மூவேந்தரும் முக்குலத்தோரும் - சில விளக்கங்களுக்குப் பதில்

என்னார் 

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609018&edition_id=20060901&format=html

நான் வாதம் செய்ய வரவில்லை

எனக்குத் தெரிந்ததைச் சொல்லத்தான் வந்தேன் 



//அவரது தம்பியர் தொகுத்துத் தந்தபடி அப்படியே வெளியிட்டுள்ளார். //


பதில்  =  அவர் தான் கிராமம் கிராமமாக சென்று தொகுத்ததாகக் கேள்விப்பட்டேன் 


//ஈழத்தரையர் என்ற பட்டமுடையவர்கள் கல்லணைத் தோகூரில் வாழ்கிறார்கள். கரிகாலனால் ஈழநாட்டிலிருந்து போர்க் கைதிகளாகக் கொண்டுவரப்பட்டு கல்லணை // 



பதில்  =  இந்த ஈழத்தரையர் இன்று ஈழத்திரியர் என மருவி வழங்கிவருகிறது தோகூரில் ஒரு சிலர் உள்ளனர் மற்றவர்கள் எங்கள் ஊரில் உள்ளனர் எங்கள் ஊரில் இருந்து தான் அங்கு சென்றுள்ளனர் எங்களுக்கு உறவுமுறையினரும் கூட ..அதாவது (மாமன் மைத்துனர்)

கரிகாலன் கொண்டு வந்த போர்க் கைதிகள் (தோகூருக்கும் பக்கத்தில்) அரங்குடியில் உள்ள ஒரு மேட்டில் வைத்து இருந்ததான் அங்கு அரசன் குடி வைத்து அல்லது அரசன் குடியிருந்ததால் அதற்கு அரசன்குடி அரசங்குடியாக மாறிவிட்டது (தியானேசுவரன் அந்த ஊர்காரர்தான் அவர் பட்டம் தொண்டைமான் ) அதற்கான சான்றுகள் அங்கு உடைந்த பானை ஓடுகள் கிடப்பதாகச் சொன்னார்கள். அந்த இடத்திற்கு பக்கத்தில் தான் கச்சேந்தி மலை என்ற ஒரு கல் குவாரியுள்ளது இங்கிருந்து தான் கல்லணைக்கு கல் கொண்டு சென்றனர் . 


//இப்பட்டங்கள் எந்தக் காலகட்டத்திலிருந்து கள்ளர் சமூகத்தவர் மத்தியில் வழங்கி வருகின்றன என்பதையோ, இவையெல்லாம் தந்தை வழிப் பட்டங்கள்தாமா என்பது பற்றியோ அவர் குறிப்பிடவில்லை .//

பதில்  =  உண்மை

ஆனால் இன்று தந்தை வழியாகத் தான் வருகிறது


கல்வெட்டில் காணப்படவில்லை என்று சொன்னீர்கள்
இதோ சில கல்வெட்டுகள் 





திருநாகேஸ்வரம் நாக நாத திருக்கோயிலில் இரண்டாம் பிரகாரத்தில் தென் சுவரிலுள்ள கல்வெட்டில்

திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரி மென்கொண்டான் 14-வது ஆண்டில் கோயிலுக்கு நிலம் வழங்கப்பெற்றது கூறப்படுகிறது. 





மேற்படி கோயிலின் மேற்கு சுவரில் 

பரகேசரிவர்மன்உடையார்ஸ்ரீ ராஜேந்திரசோழதேவனுடைய 2-வது ஆண்டில் (கி.பி.1052) ஜயங்கொண்ட சோழ மண்டலத்தைச் சேர்ந்த வெங்குன்றக் கூற்றத்தில் மருதவூரில் உள்ள மாணிக்கம்மாவலி என்னம் விக்கிரமசிங்கப் பல்லவராயனிடமிருந்து திருக்குடமூக்குச் சபையார் நூறு பொற்காசுகள் பெற்றுக்கொண்டது. காவிரியின் வெள்ளத்தால் சேதம் அடைந்த பாசன வாய்க்காலைச் செப்பனிடவும் கோயிலில் திருச்சிற்றம்பல முடையான் மண்டபத்தில் சிவதர்மங்களை எடுத்து விரிவுரை செய்வதற்கும் அத்தொகை செலவிடப்பெற்றது .

தலவரலாறு புத்தகம்


திருமங்கையாழ்வாரும் கள்ளர் சமுகத்தைச் சேர்ந்தவர்

http://www.thinnai.com/?module=displaystory&story_id=60507221&edition_id=20050722&format=html


கோனேரின்மை கொண்டான், வீரராஜேந்திர் தேவன் , குலோத்துங்கன், விக்ரம சோழன், வீரநஞ்சராய உடையார் போன்றோரின் 9 கல்வெட்டுகள்உள்ளன. தை மாதத்தில் வேடுபரி உற்சவம் மிகவும் சிறப்பான ஒன்றாகும்




http://www.tamilpayani.com/tn/coimbatore/covai-thirumuruganpoonditemple.htm




இப்பொழுது பெரிய மனிதர்களாகவோ , பெரிய மனிதர்களின் வழியினராகவோ கள்ளர்கள் பெருந்தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள் வழி வழியிருந்து ஆட்சி புரிந்த நாடு என்பதை முதலில் நினைவிற் கொள்ளவேண்டும் . சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொருகாலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு 'கோனேரிமேல் கொண்டான்' என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது, இப்பெயர் தரித்திருந்தோரும் , கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குரோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்கச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின் வருவன :


"திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும் , தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதரஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம் . இப்படிக்கு இவ்வோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து."



'' கோனேரி மேல்கொண்டான் கருவூர்த் திருவானிலை ஆளுடையார் கோயில் தேவர்கன்மிகளுக்கு -- இந்நாயனார் கோயிலுக்கு நம்பெயரால் இயற்றின வீரசோழன் திருமடவளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும், சிவப்பிராமணர்கும், தேவரடியார்க்கும் , உவச்சர்க்கும், பலபணி நிமந்தக்காரர்க்கும் சீவனசேஷமாகத் தென்கரை ஆந்தனூரான வீரசோழ நல்லூர் கொடுத்து இவ்வூரால் வந்த இறையும் எலவையும் உகவையும் கொள்ளப்பெறாதோமாக விட்டு மற்றுள்ள குடிமைப்பாடும் எப்பேர்ப்பட்டதும் இந்நாயனார் கோயிலுக்குச் செய்து இவ்வூர் இப்படி சந்திராதித்த வரை அநுபவிப்பார்களாக நம்மோலைக் கொடுத்தோம் . இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக்கொள்க . இவை விலாடத்தரையன் எழுத்து"




இவற்றிலிருந்து தோன்றும் பிற உண்மைகள் ஒருபுறம் நிற்க. கோனேரி மேல்கொண்டான் என்னும் பெயரே இங்கு வேண்டுவது. பெயரினைக் குறித்துத் தென்னிந்தியசாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற்பகுதி 21- ம் சாசனத்தில் சாசன பரிசோதகர் பின் வருமாறு குறித்திருக்கின்றனர்.:




" இப்பெயர் ஒரு விடுகதை பொன்றே இருந்து வந்திருக்கிறது. பலர் பலவிதமாக இதனை எழுதியுள்ளார்கள்........ கோனேரின்மை கொண்டான் என்பதற்கு அரசர்க்குள் ஒப்பிரல்லாதவன் என்று பொருள்கொள்ளலாம். கோனேரி எனப் பின்னர் மருவியிருக்கிற தாகத் தெரிகிறது, வீரசோழனும், குலோத்துங்க சோழதேவனும் கோனேரிமேல்கொண்டான் எனவும், கோனேரிமேங்கொண்டான் எனவும் பட்டம் பூண்டிருக்கின்றனர். ஒரு நாணயத்தில் கோனேரி ராயன் என்று எழுதப்பட்டிருக்கிறது. கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம் சோழவரசர் ராஜராஜ தேவராலும் கொள்ளப் பட்டிருக்கிறது . சுந்தர பாண்டியனுக்கும் இப்பட்டமுண்டு. வீரபாண்டியன் , குலசேகர தேவன் இவர்களுக்கும் இப்பட்டத்தையே கொண்டவர்கள்"

இப்பெயர் இங்ஙனம் திரிந்து காணப்படினும், கோனேரி மேல்கொண்டான் என்பதே திருத்தமுள்ளதாக இப்பொழுது கொள்ளற்பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்த்தம் கோனேரி என்னும் பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்தம் கோனேரி என்னும் பெயரதாதலும் , கோனேரிராஜபுரம் எனச் சில ஊர்களிருத்தலும், கோனேரி என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருத்தலும் இவ்வுண்மையை விளக்குவனவாகும் . குலசேகர ஆழ்வார் காலத்திலேயே கோனேரி என வழங்கியிருப்பது, அவர் ,




' கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே'




என்று பாடுவதால் அறியலாகும் .




இவ்வாற்றால் கோனேரி , மேல்கொண்டான் என்னும் இரு பெயர்களை இணைந்து ஒரு பட்டமாக வழங்கியிருப்பது புலனாகும். இப்பெயர்களில் யாதேனும் யாருக்காவது இப்பொழுது பட்டப்பெயராக வழங்குகின்றதா என்பதே கண்டறிய வேண்டுவது . கள்ளருக்குள் வழங்கும் பல்வகையான பட்டப் பெயர்களில் மேல் கொண்டார் என்பதும் ஒன்று. இப்பட்ட முடையார் செங்கிப்பட்டி முதலிய இடங்களில் இருக்கின்றனர் . இன்னோர் பரம்பரையாக மிக்க மேன்மை யுடையராய் இருந்து வந்திருக்கின்றனர். மதுக்கூர்ச்சமீன்றாரின் மாப்பிள்ளையும் கூனம் பட்டியின் அதிபருமாகிய திரூவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்களை இதற்குச் சான்றாகக் குறிப்பிடுதல் பொருந்தும். கோனேரி என்னும் பெயரும் கள்ளர்களில் பலர் தரித்து வந்திருக்கின்றனர் இவகைளிலிருந்து . சோழர் பலர்க்கு வழங்கிய மேல்கொண்டான் என்னும் பெயர் அவர் வழியினர்க்குப் பட்டமாக இருந்துவருகிறதென்றும், அவர்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து தங்கள் நாடாட்சியை இழந்து பிற்காலத்திலே சோழர் குடியிற் றோன்றின ரென்னும் உண்மை மறக்கப்பட்டிருக்கிறதென்றும் துணியலாகும்.







சோழர்கள் திருமணம் செய்து கொண்டது மழவராயர் குடும்பத்தில் அந்த மழவராயரும் கள்ளர் தான்

ஏரிக்கு கலிங்கு கட்டிய ஜமீன்தார் அரியலூர் கல்வெட்டில் புதுதகவல்




அரியலூரை ஆட்சி செய்த ஜமீன்தார் சந்தன ஏரிக்கு தண்ணீர் வரத்துக்காக கலிங்கு கட்டியது பற்றிக் கூறும் புதிய கல்வெட்டு கிடைத்தள்ளது .

அரியலூரில் இக்கல் வெட்டுசந்தன ஏரிக்கு போகும் வழியில் பஸ்டிப்போ பின்புறம் ராவுத்தன் பட்டி சாலையில் உள்ள தரைப்பாலம் வாய்க்காலில் வைத்துக் கட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டு பற்றி முனைவர்பட்டஆராய்ச்சியாளர் செவ்வேள் கொடுத்து தகவலின் பேரில் அரியலூர் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பேராசிரியர் டாக்டர் தியாராஜன் சென்று படியெடுத்து ஆய்வு செய்தார் . இவருடன் பேராசிரியர் ரவிச்சந்திரனும் ஆய்வில் கலந்து கொண்டார்.

இக்கல் வெட்டு தரும் செய்திகளை பற்றி பேராசிரியர் டாக்டர் தியாகராஜன் கூறியதாவது . ஏழு வரிகளில் மிக அழகிய கற்பலகையில் மிக அழகிய கற்பலகையில் இக்கல்வெட்டு சகவருஷம் 1759 மற்றும் கலியவருஷம் 4938ம் ஆண்டில் இது எழுதப் பட்டுள்ளது. ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் 17ம் தேதி குருவாரம் உத்திராடம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் அரியலூரை ஆட்சி செய்த விஜய ஒப்பிலாத மழவராயர் என்ற ஜமீன்தார் கலிங்கு கட்டியுள்ளார் என இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.




இவர் அரியலூர் மகாராஜா ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவராய துரை என்பரின் மகன் எனவும் இக்கல்வெட்டு கூறுகிறது. கலிங்கு என்பது ஏரி நீர் நிரம்பி வழிந்து செல்லும் கடைப்பகுதியில் கட்டப்படும் நீர் அமைப்பாகும் . இந்த கலிங்கு சந்தன ஏரிக்கு கட்டப்பட்டது எனக்கருதலாம். இக்கல் வெட்டில் உள்ள கற்பலகை தற்போது இந்த ஏரிக்கரையை ஒட்டியுள்ள ஒரு தரைப்பாலத்தில் வைத்து கட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டு உள்ள பகுதி ஏரியின் கடைப்பகுதியாக ஒரு காலத்தில் இருந்திருக்கலாம் . தற்போது இது தூரந்து போய் இவ்வழியாக சாலை செல்கிறது . வரலாற்று சிறப்புடைய இக்கல்வெட்டு தற்பொழுது இப்பகுதியில் போடப்பட்டு வரும் சாலை மண்ணால் மூடப்பட்டு மறைந்து போய்விடால் காப்பாற்றப்பட வேண்டியது முக்கியமானதாகம் இவ்வாறு அவர் கூறியுள்ளார் .




கலிங்கு பற்றிக்கூறும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள வாசகம்

ஸ்வஸ்தி ஸ்ரீசாலிசாகன சகாப்தஹாளூ 1759

கலியாப்தஹா ளூ4938யிதில் நிகழ்கி

ன்ற யோவிளப் ளூசித்திரை மீ 17 உகுருவா

ரம் உத்டதிராடங்கூடிய சுபதினத்தில் அரியலூர் மஹா

றாசறாச ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவறாயதுரை அவ

ர்கள் குமாரர் விசைய ஒப்பிலாத மழவறாயதுரை அவ

ர்களால் யிந்த கலுங்கு தர்மஞ் செய்யலாச்சது .


(ஸ்வஸ்தி ஸ்ரீசாலிசாகன சகாப்தஹாளூ 1759 கலியாப்தஹா ளூ4938யிதில் நிகழ்கின்ற யோவிளப் ளூசித்திரை மீ 17 உகுருவாரம் உத்டதிராடங்கூடிய சுபதினத்தில் அரியலூர் மஹாறாசறாச ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவறாயதுரை அவர்கள் குமாரர் விசைய ஒப்பிலாத மழவறாயதுரை அவர்களால் யிந்த கலுங்கு தர்மஞ் செய்யலாச்சது .)

22-08-06 தினமலர் பக்கம் 7 
என்னார்
rethinavelu.n@gmail.com

www.ennar.blogspot.com

No comments: