட்டர்,75 கிராமங்கள்)மேல் நிலங்கள் பல நிறுவனங்களால் வாங்கப்பட்டது. அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட இந்த நிலங்கள் ஏதோ எதற்கும் பயன்படாத நிலங்கள் அல்ல. சவுக்கை, முந்திரி, மணிலா, நெல் என பல வகை சாகுபடிகள் நடந்த இடங்களாகும்

ஜல்லிக்கட்டு கள்ளர், மறவரிடையே பெண் கொடுப்பதற்கான தேர்வு களனாக உள்ளது

0 c

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள்-5

ஜல்லிக்கட்டு 
ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக்
குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும்
வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.

ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை
அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத்
தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக்
கூறப்படுகிறது.

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? - சில முக்கிய தரவுகள்

0 c
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். பத்தாம் நூற்றாண்டு சீனா அல்லது ஜப்பான் அல்லது ஐரோப்பா அல்லது அரேபியாவின் வரலாறு என்பது குருதியில் தோய்ந்த கதை. சும்மா விக்கியை தட்டிப்பாருங்கள் தெரியும்.

அங்குதான் இந்திய மன்னர்கள் வேறுபடுகிறார்கள். இந்திய மன்னர்களின் அடைமொழிகளீல் குலசேகரன் என்ற பெயர் பெரும்பாலும் காணப்படும்.

தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு)

0 c
சாதியம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகின்ற வாழ்க்கை முறையாகும். இந்தியச் சமூக அமைப்பில் சாதிகள் தோன்றிய காலம் எது என்று வரையறுப்பது ஆய்வாளர்களிடம் விவாதப் பொருளாகவே உள்ளது. தொழில் பிரிவினையே சாதிகளாக மாறி வந்தன என்றும், நான்கு வர்ணங்களே சிதைந்து சாதிகளாயின என்றும், நிலவுடை மைக் காலகட்டமே சாதிகளின் தோற்றத்திற்கு காரணம் என்றும் பல்வேறு கருத்துகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன.

கொடும்பாளுர்ராயர்---- என்ற கள்ளர் அரச குலத்தினர்

0 c
கொடும்பாளுர் மன்னர்களான  வேளிர் மரபினர்   கள்ளர் குலத்தின்
பட்டங்களுக்கு உரியவர்கள்ஆவர்கள்
THANKS TO.(http://kallarperavai.weebly.com/296529953021299529923021-296530092994-298629753021297529693021296529953021.html)

புதுக்கோட்டையிலிருந்து 35கிலோ மீட்டர் தொலைவில் குடுமியான்மலை  மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது கொடும்பாளுர்.

கள்ளர் ---- SOME HINTS

0 c
கள்ளர்  சாதியினர் மீது இச் சட்டம் 1911 இல் தமிழகத்தில் போடப்பட்டிருந்தாலும் 1914 ல் முதன்முதலாக கீழக்குயில் குடிக் கிராமத்தில் முதலில் கேடிகளைப் பதிவு செய்தார்கள்.

அதன்படி 11 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் கள்ளர் இனத்து ஆண்கள் அனைவரும் சாயங்காலம் ஆனவுடன் பொலிஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டனர்.

குழந்தைகள் கல்விக்காக அதிகம் செலவிடும் இந்தியர்கள்!

0 c
இந்தியக் குடும்பங்கள் தங்களது குழந்தைகளின் கல்வி மற்றும் உடல் நலத்திற்காக அதிக அளவில் செலவிடுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது தொடர்பாக NSSO எனப்படும் "தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்" மேற்கொண்ட ஆய்வில், இந்தியக் குடும்பங்கள் தங்களது வருவாயில் உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளோடு, குழந்தைகளின் கல்விக்காக அதிக அளவில் செலவிடுவதாகவும், அதேப்போன்று அவர்களது சுகாதாரத்திற்காகவும் கணிசமாக கூடுதலாக செலவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

கழுகுமலை

0 c
கழுகுமலை …. இது எங்கே உள்ளது - தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம். அங்கே அப்படி என்ன விநோதம். … இப்போது வெட்டுவான்கோவில் படங்களை பாருங்கள்…
vettuvankoil1.jpg