ஐயப்பன் கதை -அய்யனார் மற்றும் பதினெட்டுப் படிக் கருப்பன்


 thanks to http://manakkumural.blogspot.com/2011/01/blog-post_11.html

எத்தனையோ முறை சொல்லிச் சலித்தாயிற்று இருந்தாலும் நான் சொல்லியே தீரவேண்டும். ஐயப்பன் கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். அதில் வரலாற்றுத் திரிபு ஒன்று என்னால் கண்டறியப் பட்டது.(Anachronism). 

பந்தள ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் என்பது கதை. இந்தப் பந்தள வம்சம் மதுரை மன்னர்களின் வழித் தோன்றல்கள். இதை தற்போது இருக்கும் பந்தள வாரிசு ஒப்புக் கொண்டு தமிழ் வார இதழுக்குப் பேட்டியும் தந்து இருக்கிறார். பந்தள வம்சத்தின் முக்கியக் கடவுள் மதுரை மீனாட்சி அம்மன். இதையும் அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் அய்யப்பனுக்குச் செய்யும் சடங்கிற்கு மதுரையில் இருந்து சீர் செல்கிறது. இதுவும் அவரது பேட்டியில் இருக்கிறது. சரி இப்போது அதற்கு என்ன? இன்னும் தமிழக கிராமப் புறத்தில் வணங்கப்படும் அய்யனார் மற்றும் பதினெட்டுப் படிக் கருப்பன் தான் ஐயப்பன் என்பது புலனாகின்றாதா?
ஐயப்பன் என்பது தமிழக நாட்டுப்புறக் கடவுளின் தாக்கம் தான் என்று உறுதியாகக் கூறலாம்.

சரி Anachronism  என்றால் என்ன ?
வரலாற்றில் முன்னுக்குப்பின் முரணாக நடந்தவைகளை மாற்றிச் சொல்வது. அதாவது ராஜ ராஜ சோழனும் சேரன் செங்குட்டுவனும் சேர்ந்து கல்லணை கட்டினார்கள் என்பது போல.

சரி இங்கே எது Anachronism? 
ஐயப்பன் கடவுளர்களின் மகன் அதாவது சிவனுக்கும் விஷ்ணுவிற்கும் பிறந்தவர். (HOMOSEXUAL அல்ல) அந்தக் கட்டுக் கதையை இப்போது சொல்லவில்லை. ஐயப்பனின் நண்பர் வாவர் என்னும் முஸ்லிம்.

இந்தியாவிற்கு ஏழாம் நூற்றாண்டில் தான் முஸ்லிம் வணிகர்கள் கேரளா  வருகிறார்கள். அதன் பின் எப்படியோ முஸ்லிம் மக்கள் பெருகி வாவர் என்பவர் படை உருவாக்குகிறார். சரி அதை எல்லாம் விடுங்கள். ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு கடவுளின் மகனும் ஒரு முஸ்லிம் படைத்தலைவனும் மோதிக்கொண்டு சமாதானமாகி நண்பர்கள் ஆகிறார்கள். ஏழாம் நூற்றாண்டு என்பது வரலாற்றுக்கு உட்பட்ட காலம். இதை ஏன் இந்திய வரலாற்று அறிஞர்களால் கண்டு கொள்ள முடியவில்லை?

No comments: