சிலம்பம்

0 c


தமிழர்களின்  தற்காப்புக்கலை, வீரவிளையாட்டு, பெருமை "சிலம்பம்" உலகின் தலை சிறந்த தற்காப்புக்கலைகளில் ஒன்று, நம்மால் அந்த கலையை கத்துக்க முடியலாட்டினாலும்,ஏன் அந்த கலையின் வகைகள் , அருமை பெருமைகள தெரிஞ்சுக்ககூடாதுன்னு ஒரு ஆர்வம் வந்துடுச்சு.

எல்லாம் வல்ல நம் நண்பன் "கூகிள்" உதவியோட முடிஞ்ச அளவு தகவல்கள் திரட்டி இருக்கேன்.

சிலம்பம் எப்படி வந்துச்சு ? ஏன் வந்துச்சு ?

அந்த காலத்துல மலைவாழ் மக்கள் சிங்கம் புலி போன்ற மிருகங்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள கண்டுபிடிச்ச முறைதான் சிலம்பம்னு நாம இப்ப சொல்லுகிற கலை. அவங்க கையில் எப்போது இருக்க கூடிய சின்ன ஆயுதங்களான கம்பு, சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்கள பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள தான் இந்த கலையை பயன்படுதியிருக்காங்க .

எப்பயுமே இந்த ஆயுத்தங்களை வச்சுக்கிட்டு இருக்கது எப்படி சாத்தியம் ஆகும்னு ஒரு  கேள்வி இப்ப உங்க மனசுக்குள்ள வரலாம். அது சரியான கேள்வியே.

“சிலம்பக்கலையோட முக்கியமான பகுதி எந்த ஆயுதமுமே இல்லாமல் , கரங்களைக்கொண்டே தங்களை கொடிய மிருகங்களிடம் தற்காத்துக்கொள்வது.”

(மருதுபாண்டியர் ஒரு முறை வெறும் கரங்கலாலேயே புலி ஒன்றை சமாளித்து தப்பித்தார் என்று பாடநூல்களில் படித்தது ஞாபகம் வருகிறது)


சிலம்பக்கலையின் சிறப்புகளை அறிந்து கொண்ட முனிவர்கள் அதனை தமிழ்நாடு முழுவதும் பரப்பினர். அன்று முதல் சேர சோழ பாண்டிய மன்னர்கள் சிலம்பக்கலையை போற்றி வளர்த்தனர்.

அது சரி, அதென்ன பேரு "சிலம்பம்" ?

சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார்.

சிலம்பம் என்ற பெயர் "சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாக சொல்லபடுகிறது.


நம்மக்கு மட்டும் தெரிஞ்சா போதுமா ?

“இதில் வெறும் கரங்களை கொண்டு தற்காத்துகொள்ளும் கலைதான்,
பிறநாடுகள் வரை பரவி , அந்த நாடுகளில் மெருகேற்றபட்டு காரத்தே ஆனது என்று சொல்பவர்களும், அதன் காரணமாக தான் "கராத்தே" என்ற பெயர் கரம் என்ற பொருள் தருவதாக உள்ளது என்று வாதிடுவோரும் உள்ளனர்"

  கராத்தே கலையின் முன்னோடி குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர் மன், (போதி தர்மன்) புத்த துறவி களுக்கு கற்றுக் கொடுத்தார் . எனவே கராத்தே கலையின் முன்னோடி சிலம்பம் என்ற கருத்தும் உள்ளது.

சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு,கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கடுபடுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கி செல்வதாகவும் குறிப்பு ஒன்று உள்ளது.

பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது.அவர்கள் அந்த கம்பினை பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் .தமிழக எகிப்திய கலாச்சார பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.

சிலம்பத்தின் வகைகள் :
  1. சுவடு
  2. தெக்கன் சுவடு
  3. வடக்கன் சுவடு
  4. பொன்னுச் சுவடு
  5. தேங்காய் சுவடு
  6. ஒத்தைச் சுவடு
  7. குதிரைச்சுவடு
  8. கருப்பட்டிச் சுவடு
  9. முக்கோணச் சுவடு
  10. வட்டச் சுவடு
  11. மிச்சைச் சுவடு
  12. சர்சைச் சுவடு
  13. கள்ளர் விளையாட்டு
  14. சக்கர கிண்டி
  15. கிளவி வரிசை
  16. சித்திரச் சிலம்பம்
  17. கதம்ப வரிசை
  18. கருநாடக வரிசை

போன்றவை தான்.

(கராத்தே விளையாட்டின் "கடா' என்ற போர்ப்பிரிவு, தன் பெயரைப் பெற்றதற்கு, கதம்ப வரிசையைக் காரணம் என்றும் சொல்லபடுகிறது. இரண்டின் செயல்பாடுகளும் ஒரே போல் அமைந்தவை.)

மேலும் "குத்து வரிசை" என்ற சிலம்பத்தின் பிரிவு ஆயுதம் ஏதும் இல்லாத வெறும் கைகளை கொண்டு  செய்யும் முறை ஆகும்.

சிலம்பத்தில் பயன்படுத்த படும் ஆயுதங்கள் கம்பு, குறுங்கம்பு,மாடு  அல்லது கவரி (மான் கொம்பு),வாளும் கேடயமும், பட்டா,சுருள் பட்டா ,செண்டு ,லேசம், கட்டாரி, வளரி ,இடைகட்டி போன்றவையாகும்.

வளரி என்பது இருபக்கமும் கூர்மையான, மிக குறுகிய முனையும் மரத்தினால் ஆன கைபிடியும் கொண்ட ஆயுதம்.இதன் கூறிய பகுதியை பிடித்துகொண்டு தோளுக்கு மேல் தூக்கி எரிவதன் மூலம் 100 மீட்டர் தொலைவில் உள்ளவர்களை கூட தாக்கிவிடலாம்

(சுதந்திர போராட்டத்தின் போது , மருது பாண்டியகளின் வளரி வீசும் திறன் ஆங்கிலேயர்களை திணறடித்தது ஞாபகம் இருக்கலாம்)

  ஒருத்தன் கம்பு சுத்துரதுல திறமையானவனா இருந்தா , அவன் கம்பை கொண்டே அவன தாக்க வர எந்த ஆயுதத்தையும் தடுக்க முடியும்,அதுவும் எட்டு திசைகளில் இருந்து வருகிற ஆயுதங்களையும் தடுக்க முடியுனு சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.

வழக்கமா சிலம்பம் விளையாட பயன்படுத்தபடுற கம்பின் உயரம் , விளையாடுபவரின் நெற்றி வரையிலான உயரம் ஆகும்.
இங்கே ஒரு சில வீடியோகள சேர்த்திருக்கிறேன். நேரம் இருந்தால் கண்டிப்பாக பார்க்கவும்.
சரி இன்னைக்கு நிலைமை என்ன ?

இன்னைக்கு வெகு சிலரே சிலம்பக்கலையை கற்கின்றனர்.
இந்தியாவில் தமிழ்நாடு , கேரளா மற்றும் மலேசியா,பிரான்ஸ் போன்ற இடங்களில் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.
தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன்
வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டயபடிப்பாக சிலம்பம் நடத்தபடுகிறது


thanks to http://www.facebook.com/note.php?note_id=158432764189448

இந்திய சூழலில் சாதிகள்

0 c
thanks to http://deviyar-illam.blogspot.com/2011/01/blog-post_26.html


இப்போது வலைதளமும், இணையமும் நல்ல நோக்கத்திற்காக பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.. கணினியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தற்போது இலங்கை கடற்படையினரால் சாகடிக்கப்பட்டுக் கொண்டுருக்கும் தமிழக மீனவர்களின் உரிமை குறித்து குரல் எழுப்புகின்றனர். மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், இந்திய வெளியுறவுத்துறை அதன் கொள்கை போன்றவற்றை அந்தப்பக்கம் தூக்கி எறிந்துவிடுங்கள்.  வேறொரு சமயத்தில் விலாவாரியாக பேசுவோம்.  ஆனால் மண்டபம் முதல் பாண்டிச்சேரி எல்லை வரைக்கும் இருக்கும் மீனவர்களுக்காக ஒரு கூட்டமைப்பு இருக்குமே?  அவர்கள் எனன ஆனார்கள்? இதற்காகத் தானே சீமான் குரல் எழுப்பினார்?  வேகமாக இந்திய இறையாண்மைச் சட்டம் பாய்ந்ததே?  குறைந்தபட்சம் மீனவர்கள் கூட இது குறித்து வாய்திறப்பார் யாருமில்லை. காரணம் என்ன?
சீமான் சொல்வது போல தமிழர்கள் கட்சித் தமிழனாக சாதி தமிழனாக பிரிந்து இருக்கும் வரையிலும் எந்த காலத்திலும் விமோசனம் என்பதே இல்லை.  சுண்டைக்காய் நாடு இப்போது மட்டுமல்ல எதிர்காலத்திலும் கூட மண்டப முகாமிற்கு வந்து மிரட்டிவிட்டு கூடச் செல்வார்கள். நாமும் டவிட்டர்களில் பொங்கித் தீர்த்துவிட்டு தூங்கப் போய்விட வேண்டியது தான்,  இதே மீனவ சமூகத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் அதிலும் உட்பிரிவுகள் என்று தொடர்ந்து போய்க் கொண்டேயிருக்க எப்படி இவர்களால் ஒன்று சேரமுடியும்.?

ஈழத்தில் கைது செய்யப்பட்டு கொழும்பு நாலாவது மாடிக்கு கொண்டு செல்லப்பட்ட அங்கையர்கண்ணி, திருமலையிடம் ஈழ புலனாய்வு அதிகாரிகள் எப்படி கொக்கரித்தார்கள் தெரியுமா?  " உங்க சீமானால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியாவது ஜெயித்து வரமுடியுமா?" என்றார்களாம். நம்மைப் பற்றி தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் சரியாக புரிந்து வைத்திருந்தார்கள்.  இப்போது ஈழத்தில் உள்ள ஆட்சியாளர்கள் பலமடங்கு தெளிவாக புரிந்து வைத்திருக்கின்றனர். ..

நாம் இப்போது இந்தியாவை ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களைப் பற்றி பேசினாலும் காஷ்மீர் முதல் கன்யாகுமாரி வரைக்கும் உள்ள இந்த ஜாதிகளைப் பற்றி நாம் பேசித்தான் ஆகவேண்டும்.  இதுவே தான் இன்று வரையிலும் ஆட்சியாளர்களின் அரசியல் கணக்குகளுக்கு உதவியாய் இருக்கிறது.  சக மனிதனுடன் சேர்ந்து வாழ முடியாமல் ஒவ்வொருவர் மனதிலும் வன்மம், குரோதம், பொறாமை போன்ற உணர்ச்சிகளுடன் பிளவுபட்டு நிற்க நம் முதுகின் மேல் எவர் வேண்டுமானலும் குதிரை ஏறத்தானே செய்வார்கள்.

மீனவ சமூகம் என்றாலும் அதிலும் பல பிரிவுகள் உண்டு. இன்று அரசாங்கம் வாரி வழங்க வசதி வாய்ப்புகளை அனுபவித்துக் கொண்டுருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றாலும் அதற்குள்ளும் கிளைநதிகள் உண்டு. பள்ளர் என்றால் பறையரை பிடிக்காது. இவர்கள் இருவருக்கும் அருந்ததியரை பிடிக்காது. ஆனால் தொடக்கத்தில் மரமேறி அல்லது சாணார் என்று அழைக்கப்பட்டவர்களின் இன்றைய நிலைமை ஆச்சரியப்படக்கூடியதே. இன்று நாடார் என்று அழைக்கப்பட்டு பொருளாதாரரீதியாக முன்னேறி இன்று சமூகத்தில் சரிசமமாக உயர்ந்து உள்ளனர். அதுவும் ஜாதிக் கலவரத்திற்கு பெயர் போன இந்த இராமநாதபுரம் மாவட்டம் தான் இன்றைய ஜாதிக்கட்சி தலைவர்களுக்கு வழிகாட்டி. உங்கள் வயது நாற்பதுக்குள் இருந்தால் முதுகுளத்தூர் கலவரம், உஞ்சனை கலவரம் போன்றவற்றை கேட்டு இருக்கக்கூடும். குறைந்தபட்சம் அதன் தாக்கத்தை உணர்ந்திருக்க வாய்ப்புண்டு.

இந்து சமூதாயத்தின் அடிப்படையே சாதியாகும்.. 1918 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 5106 சாதிகள் இருந்தது. அதுவே தான் இன்று நகர்ந்து நகர்ந்து "சாதிவாரியாக பட்டியல் எடுத்தால் தான் ஆச்சு" என்று நம் அரசியல் வியாதிகள் அடம் பிடிக்கும் வரைக்கும் வளர்ந்துள்ளது. ஒருவர் மதம் மாறினாலும் அவர்களின் மூலக்கூறு மட்டும் மாறுவதில்லை. இந்துவில் தான் கொடுமை என்றால் தற்போது முஸ்லீம், கிறிஸ்துவம் வரைக்கும் பிசாசு போலவே தொடர்ந்து வந்து தலித் கிறிஸ்துவர்கள் என்பது வரைக்கும் முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் எவரால் ஆதாயமோ அவர்களுக்கு ஒரு தனி ஒதுக்கீடு.  அதற்கு மேலும் ஒரு உள் ஒதுக்கீடு. ஆக மொத்தத்தில் உருவாக் வேண்டிய பிரிவினைகளை ஆட்சியாளர்களும் உருவாக்குகிறார்கள். மக்களும் அதையே தான் விரும்புகிறார்கள்.

பின்னால் வரப்போகும் சம்பவங்களில் நாம் பார்க்கவேண்டிய இந்த சாதி மூலக்கூற்றை இப்போது பஞ்சாயத்தில் நிறுத்தி ஒரு தீர்ப்பை வாங்கிவிடுவோம்.  நான் இந்து என்று சொல்பவர்களில் எத்தனை பேர்களுக்கு இதன் முழுமையான அர்த்தம் தெரியும்? முஸ்லீம் என்றால் ஒரே வார்த்தையில் அல்லா என்றும் கிறிஸ்துவர் ஏசு என்றும் நகர்ந்துவிட முடியும். ஆனால் இந்து மதத்திற்கு?


தொடக்கத்தில் இந்த சாதியை தெய்வீகமானது என்பதாக பரப்பப்பட்டது. அதற்கு பின்னால் இருந்தது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட அயோக்கித்தனம்.   ஹிந்துத்துவம் என்பது இங்கே வாழ்ந்து கொண்டுருந்த பூர்வகுடிகளான திராவிட மக்களிடம் இருந்து பிடுங்கப்பட்டது.  இந்தோ ஐரோப்பாவிலிருந்து வந்த பெருங் கூட்டத்தினரால் இங்கு கொண்டு வரப்பட்டது.  இந்த கூட்டத்தில் உள்ள ஞானிகள்,,முனிவர்கள்,சந்நியாசிகள் போன்றவர்கள் தங்களது வேதங்களை சிந்து நதிக்கரையில் இயற்றினார்கள்.  இது கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. முகமது நபியின் இஸ்லாம் என்கிற நம்பிக்கை கிறிஸ்துவத்திற்கு பின்னால் வந்த ஒன்றாகும்.

இந்திய ஜனத்தொகையில் 85 சதவிகிதம் இந்துக்கள். ஆனால் இந்துக்கள் நம்பும் வேதாந்தம் என்பது வேதங்களைப் பற்றிய அறிவு, ஆராய்ச்சி, விரிவாக்கம், உணர்தல் போன்றவற்றை ஒவ்வொரு இந்துக்களுமே அறிந்து இருப்பார்களா என்பது ட்ரில்லியன் டாலர் கேள்வி?

மொத்தத்தில் வேதம் என்பதன் தொடக்கம் முடிவு எவருக்குமே தெரியாது.  இது குறிப்பிட்ட மக்களின் ஆதிக்கத்தில் வாழையடி வாழையாக கொண்டு வரப்பட்டது.  குரு சிஷ்யன் என்ற போர்வையில், ஏடுகளில், பேச்சில், மந்திரம் போலவே இதன் ரகஸ்யம் காக்கப்பட்டது.  தெய்வத்திடம் ஒவ்வொருவரும் ஏகாந்த சிந்தனைகளில் உரையாடி உருவாக்கப்பட்ட இந்த வேதத்திற்கும் சாமன்ய மக்களின் வாழ்க்கை முறைக்கும் வெகு தூரம்.  இதுவே தான் இன்று ஒவ்வொரு மனிதனையும் ஒன்று சேரவிடாமல் வெகு தூரமாக பிரித்து வைத்தும் உள்ளது. தொடக்கத்தில் பலவிதமான நம்பிக்கையை மக்களிடம் விதைத்தார்கள்.  இதனையே உண்மையென்று நம்பிக்கொண்டு அடித்துக் கொண்டு இன்றுவரையிலும் செத்துக் கொணடும் இருக்கிறார்கள்..

நாம் பள்ளிக்கூட பாடங்களில் இந்து மதத்தில் நான்கு வேதங்கள் உள்ளது என்று படித்துருப்போம். ஆனால் அந்த நான்கு வேதங்கள் எதைப்பற்றி சொல்லியிருக்கிறது என்பதையும் பார்த்துவிட்டு நகர்ந்துவிடலாம்.

ரிக் வேதம் என்பது உலகத்தைப்பற்றிய சூழ்நிலைகள், இயற்கை, நம்மைச் சுற்றியுள்ள விசயங்களைப்பற்றி பேசுவது

யஜுர் வேதம் சடங்குகள்,பலிகள்,வேள்விகள் இவற்றை செய்யும் முறை. இதில் உள்ள மந்திரங்களைப் பற்றி விரிவாக விளக்குவது.

சாமவேதம் சங்கீதம், பாடும் முறை, பயிலும் முறை, அடிப்படை விசயங்கள்

அதர்வண வேதம் மந்திரங்கள், சூன்யம், தந்திரவேலைகள், ஏவல் போன்றவற்றை பேசுவது.

இந்த நான்கிலும் கிளைநதிகள் உண்டு. இந்த ஒவ்வொன்றிலும் மந்திர சம்ஹிதை, பிரமாணம், ஆரண்யகா, உபநிஷித் என்று நான்காக பிரிகின்றது.

ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட ரிஷியினால், ஞானிகளால் உருவாக்கப்பட்டது. அவர் தன்னுடைய சீடர்களுக்கு மட்டும் சொல்லிக் கொடுக்க பயின்ற ஒவ்வொருவரும் இதை மக்களிடம் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

இதிலிருந்து தொடங்கியது தான் பிரும்மாவின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராமணர்கள், தோள் பட்டையிலிருந்து உருவானவர்கள் சத்திரியர்கள் என்று கூறப்படும் ஆட்சியாளர்கள் மற்றும் படைவீரர்கள். தொடையிலிருந்து வந்தவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லப்படும் தொழிலாளகள், கைவினைஞர்கள்.  பாதங்களில் மற்றும் பாதங்களின் அடியிலிருந்து  தோன்றியவர்கள் பஞ்சமர்கள்.

இந்த பிரிவுகளில் இருந்து தோன்றியது தான் இன்று நாம் பார்க்கும் கணக்குவழக்கற்ற ஜாதிகள். ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து நான் அவனைவிட உயர்ந்தவன், இவன் என்னை விட தாழ்ந்தவன் என்று அவரவர் நோக்கப்படி கான்சர் கிருமிப் போல பல்கி பெருகிவிட்டது.

இந்த இடத்தில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இதில் முதல் இடத்தில் வருபவர்கள் பிராமணர்கள் என்று ஒரு சொல்லில் முடித்துவிட்டார்கள்.  ஆனால் இந்த பிராமணர்கள் இந்தியாவில் எத்தனை விதமாக உள்ளனர் தெரியுமா?

பிராமணன் என்றால் நீ எந்த பிராமணன்? ஜலபுஷ்பம் என்று கூறி மீன் சாப்பிடும் வங்காளி பிராமணனா? காலில் shoe போட்டுக் கொண்டு கோட்டு சட்டையுடன் பூசை செய்கிற கங்கோத்திரி பிராமணனா? கையில் உருளை போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அதைத் சுழற்றி பூசை செய்யும் பூடான் பிராமணனா? கேரளத்து நம்பூதிரியா? ஆந்திர சாஸ்திரியா? ராவ்ஜீயா? சதுர்வேதியா? தமிழ்நாட்டு பிராமணரா? அதிலும் அய்யரா? அய்யங்காரா?

இதுவே செட்டியார் என்ற மூல சொல்லில் இருந்து பல கிளைநதிகள் பிரிகின்றது. இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தேவர்கள் என்றால் இன்று முக்குலத்தோர் என்று அழைக்கப்படுகிறது. அதிலும் கள்ளர், மறவர், அகமுடையர் என்று பிரிகின்றது.  கள்ளர் சாதிக்குள் பல பிரிவுகள் உண்டு. இதைப்போலவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்குள் ஏராளமான பிரிவுகள்.  அந்த பிரிவுகளுக்குள் கூட வர்ணம், கோத்திரம் போன்ற சொல்லில் இன்னும் கூட தனித்தனியாக பிரிகின்றது.

இது தவிர ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி.  பல்லாக்குகளைச் செய்தவன் பல்கிவாலா. இனிப்புகளைச் செய்தவன் மிட்டாய்வாலா. பல்லாக்கை தூக்குபவன் போயி என்கிற கீழ் சாதி.  ஒவ்வொரு சாதிக்குள் நுணுக்கமான வரையறை உண்டு இரும்பை உருக்குபவன் ஒரு சாதி. இரும்பைக் கொண்டு பொருள்களைச் செய்பவன் வேறொரு சாதி.  அந்த சாதியில் பிறந்தவன் அடுத்த சாதி மக்களை திருமணம் செய்யக்கூடாது. கடைசி வரைக்கும் ஒரு எல்லையை விட்டு தாண்ட முடியாத அளவிற்கு மிகத் தந்திரமாக உருவாக்கப்பட்ட வலைபின்னல். விரித்தவர்கள் போய் விட்டார்கள்.  அதிலிருந்து விடுபட மனமில்லாமல் நாம் மட்டும் உழன்று கொண்டு இருக்கிறோம்.

இந்து மத வேதங்களை உருவாக்கிய முனிவர்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டு போனால் நமக்கு முனி பிடித்துவிடும் அளவிற்கு தலை சுத்திவிடும். ஆனால் மொத்த விசயத்தையும் ஒரு குடுவைக்குள் அடக்கிவிடலாம்.

" உலகில் நீ காணும் அத்தனையும் மாயை. ஆத்மா என்பது பிரம்மம். இவற்றை புரிந்து கொள்ள மனிதனால் முடியாது. உலகில் உள்ள அத்தனை பந்தங்களையும் துறக்கவேண்டும். உன்னுடைய பற்றுதல் அத்தனையையும் துறந்த பிறகே உனக்கு மோட்சம் கிடைக்கும். குணம், குணக்கேடு, எல்லாவற்றையும் அறிய வேண்டும் போன்ற எண்ணத்தை விட்ட பிறகு எஞ்சி நிற்பது எதுவோ அதுவே தான் ஆண்டவன்."

இப்போது புரியுமே?

இந்திய வரலாற்றில் ஞானிகளும் ரிஷிகளும் தோன்ற மேலைநாட்டில் விஞ்ஞானிகளும் சமூக சீர்சிருத்தவாதிகளும் தோன்றிய கதையை ஓரளவுக்கு உணர்ந்து கொள்ள முடியும் தானே? மக்கள் ஒருபுறம் அவரவர் சாதிகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு தங்களுக்குள் தாங்களே பிளவு பட்டு நின்றார்கள். ஆண்டு கொண்டிருந்த மன்னர்கள், சுல்தான்கள், நவாபுகள், பாளையக்காரர்கள், மிராசுகள் போன்றோர்கள் அடுத்தவனை எப்படி அழிக்கலாம் என்று மறுபுறம் யோசிக்க உள்ளே வந்த ஆங்கிலேயர்களுக்கு எல்லாவிதங்களிலும் வாய்ப்புகள் தானாகவே கனிந்து நின்றது.

இது தான் ஆங்கிலேயர்களுக்கு இம்மாம் பெரிய அகண்ட பாரத நாட்டை ஆள்வதற்கு பல விதங்களிலும் உதவி செய்தது.

மனப்பிழைகள் பத்து

0 c
சீசனல் என்ற வணிகம் சம்பந்தமான ஆங்கிலப்பத்திரிகையை யாரோ கொச்சி விமானநிலையத்தில் விட்டுச்சென்றிருந்தார்கள். அதில் வந்த ஒரு கட்டுரையை ஆர்வமில்லாமல் வாசிக்க மெதுவாக சுவாரசியம் ஏற்பட்டது. பொதுவாக நான் ’உன்னால்முடியும்தம்பி’ வகைகளை வாசிப்பதில்லை. இந்தக்கட்டுரை அப்போது கொஞ்சநேரம் என்னைப்பற்றி யோசிக்கவைத்தது.
அன்றாட வாழ்க்கையில்நாம்செய்யும் பத்து மனப்பிழைகளை சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர் கட்டுரையில் எங்கும் ஆசிரியர் பெயரே இல்லை.

1.சூதாட்ட புத்தி Gamplers falacy

தற்செயல்களைப்பொறுத்தவரை இதுவரை நடந்தவற்றுக்கு ஒரு ஒழுங்கு இருக்கிறது, ஆகவே இனிமேல் இப்படி நிகழும் என்று ஊகித்துக்கொள்வது. பகடை பன்னிரண்டில் நான்குமுறை பூஜ்யம் விழுந்திருக்கிறது ஆகவே இனிமேலும் பூஜ்யம்தான் விழும் அல்லது இனிமேல் பூஜ்யமே விழாது என்று எண்ணிக்கொள்வதுபோன்றது. இதுவரை என்ன வாய்ப்புகள் இருந்தனவோ அதே வாய்ப்புகள்தான் இனிமேலும் இருக்கின்றன, இதுவரை நிகழ்ந்தது இனிமேல் நிகழ்வதை மாற்றாது என்பதே உண்மை
2 எதிர்வினைமனநிலை Reactivity
கவனிக்கப்படுகிறோம் என்று தெரியும்போது வேறுவகையில் நடந்துகொள்வது. பலசமயம் சிறப்பாகவும் பண்பாகவும்தான் நடந்துகொள்வோம். ஆனால் எப்போதும் அப்படி அல்ல. பெரும்பாலும் சம்பந்தப்பட்டவரின் உண்மையான இயல்புக்குப் பதிலாக அவர் காட்டவிரும்பும் இயல்புகள் வெளிப்படும்.

3 சாதாரண விஷயங்களை உள்ளர்த்தபடுத்திக்கொள்ளுதல் Pareidolia

சாதாரணமாக நிகழும் நிகழ்ச்சிகளுக்கு, அல்லது காட்சிகளுக்கு உள்ளுணர்ச்சி சார்ந்து ஏதேனும் அர்த்தங்களை கற்பித்துக்கொள்ளுதல். வீட்டை விட்டுக் கிளம்பும்போது கால்தடுக்கியது கெட்ட சகுனம் என்பதில் இருந்து காகம் Go go! என்றுதான் கூவுகிறது என எண்ணிக்கொள்வது வரை பல விஷயங்கள்.

4 தன்செயல்களை தானே முன்னூகம்செய்து நிகழ்த்திக்கொள்ளுதல் Self fulfilling prophecy

இந்தவிஷயம் சரியாக வரும் அல்லது வராது என முன்னரே எண்ணிக்கொள்ளுதல். அப்படி எண்ணிக்கொள்வதனாலேயே பெரும்பாலும் அதை நம்மையறியாமலேயே நாம் நிகழ்த்திக்கொள்ள ஆரம்பிப்போம். ஒருவருடனான உறவு சரியாக வராது என ஏனோ என்ணுவோம், அந்த எண்ணம் அப்படியே நம் செயல்களில் தெரியும். உறவு முறிந்துவிடும்.

5 தெரிந்தசிலவற்றை வைத்து தெரியாதவற்றை நிரப்பிக்கொள்ளுதல் Halo effect

ஒரு விஷயத்தைப்பற்றி அல்லது ஓர் ஆளுமையைப்பற்றி சிலவற்றை தெரிந்துகொண்டு அவற்றை ஒரு வார்ப்பாக ஆக்கிக்கொண்டு தெரியாதவற்றை ஊகித்தல். ஊகத்தைக்கொண்டு எல்லா இடங்களையும் நிரப்பிக்கொள்ளுதல். ’அன்னிக்கு அவன் அப்டி சொன்னப்பவே நினைச்சேன் அவன் வேற மாதிரி ஆளுன்னு’ என்பது போன்ற ஊகங்கள்.

6 மந்தை மனநிலை Herd mentality

எல்லாரும் செய்கிறார்கள் என்று ஒன்றை செய்வது. பலரில் ஒருவராக இருப்பதன் பாதுகாப்பை நாடுவது. மோஸ்தருக்கு ஏற்ப உடை மாறுவது முதல் அரசியல்சரிநிலைகள் வரை

7 நம்மிடம் சொல்லப்படுவதற்கு அல்லது எதிர்பார்க்கப்படுவதற்கு எதிராகச் செய்தல் Reactance

நாம் என்ன செய்வோம் என பிறர் நினைக்கிறார்களோ அதற்கு எதிராகச் செயல்படுவது நமக்கு ஒரு தன்னம்பிக்கையை ரகசியக் குதூகலத்தை அளிக்கிறது. பெரும்பாலும் நம்மை தனித்துக்காட்டுவதற்காக இபப்டிச் செய்கிறோம். . பிறரை அதன் மூலம் வெல்வதாக எண்ணிக்கொள்கிறோம். ஆனால் நம் ஆளுமையை இவ்வாறு பிறர் இட்டுச்செல்ல இடம் கொடுக்கிறோம்

8 இன்றைய சிறிய லாபங்களை நாளைய பெரியலாபங்களுக்கு மேலாக நினைத்தல் Hyperbolic discounting

காத்திருக்க பொறுமையில்லாமல் இருப்பது பெரும்பாலும் பொதுமக்களின் இயல்பு. நாளை கிடைக்கும் பெரிய ஒன்றுக்காக காத்திருப்பதைவிட இன்றே ஏதாவது கிடைத்தால் பெற்றுக்கொண்டு செல்வதையே மனம் இயல்பாக நாடுகிறது. நாளை மீதான அவநம்பிக்கை, தன் மீதான அவநம்பிக்கை. காரணம் பொதுவாக நிச்சயமின்மையிலேயே வாழக்கூடிய மனநிலைதான். பொறுமைக்கு அடிப்படையாக இருப்பது நம்பிக்கைதான்

9 தெரிந்தவற்றிலேயே தங்கிவிட விரும்புதல் Escalation of commitment

ஏற்கனவே பழகிப்போன ஒன்றை, அல்லது ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் ஒன்றை, அல்லது தானே ஆரம்பித்த ஒன்றை அது தவரென தெரிந்தபின்னரும் பிடிவாதமாகச் செய்வது சாமானியர்களின் முக்கியமான மனப்பிழை. நாமே ஆரம்பித்த செயலாகையால் அதை நியாயப்படுத்திக்கொள்வோம். புதியவற்றை செய்ய தயங்கி பழையவற்றை மீண்டும் மீண்டும் சாதகமாக புரிந்துகொள்வோம்

10 நம்பிக்கையை சார்ந்திருத்தல் Placebo effect

மருத்துவர்கள் வெறும் தூயநீரை ஊசியாகப்போட்டு நோய்களை குணப்படுத்துவது போல பலசமயம் நம்முடைய உறுதியான நம்பிக்கை சிறிய பலன்களை அளிக்கும். கடவுள்நம்பிக்கை அத்தகையது. ஆனால் அதைநம்பி இருந்தால் உண்மையான பெரிய சிக்கல்களில் நாம் உடைந்து போக நேரிடும்.
கட்டுரையை வாசித்தபின் விமானத்தில் திருவனந்தபுரம் வரை யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த பத்தையும் ஒரேவரியாகச் சுருக்கலாம். உள்ளுணர்வை தவிர்த்துவிட்டு தர்க்கபுத்தியை தீட்டிக்கொள்ளுதல். ஒரு நல்ல வியாபாரிக்கும், நிர்வாகிக்கும் இது அவசியத்தேவை. ஆனால் இந்த பத்தையும் ஒரு கலைஞன், ஒரு சிந்தனையாளன் வெட்டிவிட்டான் என்றால் அவனை வழிநடத்த ஆழ்மனமே இல்லாமலாகும். ’மின்னல்கள்’ வராமலாகும். அவன் பொதுப்புத்தி சார்ந்து மட்டுமே பேசவேண்டியிருக்கும்
ஆக, இந்தபத்துக்கும் எதிராக இருந்து மோசமான வணிகராக மோசமான நிர்வாகியாக நீடிப்பதே எழுத்தாளனுக்கு அழகு. ஆகா, என்ன ஒரு நிம்மதி. அப்படியே தூங்கிவிட்டேன்
http://www.jeyamohan.in/?p=9502

வலவன் ஏவா வானஊர்தி. (2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆளில்லா வானூர்தி)

0 c

thanks to   http://gunathamizh.blogspot.com/2010/01/2500.html

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். அந்த விமானம் படைத்தவன் யார் என்றால் இன்றைய குழந்தைகள் கூட கண்ணை மூடிக் கொண்டு “ரைட் சகோதரர்கள்“ என்று கூறுவார்கள்.

தமிழ் நூல்களில் வானூர்தி பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன.

“அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிப்பறந்தான் !
இராவணன் சீதையைத் தூக்கிப் பறந்தான்!
கண்ணகியை கோவலன் வானூர்தியில் அழைத்துச் சென்றான்..“


இன்னும் இலக்கியங்களில் விமானம் குறித்த குறிப்புகள் நிறையவே உள்ளன..

சான்றாக..


வலவன் ஏவா வானஊர்தி“
என்ற தொடர் புறாநானூற்றில் இடம்பெறுகிறது.

இன்று விமானத்தை ஓட்டும் விமானியை அன்று “வலவன்“ என்று நம் தமிழர் அழைத்தனர்.

“வல்“ என்பது விரைவு என்பதைக் குறிக்கும் சொல்லாகும்..
விரைவாக ஓட்டுபவன் என்றபொருளில் வல்லவன் என்பதே வலவன் என்றானது..

வலவன் ஏவா வான ஊர்தி என்பது - ஆளில்லாத விமானத்தையே குறிப்பதாக உள்ளது.

வாழ்வில் நல்வினை மட்டும் செய்தால் சொர்க்கம் என்ற வீடுபேறு கிடைக்கும். அவ்வாறு கிடைத்தவர்கள் “ வலவன் இன்றித் தானே இயங்கும் வான ஊர்தியைப் பெறுவர்“ என்று சங்ககாலத்தமிழரிடம் நம்பிக்கை இருந்தது.


சொர்க்கம் இருப்பது உண்மையா? பொய்யா?

என்ற விவாதம் முடிவடையாதது..
என்றென்றும் தொடர்ந்து வருவது.

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சொர்கம் உண்டு!
நரகம் உண்டு என்று நம்புவார்கள்..

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்..
சொர்க்கம் என்பதும் நரகம் என்பது உண்டு..
ஆனால் அது எங்கோ இல்லை!

நாம் வாழும் நிகழ்கால வாழ்க்கையிலேயே அது இருக்கிறது என்பதை நம்புவார்கள்..

ஆம் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால், நம்மைச்சுற்றி வாழ்வோர் மகிழ்வுடனிருந்தால், நாம் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று பொருள்..

நாமும் நம்மைச் சுற்றி வாழ்வோரும் துன்பத்துடனிருந்தால் நாம் வாழ்வது நரகமே!!


பழந்தமிழரின் அறிவியல் சிந்தனை தோய்ந்த புறப்பாடல் இதோ…

சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,
வேற்றுமை ‘இல்லா விழுத்திணைப் பிறந்து,
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
“வலவன் ஏவா வான ஊர்தி“
எய்துப என்ப, தம் செய்வினை முடித்து’ எனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.


புறநானூறு -27
27. புலவர் பாடும் புகழ்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.



பொதுவியலின் ஒரு துறை முதுமொழிக்காஞ்சி. இது அறம் பொருள் இன்பம் என்பவற்றின் தன்மைக் குற்றமில்லாது அறிவுடையோர் அரசனுக்குக் கூறுதலாலும் “ புலவர்பாடும் புகழுடையார் வானவூர்தி எய்துவர் எனப் புகழ்ச்சி செல்வத்தின் பயன் கூறியதாலும் முதுமொழிக்காஞ்சியானது.


சேற்றில் வளரும் தாமரையின் பூத்த ஒளியுடைய நிறமும் நூற்றுக்கணக்கான இதழ்களுடைய தாமரை மலரின் குவியலைக் கண்டது போல சிறந்த குலத்தில் பிறந்து கவலையின்றி அரசர் வீற்றிருப்பர். அவர்களை மனதால் கருதும் போது அவர்களுள் புகழும், அதனால் பாடப்பொறும் பாட்டும் உடையராய் இருப்பவர் சிலரே.

தாமரையின் இலையைப் போல பயன்படாது மாயந்தோர் பலரே!

“புலவரால் பாடப் பெறும் புகழுடையோர், வானில் வலனால் செலுத்தப்படாது இயங்கும் விமானத்தினைத் தாம் செய்யும் நல்ல செயல்களை முடித்தபின் அடைவர் என்பர் அறிவுடையோர்.“ எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என்னுடைய இறைவனே, சேட்சென்னியே நலங்கிள்ளியே,

வளர்கின்ற ஒன்று குன்றுவதையும்!
குன்றிப்போனது வளர்வதையும்!

பிறந்தது இறப்பதையும்!
இறந்தது பிறப்பதையும்!

உண்மை எனக் கல்லாதவரும் அறியுமாறு செய்யும் திங்களாகிய தெய்வம்.
அது இயங்கும் உலகத்தில் ஒன்றனைச் செய்ய வல்லவராயினும் செய்ய இயலாதவராயினும் வறுமையால் வருந்தி வந்தோரின் வயிற்றின் பக்கங்களைக் கருதி அவர்களுக்கு அருளுடன் வழங்க வல்லவனாகுக.
கெடாத வலிமையுடன் உனக்குப் பகைவரானவர்கள் அருளின்றிக் கொடாது இருத்தலில் வல்லவராகட்டும்.

தாமரை மலர் அரசர் கூட்டத்திற்கு உவமையானது. மக்களுள் மண் பயனுற வாழ்வோரே மக்களாகக் கருதப்படுவர்.
எஞ்சியோர் மாக்களாகவே(விலங்கு) கருதப்படுவர்.

உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் சோழன் நலங்கிள்ளியை இவ்வாறு பாடுகிறார்..



� இப்பாடலில் வலவன் ஏவா வான ஊர்த்தி என்ற பழந்தமிழரின் அறிவியல் சிந்தனை ஆளில்லாத விமான ஊர்தியைக் குறிப்பதாக உள்ளமை வியப்பளிப்பதாகவுள்ளது.


� வளர்கின்ற ஒன்று குன்றுவதையும்!
குன்றிப்போனது வளர்வதையும்!
பிறந்தது இறப்பதையும்!
இறந்தது பிறப்பதையும்!


என்ற சிந்தனை இன்றைய மருத்துவவியலோடு ஒப்பு நோக்கத்தக்கதாகவுள்ளது.

� பழந்தமிழரின் அறிவியல் சிந்தனையை உற்று நோக்கும் போது..
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட அறிவியல்ச் சிந்தனைகள் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை?
என்ற வினா எழுவது இயற்கையே..

� அறிவியல் தமிழுக்குத் தொடர்பில்லாதது!
� அறிவியலை ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் வாயிலாகத் தான் படிக்கமுடியும் என்ற தமிழனின் சிந்தனையும் நம் அறிவியல்சிந்தனைகள் உலகறியப்படாமல், நடைமுறைப்படுத்தப்படாமல் போனதற்கு ஒருகாரணமாக
அமைகிறது.

� இன்றைய சூழலில் எல்லா அறிவியல்த் துறைகளையும் தமிழில் படிக்கிறார்கள். அதனால் அவர்களின் சிந்தனை மேலும் வலுப்படும். தம் கருத்தை முழுமையாக ஆழமாகச் சொல்லமுடியும்.

அறிவுக்கு மொழி தடையல்ல!
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை!!

மேகக் கணினி (கிளவுட் கம்யூட்டிங்)

0 c
வள்ளுவர் இன்றிருந்தால்..

சுழன்றும் கணினி பின்னது உலகம் அதனால்
உழந்தும் கணினியே தலை

கணினி கற்று வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுஅவர் பின்செல் பவர்

என்று பாடியிருப்பார்.
ஆரம்ப கால கணினிகளுக்கு நிறைய இடம் தேவைப்பட்டது. குறைந்த கொள்திறனும், நினைவுத் திறனும் கொண்ட அக்கணிகளும் தனித்தே செயல்பட்டு வந்தன. காலம் செல்லச் செல்ல கணிகளுக்கிடையே தொடர்புகொள்ளும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டது. இன்று பெரு வையமே சிறு கிராமமாக இணையத்தால் சுருங்கிப்போனது. எல்லையற்ற நினைவுத் திறனையும், கொள்திறனையும் நோக்கி இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கிறது.

மேகக் கணினி.


மேகம் எவ்வாறு எல்லோருக்கும் பயன்படுகிறதோ அதுபோல இணையமும் எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் உருவானதே மேகக் கணினி. பல கணினிகளும், சேவையகங்களும் இணையத்தால் தொடர்பு கொள்ளும் நுட்பமே மேகக் கணினி.

தற்கால அதிவேகக் கணினி
 மூளையைப் போல சிந்திக்கும் இயந்திரத்தை உருவாக்கவேண்டும் என்ற மனிதனின் தேடலின் விளைவு சூப்பர்கணினி உருவாக்கப்பட்டுள்ளது.
 முதலில் எலியைப்போல சிந்திக்கும் கணினி உருவாக்கப்பட்டது.தற்போது ஐபிஎம் நிறுவனம் பூனையைப்போல சிந்திக்கும் கணினியை உருவாக்கியுள்ளது.
 1,47,456 பிராசசர்களை இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர். அதன் நினைவகம் 144 டெராபைட் ஆகும். நாம் பயன்படுத்தும் கணியைவிட இலட்சம் மடங்கு சக்திவாய்ந்தது இக்கணினியாகும்.
 இன்று பயன்பாட்டிலுள்ள கணினிகள் மனிதனைப்போல 1விழுக்காடுதான் சிந்திக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


மேகக் கணினியின் தனிச்சிறப்புகள்.

ழ கணினிகள் மட்டும் போதுமானது மென்பொருள்கள் மேகத்தில் கிடைக்கும், அதனை கணினியில் நிறுவத் தேவையில்லை. நம் ஆவணங்களை பூமிப்பந்;தின் எந்த இடத்திலிருந்தும்; இணையத்தின் உதவியோடு உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம்.
ழ கணினிகள் எந்த இயங்குதளத்தையும் பெற்றிருக்கலாம்.
ழ பழைய கணினிகூட போதுமானது. எதிர்காலத்தில் கணினிகள் எதுவும் தேவைப்படாது. பேனா வடிவில் கூட கணினிகள் வந்துவிடும்.
ழ நம் கணினிகளில் அதிகமான கொள்திறன் இருக்கவேண்டிய தேவையில்லை. மாறாக அதிகமான நினைவுத் திறனிருந்தால் போதுமானது.
ழ மேகக் கணினி வழியாக மிகப்பெரிய பயன்பாடுகளைக் கூட நம் உலவியின் துணைகொண்டு எளிதாகச் செய்துவிடமுடியும். சான்றாக… கூகுள், ஸ்கைப், மைக்ரோசாப்;டு எனப் பல நிறுவனங்களும் மேகக் கணினிநுட்பத்துடன் தம்மை இணைத்துக்கொண்டு பல வகையான மென்பொருட்களை வழங்கிவருகின்றன. அம்மென்பொருள்களைப் பயன்படுத்த ஒரு உலாவி மட்டுமே போதுமானது.
ழ இதனால் நம் கணினிக்கென மென்பொருகளை வாங்கவோ நிறுவவோ தேவையில்லை.
ழ இப்போது மேகக் கணினிக்கென தனியாக இயங்குதளங்களும் கிடைக்கின்றன. கூகுள் நிறுவனத்தாரின் குரோம், ஐகிளவுடு மற்றும் குட்எஸ் ஆகியன வழக்கில் உள்ளன. இவ்வியங்குதளங்களின் வழியாக கூகுளின் எல்லா வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த இயங்குதளத்துக்கு குறைந்த அளவு 256 எம்பி ரேமும் 35 எம்பி அளவுடைய வன்தட்டும் போதுமானது.
ழ பயனர்களுக்கு மென்பொருள்களைத் தருவது, சேமிப்புக்கான பெரிய பாதுகாப்பான இடமளிப்பது, இணைய சேவைகளைத் தருவது, என இதன் பயன்படுகள் நீண்டுகொண்டே செல்லும்...
காலத்தின் தேவை – மேகக் கணினி. இன்றைய நிலையில் கணினி இல்லாத துறைகளே எதுவுமில்லை. அதனால் கணினி நம் முதன்மையான தேவையாகிறது. நாம் செல்லுமிடங்களிலெல்லாம் நம் கணினியைத் தூக்கிக்கொண்டு செல்லமுடியாது. இந்நிலையில்,

 எளிதில் எடுத்துச்செல்ல வசதியான குறைந்த எடைகொண்ட, கைக்கு அடக்கமான, அதிக கொள்திறன் கொண்ட கணினி நம் அடிப்படைத் தேவையாகிறது.
 இன்றைய வழக்கில் அலைபேசிகள் கூட இணைய வசதி கொண்ட கணினியாகப் பயன்பட்டு வருகின்றன.
 எதிர்காலத்தில் இன்னும் சிறிய சட்டைப் பையில் வைத்துக்கொள்ளும் பேனா அளவில் கூட கணினிகள் பயன்பாட்டுக்கு வரலாம். அதன் வழி பெறும் ஒளியால் நமக்கான கணினித் திரையும், தட்டச்சுப்பலகையும் மாயத்தோற்றம் போல காணக்கிடைக்கும். அக்காலத்தில் நமக்கு இன்றைய மென்பொருள்போல வன்பொருள்களின் தேவையும் குறையும்.
 பிளாபி, சிடி, டிவிடி, பென்டிரைவ், பிளாஸ்டிரைவ், மெமரி கார்டு என பல புறநினைவுக் கருவிகளைப் பயன்படுத்தி வந்த நாம்… ஏடிரைவ், ரேபிட்சேர், பிளிப்டிரைவ், பிரீடிரைவ்,ஹக் டிரைவ், மீடியாபயர், 4சேர் என காலம்தோறும் நம் கோப்புகளைச் சேமித்துக் கொள்ள பல வழிகளைப் பின்பற்றி வருகிறோம்..
 கிணறு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிணற்று நீர் பயன்படும், ஆனால் மழையோ எல்லோருக்கும் பயன்படும். அது போல் இன்றைய கணினி மற்றும் இணைய உலகம், தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே மிகவும் பயன்படுவதாகவுள்ளது. சராசரி மக்களுக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இம்மேகக் கணினி.
 இந்நிலையில் மேகக் கணினி காலத்தின் கட்டாயத் தேவையாகிறது. நானறிந்தவரை எனக்குப் புரிந்தவரை இந்த “மேகக் கணினி (கிளவுட் கம்யுட்டிங்)” என்னும் தொழில்நுட்பத்தை விளக்கியிருக்கிறேன்.இந்த தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதும், பயன்படுத்துவதும் நாம் சம காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளமாகவே கருதுகிறேன்.

அறுத்துக்கட்டிய " அகமுடையார்கள்"...

0 c
thanks to   http://krpsenthil.blogspot.com/2010/11/blog-post_25.html
 
தேவர் இனமக்கள் பொதுவாக மூன்று உட்பிரிவுகளில் அடங்குவார்கள் முக்குலத்தோர் என அழைக்கப்பட்ட கள்ளர், மறவர், அகமுடையார் என இம்மூன்றும் அதன் உள்ளடக்கங்களும் கொண்ட இவர்களைப்பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும், இந்த இனத்தின் திருமணங்கள் அதன் தனிபிரிவுகளுக்கு உள்ளேதான் பெரும்பாலும் நடக்கும் என்றாலும் கொஞ்சம் நகர வாழ்க்கைக்கு பழகிய பிறகு மற்ற பிரிவுகளிலும் இப்போது பெண் கொடுத்து, எடுக்கிறார்கள், தென் தமிழகம் முழுவதும் பரவலாக வாழும் இம்மக்களில் கள்ளர்கள் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மிகுதியாகவும், அகமுடையார்கள் திருவாரூர், புதுக்கோட்டை , மதுரை மாவட்டங்களில் மிகுதியாகவும், மறவர்கள் திருநெல்வேலி பகுதிகளில் மிகுதியாகவும் வசிக்கின்றனர். இவர்கள் ஜாதி ரீதியாக தங்கள் சார்ந்த ஜாதியின் மீது ஆழ்ந்த பற்றுகொண்டவர்கள். இந்த ஜாதியில் மறுமணங்கள் பரவலாக நடைபெறும், ஆனால் எங்கள் ஊரில் மறுமணம் என்பது மிக அதிகம். அதனால் எங்கள் ஊர்க்காரர்களை மட்டும் சில வருடங்கள் முன்புவரைக்குமே அறுத்துகட்டிய ' அகமுடையார்கள்' என்றுதான் சுற்றுவட்டாரத்தில் அழைப்பார்கள்.

திருவாரூர் மாவட்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட கிராமம் எங்கள் ஊரான பரவாக்கோட்டை கிராமம். சிங்கபூர்வரை தன் புகழை பரப்பியுள்ள இக்கிராம வாசிகள் அதன் சுற்றுவட்டார மக்களாலும் சற்று பயத்துடன் பார்க்கபடுகிறவர்கள். இதற்க்கு பலமான காரணம் ஒரு ஆளை கைவைத்தால் அவனுக்காக அந்த ஊரே திரண்டு வரும். அதனால் இந்த ஊர் ஆட்கள் என்றால் யாரும் வம்பு வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மிகவும் பாசக்கார மக்கள் மிகுந்த ஊரும் இதுதான். இருபது வருடங்களுக்கு முன்புவரைக்கும் இத ஊர்காரர்கள் வெளியூர்களில் பெண், கொடுத்து எடுப்பது என்பது வெகு அபூர்வமான விசயம் அதிலும் அப்படி நடந்த திருமணங்களும் எங்கள் ஊரில் இருந்து வேறு ஊருக்கு சென்று குடியேறியவர்கள், அல்லது அப்படி குடியேறியவர்கள் பார்த்துவைத்த மணமக்கள் என்கிற மாதிரிதான் இருக்கும். எல்லோரும் எங்கள் ஊருக்குள்தான் சம்பந்தம் வைத்துகொள்வார்கள். பெண் பெரியவளானவுடன் மாப்பிள்ளை முடிவு செய்யப்பட்டுவிடும். காதல் திருமணங்களும் அதிகம் நடக்கும் இதுவும் உறவு முறைக்குள்தான் என்பதால் பெரிய எதிர்ப்பெல்லாம் இருக்காது. நான் திருமணம் செய்ததும் என் மூத்த சகோதரியின் மகளைத்தான், என் மனைவி கர்ப்பம் அடைந்தபோது நான் அவளை மருத்துமனைக்கு அழைத்து சென்றேன், அங்கு மருத்துவர் படிச்சவங்க நீங்களே நெருங்கிய உறவில் திருமணம் செய்து கொள்ளலாமா? எனக்கேட்டார். நான் எங்கள் ஊரில் தலைமுறை தலைமுறையாக இப்படிதான் நடக்கிறது, ஆரோக்கிய குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது வெகு அபூர்வம் என்றேன். இப்போது எங்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இன்றுவரைக்கும் அவர்தான் மருத்துவர்.

பெரியாரின் கொள்கைகளை மிகத்தீவிரமாக பின்பற்றியவர்கள் எங்கள் கிராம மக்கள், அதுவும் பெரியார் பிறப்பதற்கு முன்பிருந்தே. விதவைகள் என்பது வெகு அபூர்வம், அதுவும் பிள்ளைகள் நிறைய பிறந்தபின் கணவர் இறந்தால் மட்டுமே. மற்றபடி சிறிய வயதில் கணவர் இறந்துவிட்டால் உடனே மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள், பெரும்பாலும் இறந்த கணவரின் தம்பி, அப்படி தம்பி இல்லையென்றால் கணவரின் பங்காளி வீட்டில் உள்ள ஒரு ஆண் என எல்லோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். இது ஒரு பிரச்சினையாக அங்கு இன்றுவரைக்கும் இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன் என் பள்ளிதோழனுக்கு திருமணம் நடந்தது, திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியுடன் பிணக்கு ஏற்ப்பட்டு தற்கொலை செய்துகொண்டான், ஆனால் மருமகள் பக்கம் இருந்த நியாயத்தை புரிந்து கொண்ட நண்பனின் குடும்பத்தினர், சிங்கப்பூரில் வேலை பார்த்துகொண்டிருந்த நண்பனின் தம்பியை வரவழைத்து திருமணம் செய்து வைத்தனர்,. இருவரும் மிக சந்தோசமாக வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இப்போதும் அங்கு அய்யர் வைத்து மந்திரம் சொல்லி நடக்கும் திருமணங்கள் வருடத்திற்கு ஐந்துக்கும் குறைவாகத்தான் நடக்கும். எல்லாத் திருமணங்களும் தலைவர்கள் வைத்துதான் நடக்கும், தலைவர்களும் உறவு முறைக்கரர்களே, அரசியல் சார்ந்த சிலர் மட்டும் கட்சித் தலைவர்களை வைத்து நடத்துவார்கள். இப்படி ஒரு  விதவைத்திருமணம் செய்வது என்பது ஒரு சமுதாய புரட்சி என்பது அவர்களுக்கு தெரியாமலே இதனை செய்துவந்தார்கள். அதேபோல விவாகரத்து செய்வதும் எளிது பங்காளிகள் உள்ளடக்கிய பஞ்சாயத்தில் கூப்பிட்டு வைத்து பேசுவார்கள், பெரும்பாலும் வழக்கு சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுவிடும். மீண்டும் ஒன்று சேர்த்து வைத்து விடுவார்கள். முந்தய காலத்தில் விவாகரத்து செய்வதற்கு இரண்டு வீட்டுக் கூரையிலும் கொஞ்சம் பிய்த்து எடுத்துவந்து அதனை துண்டுகள் ஆகிவிட்டால் பிரிந்துவிட வேண்டியதுதான். சொத்துக்களும் சூழநிலைக் கேற்ப பிரித்து கொடுத்துவிடுவார்கள், அது அனைவரும் ஏற்றுக் கொண்ட தீர்ப்பாகவே எப்போதும் இருக்கும். ஆனால் சமீப வருடங்களாக ஒரு சில விவாகரத்து பிரச்சினைகள் நீதிமன்றம் வரைக்கும் சென்றிருக்கிறது.

அதேபோல் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்வது, சாதி மாறி திருமணம் செய்து கொள்வது என்பது சமீப காலமாகத்தான் எப்போதாவது நடக்கிறது. சாதி மாறிய திருமணங்களை இப்போதுதான் லேசாக அங்கீகரிக்க துவங்கினாலும், அப்படி திருமணம் செய்து கொண்டவர்கள் ஏனோ நகரங்களுக்கு நகர்ந்துவிட்டார்கள். இப்போதெல்லாம் எங்கள் ஊர்ப் பெண்களை பக்கத்து ஊர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கிறார்கள். பெண் எடுப்பதில் மட்டும் கொஞ்சம் சிக்கல் இருக்கும் காரணம் மொரட்டு பசங்க நம்ம புள்ளைய அடிப்பானுகன்னு கொஞ்சம் பயம்தான். வரதட்சினை என்பதும் கட்டாயமாக இதுவரை இல்லை, பெண் வீட்டார் என்ன கொடுத்தாலும் ஏற்றுகொள்வார்கள். அதே போல இப்ப படிச்ச பொண்ணுங்க அதிகமா இருக்காங்க, ஆனா குறைந்த படிப்பு மாப்பிளை படிச்சிருந்தா அதனையும் பெரிதாக கவனிக்க மாட்டார்கள்.  அவர்களைப் பொறுத்தவரை பையனின் குடும்பமும், பையனின் திறமையும்தான் அளவுகோலே. முன்பெல்லாம் பத்தாம் வகுப்பு வரைக்கும்தான் பெண்களை படிக்க வைப்பார்கள் ஆனால் இப்போது கல்லூரி வரைக்கும் அனுமதி தருகிறார்கள், படிப்பு முடிந்து சில பெண்கள் சென்னைவரைக்கும் வந்து வேலை பார்கிறார்கள். இப்படி வெளியில் அனுப்புகிறவர்களிடம் கட்டாயம் வாங்கபடும் சத்தியம் போகிற இடத்தில் காதல், கத்தரிக்கானு எதுவும் இருக்ககூடாது, ஒருவேளை யாரையாவது புடிச்சிருந்தா அவன் தேவர் சமூகத்தில் பிறந்தவனா இருக்கணும் என்பதுதான். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் இன்னும் எத்தனை வருடம் தாங்கும் எனத் தெரியவில்லை.

நான் காதலித்த பெண் வேளாளர் வகுப்பை சேர்ந்தவள், அவள் விபத்தில் இறந்தபின் திருமணமே வேண்டாம் என்று இருந்த என்னை மிகவும் கட்டயபடுத்திதான் என் சகோதரியின் மகளை திருமணம் செய்து வைத்தார்கள். என் மனைவியிடம் என் கடந்த கால வாழக்கை பற்றி விபரமாக எடுத்து சொல்லி அவள் சம்மதம் பெற்றபின்தான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் தாலி கட்ட மாட்டேன் என சொன்னேன். அதனால் மிகுந்த எதிர்ப்புக்கு மத்தியில்தான் பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். அன்றைக்கு மாலை மட்டும் மாற்றிக்கொண்டோம். தாலி கட்டவில்லை, இன்றுவரைக்கும் என் மனைவி மெட்டி கூட அணிவதில்லை . என் வீட்டின் பூஜையறை தேவையற்ற பொருட்களை போட்டுவைக்கும் இடமாகத்தான் இருக்கிறது. என் பிள்ளைகளுக்கு சாமி, கோவில், கடவுள், பூஜை இந்த விசயமெல்லாம் மேலோட்டமாக மட்டுமே தெரியும், மத சம்பந்தமான சடங்குகள் எதுவுமே நான் செய்வதில்லை. நாங்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை பொங்கல் திருநாள் மட்டுமே. இன்றுவரைக்கும் ஆன்மிகம் சம்பந்தமான அத்தனை விசயங்களையும் தேடித்தேடி படிக்கிறேன், அடிக்கடி திருவண்ணாமலை போவேன், நமக்கு மேலே ஒரு சக்தி நம்மை இயக்குகிறது என்று கூட நான் நம்பவில்லை. இன்றிவரைக்கும் அந்த சக்தி மற்றும் கடவுள் பற்றி எனக்கு சரியான விளக்கம் தெரியவில்லை, எல்லாமே போலியாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது ஆனால் இங்கு போலியாக வாழ்வதைதான் அத்தனை பேரும் விரும்புகின்றனர். அப்படி வாழாதவர்களை கடவுள் தண்டிப்பான் என சாபம் விடுகின்றனர். தங்களுக்கு மாறான கொள்கை உடையவர்களை தாங்களே கடவுள் பெயரில் சாபம் விடும் அறியாமைக்காரர்கள் அவர்கள்.

நான் பெரியாரிஸ்ட்டுதான், கம்யூனிசத்தை ஆதரிக்கும் கேப்பிடலிஸ்ட்டுதான் ஆனால் இந்த சமுதாய ஒழுங்கில் இருந்து நான் ஒருபோதும் வெளியில் சென்றதில்லை.  அதன் உள்ளேயே இருந்துகொண்டுதான் அதனை விமர்சிக்கவும், ஒழுங்குபடுத்தவும் செய்கிறேன். என் வேர்களின் ஆழம்தான் என் கிளைகளின் நீளமும். தலைமுறைகளாக விதவைத் திருமணத்தை ஆதரித்த  ஒரு சமூகத்தின் கிளையே நானும்..

மாற்றுக் கருத்துகளையும் வரவேற்கிறேன்..

"ஆசியப் பண்பாட்டு வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு'

0 c
ஆசியவியல் நிறுவனம் சார்பாக "ஆசியப் பண்பாட்டு வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் 3 நாள் கருத்தரங்கு சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதைத் தொடங்கி வைத்து நிதியமைச்சர் க.அன்பழகன் பேசியதாவது:  இந்திய மொழிகளில் தமிழ் போல உலகின் பெரும்பான்மையான மொழிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மொழி வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. 

தமிழர்கள் அளவுக்கு உலகம் முழுவதும் பரந்து வாழும் இனமாக வேறொரு இனத்தையும் குறிப்பிட முடியாது.  ஆசிய மொழிகள், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியில் தமிழ் மொழியும் தமிழினமும் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை ஆராய்ந்து, அறிந்து எடுத்துக்காட்டும் ஓர் அரிய முயற்சியாக இந்த அனைத்துலகக் கருத்தரங்கம் அமைந்துள்ளது. தமிழர்களின் கடல் கடந்த அயலகத் தொடர்புகளையும் அதன் சமுதாய வரலாற்றுப் பின்னணிகளையும் இந்தக் கருத்தரங்கு விரிவாக எடுத்துரைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.  

ஜப்பானிய அறிஞர்களான சசுமு சிகா, அகிரா ஃபியூஜிவாரா, மினோரு கோ ஆகிய மூவரும் இணைந்து பல ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு - ஜப்பானிய மொழி, திராவிட மொழிகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக 1973-ல் உலகுக்கு அறிவித்தனர்.  

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் சண்முகதாஸ், அவருடைய மனைவி மனோன்மணி ஆகியோர் 10 ஆண்டுகளுக்கு மேல் ஜப்பானில் தங்கியிருந்து அரிய ஆய்வுப் பணி நடத்தி தமிழ்-ஜப்பானிய மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான வியப்புக்குரிய பல ஆய்வு முடிவுகளை உலகுக்கு அறிவித்தனர். இந்த ஆய்வு முயற்சிகளின் ஒரு பகுதி நூல் வடிவம் பெற்று ஆசியவியல் நிறுவனத்தால் இன்று வெளியிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.  இதுபோல தமிழோடு பிற ஆசிய மொழிகள் கொண்டிருக்கும் தொடர்பு தமிழர்களின் கடல் வாணிகம் மூலம் தெளிவாகிறது. 

தமிழகப் பேரரசர்கள் அனைவரும் தத்தம் அரசின் தலைநகரோடு - வணிகத் தலைநகர் ஒன்றையும் கடற்கரை ஓரங்களில் பெரிய துறைமுகப் பட்டினங்களாக நிறுவி பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தனர்.  பட்டினப்பாலையும் பதிற்றுப்பத்தும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தமிழர்களின் கடல் வணிகத்தைப் பற்றிய சான்றுகளாகும்.  பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு  பாவாணர் எழுதினார்.  உலக மொழிகளின், குறிப்பாக ஆசிய மொழிகளின் முதல் மொழி தமிழே என்ற பாவாணரின் முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

 கடந்த 40 ஆண்டுகளாக கொரிய மொழி, ஜப்பானிய மொழி போன்றவற்றில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பாவாணரின் கூற்று உண்மைதான் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது.  இந்த நிலையில் செம்மொழியாக தமிழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது நமக்குப் பெருமை.

பல்வேறு காரணங்களால் கடந்த 300 ஆண்டுகளில் தமிழர்கள் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழத் தொடங்கினர். இன்று 58-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அந்த மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து அந்தந்த நாட்டின் பொருளாதாரம், கலை, பண்பாட்டு வளர்ச்சிக்கு நல்ல பங்களிப்பை ஆற்றி வருகின்றனர். 20 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு அறிஞர்களோடு 100-க்கும் மேற்பட்ட நமது அறிஞர்களையும் ஒருங்கிணைத்து நடைபெறும் இந்தக் கருத்தரங்கு மூலம் தமிழர் பண்பாட்டின் முழு பரிமாணமும் உலகம் முழுவதும் ஒளிரும் என்பதில் ஐயமில்லை என்றார் க.அன்பழகன்.  ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தக் கருத்தரங்கு ஜனவரி 17, 18 ஆகிய இரு நாள்களும் செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள ஆசியவியல் நிறுவனத்தில் நடைபெறுகிறது. 

இங்கு களரி முதல் கராத்தே வரை என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளும் தமிழின் தொன்மை குறித்த அரிய தகவல்களுடன் கூடிய கண்காட்சியும் நடைபெறுகின்றன.
thanks to http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF:+%E0%AE%95.%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&artid=362197&SectionID=129&MainSectionID=129&SEO=&SectionName=Tamilnadu

தொண்டைமான் செப்பேடுகள்

0 c
தொண்டைமான் செப்பேடுகள்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : இராசு.செ
பதிப்பு : முதற் பதிப்பு (2004)
விலை : 70 .00  In Rs
பிரிவு : தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் : 232
ISBN :
பதிப்பகம் : தமிழ்ப் பல்கலைக்கழகம்
முகவரி : திருச்சி சாலை


தஞ்சாவூர்   613005

இந்தியா
புதுக்கோட்டை, அறந்தாங்கி தொண்டைமான்கள் செப்பேடுகள் 48 ( 24 + 24 )அடங்கியுள்ளது. மாணிக்கவாசகர் அருள் பெற்ற திருப்பெருந்துறை பற்றிய 10 செப்பேடுகள் உள்ளன. மாணிக்கவாசகரை எழுந்தருளச்செய்து, பின்னே திருவாசகம் ஓதிச் சென்றதை ஒரு செப்பேடு கூறுகிறது. முதல் முறையாக அறந்தாங்குத் தொண்டைமான் அரச மரபு விளக்கம் பெறுகிறது.

தொண்டைமான் கட்ட பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லை - 2

0 c
தொண்டைமான் கட்ட பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லை , பிடித்துக்கொடுத்தான் என்றே வைத்துக்கொண்டாலும், அதை செய்யாமலும் இருந்திருக்கலாம், ஏன் செய்யவில்லை என்று கண்டிப்பாக தண்டித்து இருக்க மாட்டார்கள்.

ஆனால் பிடித்துக்கொடுத்தார், ஏன், வெள்ளையர்களிடம் நல்லப்பெயர் வாங்க வேண்டும் என்று மட்டும் அல்ல , கொஞ்சம் இனப்பற்று, சாதிப்பற்றும் காரணம்.

முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்கள் தான் புதுக்கோட்டை தொண்டைமான் ,ராமநாதபுரம் சமஸ்தானம், சிவகங்கை சமச்தானம் எல்லாம்.

பூலித்தேவன் வெள்ளையர்களுக்கு எதிராக போர் இட்டக்காலத்தில் , வீரபாண்டியனின் தந்தை வெள்ளையர் பக்கம் இருந்து பூலித்தேவனை தேடுவதில் உதவி புரிந்தார். மேலும் படைகளும் கொடுத்தார். களக்காட்டில் பூலித்தேவன் பதுங்கி இருந்த போது பிடிபட ஒரு காரணமாக இருந்ததும் அவர் தான்.

ஏன் அப்படி செய்தார், அதாவது தெலுங்கு நாயக்கர் பாளையத்திற்கும், தமிழ் முக்குலத்தோர் வழி வந்த பாளையம் , சமஸ்தானங்களும் ஆரம்பத்தில் நட்புறவாக இருந்தன பின்னர் அவர்களுக்குள் பகைமை வந்து,நட்புறவு அவ்வளவாக இல்லை(ராணி மங்கம்மாவுடன் ராமநாதபுரம் சமஸ்தான கிழவன் சேதுபதி பல முறைப்போர் தொடுத்துள்ளார்) அதனை பிரித்தாலும் சூழ்ச்சி மூலம் வெள்ளையர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்.முக்குலத்தோர் வசம் இருக்கும் பாளையம் மீது படை எடுக்க நாயக்கர்களை கூட்டு சேர்த்துக்கொள்வார்கள், நாயக்கர்களை அடக்க அந்த பக்கம் கூட்டு சேர்ந்துக்கொள்வார்கள்.

அப்போது வெள்ளையருக்கு உதவி செய்ததைக்கணக்கில் கொண்டே பின்னர் கட்டப்பொம்மனை பிடிக்கவும் உதவியுள்ளார் தொண்டைமான், மேலும் , பரம்பரையாக நாயக்கர்கள் பாளையத்திற்கும், அவர்களுக்கும் இருக்கும் சிறு பூசல்களும் ஒரு காரணம்.

அவுரங்க சீப் காலத்தில் சிவாஜிக்கு உதவி செய்து அவுரங்க சீப்பை அழிக்கவும் முயன்றது வெள்ளையர்கள், போர்ச்சுகீசியர்கள்.

அவுரங்க சீப் வெற்றிப்பெற்றால் உடனே அவரிடம் போய் சமாதானம் பேசி விடுவார்கள்.

அதே போல பல இடங்களிலும் இந்து மன்னரை வீழ்த்த முகலாய மன்னரை துணைக்கு வைத்துக்கொள்வார்கள், முகலாய மன்னரை வீழ்த்த இந்து மன்னரை வைத்துக்கொள்வார்கள்.

திப்பு சுல்தான், ஹைதர் அலியை எல்லாம் இப்படி செய்து தான் பலவீனப்படுத்தி கடைசியில் வென்றார்கள்.( வவ்வால் said..)
சிரியர் சொல்வது எல்லாம் 'காட்டிக்கொடுத்தான்' என்று சொல்வது சரியல்ல என்பதுதானே!

ஆங்கிலேயர்கள் தோற்று டச்சுக்காரர்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் வரலாறு மாற்றிப் பேசிக்கொண்டிருக்குமாயிருக்கும். தொண்டைமானை வரலாற்று வீரனாகவும் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவனாகவும். வலுத்தவன் எழுதுவது வரலாறு ஒப்புக்கொள்கிறேன்.

ஹிட்லர் இரண்டாம் உலகப்போரை வென்றிருந்தால் நீங்கள் தற்பொழுது உலகம் எப்படியிருந்திருக்கும் என்றும் வரலாறு எப்படி எழுதப்பட்டிருக்கும் என்றும் நினைத்துப்பாருங்கள்.
பூலித்தேவனுக்கு எதிராக கட்டபொம்மனின் தந்தை செயல்ப்பட்டது சரித்திரத்தில் அவ்வளவாக பேசப்படவில்லை, காரணம் பூலித்தேவன் சில காலம் போராடி பெரிதாக போராட்டம் இல்லாமல் சீக்கிரம் மாட்டிக்கொண்டு ,பின்னர் தப்பி சென்று மர்மமான முறையில் தலைமறைவாகி விட்டார் என்று சொல்வதோடு சரி அவர் இறந்தாரா , இல்லை இருந்தாரா என்பது குறித்து தெளிவான முடிவே அப்போது எட்டவில்லை.

ஆனால் கட்டபொம்மன் , போராடி கைதாகி, விசாரணைக்குட்படுத்தப்பட்டு , தூக்கை சந்தித்தார். பிரிட்டீஷார் தூக்கில் ஏற்றிய முதல் இந்திய கலகக்காரார் அவர்.இதனால் அவர் மீது அதிக கவனம், மேலும் அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு, நாட்டுப்புற கதைகள் பாடல்கள் அதிகம்!

பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் அப்போதைய போராட்டத்தை ஏனோ விடுதலைபோராகவே எடுத்துக்கொள்வதில்லை, அவர்களைப்பொறுத்த வரை சிப்பாய் கலகம் தான் முதல் போணி!( வவ்வால் said..
பூலித்தேவனைப் பற்றியும் நடுவில் பேசிக் கொண்டிருந்ததால் இதைச் சொல்கிறேன். பூலித்தேவன் போர் அறிவிப்பு செய்த அதே காலகட்டத்தில் சிவகங்கையை ஆண்டவர்கள்தான் முத்து வடுக நாதரும், ராணி வேலு நாச்சியாரும். பின்னாளில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற முதல் பெண்மணி என்று வேலு நாச்சியாரும், வெள்ளையரை எதிர்த்து போராடி வீரமரணம் அடைந்த முதல் பாளையக்காரர் என்ற பெருமையை முத்துவடுக நாதரும் பெற்றாலும், பூலித்தேவனின் வெள்ளையருக்கெதிரான போராட்டத்தில் இவர்கள் ஆதரவளிக்க வில்லை என்பது உண்மை. இதற்கு நிச்சயமாக அப்போதய அரசியல் சூழ்நிலைகள் காரணமாய் இருந்திருக்கலாம். முத்துவடுக நாதர் இறக்காமல், வேலு நாச்சியாரும் ஆங்கிலேயருக்கெதிராய் போராடாமல் இருந்திருந்தால், சரியான சமயத்தில் பக்கத்து பாளையக்காரனை காக்க மறந்திட்ட துரோகிகளாய் இவர்களை வரலாறு உருவகப் படுத்தி இருந்திருக்கலாம். அதை செய்ய இந்த ஒற்றை காரணம் மட்டுமே போதுமானதாய் இருந்திருக்கும்.

நான் சொல்ல வருவது ஆங்கிலேயர் எதிர்ப்பு, ஆதரவு என்ற இந்த ஒற்றைக் காரணத்தைத் தாண்டி, வீரம், ஆட்சிமுறை, வரி வசூல் அமைப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதையே. )
http://blog.mohandoss.com/2008/01/blog-post_25.html

தொண்டைமான் கட்ட பொம்மனை காட்டிக்கொடுக்கவில்லை - 1

0 c

 -தொண்டைமான் கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்தாரா?

Friday, January 25, 2008 thanks to http://blog.mohandoss.com/2008/01/blog-post_25.html


முன்னமே கூட ஒரு முறை கட்டபொம்முவும் உண்மையும்என்ற தலைப்பில் ஒரு விவாதம் ஓடியது. அதற்கும் இந்த பதிவிற்கும் சம்மந்தம் பெரிய அளவில் இல்லையென்றாலும் லிங்க் கொடுக்கிறென்.


நான் விவாதம் செய்யும் பொழுது பல தடவை சொல்லும் வார்த்தைகள் தான், இன்னிக்கு இருக்கிற விஷயங்களை வைத்து தான் எதையும் தீர்மானிக்க முடியும் நாளைக்கு நடக்கப்போகும் ஒரு விஷயத்தை கன்ஸிடரேஷனில் வைத்துக் கொண்டு எதையும் செய்யமுடியாதென்று. ஆனால் இந்த வார்த்தைகள் புரிந்துகொள்ள கொஞ்சம் கஷ்டமாகயிருக்கலாம் ஆனால் இதற்கு ஒரு அற்புதமான உதாரணம் என்று இந்த விவாதத்தைக் கூறலாம்.


என் விவாதத்தில் இந்த விஷயம் வரும் இடம் எதுவாகயிருக்குமென்றால் கடவுள் மறுப்பைப் பற்றிய வரிகளின் பொழுது, சுஜாதா அடிக்கடி சொல்லும் உலகத்தின் தோற்றம் பற்றிய அத்தனை விஷயங்களையும் அறிவியல் விவரித்து விடும் எதிலிருந்த்து என்றால் பிக் பேங்கிலிருந்து ஆனால் பிக் பேங்கிற்கு முந்தயதையும் பிங் பேங் நிகழ்ந்ததையும் தான் இனி அறிவியல் கண்டுபிடிக்க வேண்டும் என்று. இதை விவாதத்தின் பொழுது சொன்னால் உடனேயே நாளைக்கு அறிவியல் இன்றைக்கு உள்ளது என்று சொல்வதை நாளை இல்லை என்று சொல்லும் என்பார்கள். அப்பொழுது சொல்வேன் இன்றைக்கு நிரூபிக்கப்பட்ட விஷயத்தை வைத்து தான் பேசமுடியும் நாளைக்கு நிரூபிக்கப்படக்கூடிய விஷயத்தை கணக்கில் கொண்டு பேசமுடியாதென்றும். சரி என் ஜல்லியை இத்துடன் முடித்துக் கொண்டு பதிவின் விஷயத்திற்கு வரலாம்.



கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பி புதுக்கோட்டைக்கு வந்து தங்கி இருந்ததாகவும், அவரை ராஜா விஜயரகுநாதத் தொண்டைமான் நயவஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.


புதுக்கோட்டைக்கு "காட்டிக்கொடுத்த ஊர்" என்று பாமர மக்கள் பேசுவதைக் கேட்கிறோம். நாடங்களிலும் கதைகளிலும் பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் "காட்டிக்கொடுத்தான் தொண்டைமான்" என்று பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருவதைக் காண்கிறோம்.


'காட்டிக்கொடுத்தான்' என்னும் சொல் வரலாற்று ஏடுகளில் சமீபகாலத்தில் திணிக்கப்பட்ட சொல்லாகும்! கட்டபொம்மன் பிடிபட்டது புதுகோட்டையில்தான் என்பதையும் அவரை ராஜா விஜயரகுநாத தொண்டைமான் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த விவரங்களையும் எள்ளளவும் மறுப்பதற்கில்லல. ஆனால் கட்டபொம்மனை தொண்டைமான் காட்டிக் கொடுத்தார் என்று சொல்வது சரிதானா?


காட்டிக் கொடுத்தல் என்னும் சொல்லுக்கு இணையான ஆங்கிலச்சொல் 'Betrayal' என்பதாகும். இச்சொல்லுக்கு ஆங்கில அகராதி கீழ்க்கண்டவாறு பொருள் தருகிறது. 'To deliver into the hands of an enemy by treachery in violation of trust' அதாவது "அடைக்கலம் என்று அண்டிவந்தவரை" தனது லாப நோக்கங்களுக்காக நயவஞ்சகமாக அவரது எதிரியிடம் ஒப்படைக்கும் செயல் எனப் பொருள் கொள்ளலாம். கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் கேட்டு வரவில்லல. அப்படி நிகழ்ந்ததாக எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. அப்படி நடந்திருக்கவும் வாய்ப்பும் இல்லை. தொண்டைமான் ஆங்கிலேயரின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்ட அவர்களின் ஆதரவாளர் என்பது அப்போது நாடறிந்த செய்தி. இது கட்டபொம்மனுக்கு தெரிந்திருக்குமல்லவா? இந்நிலையில் அவர் எப்படித் தொண்டைமானிடம் பாதுகாப்பை நாடியிருக்க முடியும்? தொண்டைமானிடம் கட்டபொம்மன் அடைக்கலம் கேட்டுவந்தார் என்று சிலர் எழுதியிருப்பது அவர்களுடைய கற்பனைக் கதை!


கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு எதிரி. ஆங்கிலேயர் தொண்டைமானுக்கு நண்பர்கள். எதிரிக்கு எதிரி நண்பன். நண்பனுக்கு எதிரி எதிரி என்பது காலம் காலமாக நாம் கண்டுவரும் அரசியல் ராஜதந்திர சித்தாந்தம் அல்லவா? முடியுடைய மூவேந்தர் காலந்தொட்டு இன்றைய நாள் அரசியல் வரை, அரசியல்-பதவிப் போட்டிகள் காரணமாக தந்தையும் மகனும் சகோதரனும் சகோதரனும், உறவினரும் உறவினரும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரையொருவர் அழித்துக்கொண்ட நிகழ்ச்சிகள் ஏராளமாக உண்டல்லவா? இவற்றிற்கெல்லாம் அரசியல் ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தொண்டைமான் ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர். கட்டபொம்மன் புதுக்கோட்டை எல்லையில் ஒளிந்திருப்பது, கலெக்டர் லூசிங்க்டன் கடிதம் எழுதிய பிறகே தொண்டைமானுக்குத் தெரியவருகிறது. (ஆங்கிலேயரின் கடிதங்கள் கூட கட்டபொம்மன் தொண்டைமானிடம் அடைக்கலம் புகுந்திருந்தான் என்று குறிப்பிடவில்லை என்பதும் இங்கு நோக்கத்தக்கது) மேலாண்மை வகிப்பவருக்கு கட்டுப்பட்டு கட்டபொம்மனைக் கண்டுபிடித்து(ஆங்கிலேயரிடம்) ஒப்படைத்தது எப்படிக் காட்டிக் கொடுத்ததாகும் ஏனெனில் இது போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் அப்போதைய அரசியலில் சர்வ சாதாரணமானவை!


இதற்குப் பிறகும் ஒரு கேள்வி எழக்கூடும், கோரிக்கை விடுத்தவன் அந்நிய நாட்டான், நம்மவனை - கட்டபொம்மனைத் தொண்டைமான் பிடித்துக் கொடுக்கலாமா?


இதுபற்றி விருப்பு வெறுப்பு இன்றி சிந்திக்க வேண்டியது அவசியமாகும்! அக்கால அரசியல் சூழ்நிலை, வரலாற்றுப் பின்னணி தமிழகத்தை ஆண்டுவந்த சிற்றரசர்கள் மற்றும் பாளையக்காரர்களின் அரசியல் நடவடிக்கைகள், அவர்களுக்குள் இருந்த உறவு மக்களுக்கும் இதுபோன்ற ஆட்சியாளர்களுக்கும் இருந்த உறவு ஆகிய அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தபின்பே இந்தச் செயலின் தன்மையை எடை போட முடியும்.


புதுக்கோட்டை ஒரு சுதந்திரமான அரசு அல்ல, ஆங்கிலேயரின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஒரு சிற்றரசு. மேலாண்மைக்கு கட்டுண்டு கிடப்பதுதானே அரசியல் சித்தாந்தம்! ராஜா விஜயரகுநாதத் தொண்டைமானின் அப்போதைய நிலையும், அவர் வாழ்ந்த காலத்தின் அரசியல் சூழ்நிலையையும் பார்க்கிற போது கட்டபொம்மன் விஷயத்தில் அவர் செயல்பட்டவிதத்தில் எவ்விதத் தவறும் இருப்பதாக கூற முடியாது என்று ஒரு ஆய்வாளர்  கூறூகிறார்.(சிரஞ்சீவி - புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு 1980. பக்கம் 105)


தற்போதைய அரசியல் விழிப்புணர்ச்சிகளை வைத்து இன்றைக்க்கு 200 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்பிட்டு கூறுவது ஏற்புடையதாகாது. சுதந்திரம் தேசியம் நம்நாடு நம்மவர் போன்ற உணர்வுகளெல்லாம் அறியாத காலம் அது. கட்டபொம்மன் காலத்தில் ராஜா விஜயரகுநாத தொண்டைமான் காலத்தில் தென்னாட்டில் இருந்த பெரும்பாலான சுதேச மன்னர்களும் பாளையக்காரர்களும் ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற எதுவும் செய்யத் தயாராக இருந்தனர். ஆங்கிலேயரைக் பிடிக்கவில்லை என்றால் டச்சுக்காரரையோ பிரெஞ்சுக் காரரையோ அண்டி உதவி வேண்டிய பரிதாபமான சூழ்நிலையுந்தான் அக்கால சுதேச மன்னர்களிடமும் பாளையக்காரர்களிடமும் காண்கிறோம். ஆகவே ஐரோப்பிய நாட்டினரின் தலைமையில் கீழேயே நமது நாட்டு மன்னர்களும் சிற்றரர்களும் அணி திரண்டு நிற்கவேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்தது. ஜெகவீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் பூலித்தேவருக்கும் கூட ஆங்கிலேயரை எதிர்க்க டச்சுக்காரர்களின் உதவியை நாடினர் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன(yusufhkhan letter to Madras Council 15.6.1760 MCC. Vol 8. P 194 - 195, 205 - 218) பேயை விரட்ட பிசாசை துணைக்கு அழைத்த கதையல்ல இது? இருப்பினும் இது போன்ற அரசியல் சூழல் அப்போது தவிர்க்க முடியாததாக இருந்தது என்பதையும் நாம் ஒப்புக்கொண்டேயாக வேண்டும்.


சில உண்மை நிகழ்ச்சிகளையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இதே காலகட்டத்தில் புதுக்கோட்டையை அடுத்துள்ள தஞ்சாவூரை ஆண்ட மராட்டிய மன்னர்களும் ஆங்கிலேயருக்கும் நிலவிய அரசியல் மேலாண்மைத் தொடர்பை சற்று காண்போம். கட்டபொம்மன் பிடிபட்டபிறகு, கட்டபொம்மனின் சகோதரர் சிவத்தையா தஞ்சாவூர் மன்னர் சரபோஜிக்கு கடிதம் எழுதி தமக்கு ஆதரவளிக்கும் படி கோருகிறார். சிவத்தையாவின் கடிதத்தைக் கொண்டுவந்த தூதுவன் அந்தக் கடிதத்தை சரபோஜியின் மந்திரியான தத்தாஜியிடம் கொடுக்க, தத்தாஜி கடிதம் கொண்டு வந்தவனை சிறையில் தள்ளிவிட்டு அக்கடிதத்தை ஆங்கிலேயருக்கு அனுப்பி வைக்கிறார். "ஆங்கிலேயருடன் தஞ்சாவூர் மராட்டிய மன்னர்கள் பல ஒப்பந்தகளை செய்துகொண்டனர். ஒவ்வொரு ஒப்பந்தத்தாலும் மராட்டிய மன்னர்கள் சுய உரிமையை இழத்தல், படைக்குறைப்பு, ஆங்கிலேயப் படைகளை தஞ்சாவூரில் இருக்கச்செய்து அவற்றின் பராமரிப்பிற்குப் பெருந்தொகை அளித்தல், நவாபுடன் தொடர்புகொள்ளுங்கால் ஆங்கிலேயரின் வழியே தொடர்பு கொள்ளுதல், வெளிநாட்டுக் கொள்கையை ஆங்கிலேயரின் சொற்படியே அமைத்துக் கொள்ளுதல் ஆங்கிலேயரின் நண்பர்க்கும் பகைவர்கட்கும் இவர்களும் நண்பரும் பகைவருமாதல் ஆகிய கட்டுப்பாடுகளுக்கு இடையே அகப்படலாயினர். நேரிடையாகவொ மறைமுகமாகவோ இங்ஙனம் ஆங்கிலேயருக்கு அடங்கி அவர் வழி ஒழுகவேண்டி வந்தது(கே. எம் வெங்கடராமையா. தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும், சமுதாய வாழ்க்கையும் - தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 1984 பக்கம் 59). இப்படி ஆங்கிலேயரின் நன்மதிப்பைப் பெற சுதேச மன்னர்கள் தங்களுக்குள் போட்டியிடக் கொண்டு செயல்பட நிகழ்ச்சிகள் பலவாகும்.


மருது சகோதர்கள் ஆங்கிலேயரை முழு மூச்சாக எதிர்ப்பதாகக் கூறி திருச்சி பேரறிக்கையை (16.6.1801) வெளியிட்ட பின்னும்(Revenue Sundries Vol. 26/16.6.1801. pp 441 - 70) 24.7.1801ல் கவர்னர் கிளைவுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் (Revenue Consultation Vol. 110 p. 1861 - 1869) தாங்கள் ஆங்கிலேயருக்கு கட்டூப்பட்டு கிஸ்தி செலுத்திவந்த வரலாற்றையெல்லாம் நினைவுகூர்ந்து, ஆங்கிலேயரின் நட்பை நடும் பாணியில் எழுதி இருப்பதோடு பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களையும் குறைகூறி எழுதியுள்ளனர். அவர்களது ஆங்கிலேய எதிர்ப்பு இயக்கத்தில் ஏன் இந்த முரண்பாடு என்பதை ஆராய வேண்டாமா?


பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து தப்பிய கட்டபொம்மனைப் பிடிக்க எட்டயபுரம் பாளையக்காரரின் படைகள் பின் தொடர்ந்து சென்றதாகவும் முதலில் கட்டபொம்மன் சிவகங்கைக்குச் சென்றதாகவும் பின்பு அங்கிருந்து புதுக்கோட்டை காட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் தெரியவருகிறது(Radhakrishna Iyer S. - A General History of Pudukkottai State- P.304) இச்செய்தி ஆராயப்பட வேண்டியதாகும். புரட்சிப் பாளையக் காரர்களின் கூட்டணியில் கட்டபொம்மனும் இருந்தார். ஆகவே அவர் மருது சகோதரர்களின் ஆதரவைத் தேடி சிவகங்கை சென்றிருக்க வாய்ப்புண்டு ஆனால் முதலில் சிவகங்கை சென்று பின் அங்கிருந்து புதுக்கோட்டைக் காட்டு பகுதிக்கு வந்து ஏன் ஒளிந்து கொள்ள வேண்டும் அப்படியானால் அவருக்கு அங்கு (சிவகங்கையில்) ஆதரவு கிடைக்கவில்லையா?


அக்கால இந்திய அரசியலில் ஐரோப்பிய நாட்டினரின் ஆதிக்கப் போட்டிகளில் ஆங்கிலேயர் தங்களது சக்தியை நிலைநாட்டி, நாட்டையே தங்களது ஏகபோக சொத்தாக பிரகடனப் படுத்திக் கொண்ட நிலையில், நமது நாட்டு(சுதேச) மன்னர்களும் சிற்றரசர்களும் பாளைக்காரர்களும் தங்களது பாதுகாப்பிற்கும் தங்களது குடிகளின் நலன் பாதுகாக்கப்படவும் நிலையானதொரு நேச சக்தியை நாடுவது இயற்கையே இந்த வகையில் புதுக்கோட்டை ஆங்கிலேயரை தனது நட்புக்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறது.


இங்கு ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். தொண்டைமான் மன்னர்களுக்கும் ஆங்கிலேயருக்கும் கட்டபொம்மன் தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்த காலத்தில்(1799) தொடர்பு ஏற்படவில்லை என்பதும், அதற்கு முன்பே அதாவது 1755லேயே இவர்களுக்கிடையே ஒரு அரசியல் உடன்படிக்கை அடிப்படையில் உறவு ஏற்பட்டுவிட்டது என்பதுதான் அது. கட்டபொம்மனைப் பிடித்துக் கொடுப்பதற்காக, புதிதாக ஆங்கிலேயர்களுடன் உறவு வைத்துக் கொள்ளவில்லை. கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்ததினாலேயே தொண்டைமானுக்குப் பல சலுகைகள் வழங்கப்பட்டன என்று கூறுவது வரலாற்றை சரியாக படிக்காதவர்களின் கூற்றாக அமைகிறது. இதற்கு முன்பே இந்தியாவில் வேறெந்த சமஸ்தானங்களும், சிற்றரசுகளும் இல்லாத பல சலுகைகள் தொண்டைமானுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. 1755ம் ஆண்டுக்கு முன்பே ஆற்காடு நவாபின் மேலாண்மையை ஏற்று ஆட்சி செலுத்திய தொண்டைமான் மன்னர்கள் ஆற்காடு நவாப் ஆங்கிலேயரின் பக்கம் சேர்ந்து கொண்டபோது, தொண்டைமானும் ஆங்கிலேயர் பக்கம் சேர்ந்தார் என்பது தெரியவருகிறது. இந்நிலையில்(அக்கால அரசியல் சூழ்நிலையில்) மேலாதிக்கம் வகித்த ஆங்கிலேயரின் வேண்டுகோளுக்கு இணங்க கட்டபொம்மனை பிடித்துக் கொடுத்தது அரசியல் ரீதியாக ஏற்புடையதுதான் என்பது விளங்கும்.


ஆகவே புதுக்கோட்டை தொண்டைமான் - கட்டபொம்மன் வரலாற்று நிகழ்வுகளை அக்காலச் சூழலையும் அரசியல் ஆதிக்க போராட்டங்களையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால் 'காட்டிக்கொடுத்தான்' தொண்டைமான் என்பது வரலாற்ற்றுச் சான்றுகளுக்கு முரணானது என்பது அரசியல் சிந்தாந்தங்களுக்கு ஒவ்வாதது என்பதும் விளங்கும். கட்டபொம்மனை மிகைப்பட உயர்த்திக் காட்டுவதற்க்காக கதை, நாடகங்கள் எழுதப்போந்த சில புத்தக ஆசிரியர்கள் அரைகுறைச் செய்திகளின் அடிப்படையில் "தொண்டைமான் காட்டிக் கொடுத்தான்" என்றும் புதுக்கோட்டையைக் "காட்டிக் கொடுத்த ஊர்" என்றும் எழுதிவருவது நல்ல வரலாற்றுச் செய்தியாகுமா? இது போன்ற ஆதாரமற்ற வாசகங்கள் வரலாற்று ஏடுகளிலிருந்து எடுக்கப்பட வேண்டும் என்பதே நடுநிலை வரலாற்று ஆய்வாளர்களின் எண்ணமாக இருக்க முடியும்.


PS: மேற்சொன்ன பத்தியை எழுதியவர் 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' புத்தகத்தை எழுதிய டாக்டர் ஜெ. ராஜாமுகமது. பதிவை முழுவதுமாகப் படித்துவிட்டு அவர் சொல்லும் விஷயத்தை எதிர்த்து பின்னூட்டம் போடலாம். அந்தப் புத்தகம் படித்திருக்கிறியா இதில் இப்படி எழுதியிருக்கிறது என்று சொல்லாதீர்கள். எடுத்துப் போட்டு எழுதி லிங்க் கொடுத்தால் நன்றாகயிருக்கும், சும்மா அங்க இங்க என்று சொல்லவேண்டாம்.


கள்ளர் குடிகள்

0 c
சாதிகளில்னைந்த குடிகள் thnks to http://www.treasurehouseofagathiyar.net/04600/4699.htm

தொண்டைமான் என்பது குடிப்பெயர்.
சுமார் ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக
அந்தப்பெயரைத் தாங்கிய குடியினர்இருந்துவந்திருக்கின்றனர். நாகநாட்டுஇளவரசிக்கும்
சோழமன்னனுக்கும் பிறந்தவனான தொண்டைமான் இளந்திரையன் என்பவன் பழங்காலத்தில்
இருந்தவன்.
மலையமான், அதியமான், போன்று தொண்டைமான்களும் நாடாள்வார்களாக
இருந்திருக்கின்றனர். நாடாள்வார்குடிகளில் ஒன்றுதான் பல்லவராயர் குடியும். மழவராயர்,
காடவராயர் போன்ற குடியினரும்இருந்திருக்கின்றனர். இப்போதும் பல்லவராயர், மழவராயர்,
காடவராயர் போன்ற குடியினர் இருக்கின்றனர். அந்தக்குடியினர் இப்போது கள்ளர்இனத்தினராகக்
காணப்படுகின்றனர். புதுக்கோட்டை பக்கங்களில் 'காடுவெட்டியார்' என்னும் குடியினர்
இருக்கின்றனர். இவர்கள் தொண்டைமான்களுடன் கொள்வினை கொடுப்பினை உள்ளவர்கள்.
'தொண்டைமான்' என்று தனிப்பட்ட சாதிகிடையாது.
பழுவேட்டரையர் என்போர் தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழைப்பழுவூர் மேலைப்பழுவூர்
ஆகிய வட்டாரத்தை ஆண்ட நாடாள்வார்குடியினர். இவர்கள் கேரளீயர் என்று கருதப்
படுகின்றனர். இவர்கள் எல்லாருமே சோழ பாண்டியருடன் மணத்தொடர்பு கொண்டிருந்தனர்.
முத்தரையரும் இதே போன்றகுடியினர்தாம். . . பல்லவர்கள்
காலத்தில் தஞ்சையை அவர்தாம் ஆண்டுவந்தார்கள். மார்ப்பிடுகு,பெரும்பிடுகு,
விடேல்விடுகு, என்றெல்லாம் பட்டப்பெயர்கள் தாங்கியிருந்தனர். விடேல்விடுகுஎன்பது
ரிஷப லாஞ்சனை எனப்படும் விடை இலச்சினையைக் குறிக்கும். பல்லவர்களுக்கும்
ரிஷப லாஞ்சனன் என்னும் பட்டம் உண்டு.பல்லவநாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும்
இடையே உள்ள கேந்திர முக்கியத்துவம்பெற்ற பூமி அவர்களுடையது. ஆகவே இரு
பெரும் வல்லரசுகளின் மோதல்களில்முக்கியமான வெற்றிப்பகடைக்காய்களாக
அவர்கள் விளங்கினார்கள். குடுமியான்மலை அவர்களின் ஆட்சியில்தான் இருந்தது.
சோழர்கள் அவர்களிடமிருந்துதான் தஞ்சையைக் கைப்பற்றிக்கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியைப் பின்னணியாக வைத்து சாண்டில்யன் ஒரு நாவல்
எழுதியிருக்கிறார். பெயர் மறந்துவிட்டது. இலங்கேஸ்வரன் மனோஹரின் நாடகங்களில்
ஒன்று 'காடக முத்தரையன்' என்பது. பல்லவர்களின் ஆட்சியில் மிக முக்கிய
பங்காற்றியவர் இந்த காடக முத்தரையர்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்நீங்கள் லோகநாத முத்தரையன்
என்று உங்களின் கட்டுரைகளின் இறுதியில் போட்டிருப்பீர்கள். கொஞ்சம் ராஜரீகமாக
இருக்கட்டுமே என்று அதையே சற்று சுருக்கி, நானும் டாக்டர் என்.வீ. ஜெயராமனும்
முத்தரையன் என்று சொல்வோம்:-)

>
>அத்தோடு பல்லவத் தரையர் பழுவேட்டரையர் என்று பலவகையான அரையர்கள்கூறப்படுகின்றார்கள். என்
>பெயரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் "முத்தரையர்" என்பதும் ஒன்று. (அடிக்கடி என்னைஅப்படித்தானே நீங்கள்
>அழைக்கிறீர்கள் !)

என்னைப் பொருத்தவரையில் இவை சாதிப்பெயர்கள் அல்ல,ஒருவகையான பட்டப்
>பெயர்கள். பிற்காலத்தில் சாதிப் பிரிவாக ஆக்கப்பட்டது என்றும் நினைக்கின்றேன்.

நீங்கள் நினப்பது சரியே.
குடிகளின்பட்டப்பெயர்கள் என்பது இன்னும்
சாலப்பொருந்தும். ஒரு வகையான polarisationand agglutination process மூலம்
குறிப்பிட்ட சாதிகளில்னைந்த குடிகள்இணைந்திருகின்றன
.

அன்புடன்

ஜெயபாரதி

மூவேந்தரும் முக்குலத்தோரும் - சில விளக்கங்களுக்குப் பதில்

0 c

என்னார் 

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609018&edition_id=20060901&format=html

நான் வாதம் செய்ய வரவில்லை

எனக்குத் தெரிந்ததைச் சொல்லத்தான் வந்தேன் 



//அவரது தம்பியர் தொகுத்துத் தந்தபடி அப்படியே வெளியிட்டுள்ளார். //


பதில்  =  அவர் தான் கிராமம் கிராமமாக சென்று தொகுத்ததாகக் கேள்விப்பட்டேன் 


//ஈழத்தரையர் என்ற பட்டமுடையவர்கள் கல்லணைத் தோகூரில் வாழ்கிறார்கள். கரிகாலனால் ஈழநாட்டிலிருந்து போர்க் கைதிகளாகக் கொண்டுவரப்பட்டு கல்லணை // 



பதில்  =  இந்த ஈழத்தரையர் இன்று ஈழத்திரியர் என மருவி வழங்கிவருகிறது தோகூரில் ஒரு சிலர் உள்ளனர் மற்றவர்கள் எங்கள் ஊரில் உள்ளனர் எங்கள் ஊரில் இருந்து தான் அங்கு சென்றுள்ளனர் எங்களுக்கு உறவுமுறையினரும் கூட ..அதாவது (மாமன் மைத்துனர்)

கரிகாலன் கொண்டு வந்த போர்க் கைதிகள் (தோகூருக்கும் பக்கத்தில்) அரங்குடியில் உள்ள ஒரு மேட்டில் வைத்து இருந்ததான் அங்கு அரசன் குடி வைத்து அல்லது அரசன் குடியிருந்ததால் அதற்கு அரசன்குடி அரசங்குடியாக மாறிவிட்டது (தியானேசுவரன் அந்த ஊர்காரர்தான் அவர் பட்டம் தொண்டைமான் ) அதற்கான சான்றுகள் அங்கு உடைந்த பானை ஓடுகள் கிடப்பதாகச் சொன்னார்கள். அந்த இடத்திற்கு பக்கத்தில் தான் கச்சேந்தி மலை என்ற ஒரு கல் குவாரியுள்ளது இங்கிருந்து தான் கல்லணைக்கு கல் கொண்டு சென்றனர் . 


//இப்பட்டங்கள் எந்தக் காலகட்டத்திலிருந்து கள்ளர் சமூகத்தவர் மத்தியில் வழங்கி வருகின்றன என்பதையோ, இவையெல்லாம் தந்தை வழிப் பட்டங்கள்தாமா என்பது பற்றியோ அவர் குறிப்பிடவில்லை .//

பதில்  =  உண்மை

ஆனால் இன்று தந்தை வழியாகத் தான் வருகிறது


கல்வெட்டில் காணப்படவில்லை என்று சொன்னீர்கள்
இதோ சில கல்வெட்டுகள் 





திருநாகேஸ்வரம் நாக நாத திருக்கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் தென் சுவரிலுள்ள கல்வெட்டில்

திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரி மென்கொண்டான் 14-வது ஆண்டில் கோயிலுக்கு நிலம் வழங்கப்பெற்றது கூறப்படுகிறது. 





மேற்படி கோயிலின் மேற்கு சுவரில் 

பரகேசரிவர்மன்உடையார்ஸ்ரீ ராஜேந்திரசோழதேவனுடைய 2-வது ஆண்டில் (கி.பி.1052) ஜயங்கொண்ட சோழ மண்டலத்தைச் சேர்ந்த வெங்குன்றக் கூற்றத்தில் மருதவூரில் உள்ள மாணிக்கம்மாவலி என்னம் விக்கிரமசிங்கப் பல்லவராயனிடமிருந்து திருக்குடமூக்குச் சபையார் நூறு பொற்காசுகள் பெற்றுக்கொண்டது. காவிரியின் வெள்ளத்தால் சேதம் அடைந்த பாசன வாய்க்காலைச் செப்பனிடவும் கோயிலில் திருச்சிற்றம்பல முடையான் மண்டபத்தில் சிவதர்மங்களை எடுத்து விரிவுரை செய்வதற்கும் அத்தொகை செலவிடப்பெற்றது .

தலவரலாறு புத்தகம்


திருமங்கையாழ்வாரும் கள்ளர் சமுகத்தைச் சேர்ந்தவர்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60507221&edition_id=20050722&format=html


கோனேரின்மை கொண்டான், வீரராஜேந்திர் தேவன் , குலோத்துங்கன், விக்ரம சோழன், வீரநஞ்சராய உடையார் போன்றோரின் 9 கல்வெட்டுகள்உள்ளன. தை மாதத்தில் வேடுபரி உற்சவம் மிகவும் சிறப்பான ஒன்றாகும்




http://www.tamilpayani.com/tn/coimbatore/covai-thirumuruganpoonditemple.htm




இப்பொழுது பெரிய மனிதர்களாகவோ , பெரிய மனிதர்களின் வழியினராகவோ கள்ளர்கள் பெருந்தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள் வழி வழியிருந்து ஆட்சி புரிந்த நாடு என்பதை முதலில் நினைவிற் கொள்ளவேண்டும் . சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொருகாலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு 'கோனேரிமேல் கொண்டான்' என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது, இப்பெயர் தரித்திருந்தோரும் , கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குரோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்கச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின் வருவன :


"திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும் , தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதரஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம் . இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து."



'' கோனேரி மேல்கொண்டான் கருவூர்த் திருவானிலை ஆளுடையார் கோயில் தேவர்கன்மிகளுக்கு -- இந்நாயனார் கோயிலுக்கு நம்பெயரால் இயற்றின வீரசோழன் திருமடவளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும், சிவப்பிராமணர்கும், தேவரடியார்க்கும் , உவச்சர்க்கும், பலபணி நிமந்தக்காரர்க்கும் சீவனசேஷமாகத் தென்கரை ஆந்தனூரான வீரசோழ நல்லூர் கொடுத்து இவ்வூரால் வந்த இறையும் எலவையும் உகவையும் கொள்ளப்பெறாதோமாக விட்டு மற்றுள்ள குடிமைப்பாடும் எப்பேர்ப்பட்டதும் இந்நாயனார் கோயிலுக்குச் செய்து இவ்வூர் இப்படி சந்திராதித்த வரை அநுபவிப்பார்களாக நம்மோலைக் கொடுத்தோம் . இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக்கொள்க . இவை விலாடத்தரையன் எழுத்து"




இவற்றிலிருந்து தோன்றும் பிற உண்மைகள் ஒருபுறம் நிற்க. கோனேரி மேல்கொண்டான் என்னும் பெயரே இங்கு வேண்டுவது. பெயரினைக் குறித்துத் தென்னிந்தியசாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற்பகுதி 21- ம் சாசனத்தில் சாசன பரிசோதகர் பின் வருமாறு குறித்திருக்கின்றனர்.:




" இப்பெயர் ஒரு விடுகதை பொன்றே இருந்து வந்திருக்கிறது. பலர் பலவிதமாக இதனை எழுதியுள்ளார்கள்........ கோனேரின்மை கொண்டான் என்பதற்கு அரசர்க்குள் ஒப்பிரல்லாதவன் என்று பொருள்கொள்ளலாம். கோனேரி எனப் பின்னர் மருவியிருக்கிற தாகத் தெரிகிறது, வீரசோழனும், குலோத்துங்க சோழதேவனும் கோனேரிமேல்கொண்டான் எனவும், கோனேரிமேங்கொண்டான் எனவும் பட்டம் பூண்டிருக்கின்றனர். ஒரு நாணயத்தில் கோனேரி ராயன் என்று எழுதப்பட்டிருக்கிறது. கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம் சோழவரசர் ராஜராஜ தேவராலும் கொள்ளப் பட்டிருக்கிறது . சுந்தர பாண்டியனுக்கும் இப்பட்டமுண்டு. வீரபாண்டியன் , குலசேகர தேவன் இவர்களுக்கும் இப்பட்டத்தையே கொண்டவர்கள்"

இப்பெயர் இங்ஙனம் திரிந்து காணப்படினும், கோனேரி மேல்கொண்டான் என்பதே திருத்தமுள்ளதாக இப்பொழுது கொள்ளற்பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்த்தம் கோனேரி என்னும் பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்தம் கோனேரி என்னும் பெயரதாதலும் , கோனேரிராஜபுரம் எனச் சில ஊர்களிருத்தலும், கோனேரி என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருத்தலும் இவ்வுண்மையை விளக்குவனவாகும் . குலசேகர ஆழ்வார் காலத்திலேயே கோனேரி என வழங்கியிருப்பது, அவர் ,




' கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே'




என்று பாடுவதால் அறியலாகும் .




இவ்வாற்றால் கோனேரி , மேல்கொண்டான் என்னும் இரு பெயர்களை இணைந்து ஒரு பட்டமாக வழங்கியிருப்பது புலனாகும். இப்பெயர்களில் யாதேனும் யாருக்காவது இப்பொழுது பட்டப்பெயராக வழங்குகின்றதா என்பதே கண்டறிய வேண்டுவது . கள்ளருக்குள் வழங்கும் பல்வகையான பட்டப் பெயர்களில் மேல் கொண்டார் என்பதும் ஒன்று. இப்பட்ட முடையார் செங்கிப்பட்டி முதலிய இடங்களில் இருக்கின்றனர் . இன்னோர் பரம்பரையாக மிக்க மேன்மை யுடையராய் இருந்து வந்திருக்கின்றனர். மதுக்கூர்ச்சமீன்றாரின் மாப்பிள்ளையும் கூனம் பட்டியின் அதிபருமாகிய திரூவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்களை இதற்குச் சான்றாகக் குறிப்பிடுதல் பொருந்தும். கோனேரி என்னும் பெயரும் கள்ளர்களில் பலர் தரித்து வந்திருக்கின்றனர் இவகைளிலிருந்து . சோழர் பலர்க்கு வழங்கிய மேல்கொண்டான் என்னும் பெயர் அவர் வழியினர்க்குப் பட்டமாக இருந்துவருகிறதென்றும், அவர்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து தங்கள் நாடாட்சியை இழந்து பிற்காலத்திலே சோழர் குடியிற் றோன்றின ரென்னும் உண்மை மறக்கப்பட்டிருக்கிறதென்றும் துணியலாகும்.







சோழர்கள் திருமணம் செய்து கொண்டது மழவராயர் குடும்பத்தில் அந்த மழவராயரும் கள்ளர் தான்

ஏரிக்கு கலிங்கு கட்டிய ஜமீன்தார் அரியலூர் கல்வெட்டில் புதுதகவல்




அரியலூரை ஆட்சி செய்த ஜமீன்தார் சந்தன ஏரிக்கு தண்ணீர் வரத்துக்காக கலிங்கு கட்டியது பற்றிக் கூறும் புதிய கல்வெட்டு கிடைத்தள்ளது .

அரியலூரில் இக்கல் வெட்டுசந்தன ஏரிக்கு போகும் வழியில் பஸ்டிப்போ பின்புறம் ராவுத்தன் பட்டி சாலையில் உள்ள தரைப்பாலம் வாய்க்காலில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டு பற்றி முனைவர்பட்டஆராய்ச்சியாளர் செவ்வேள் கொடுத்து தகவலின் பேரில் அரியலூர் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டாக்டர் தியாராஜன் சென்று படியெடுத்து ஆய்வு செய்தார் . இவருடன் பேராசிரியர் ரவிச்சந்திரனும் ஆய்வில் கலந்து கொண்டார்.

இக்கல் வெட்டு தரும் செய்திகளை பற்றி பேராசிரியர் டாக்டர் தியாகராஜன் கூறியதாவது . ஏழு வரிகளில் மிக அழகிய கற்பலகையில் மிக அழகிய கற்பலகையில் இக்கல்வெட்டு சகவருஷம் 1759 மற்றும் கலியவருஷம் 4938ம் ஆண்டில் இது எழுதப் பட்டுள்ளது. ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் 17ம் தேதி குருவாரம் உத்திராடம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் அரியலூரை ஆட்சி செய்த விஜய ஒப்பிலாத மழவராயர் என்ற ஜமீன்தார் கலிங்கு கட்டியுள்ளார் என இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.




இவர் அரியலூர் மகாராஜா ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவராய துரை என்பரின் மகன் எனவும் இக்கல்வெட்டு கூறுகிறது. கலிங்கு என்பது ஏரி நீர் நிரம்பி வழிந்து செல்லும் கடைப்பகுதியில் கட்டப்படும் நீர் அமைப்பாகும் . இந்த கலிங்கு சந்தன ஏரிக்கு கட்டப்பட்டது எனக்கருதலாம். இக்கல் வெட்டில் உள்ள கற்பலகை தற்போது இந்த ஏரிக்கரையை ஒட்டியுள்ள ஒரு தரைப்பாலத்தில் வைத்து கட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டு உள்ள பகுதி ஏரியின் கடைப்பகுதியாக ஒரு காலத்தில் இருந்திருக்கலாம் . தற்போது இது தூரந்து போய் இவ்வழியாக சாலை செல்கிறது . வரலாற்று சிறப்புடைய இக்கல்வெட்டு தற்பொழுது இப்பகுதியில் போடப்பட்டு வரும் சாலை மண்ணால் மூடப்பட்டு மறைந்து போய்விடால் காப்பாற்றப்பட வேண்டியது முக்கியமானதாகம் இவ்வாறு அவர் கூறியுள்ளார் .




கலிங்கு பற்றிக்கூறும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள வாசகம்

ஸ்வஸ்தி ஸ்ரீசாலிசாகன சகாப்தஹாளூ 1759

கலியாப்தஹா ளூ4938யிதில் நிகழ்கி

ன்ற யோவிளப் ளூசித்திரை மீ 17 உகுருவா

ரம் உத்டதிராடங்கூடிய சுபதினத்தில் அரியலூர் மஹா

றாசறாச ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவறாயதுரை அவ

ர்கள் குமாரர் விசைய ஒப்பிலாத மழவறாயதுரை அவ

ர்களால் யிந்த கலுங்கு தர்மஞ் செய்யலாச்சது .


(ஸ்வஸ்தி ஸ்ரீசாலிசாகன சகாப்தஹாளூ 1759 கலியாப்தஹா ளூ4938யிதில் நிகழ்கின்ற யோவிளப் ளூசித்திரை மீ 17 உகுருவாரம் உத்டதிராடங்கூடிய சுபதினத்தில் அரியலூர் மஹாறாசறாச ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவறாயதுரை அவர்கள் குமாரர் விசைய ஒப்பிலாத மழவறாயதுரை அவர்களால் யிந்த கலுங்கு தர்மஞ் செய்யலாச்சது .)

22-08-06 தினமலர் பக்கம் 7 
என்னார்
rethinavelu.n@gmail.com

www.ennar.blogspot.com

Beware, smoking damages your genes within minutes

0 c

Washington, Jan 16 (IANS) Scientists have issued a stark warning about smoking - it begins to damage your genes within mere minutes and not years after it reaches your lungs.
Their report is the first study to detail the way certain substances in tobacco cause DNA damage linked to cancer, reports the journal Research in Toxicology.

University of Minnesota's Stephen S. Hecht, professor in medicinal chemistry, who conducted the study, and his colleagues point out that smoking related lung cancer claims 3,000 lives daily worldwide.

Smoking is also linked to at least 18 other types of cancer. Evidence indicates that harmful substances in tobacco smoke - termed polycyclic aromatic hydrocarbons or PAHs - are one of the culprits in causing lung cancer.

Until now, however, scientists had not detailed the specific way in which the PAHs in cigarette smoke cause DNA damage in humans, according to a Minnesota statement.

The scientists added a labelled PAH, phenanthrene, to cigarettes and tracked its fate in a group of volunteers who smoked.

They found that phenanthrene quickly formed a toxic substance in the blood known to trash DNA, causing mutations that can cause cancer.

Smokers developed maximum levels of the substance in a time frame that surprised even the researchers - just 15-30 minutes after the volunteers finished smoking.

Researchers said the effect is so fast that it's equivalent to injecting the substance directly into the bloodstream.

'This study is unique,' writes Hecht, an internationally recognized expert on cancer-causing substances found in cigarette smoke and smokeless tobacco.

'The results...should serve as a stark warning to those who are considering starting to smoke cigarettes,' he said.
http://www.sify.com/news/beware-smoking-damages-your-genes-within-minutes-news-international-lbqpOhhcgfh.html

இருங்கோவேள்

0 c
கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படி மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆயினரே என்கிற சொல் வழக்கைக் கொண்டு அந்தக் குழுவினரே பண்டைத் தமிழர்கள் அப்படியானால் மற்றவர்கள் வந்தேறிகள் என்று பொருள் .பண்டைத் தமிழர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள தொல்பொருள்கள் மற்றும் இலக்கியச் சான்றுகள் இருக்கிறது.

புறநாநூற்றுப் பாடல் (201) இருங்கோவேளை நோக்கி
கபிலர் பாடியது வருமாறு:

"நீயே வடபால் முனிவன் தடவினில் தோன்றிச்
செம்புப் புனைந்தியற்றிய சேனெடும் புரிசை
உவரா ஈகை துவரை ஆண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே விறற்போர் அண்ணல்
......"
இதன் பொருள் துவாரகையை நாற்பத்தொன்பது தலைமுறைக்கு முன்னர் உங்கள் முன்னோர் ஆண்டு வந்தனர் என்பதாக இருங்கோவேளிடம் கூறுவது எனலாம்.
இப்படியாக வேளிர் எப்போது தமிழகம் வந்தனர் எனத் தெரிகிறது. அவ்வாறு வரும்போது வேளிர், வேந்தர் மற்றும் தொல் அருவாளர் வந்தனர் என்பது உரைகாரர்கள் சொல்லும் செய்தி. மட்டுமின்றி தொல்காப்பியப் பாயிர விளக்கத்திலும் இந்தச் செய்தி இருப்பதை உரைகளில் இருந்து நாம் அறிகிறோம்.
தமிழகத்தில் இரும்பு அறிமுகமானது இவர்களின் வருகையை ஒட்டியே என்பது தொல்பொருள் ஆய்வு முடிவு.
இவர்களுக்கு முன்பே இங்கு சில குழுக்கள் இருந்தனர். அவர்கள் இன்றைக்குப் பழங்குடிகளாக உள்ள வேடர், காடர் போன்றோர்.
மேற்படி வேளிரும் வேந்தரும் அருவாளரைக் கொண்டு காடு கெடுத்து நாடாக்கினர் என்பதும் இலக்கியங்கள் மூலம் தெரிகிறது. இம்மூவரையும் அழைத்து வந்தது அகத்திய முனி என்பதும் சொல்லப்பட்டுள்ளது.

http://www.karuthu.com/forum/forum_posts.asp?TID=2824&PID=30715

மழவர் --- மழவராயர்

66 c
மழவர் தாயகம்


மழ கொங்கம் என்று அழைக்கப்படும் பகுதி.இன்றைய தருமபுரி மாவட்டப் பகுதியே அவர்கள் தாயகம்.அவர்கள் கொடுந்தொழில் புரிவோர் அல்ல.போரில் வல்ல வீரர் குடியினர்.அதியமான், வல் வில் ஓரி போன்றோர் இம்மழவர் குடியினரே.தகடூர் மழவர் என்றும் கொல்லி மழவர் என்றும் அழைக்கப்பட்டனர்.பல வருடங்களுக்கு முன் இவர்களைப் பற்றிய ஒரு வேடிக்கையான ஒரு செய்தியை ஒரு நூலில் கண்டேன். இம்மழவர்கள் இருமல் வந்தால் புற்று மண்ணை வாயில் அடைத்துக்கொள்வார்களாம்


   மழவர் குடியினர் தமது வீரத்தினால் அரசர்களில் நன்மதிப்பைப் பெற்றனர். சோழ மன்னர் இவர்களுடன் மணத்தொடர்பு கொள்ளும் அளவிற்கு செல்வாக்குப் பெற்றனர். சோழர் காலத்தில் வாழ்ந்த பளுவேட்டரையர் மழவர் மரபினரே.கல்வெட்டுகளில் இவர்கள் "மகரிஷி வம்சத்து ஷத்திரியர்கள்" எனக் குறிக்கப்பட்டுள்ளனராம்.


அக்காலத்தில் மன்னர்கள் மழவர் படை வைத்துக்கொள்ள ஆர்வம் கொண்டிருந்தனராம்.இம்மழவர்கள் பலர் சோழர் காலத்தில் இன்றைக்குள்ள திருச்சி மாவட்டப் பகுதிகளில் குடியமர்ந்தனர்.


இம் மழவர்கள் தற்போது கள்ளர்  இனத்தவர் என்ப  புலப்படும். 
மேலும் குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக, பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன.விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள்.


ஆராய்ச்சி கீழ் கண்டவற்றை கருத்தில் கொண்டு செய்வதே முறை.


1.மழவர் தாயகம் 2.அவர்கள் குடியைச் சேர்ந்த மன்னர்கள்

திருவழுந்தூர் (தேரழுந்தூர் என்றும் கூறப்படுகிறது)
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சென்று கோமல் செல்லும் சாலையில் திரும்பி மூவலூர் தாண்டிச் சென்றால் தேரழுந்தூர்...

தலப் பெயர்க் காரணம்: ஊர்த்துவரதன் என்ற மழவ அரசன் தவத்திறகு மெச்சி பிரம்மா அவனுக்கு ஆகாயத்தில் பறந்து செல்லக் கூடிய ஒரு தேரைப் பரிசாக அளித்தார். அந்த தேரில் ஏறி ஒரு முறை ஊர்த்துவரதன் ஆகாயத்தில் சென்று கொண்டு இருந்த போது ஓரிடத்திற்கு மேல் தேர் முன்னே செல்ல முடியாமல் தடுமாறியது. அதோடு இல்லாமல் பூமியை நோக்கி கீழே இறங்கி பூமியில் அழுந்தி நின்றது. ஊர்த்துவரதன் தேர் பூமியில் இறங்கி அழுந்தி நின்றதற்கு காரணம் என்ன என்று பார்த்த போது அவ்விடத்தில் அகத்திய முனிவர் இறைவனை பூஜித்து வந்ததைப் பார்த்தான். அதனாலேயே தேர் அவ்விடத்தைத் தாண்டிச் செல்லாமல் கீழே இறங்கி அழுந்தி நின்றது எனபதைக் கண்டான். தேர் கீழே அழுந்தி நின்றதால் இத்தலம் தேரழுந்தூர் என்று பெயர் பெற்றது. மேலும் சீர்காழிப் பிள்ளையான திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் இத்தலத்தை "அழுந்தை" என்றே குறிப்பிடுகிறார். அழுந்தை எனபதே மருவி அழுந்தூர் என்று மாறியது என்றும் கூறுவர்.
திருவழுந்தூர் வேதம் தழைத்த ஊர். வேத முழக்கம் எதிரொலித்த ஊர். ஒமப்புகை எங்கும் பரவிய ஊர். இங்குள்ள அந்தணர்கள் பெருமளவில் வாழ்ந்து வேதம் ஓதி, வேத தர்மத்தில் திளைத்து, வேதத்தை பறை சாற்றி இறைவனைத் தொழுது வழிபடுதலில் வல்லவர்களாக விளங்கினர். இத்தலத்திற்கு வருகை தந்த திருஞானசம்பந்தர் அழுந்தூர் வாழ் மறையவர்களின் பெருமையைப் போற்றி ஒரு பதிகமே பாடியிருக்கிறார். அழுந்தை மறையோர் என்ற் ஒவ்வொரு பாட்டிலும் அவர்களுக்குத் தனி ஏற்றம் தருகிறார். திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
http://www.shivatemples.com/sofct/sct038.html