ஜல்லிக்கட்டு

0 c

S.Ramakrishnan
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எனது நண்பர் ராம்நாராயண் எனும் ராம்ஜி ஹோம்டிவி என்ற நியூடெல்லியில் உள்ள தொலைக்காட்சி நிறுவனத்திற்காக ஜல்லிகட்டு பற்றிய ஆவணப்படம் ஒன்றினை இயக்க முனைந்தார். அப்போது நான் அவருடைய அறைத்தோழனாக இருந்தேன்.
ராம்ஜி பூனா திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறையில் பயின்றவர். இன்று தொலைக்காட்சி தொடர்கள், விவாத நிகழ்வுகள் என்று விஜய் டிவி உள்ளிட்ட பல சேனல்களில் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது முதல் ஆவணப்படமது என்பதால் நாங்கள் சிறிய குழுவாக செயல்பட்டு அதை சிறப்பாக உருவாக்கலாம் என்று முனைந்தோம்.
பிசினஸ் இந்தியா இதழில் பணியாற்றும் புகைப்படக்கலைஞரான ரமேஷ், சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்ற மணிஸ்ரீதர், பூனாவில் ஒலிப்பதிவு படித்த இளங்கோ, ராம்ஜியோடு பூனாவில் ஒளிப்பதிவு துறையில் பயின்ற சசிகாந்த் என்று திறமையான தொழில்நுட்பக்குழு ஒன்று சேர்ந்தது. எதையாவது செய்து சாதித்து காட்ட வேண்டும் என்ற பொறி யாவருக்குள்ளும் இருந்தது. அதற்கான முன்திட்டமிடல், நேரடி ஆய்வு என்று செயல்படத்துவங்கினோம்.
நான் அந்த ஆவணப்படத்தின் ஆதார ஆய்வை மேற்கொண்டேன். 
அதற்காக மதுரையைச் சுற்றி ஜல்லிகட்டு நடைபெறும் இருபதிற்கும் மேற்பட்ட ஊர்களைப் பார்வையிட்டேன். நேரடியாக ஜல்லிகட்டு மாடு வளர்ப்பவர்கள், மாடுபிடிப்பவர்கள், கோவில் சடங்குகள், ஜல்லிகட்டு பற்றிய கதைகள், நம்பிக்கைகள்,கிராமத்து மக்களின் நினைவுகள் என்று சேகரித்து கொண்டிருந்தேன். அது  வளர்ந்து  ஆயிரம்பக்கமுள்ள பெரிய புத்தகம் எழுதுமளவு சேர்ந்து போனது. அதில் இருந்து முக்கிய விபரங்களாகத் தேர்வு செய்து தொகுத்துக் கொண்டேன்.
தமிழ் அறியாத வேறுமாநில மக்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி விளக்கிச் சொல்ல இருக்கிறோம் என்பதே எங்களின் பிரதான குறிக்கோள். அந்த முனைப்பிலே ஆவணப்படம் பெரிதும் உருவாக்கபட்டது. அதே நேரம் மிக ஆதாரப்பூர்வமான தகவல்கள்,நேர்காணல்கள் இடம்பெற வேண்டும் என்றும் விரும்பினோம்.
ஜல்லிக்கட்டு என்ற விளையாட்டின் பின்னால் தென்மாவட்ட கிராமப்புறக் கலாச்சாரத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருக்கிறது என்று  அந்த நாட்களில் தான் முழுமையாகப் புரிந்தது.
ஜல்லிகட்டு மாடு வளர்க்கபடுவதே ஒரு கலை. அந்த மாட்டை ராணுவத்திற்கு தயார் செய்யும் நபரைப் போல பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள். பச்சரிசி ஆட்டி உண்ணத் தருகிறார்கள். தினசரி குளியல், நடை, சீற்றம் பாய்வது என்று மாடு கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்யப்படுவது ஒரு அரிய கலை.
மாடு அதை வளர்ப்பவனின் குணத்தினையே பெரிதும் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டில் அது போன்ற மாடுகளை யார் வளர்க்கிறார் என்று அறிந்தே அதன் பாய்ச்சலைத் தெரிந்து கொள்கிறார்கள். சில மாடுகள் லேசாகச் சீண்டினால் உடனே பாய்ந்துவிடக்கூடியவை.ஆனால் சில மாடுகளோ சலனமேயில்லாமல் நின்று பார்த்தபடியே இருக்கும். நெருங்கிவந்து பாயும் போது மட்டுமே சீற்றம் கொள்ளும். இன்னும் ஒரு சில மாடுகள் பயங்கரமாக துள்ளி ஆடித் தெறிக்கும். ஆனால் பிடிபோட்டவுடன் பசு போல அடங்கிப் போய்விடும். அது போன்ற மாடுகளைக் கேலி செய்வார்கள். இது போலவே மாடுகளுக்கு ஊர்வாகும் சேர்ந்தேயிருக்கிறது.
சில ஊர் மாடுகள் இயல்பிலே சற்று முறைப்பு கொண்டேயிருக்கின்றன. சிறாவயல் ஜல்லிகட்டில் ஒரு மாட்டினைக் கண்டேன். அது ஒரு கண் இல்லாத மாடு. வயதும் அதிகமானது போலிருந்தது. அடங்கிய கொம்புகள், காய்ந்து உலர்ந்த குளம்புகள். குறைந்த மயிர் கொண்ட வால், நெற்றிமேடு துருத்திக் கொண்டிருந்தது. அந்த மாடு நின்றவாகு ஒரு சாமுராய் வீரன் நிற்பதை போல கம்பீரமாகவே இருந்தது. அதன் பார்வையில் சலனமேயில்லை. அது ஒற்றைக் கண்ணால் பார்த்தபடியே நிற்கிறது. அதன் சீற்றம் பெருமூச்சென எழுவதும் அடங்குவதுமாக இருந்தது.
விடைத்த காதுகள் எழும்பி நின்றன. மாட்டின் கால் நுனி பாயத் தயாராக நிற்கிறது. அதன் உடலில் யாரோ மஞ்சள் பூசியிருக்கிறார் என்பது போல லேசாக ஒரு திட்டு படிந்திருந்தது.  அது தன்னை பின்னால் இருந்து யாரும் வந்து பிடித்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தது. ஆகவே பின்னால் நடந்து வரும் அரவம் கேட்டாலே அது சட்டென சுழித்துத் திரும்பி விடுகிறது. அது போலவே மாட்டின் இருள் அடைந்து போன கண் பக்கம் ஆள் வரும் போது அது தன்னை அவமதிக்கிறான் என்பது போலத் தலையை சாய்ந்துக் கொண்டு பார்க்கிறது.
முப்பது வயதுள்ள ஒரு மனிதன்  அதை லாவகமாகப் பிடிக்க பதுங்கிப் பதுங்கி போகிறான். அரங்கம் அவனை வேடிக்கை பார்க்கிறது.காக்கிடவுசரும் வெற்றுடம்புமாக அவன் ஒட்டப்பந்தய வீரன் துப்பாக்கி சப்தத்திற்கு காத்திருப்பது போல விறைப்பாக நிற்கிறான். அவன்  தொடும் தூரத்தில் போய் நிற்கும் வரை மாடு சலனமற்று  நின்றபடியே இருந்தது.
அவன் மாட்டின் கண்களை ஊடுருவிப் பார்க்கிறான். அது இன்னமும் களைத்துப் போகவில்லை என்பது தெரிகிறது. அதை ஒடவிட்டு களைத்துப் போக விட வேண்டும் என்பது போல சீண்டுகிறான். அது பாயத்தயாராகிறதே அன்றி ஒட மறுக்கிறது. அவன் விடவில்லை. அதன் வால்பக்கம் போய்ச் சீண்டுகிறான். அப்போதும் அது காலால் புழுதியை பறக்கவிடுகிறது. கொம்பை ஆட்டித் துள்ளுகிறது. ஆனால் ஒடவில்லை.
அவன் விடவில்லை. மாட்டின் மீது பாய்வது போல பொய்பாய்ச்சல் காட்டுகிறான். மாடு ஆவேசம் கொள்கிறது. ஆனால்  அவன் தப்பிவிடுகிறான். இந்த நாடகம் அதன் உச்சத்தை அடைகிறது. மாடு இப்போது அவன் தன்னை ஏன் பாய்ந்து அடக்க மறுக்கிறான் என்பது போல குமுறுகிறது. அவன் அதன் கொம்புகளைப் பார்த்தபடியே நிற்கிறான். அதன் கண்களில் வெறுமை தென்படுகிறது.
அவன் மாட்டின் இரண்டு கொம்புகளுக்கு நடுவில் பாய்கிறான். அவன் கைகளில் மாட்டின் கொம்பு சிக்கிக் கொள்கிறது. மாடு திமிறுகிறது. அவன் கால்கள் இழுபடுகிறது. மாடு ஒடத்துவங்குகிறது. அவன் அதை எதிர்பார்த்தவன் போல ஒலமிடுகிறான். அது அவனை இழுத்துக் கொண்டு ஒடி உதற எத்தனிக்கிறது. அவன் விடவேயில்லை. மாடு தரையில் அவனை போட்டு தேய்த்துவிட முயற்சிப்பது போல  முயற்சிக்கிறது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. மாடு ஆவேசம் அடங்காமல் இழுக்கிறது. அவன் மாட்டின் கொம்புகளைத் திருக்குகிறான்.
மாட்டின் கண்கள் மேலோங்குகின்றன. அவன் கால்கள் மாட்டின் அடிவயிற்றுள் போய் பிணைந்து கொண்டது போலிருக்கிறது. மாடு துள்ளுகிறது. அவன் கொம்பை விடவேயில்லை. மாடு தன் இயலாமையை உணர்ந்து கொண்டதைப் போல மெல்ல சீற்றம் அடங்குகிறது. மாட்டின் குதம் வெளியே தள்ளுகிறது. அவன் மாட்டின் கொம்பின் பிடியை மேலும் இறுக்குகிறான். அது தடுமாறுவது போல சுழல்கிறது.
மாட்டினை அவன் வீழ்த்திவிட்டதாக நினைக்கிறான். வெற்றி அவன் கண்களுக்கு தெரிகிறது. அவன் மெல்ல தன்பிடியைத் தளர்த்துகிறான். இதற்காகவே காத்திருந்தது போல அந்த மாடு ஆவேசமாக சீறித் துள்ளுகிறது. அவன் நிலைதடுமாறுகிறான். மறுபடி பிடி வலுவாக கிட்டவில்லை. அவன் தடுமாறி கிழே விழுகிறான். கூட்டம் கத்துகிறது. மாடு புழுதி எழும்ப அவனை தூக்கி மேலே வீசுகிறது. அவன் பறக்கிறான். தரையை அவன் தொடும்முன்பாக மாடு மறுபடியும் தாக்க கொம்பை முட்டுகிறது. அவன் புரள்கிறான். ஒரு குத்து விழுகிறது. அவன் எழுந்து கொள்ள முயன்று முடியாமல் புரள்கிறான். அதற்குள் தொலைவிலிருந்து நாலைந்து பேர் அவனைக் காப்பாற்ற ஒடிவருகிறார்கள்.
மாடு கிழே விழுந்துகிடந்தவன் அருகே போகிறது. அவன் பூமியில் விழுந்து கிடக்கிறான். அவனது அரைடவுசர் கிழிந்து புழுதியோடு விதைக்கொட்டைகள் வெளியே தெரிகின்றன. அவன் வயிற்றை மாடு குத்திகிழிக்கப் போகிறது குடல் சரிய அவன் சாகப்போகிறான் என்றே கூட்டம் நினைத்தது.
ஆனால் அந்த மாடு விழுந்துகிடந்தவனின் முன்பு வந்து ஒரு சுற்றுசுற்றிவிட்டு நின்று கொண்டது. அவன் விழுந்துகிடந்தபடியே மாட்டையேப் பார்த்து கொண்டிருந்தான். யாரும் மாட்டை நெருங்க முடியவில்லை. பிறகு மாடு தானாக விலகி சற்றுத் தள்ளிப்போய்நின்று கொண்டது. நாலைந்து பேர் பாய்ந்து அவனைத் தூக்கினார்கள். அவன் மைதானத்தில் இருந்துவெளியேறி போகும்வரை அந்த மாட்டையே பார்த்து கொண்டேயிருந்தான்.  அவனது குருதி வழிந்து மணலில் உறைந்து போயிருந்தது. அந்த மாட்டை மூன்று பேர் சேர்ந்து பிடித்து அடக்கினார்கள். அவ்வளவு ஆவேசமான பொருந்துதலை என் வாழ்வில் அன்று தான் கண்டேன்.
அவன் பல வருசமாக அந்த மாட்டைப் பிடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறான் என்றும் இன்று ஒரு பழைய கணக்கு தீரக்கபட்டிருக்கிறது என்றும் உள்ளுர் பூசாரி சொன்னார். என்னால் நம்பவேமுடியவில்லை. தன்னை பலமுறை வென்ற மனிதனை ஏன் மாடு குடலை கிழிக்காமல் வெளியே விட்டது ? என்ன உறவு அது. அந்த மாட்டினை அந்த மனிதன் மிகவும் நேசித்தான் என்கிறார்கள்.  அவன் ஜல்லிகட்டில் பிற மாடுகளைப் பிடிப்பதை விட இதற்காகவே வருகிறான் என்றும் அவனது ஊர் சிங்கம்புணரி என்றும் சொன்னார்கள். அவன் என்ன வேலை செய்கிறான் என்று கேட்டேன்.
ரிசர்வ் போலீஸில் வேலை செய்கிறான் என்றார்கள். ஜல்லிகட்டில் பெரும்பான்மை மாடுபிடிப்பவர்கள் காவல்துறையில் வேலை செய்யும் இளைஞர்களே. அந்த மாட்டின் ஒரு கண் போனபிறகும் அதை எப்படி ஜல்லிகட்டில் அனுமதிக்கிறார்கள் என்று கேட்டேன். அதை வளர்ப்பவர் ஒரு சாராயவியாபாரி என்றும், அந்த மாட்டினை அவரது வீட்டு பெண்கள் தான் தயார்படுத்தினார்கள் என்றும்  சொன்னார்கள்.
ஜல்லிக்கட்டிற்கு மாடு கொண்டுவரும்போது மட்டுமே அதை லாரியில் ஏற்றிக் கொண்டுவருகிறார்கள். ஜல்லிகட்டு முடிந்தபிறகு அந்த மாடு தன் வீட்டினைத் தேடி தானே போய்விடுகிறது. எனக்கு அந்த மாட்டின் வீட்டிற்குப் போய் காண வேண்டும் போலிருந்தது. மறுநாள் சிங்கம்புணரியில் உள்ள அந்த மாட்டின் உரிமையாளர் வீட்டிற்குப் போயிருந்தேன்.
அதே மாடு தொழுவத்தில் நின்றிருந்தது. மாடு ஜல்லிகட்டில் இருந்து வந்தவுடன் அதற்கு மஞ்சள் பத்து போட்டு விசேசமாக அரைக்கபட்ட தானியங்கள், அரிசி அரைத்த கலவை கலந்த உணவை தந்திருக்கிறார்கள். நேற்று பார்த்த அந்த ஆவேசம் இன்று மாட்டிடம் இல்லை. அது தளர்ந்திருந்தது. அடுத்த வருசம் அதை அனுப்பமுடியுமா என்று தெரியவில்லை.  இந்த வருசமே சண்டை போட்டு தான் அதை சேர்த்தேன் என்றார் உரிமையாளர்.
அந்த மாட்டினை ஜெயித்த ஆளைப் பற்றி கேட்டேன். அவன் பலமுறை இந்த மாட்டினை அடக்கியிருக்கிறான். தோற்றுபோய் திரும்பும் மாடுகள் சில நாட்களுக்கு ஒடுங்கியே இருக்கும். வீட்டுப் பெண்கள் அதை கடுமையாக திட்டுவார்கள். மாட்டிற்கு அது புரியவே செய்கிறது என்றார். மாட்டின் கண்களில் முந்திய நாளின் ரௌத்திரமில்லை. அது ஈரம் ததும்பியிருந்தது. அதை அடக்க முயன்று காயம்பட்டவன் மருத்துவமனையில் சேர்க்கபட்டிருந்தான். அது ஒரு பந்தம். மாடுகளுக்கும் இது விளையாட்டு என்று தெரியும் என்றாள் வீட்டுப்பெண்மணி.
சிங்கம்புணரி கோவிலில் கூட ஜல்லிகட்டு மாடுகள் உள்ளன. அந்த மாடுகளை ஜல்லிகட்டில் யாரும் பிடிக்க கூடாது என்பது ஜதீகம். அவை பந்தயத்தின் முதலாக அனுப்படுகின்றன.கோவில் அருகாமையிலே அம்மாடுகள் வளர்க்கபடுகின்றன. 
ஜல்லிகட்டு பார்க்க ஒன்று போல இருந்தாலும் ஒவ்வொரு ஊருக்கும் அது ஒருவிதமாகவே நடக்கிறது. பொதுவிதிகள் ஒன்று போலவே இருக்கின்றன. வெற்றி தோல்வி குறித்து அரிதாகவே சர்ச்சைகள் வருகின்றன. சாதீயம் சார்ந்த கொந்தளிப்புகளும் இதன் பின்புலத்தில் இருக்கவே செய்கின்றன.
அலங்காநல்லூரில் பார்க்கும் ஜல்லிகட்டு ஒரு சர்க்கஸ் போல மாறியிருக்கிறது. ஆனால் கொடிக்குளம், சிறாவயல், பாலமேடு, கண்டுபட்டி, வேந்தன்பட்டி, அவனியாபுரம், மேட்டுபட்டி என்று மதுரை சிவகங்கை புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் ஜல்லிகட்டுகள் வேறுவிதமானவை. ஜல்லிகட்டில் இரண்டுவிதமாக உள்ளது. ஒன்று வாடிவாசல் கொண்டது.அதில் மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக திறந்துவிடப்படுகின்றன. மற்றது வெளிவிரட்டு எனப்படும் திறந்தவவெளியில் மாடுகள் அவிழ்த்துவிடப்படுவது. இந்தவகையில் மாடு எந்தப் பக்கம் இருந்து வரும். யாரைத் தூக்கும் என்று தெரியாது. அந்த இடம் ஒரு போர்களம் போலிருக்கும்.
நாங்கள் இப்படியான ஒரு வெளிவிரட்டினைப் படம்பிடிக்க முனைந்தோம். அதற்காக மூன்றுகேமிராகள் பயன்படுத்தபட்டது. அதில் ஒரு கேமிராவை கையாண்டவர் ராஜிவ் மேனனின் உதவியாளராக இருந்த ராஜசேகர். இன்று அவர் காக்க காக்க உள்ளிட்ட பல கௌதம் மேனன் படங்களில் ஒளிப்பதிவு செய்து திரைப்படத்துறையில் மிக முக்கிய ஒளிப்பதிவாளராக உயர்ந்து நிற்கிறார். அவர் ஒரு வேனின் மீது நின்றபடியே படமாக்கிக் கொண்டிருந்தார்.
இன்னொரு கேமிரா ஒரு மேடை மீதிருந்தது. அதை ரமணி படமாக்கிக் கொண்டிருந்தார். மூன்றாவது கேமிராவை கையில் வைத்து கொண்டு சசிகாந்த் மாடுகளின் நடுவில் ஒடிக் கொண்டிருந்தார். நாங்கள் ஒரு வேன்மீது நின்றபடியே எந்தப் பக்கம் எந்த மாடு வருகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தோம். எதிர்பாராமல் பாய்ந்து வந்த ஒரு முரட்டு மாடு ஒன்று ராஜசேகர் நின்றிருந்த வேன் மீது மோதியது. அவர் தூக்கி எறியப்படுகிறார் என்று  நினைத்தோம். அப்போதும் கூட அவர் படப்பிடிப்பை நிறுத்தவேயில்லை. அவர் நிலைதடுமாறி தன்னை சுதாரித்து கொண்டுவிட்டார். ஆனால் ஒரு அற்புதமான காட்சி கேமிராவில் பதிவாகியிருந்தது.
மதுரையை சுற்றிலும்  ஒரு மாத காலத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடந்தது. அதை நேர்த்தியான ஒரு ஆவணப்படமாக  எடிட் செய்து பின்னணி இசை சேர்த்து ஜல்லிகட்டு குறித்த வீரபாண்டிய கட்டபொம்மன் படக்காட்சியும் இணைத்து. எம்.ஜி.ஆர் படங்களில் காணப்படும் ஜல்லிகட்டு முரட்டுகாளையில் வரும் ஜல்லிகட்டு என்று சிறிய காட்சிகள் ஒன்றிணைக்கபட்டு ஒரு மணி நேர அளவில் உருவாக்கபட்டது. அந்த ஆவணப்படம் தேசிய அளவில் தொலைக்காட்சியில் பலமுறை ஒளிபரப்பபட்டு மிக பெரிய வரவேற்பையும் விருதுகளையும் பெற்றுத் தந்தது. 
அப்போது ஜல்லிகட்டு குறித்து விரிவாக எழுதலாம் என்று நினைத்து நிறையக் குறிப்புகள், புகைப்படங்கள் யாவும் சேகரித்து வைத்திருந்தேன். பின்னாளில் வீடு மாறும்போது அவை காணாமல் போய்விட்டன. அந்த நாட்களும் மனதின் ஆழத்தில் போய் புதையுண்டுவிட்டிருந்தது.
ஜல்லிகட்டு பற்றி தமிழில் அருமையான ஒரு நாவல் வந்துள்ளது. அது சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல். 1950களில் செல்லப்பா நேரடியாக பல ஜல்லிகட்டுகளைப் பார்த்து தானே புகைப்படம் எடுத்திருக்கிறார். அவர் எவ்வளவு தேர்ந்த புகைப்படக்கலைஞர் என்பதற்கு அவர் எடுத்த ஜல்லிகட்டு புகைப்படங்களே சாட்சி. ஹெமிங்வே ஸ்பானிய காளைச் சண்டையைப் பற்றி எழுதிய குறுநாவலை தோற்காதவன் என்ற பெயரில் செல்லப்பா தனது எழுத்து இலக்கியஇதழில் வெளியிட்டிருக்கிறார்.
அது போல தனது ஜல்லிகட்டு அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்டு வாடிவாசலை எழுதியிருக்கிறார். உண்மையான காளைச்சண்டையைக் காண்பது போன்ற அற்புதமான எழுத்துமுறை கொண்டது. தற்போது அதன் புதிய பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சி.சு. செல்லப்பாத் தவிர வேறு நவீன எழுத்தாளர்கள் எவரும் ஜல்லிக்கட்டு பற்றி தனித்து எழுதியதாகத் தெரியவில்லை.
இன்றும் ஜல்லிகட்டு நடந்தக்கூடாதென்று நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. வாதபிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. ஜீவகாருண்ய நிறுவனங்கள் போராடுகின்றன. ஆனால் இந்த விளையாட்டின் பின்உள்ள மனப்போக்கும், மாடுகளைச் சண்டைகளுக்குத் தயார் படுத்தும் விதமும் அதன் தொன்மையான நினைவுகளும் இது வெறும் வெறியூட்டும் விளையாட்டில்லை என்றே என்னை உணர வைத்துள்ளது.
அதே நேரம் வெளிநாட்டவருக்கான கண்காட்சிப் பொருள் போல ஜல்லிகட்டு உருமாற்றபட்டு ஸ்பான்சர்களின் மூலம் அது காட்சிசண்டையாக நடைபெறுவதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஸ்பெனியில் இன்றும் காளைச் சண்டைகள் நடக்கின்றன.  குதிரை பந்தய ரேஸ் உலகெங்கும் நடந்தபடியே தானிருக்கிறது. நாய்களைப் பழக்கி சண்டையிடுவது அலாஸ்காவில் காணப்படுகிறது. இவை முறைப்படுத்தபட்டிருக்கின்றன. மிருகங்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் குறித்த அக்கறைகள் முறையாக மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் படுகின்றன. ஆனால் நம்மிடையே அதற்கான முயற்சிகள் குறைவாகவே உள்ளன. எல்லா வீரக்கலைகளும் போலவே தான் ஜல்லிகட்டும். அதில் மாடுகள் கொல்லப்படுவதில்லை.
மாடு நுரை தள்ளிவிட்டால் உடனே நிறுத்தும்படியாக அறிவிப்பு வந்துவிடுகிறது. அது போல அந்த மாடுகளைப் பிடிக்க முயற்சிக்கின்றவர்கள்  பரிசுப்பணத்தின் காரணமாக போட்டியில் கலந்து கொள்வதில்லை. அது தரும் சாகச உணர்வையே பெரிதாக நினைக்கிறார்கள்.
ஜல்லிகட்டு என்ற விளையாட்டின் பின்னால் சொல்லித்தீராத கதைகள் புதைந்திருக்கின்றன. தன் இளம்பிராயத்தில் பிடித்த மாடு ஒன்றினைப் பற்றி பாலமேட்டில் ஒரு பெரியவர் சொல்லும் போது அவரது கண்களில் அந்த நாளின் வெளிச்சம் பீறிட்டது. அவர் தன் சட்டையை அவிழ்த்து தனது அடிவயிற்றை  காட்டினார். அங்கே ஒரு விரல்நீள தழும்பு இருந்தது. மாடு கிழித்தது என்று சொல்லியபடியே. ரத்தம் ரொம்ப ஒழுகி எனக்கு கண்ணைக் கட்டிகிட்டு வந்துச்சி. ஆனாலும் நான் பிடியை விடவேயில்லை. கடைசியில் நான் தான் ஜெயிச்சேன் என்றார்.
அதற்கு பரிசாக என்ன கிடைத்தது  என்று கேட்டேன். அவர்  ஒரு ரூபா என்று பெருமையாக சொன்னார். ஒரு ரூபாய்க்காக உயிரோடு போராடியிருக்கிறீர்களே என்றேன். அப்பிடியில்லை தம்பி. நம்ம உடம்பு எம்புட்டுக் கெதியா இருக்குனு எப்படி தெரிஞ்சிகிடுறது. மாட்டை பிடிச்சி பார்த்தா நம்ம உடம்பு எப்படியிருக்குனு தானா தெரிஞ்சிகிடலாம். என்று சொல்லிச் சிரித்தார்.
அந்த நினைவுகளைத் தொடரும்படியாக சொன்னேன்.அவர் பெருமூச்சிட்டபடியே சொன்னார்
அந்த வருசம் மாடுபிடிச்ச ராமு ஆள் எப்படியிருப்பான் தெரியுமா. உலக்கை மாதிரி உறுதியான உடம்பு. மாட்டை பிடிச்சான்னா உடும்பு மாதிரி விடவே மாட்டான். அவனை பாத்தா மாடுகள் பயப்படும். எங்கே போனாலும் ஜெயம் தான். ரெண்டு பேரும் ஒண்ணா தான் சுத்துவோம்.
இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் ராமுவைப் பாத்தேன். பெத்தபிள்ளைகளே வேண்டாம்னு துரத்தி விட்டுட்டாங்களாம். குடல்புண்ணாகி சிகிட்சை பண்ணிகிட்டு இருந்தான். உடம்பு ஈர்க்குச்சி மாதிரி இருந்துச்சி. தலைமயிர் கொட்டி போய் சிரட்டை மாதிரி தலை துருத்திகிட்டு இருந்துச்சி. என் மனசு கேட்கலை. பக்கத்தில போயி என்னய்யா ராமு இப்படியிருக்கேனு கேட்டேன்.
அவனுக்கு என்னை அடையாளம் தெரியலை. அவன் வயிற்றில பதினெட்டு தையல் போட்டு இருக்கு. அதை காட்டி நாம ஒண்ணா மாடு பிடிச்சமே என்று சொன்னேன். அவன் பதிலே பேசவில்லை. பச்சைப்பிள்ளை போல பொலபொலனு அழ ஆரம்பிச்சிட்டான்.  எனக்கும் தாங்கமுடியவில்லை.
அன்னைக்கு பூரா அந்தக் காலத்தில நடந்த ஜல்லிக்கட்டு ஒவ்வொன்னா பேசிகிட்டு இருந்தோம். இப்போ அவன் செத்துப் போயிட்டான். ஆனா வருசம் வருசம் நானும் ஜல்லிகட்டு போய் பாக்குறேன். அப்படி ஒரு பய இன்னும் வரவேயில்லே. என்றார். அந்த நினைவுகள் வெறும் கடந்தகால சுவடுகள் மட்டுமில்லை. அது ஒரு தீராத வலி. மறக்கமுடியாத இழப்பு என்று உணர முடிந்தது.
சில தினங்களுக்கு முன்பு எதையோ தேடிக் கொண்டிருந்தபோது ஜல்லிகட்டு நிகழ்விற்காக அலைந்த நாட்களின் ஒரு பழைய புகைப்படம் கையில் கிடைத்தது. அதை வைத்து பார்த்தபடியே இருந்தேன். காலம் எவ்வளவு வேகமானது. எவ்வளவு கடந்து போயிருக்கிறது. இன்று அந்த புகைப்படத்தில் உள்ள நாங்கள் யாவரும் ஏதேதோ துறைகளில் இருக்கிறோம். அவரவர் அளவில் சாதித்திருக்கிறோம். நாங்கள்  இப்போதும் சந்தித்துக் கொள்வதுண்டு. தொலைபேசியில் பேசிக் கொள்வதுண்டு. ஆனால் அன்றிருந்த நெருக்கம் இன்றில்லை. அந்த ஆவணப்பட நிகழ்வு ஒவ்வொரு மனதிலும் ஒரு பிம்பமாக பதிந்து போயிருக்க கூடும்.
இந்த புகைப்படத்தை பார்த்த போது ஜல்லிக்கட்டு பற்றி எழுதாமல் விட்டதை மறுபடி தொடர வேண்டும் என்று மனது ஏக்கம் கொள்ளத் துவங்கியது. கணிப்பொறியில் சேகரித்து வைத்திருந்த செல்லப்பாவின் ஜல்லிக்கட்டு புகைப்படங்கள் ஒன்றிரண்டை தேடி எடுத்து பார்த்து கொண்டிருந்தேன். எப்போதும் எழுத நினைப்பது தரும் வசீகரம் எழுதிய எந்த படைப்பிலும் இருப்பதேயில்லை.
காலத்தின் போக்கில் மனதில் உறங்கிகிடந்த ஜல்லிக்கட்டின் நினைவுகள் பீறிடுகின்றன. காளையின் மூச்சு சீறும் சப்தம் நினைவு அடுக்குகளில் கேட்க துவங்கியுள்ளது. இசை, நடனம் நாடகம், வீரவிளையாட்டுகள், நுண்கலைகள் என தமிழின் மரபுக்கலைகள் சார்ந்த நவீன சிறுகதைகள், கட்டுரைகள், நினைவலைகள் என யாவையும் ஏன் தொகுத்து ஒரே தொகுதியாக கொண்டுவரக்கூடாது என்றும் எண்ணம் உருவாகி உள்ளது.
ஒற்றைக்கண் கொண்ட அந்தக் காளையின் மனஇயல்பு இன்றைக்கும் வியப்பூட்டிக் கொண்டேதானிருக்கிறது. ஜல்லிகட்டின் பின்னால் இது போன்ற புதிர்மைகள் நிறையவே இருக்கின்றன. அதற்காகவே அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டியிருக்கிறது.
 thanks to 
http://sramakrishnan.com/view.asp?id=445&PS=1

இராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்

0 c
இராஜராஜனின் ஒரு மெய்க்கீர்த்தி இவ்வாறு கூறுகிறது:
ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்

இதன் மூலம் இராஜராஜனின் போர்த்திறன் வெளிப்படுகிறது. காந்தளூர் என்னும் துறைமுகத்தில் சேரர்களின் (பாஸ்கர் ரவி வர்மன் திருவடி) கப்பல்களை அழித்ததாகக் குறிப்பிடும் இவ்வரிகளிலிருந்து, சோழ கப்பற்படை நன்கே இருந்தது எனக் கொள்ள்லாம். அதே போல ஸ்ரீலங்காவின் மீது 993(கி.பி)-ஆம் ஆண்டில் படையெடுத்து அதன் வடபுறத்தினைக் கைப்பற்றி அந்த இடத்திற்கு ‘மும்முடி சோழ மண்டலம்’ எனப் பெயரிட்டதும், இராஜராஜனின் கடற்படைத் திறனைக் காட்டுகிறது. தனது ஆட்சிக் காலத்திலேயே ஸ்ரீலங்கவை முழுவதுமாக வென்று, பின்னர் வெங்கி நாட்டையும் தனதாக்கிக் கொண்டு அதைச் சக்திவர்மனுக்கு ஆட்சி புரிய அளித்தான். கடற்படையில் சிறந்திருந்த போதும், இராஜராஜன், அப்படையை எந்நாட்டையும் அழிக்கப் பயன்படுத்தவில்லை.
சைலேந்திரர்களுடன் அவனது உறவு குறிப்பிடப்படவேண்டியது. ஏனெனில் சரித்திரரீதியாக நாம் அறிந்து கொள்வதெல்லாம் சைலேந்திரர்கள் குறிப்புகள் மூலமே! சுமத்ராவிலும் இன்றைய மலேசியாவிலுமிருந்து தான் நமக்கு அதிகமான சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்தே, அதாவது, அவை அங்கு கிடைப்பதிலிருந்தே, இராஜராஜனின் பெருமை அறியப்படலாம். அங்கு கிடைக்கும் பல சான்றுகளினின்றும் சைலேந்திர நாட்டு சூளாமணிவர்மன் அவனது மகனான விஜயோத்துங்கவர்மன் (1003-1005) ஆட்சியிலும் இராஜராஜனின் உறவு அந்நாட்டினுடன் மிக நன்றாகவே இருந்திருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்கிறோம். ராஜேந்திரன் காலத்தில் தான் கடற்படை ஆக்ரமிப்புக்குப் பயன் படுத்தப்பட்டது. இராஜராஜனின் கப்பல்கள் மாலத்தீவுக்குச் சென்று அங்கு 10,000 தீவுகளைக் கைப்பற்றியதாகவும் தெரிகிறது.
அதே போல சீன நாட்டிலிருந்தும் பல சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன.
the-model-of-the-chola-ship-rebuild-by-the-asi-naval-muesum-in-tirunelveliஇப்போது அதற்கான சான்றுகள் ஒன்றும் இல்லையெனினும், நாகபட்டினம்தான் சோழர்களின் முக்கியமான துறைமுகமாக இருந்தது. அப்போதைய சோழ நாட்டு மாலுமிகள் கடல்வழிப் பயணத்தை நன்கே அறிந்து வைத்திருந்தனர். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன்தான் அவர்களது கடல்வழிப் பயணம் ஆரம்பமாகும். தை மாத ஆரம்பத்தில் வடக்கிலிருந்து வங்காள விரிகுடாவில் கடல் நீரில் தெற்கு நோக்கி ஓட்டம் இருக்கும் அதைப் பயன்படுத்திக் கொண்டு, (அந்த நீரோட்டத்திற்கு வடக்கன் என்று பெயர்) கப்பல்கள் வெகு சுலபமாகத் தெற்கு நோக்கிப் பயணிக்கும். (ஆகையால் தான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழி உண்டானதாக நான் நம்புகிறேன்.) அப்படிச் செல்லும் கப்பல்கள் ஸ்ரீலங்காவின் கிழக்குக் கரையிலுள்ள அக்கரைபட்டினம் என்ற ஊரை அடையும். அப்போது காற்று கிழக்கு நோக்கி வீசும். அதைப் பயன்படுத்திக் கொண்டு கப்பல்கள் கிழக்குத் தீவுகளை அடையும். இதை நன்கு அறிந்திருந்தவர்கள் இராஜராஜ சோழன் காலத்து மாலுமிகள். இராஜேந்திரன் இந்தத் திறமையை சீர் செய்து இன்னும் கப்பல்கள் செல்வதைப் பெருக்கினான். ஆனால் அவ்வழிகளை அமைத்துக் கொடுத்தது இராஜராஜன்தான். அதற்கு முன்னர் கலிங்கர்களும், குஜராத்தியர்களும் அறிந்திருந்தனர்! இருந்தாலும் அதை முறையாகப் பயன்படுத்தியது இராஜராஜன்தான் என்றால் மிகையாகாது!
rajaraja-cholanதவிரவும் இராஜராஜன் காலத்தில்தான், வணிகக் குழுக்கள் கீழை நாடுகளுக்குச் சென்று தமது வணிகக் கூடங்களை நிறுவியது. அப்போது தான், பல நாடுகளினின்று வந்த வணிகர்களும்கூடி வணிகத்தை முழுமையாக பன்னாட்டு நிறுவனமாக மாற்றினர். ஆகையால், வணிகத்தை நாடு கடந்து சிறப்பாக நடப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்ததில் இராஜராஜனின் பங்கு அதிகம் இருந்தது எனக் கொள்ளலாம்.
முக்கியமாக, நாடு கடந்து அச்சமின்றி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நம் வணிகர்கள் தமது வணிகத்தை நிலைநிறுத்தினது மட்டுமன்றி, அரசு மாறினாலும் அதனால் அவர்களுக்கு ஒருவிதக் குறையுமின்றி வணிகம் நடத்துவதற்கு உண்டான உபாயங்களையும் செய்து கொடுத்த மன்னன் இராஜராஜன் என்று கூறலாம்!

thanks to http://www.tamilhindu.com/2010/08/rajaraja-cholans-power-in-sea-route-power/

தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா

0 c
ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்த 19-வது ஆண்டில் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைக் கட்டத் தொடங்கி 25வது ஆண்டின் 275-வது நாளில் கட்டி முடிக்கப்பட்டது (கி.பி. 1010) என்று வரலாறு கூறுகிறது. கிரானைட் கற்கள் இல்லாத இடத்தில் இவ்வளவு பெரிய ஆலயத்தை அமைத்தது ஒரு வியப்பு என்றாலும், இதன் கலைத்திறனும், வடிவமைப்பும், காலம் கடந்து நிற்கின்றன. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் தஞ்சைப் பெரிய கோயில் அறியப்பட்டிருக்கிறது. இக் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பது பற்றியும், இக் கோயிலின் பெருமை குறித்தும் அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனாலும், இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை நடத்த வேண்டும் என்கிற எண்ணம்கூட ஏன் மத்திய அரசுக்கு ஏற்படவில்லை? தஞ்சைப் பெரிய கோயில் வெறும் தமிழர் பெருமை மட்டும்தானா? இந்தியப் பெருமை இல்லையா! (தாஜ்மஹாலுக்கு 500-வது ஆண்டு என்றால் சும்மா இருக்குமா இந்திய அரசு?)தற்போது வெளியாகியுள்ள நிகழ்ச்சிநிரலைப் பார்க்கும்போது, ஆட்டம், கொண்டாட்டம் என்பதாகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும் கோயில் வளாகத்தில் பொது அரங்கமும் நடத்தி, முதல்வரின் பொதுக்கூட்டத்துடன் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. இது போதாது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த ஒரு கலைச் சின்னத்தின் பெருமையை இரு நாள் விழாவில் அடைத்துவிடக் கூடாது. இலங்கையிலும் இந்தோனேஷியாவிலும் ராஜராஜ சோழன் நிறுவிய கடல் கடந்த வெற்றிகள் என அந்தப் பேரரசனின் புகழை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழா ஒரு தொடர்ச்சியான திட்டத்தைக் கொண்டு அமைய வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் என்றால் மட்டுமே தமிழர் பெருமையை உலகம் அறியும். அதற்கான வாய்ப்பும் நேரமும் இதுதான்.ராஜராஜ சோழன் தனது அரசை பல பகுதிகளாகப் பிரித்து, நிர்வாகிகளை நியமித்து, சரியான கண்காணிப்பு மற்றும் வரிவசூல் முறைகளை ஏற்படுத்திய அரசன். கிராமங்களில்கூட தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் மக்களாட்சி முறைகண்ட சோழன். வேளாண் சாகுபடியை விரிவுபடுத்த ஊக்கப்படுத்தியும், அதன் நடுவே கோயிலையும், அந்தணர் குடியிருப்புகளுக்கு நிலம் வழங்கி அவர்களைக் குடியேற்றியும் கோயில், கல்வி ஆகியவற்றின் தொடர்பு அற்றுப்போகாமல் பார்த்துக்கொண்ட அரசன் ராஜராஜன்.ஐம்பொன் சிலைகள் மிக அழகாக, சரியான அளவுகளுடன் படைக்கப்பட்ட காலம் ராஜராஜ சோழன் காலத்தில்தான். இன்னும்கூட அந்தக் கோயிலின் பெருமையை முழுமையாகப் பார்த்துத் தெரிந்து கொண்டவர்கள் இல்லை. பிரகதீஸ்வரர் என்ற பெயர் பின்னாளில் ஏற்பட்டது. பெருவுடையார் கோயில் என்பதுதான் ராஜராஜன் சூட்டிய பெயர் என்பதுகூடப் பலருக்குத் தெரியாத நிலைமைதான் உள்ளது. "பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை-கிளியே, பாமரர் ஏதறிவார்' என்பதுதான் உண்மைநிலை.எல்லோரையும் கோயிலின் உள்புறத்தில் செல்ல விடுவதில்லை. இருப்பினும்,கோயிலின் கருவறையின் உள்புறத்தில் உள்ள சுவர் ஓவியங்களைப் பற்றி இந்தியத் தொல்லியல் துறையும் உலக வல்லுநர்களும் புகழ்கிறார்கள். ஆனால் அந்த அற்புத ஓவியங்களைப் பார்த்த தமிழர்கள் எத்தனை பேர்? அந்தச் சுவர் ஓவியங்களை வண்ணத் தாளில் அச்சடித்துப் புத்தகமாகக் குறைந்தவிலையில் விநியோகிக்க வேண்டாமா? இணையதளத்தின்மூலம், இந்தியாவின், தமிழனின் பாரம்பரியப் பெருமையை உலகறியச் செய்ய வேண்டாமா?இக் கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் விவரிக்கும் ஓர் ஆவணப் படத்தைத் தமிழக அரசு தயாரித்து, அவற்றை குறுவட்டுகளாக வெளியிட்டால் தமிழர் அனைவருமே இக் கோயிலின் பெருமையை உணர ஏதுவாக அமையும்.108 கர்ணங்களில் (நாட்டிய அடவுகள்) தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக்கு மேல்தளத்தில் உள்ள புறச்சுவரில் 81 கர்ணங்கள் உள்ளன. மீதமுள்ள 27 கர்ணங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் சிலைகள் முழுமையாக்கப்படவில்லை, ஏன் என்கிற கேள்வி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்களில் சு. சிற்பி திருநாவுக்கரசு, பு. கார்த்திகா இருவராலும் எழுப்பப்பட்டது. இதற்கான ஆய்வுகள் வேறு உண்மைகளைத் திறக்க உதவக்கூடும்.தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர விமானத்தில் 81 டன் எடைகொண்ட ஒரே கல்லை எப்படி ஏற்றி வைத்தார்கள் என்பது இன்றும்கூட விவாதிக்கப்படும் கட்டடக்கலை நுட்பமாகப் பேசப்படுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேசிய டாக்டர் எஸ். காமேஸ்வரன், பிரமிடுகளின் உச்சியில் உள்ள கடைசிக் கல்லின் எடையும் மிக அதிகம். அதைச் சாதிக்கக் காரணமாக இருந்தது தமிழர் கலைநுட்பமாக இருக்கலாம் என்று, வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரிகளை மேற்கோள் காட்டினார். இதைப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ராஜராஜ சோழன் குறித்தும், அன்றைய சோழர் கால நிலைமை குறித்தும் விளக்கும் நல்ல நாவல், அரசுடைமையாக்கப்பட்ட நாவல், அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நாவலின் சுவை குன்றாமல் சுருக்கி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்த் துணைப்பாட நூலாக அறிவித்தால், தமிழகத்தில் அனைத்துக் குழந்தைகளும் ராஜராஜ சோழன் பற்றி அறிந்து கொள்ள உதவும். சோழர் ஆட்சியின் கலை, நிர்வாகத் திறன், வெற்றிகளைத் தமிழர் அறிய விழையும் ஒரு தூண்டுகோலாக இந்த விழா அமையட்டும்!
thanks to   http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=286220&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=%3Cfont+color%3d%22red%22%3E%u0ba4%u0bb2%u0bc8%u0baf%u0b99%u0bcd%u0b95%u0bae%u0bcd:%3C/font%3E+%u0ba4%u0bae%u0bbf%u0bb4%u0ba9%u0bbf%u0ba9%u0bcd+%u0baa%u0bc6%u0bb0%u0bc1%u0bae%u0bc8
thanks to  : வெயிலணன் 

கிழக்கிந்திய கம்பெனி 2 - ஆரம்ப காலம்

0 c
முதல் பகுதியில் வர்த்தக வழிகளை பற்றியும் கிழக்கிந்திய கம்பெனி(கி.இ.க) ஆரம்பிக்க பட்ட வரலாறு பற்றியும் பார்த்தோம். கி.இ.க இந்தியாவில் இருந்த கால கட்டத்தை இரு பிரிவாக பிரிக்கலாம்.முதல் கால கட்டம் அது இந்தியாவிடம் வர்த்தகம் மட்டும் செய்த காலம். இரண்டாம் கால கட்டம் அது இந்தியாவை சிறிது சிறிதாக அரசியல் ரீதியாக தன் கட்டுபாட்டில் எடுத்து வைத்து கொண்ட காலம்.

இவற்றில் முதல் கால கட்டத்தில் இந்தியாவிற்கு நிறைய நன்மை கிடைத்தது எனலாம்.கி.இ.க ஆரம்பிக்க பட்ட போது அது 30,000 ஸ்டெர்லிங் பவுண்டு மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளியை இங்கிலாந்தில் இருந்து ஏற்றுமதி செய்து அதற்கு ஈடான வாசனை பொருட்கள், துணி மற்றும் பிற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கபட்டது.அனுமதிக்க பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் ஏற்றுமதி மதிப்பு சிறிது சிறிதாக வருடந்தோரும் அதிகரிக்கபட்டது. உதாரணமாக 1629ம் ஆண்டு அது 160,000 பவுண்டாக(125,000 -வெள்ளி, 40,000 - தங்கம்) அதிகரிக்க பட்டு இருந்தது.அதாவது செல்வமாக கருதபடும் தங்கம், வெள்ளி இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய பட்டு இந்தியாவிலிருந்து வாசனை பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் இங்கிலாந்திற்கும் அதன் பிறகு அங்கிருந்து பிற மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால் தொழில் வளர்ச்சி மற்றும் செல்வ வளம் இந்தியாவில் பெருகியது. ஆனால் அப்போது இருந்த முகலாய அரசாங்கமோ அந்த செல்வங்களை மாட மாளிகைகள் கட்டவும் பிற ஆடம்பர செலவுகளுக்கும் செலவிட்டது. பிற்காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியால் கிடைத்த செல்வ பெருக்கை முதலாளித்துவ இங்கிலாந்தோ தொழிற்புரட்சி ஏற்படுத்த முதலீடாக மாற்றியது.

கி.இ.க ஆசியாவிலிருந்து பொருட்களை வாங்க பெருமளவு தங்கம் வெள்ளி செலவிட்டதால் இங்கிலாந்தின் செல்வம் வெளியேற தொடங்கியது.இதை தவிர்க்க இங்கிலாந்தில் உற்பத்தி ஆன துணிவகைகளையும் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து அதன் மூலம் வருமானம் ஈட்ட பணிக்க பட்டது. இங்கிலாந்து துணிவகைகள் கடுங்குளிரில் அணிபவையாக இருப்பதால் ஆசியாவில் உள்ள வெப்ப பிரதேசங்களில் உடுத்தி கொள்ள உகந்ததாக இல்லை. எனவே இங்கிலாந்து துணிகள் ஆசிய மக்களுக்கு மிதியடிகளாகவும் ஜன்னல் விரிப்புகளாக மட்டும் பயன் பட்டன. அது மட்டுமின்றி இந்திய மற்றும் சீன துணிகளின் தரத்திற்கும் அது இல்லை.நம்மில் பெரும்பாலானோர் வாசனை பொருட்கள் உற்பத்தியில் இந்தியா தான் எப்போதும் முதலிடம் பெற்றிருந்தது என்று நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் அது உண்மையில்லை. கிழக்கு இந்திய தீவுகள் என்று அழைக்கபடும் ஜாவா, சுமத்திரா, இந்தோனேசியா போன்ற நாடுகள் வாசனை பொருட்கள் உற்பத்தியிலும், வாணிபத்திலும் முதலிடத்தில் இருந்தது(அதனால் தான் என்னவோ ராஜேந்திர சோழன் இந்நாடுகள் மீது போர் தொடுத்து தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தான் போலும்!). எனவே கி.இ.க- பொதுவாக வாசனை பொருட்களை ஜாவா சுமத்திரா போன்ற நாடுகளில் பெருமளவு கொள்முதல் செய்தது. அந்நாட்டினர் இங்கிலாந்து துணிகளை வாங்க விரும்பவில்லை. எனவே வெள்ளியை கொடுத்தே வணிபம் செய்ய வேண்டி இருந்தது. அப்போது இந்திய துணிகளுக்கு அந்நாட்டு மக்களிடம் வரவேற்பு இருப்பதை கண்ட கி.இ.க, உடனே இந்தியாவில் துணி தொழிற்சாலை நிறுவி, அந்த துணிகளை கீழை நாடுகளில் வாசனை பொருட்களுக்கு மாற்றாக விற்க தொடங்கியது. இதன் மூலம் கி.இ.க கம்பெனிக்கும் வருமானம் கிடைத்தது. இங்கிலாந்தின் வெள்ளியும் சேமிக்க பட்டது, இந்திய துணிகளுக்கு பெருமளவில் புதிய சந்தை கிடைத்ததால் இந்திய தொழில் துறையும் வளர்ந்தது.

இந்திய துணிகளை கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு இருந்து விடாமல், அதை இங்கிலாந்திலும் விற்க ஆரம்பிக்க பட்டது. இங்கிலாந்தில் இந்திய துணிகளுக்கு பெருமளவு கிராக்கி ஏற்பட்டது.இந்திய துணிகளின் இறக்குமதியும் கிழக்கிந்திய கம்பெனியின் செல்வ செழிப்பும் பல மடங்கு பெருகியது. அது இங்கிலாந்து துணி தொழில் துறையையே அழித்து விடும் அளவு வளர்ந்ததால் ஒரு கட்டத்தில் இந்திய துணிகளை அணிவதையே இங்கிலாந்து அரசு தடை செய்யும் அளவிற்கு சென்றது.1770 ஆண்டு கம்பெனியின் வணிப மதிப்பில் 60% இடத்தை துணி வர்த்தகமே பிடித்து கொண்டது. இந்திய துணி தொழிற்துறை பெருமளவு வளர இது உதவியது.

அந்த காலத்தில் வாசனை பொருட்களை அதிக அளவு உற்பத்தி செய்த ஜாவா,சுமத்திரா போன்ற கிழை நாடுகள் பிற ஐரோப்பியர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால், தமிழ் நாடு மற்றும் கேரளா பகுதியில் வாசனை பொருட்கள் உற்பத்தியை பெருமளவு பெருக்க அதிக முயற்சி எடுத்து வாசனை பொருட்கள் வாணிபத்தையும் இந்தியாவில் பெருக்கியது.

1664ம் ஆண்டு முதன் முதாலாக கி.இ.க சீன டீயை இங்கிலாந்தில் அறிமுக படுத்தியது. அதன் பிறகு இங்கிலாந்தில் டீயின் தேவை அதிகமாக இருந்ததால் , டீயை சீனாவிலிருந்து பெருமளவு இறக்குமதி செய்தது. பிறகு சீனாவை மட்டும் நம்பி இருக்காமல் இந்தியாவிலும் பெருமளவு டீயை பயிரிட தொடங்கி தோட்டக்கலை வளர்ச்சிக்கும் உதவியது.

மேற்கூறிய வியாபார பொருட்களை இங்கிலாந்துக்கு மட்டும் ஏற்றுமதி செய்யவில்லை. இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய பட்ட பொருட்கள் அங்கிருந்து பிற அய்ரோப்பிய நாடுகள் மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் காலனி நாடுகளாக இருந்த அமெரிக்க,ஆப்ரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபட்டது. இந்திய பொருட்களின் சந்தை உலகலவில் பெரிதாக விஸ்தரிக்கபட்டது.

கிழக்கிந்திய கம்பெனியின் வரவால் இந்திய வியாபாரிகள் முக்கியமாக குஜராத்திய வியாபாரிகள் மற்றும் பிற ஆசிய நாடுகளின் வியாபாரிகள் மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் வியாரிகளின் வியாபாரம் பெருமளவு பாதிக்க பட்டது எனலாம்.

கிழக்கிந்திய கம்பெனி என்றவுடன் அது இந்தியாவை அடிமை படுத்தி, வர்த்தக ரீதியாக சுரண்டியது பற்றி தான் அனைவரின் நினைவிற்கும் வரும். ஆனால் கிழக்கிந்திய கம்பெனியால் வர்த்தக ரீதியாக மேற் கூறிய நன்மைகளும் இந்தியாவிற்கு கிடைத்தது.

அடுத்த பதிவில் கிழக்கிந்திய கம்பெனியின் தேயிலை தொடர்பையும் அது உலக அரசியலில் ஏற்படுத்திய மாற்றத்தையும் பார்ப்போம்


thanks http://tamilfuser.blogspot.com/

சிலம்பில் சோழ, பாண்டியர் நிலை:

0 c
சிலம்பில் சோழ, பாண்டியர் நிலை:

இனிச் சோழநாட்டு நிலைக்கு வருவோம். சிலம்பிற்குச் சற்று முன்பு சோழநாடு இரண்டானது சிலம்பிலேயே வெளிப்படுகிறது.

வள நாட்டுச் சோழன் (உறையூர்ச் சோழன்) ஒரு கிள்ளி/வளவன். இவன் செங்குட்டுவனின் மாமன் மகன். உறையூர் அரசு கட்டிலில் அவனை ஏற்றியவனும் செங்குட்டுவனே.

நாகநாட்டுச் சோழன் (புகார்ச்சோழன்) ஒரு செம்பியன்; செங்குட்டுவனை மதியாதவன். [நாக நாடு என்பது சிலம்புக் காலத்தில் புகாரைச் சுற்றிய சிறு நாடு. இதுவும் சோழநாடு தான். நாக நாட்டை சரியாக அடையாளம் காணாது அதனைப் ”பாதாள உலகம்” என்று புரிந்துகொண்டவர் பலர். நாக நாடு என்பது ஒருபக்கம் புகாருக்கு அருகிலும், இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்திலும் விரிந்தது போலும் (26). நாகனார் தீவான நயினாத் தீவு, மணிபல்லவம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. புகாருக்கே, நாகரோடு தொடர்புடைய சம்பாதி என்ற பெயரும் உண்டு. தவிர அதே நாட்டுள் நாக(ர்)பட்டினம் என்ற இன்னொரு துறைமுகமும் உண்டு.]

நாகநாடும், வளநாடும், நாடுகாண் காதை (40-43) வரிகளின் படிச் சிறு நாடுகளாவே இருந்திருக்கின்றன. காடுகாண் காதையில் வரும் வரிகளை (27A) ஆய்ந்து பார்த்தால் இந்த நாடுகளின் நீட்சியை ஓரளவு அறியலாம். புகார் நகரிலிருந்து காவிரியை ஒட்டினாற் போல் நாகநாட்டின் எல்லை வெறும் 50-60 கி.மீ மட்டுமே இருந்தது என்று நம்பமுடிகிறாதா? அண்மை ஆய்வின் முடிவில் இவ்வுண்மை அறிந்து நானும் வியப்பில் ஆழ்ந்தேன் (27B) இதே போல, வளநாட்டின் கிழக்கெல்லை திருவரங்கத்திற்கு அருகிலே முடிந்து விடுகிறது. நாகநாட்டின் வடக்கெல்லை தென்பெண்ணையாற்றில் இருந்திருக்கலாம். வளநாட்டின் வடக்கெல்லை தெரியவில்லை. வளநாட்டின் மேற்கெல்லை உறையூருக்கும், கொங்குக் கருவூருக்கும் இடைப்பட்டது. பொதுவாக, வளநாடும், நாகநாடும் சிலம்பின் காலத்தில் சிறு நாடுகள். வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் இடைத்தொலைவு காவிரியை ஒட்டி பாண்டியனிடமே இருந்திருக்கிறது. இது மாங்காட்டு மறையவன் கூற்றால் விளங்குகிறது (28).)

பாண்டியன் நெடுஞ்செழியனும், அவன் தம்பி வெற்றிவேற் செழியனும் கூட செங்குட்டுவன் மேலாளுமையை ஏற்காதவர். [”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்” என்ற கொலைக்களக் காதை 163 வரிகளின் பின் செழியன்மகன் பற்றிக் குறிப்பு வருகிறது. மதுரை எரியுண்டதில் செழியன் மகன் இறந்ததால், கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன், நெடுஞ்செழியனின் தம்பியாய் இருக்கவே வாய்ப்பு அதிகம்.]
http://valavu.blogspot.com/2010/05/6_14.html

கரிகாலன்----காரவேலன்-----மௌரியர் படையெடுப்பு

0 c
கரிகாலனின் சிறப்பை நாம் முழுமையாக அறிவதற்குக் கலிங்கத்தை ஆண்ட காரவேலனின் கல்வெட்டு நமக்கு உதவுகிறது.காரவேலன்(கி.மு 176-163) என்பவன் கலிங்கத்தை 13 ஆண்டுகள் ஆண்டவன்.அவன் 11 ஆம் ஆட்சியாண்டில்(அதாவது கி.மு.165 இல்) தமிழகத்தை வென்றுள்ளான்.

மூவேந்தர் கூட்டணி
அவனின் அத்திகும்பா கல்வெட்டில்" இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத் "திரமிள சங்காத்தம்"(தமிழர் கூட்டணியை) உடைத்தேன் என்று குறிப்பு உள்ளது.இதனைப் பொருநராற்றுப்படையாலும் உணரலாம்.

முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில்

"முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல"

என மூவேந்தரும் கூடியிருந்த காட்சி பேசப்படுகிறது.எனவே கரிகாலன் அவையில் இக்கூட்டணி உருவானது என்று உணரலாம்.


கலிங்கநாட்டிற்கு மேற்கே வடுகர் நாட்டைத் தமிழர்கள் ஆண்டுள்ளனர்.113 ஆண்டுகள் கூட்டணியாக இருந்து தமிழர்கள் வடபுலம்வரை ஆண்டதால் கலிங்கர்களால் தமிழர்களை வெல்லமுடியவில்லை.பின்னாளில் இந்தப் பகுதியை இரேணாட்டுச் சோழர்கள் ஆண்டனர்.

மௌரியர் படையெடுப்பு
கி.மு.278 இல் வடக்கிலிருந்து ஒரு படையெடுப்புத் தமிழகத்தின் மேல் நடக்கிறது(கி.மு.300 இல் மௌரியர் படையெடுப்பு நடந்துள்ளதையும் இங்குக் கவனிக்க வேண்டும். சந்திரகுப்த மௌரியன் எடுத்த மோவூர் படையெடுப்பு இதுவாகும்)கி.மு.278 இல் சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரன் என்பவன் படையெடுத்தபொழுது தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்த்தனர்.வடக்கே 16 அரசர்களை எதிர்த்து, பாடலிபுத்திரம் திரும்பினான்.சந்திரகுப்தன் படையெடுப்பு வடுகர் நாட்டின் வழியாக நடந்தபொழுது வடுகர்களும் படையுடன் சேர்ந்து தமிழகம் வந்தனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க வடுகர்நாட்டை வென்று 113 ஆண்டுகள் தமிழர் கூட்டணி ஆண்டது.இவ்வாறு தமிழர் கூட்டணியான திரமிள சங்கார்த்தம் உருவாக அடிப்படைக் காரணமாக விளங்கியவன் கரிகாலனே ஆவான்(கி.மு.278).இவன்தான் கூட்டணிக்கு முதன்மை தந்திருக்க வேண்டும்.ஏனெனில் வடநாட்டுப் படையெடுப்பால் முதலில் பாதிக்கப்படுவது சோழநாடே ஆகும்.எனவே சோழ அரசன் கரிகாலன் தலைமையில் படை அமைக்கப்பட்டிருக் கலாம்.

நன்றி :http://muelangovan.blogspot.com/2010/04/blog-post_14.html

குறிப்பிட்ட அண்மையாய்வாளர் Shashi Kant என்பார், ஜெய்சுவால் - பானர்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, இக்கல்வெட்டின் உள்வரும் காலக் குறிப்புகள் எல்லாம் மகாவீரரின் இறப்பின் பின்வந்த முற்றாண்டுகளையே குறிக்கின்றன என்று நிறுவி, ”திராமிர சங்காத்தம்” என்பது ம.பி. [மகாவீரருக்குப் பின்] 113 ஆம் ஆண்டில் ஏற்பட்டது என்று வரையறுப்பார். அதாவது திராமிர சங்காத்தம் ஏற்பட்டது (கி.மு.527-113=) கி.மு.414 என்பார் .

தமிழகத்தை அடுத்திருந்த மொழிபெயர்தேயம் மூவேந்தர் காவலுக்குட்பட்டதாக மாமூலனாரின் அகநானூறு 31-ஆம் பாட்டில் வரும் ”தமிழ்கெழுமூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” என்ற சொற்றொடரால் உணருகிறோம். மாமூலனார் காலம் மோரியருக்குச் சற்று பின்பட்டது. மாமூலனார் சொல்வது போல், [வடபுலத்தார் படை தென்புலத்துள் நுழையா வண்ணமும், தென்புலத்துச் சாத்துக்கள் தயக்கமின்றி தக்கணப்பாதையின் வழியாக மகதம் வரை போய்வரும் வண்ணமும்,] ஓர் ஒன்றிணைந்த காவலைத் தமிழ்மூவேந்தர் மொழிபெயர் தேயத்தில் ஏற்படுத்தியிருப்பார்களேயானால், மூவேந்தரிடையே ஏதோவோர் அரசியல் உடன்பாடும் புரிதலும் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இந்தத் ”திராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம்.

1. மூவேந்தரும் தம்முள் எவ்வேளிரையும், அடக்கலாம்; ஆனால் அவரிடம் இறைபெற்ற பின், தனியாட்சிக்கு விட்டுவிடவேண்டும். அவர் கொடிவழியை அழிக்கக் கூடாது. [வேளிருக்கும் வேந்தருக்கும் இடையே கொள்வினை, கொடுப்பினைகள் காலகாலமாய் உண்டு.]
2. தமிழகத்திற்கு வெளியிருந்து மூவேந்தர் / வேளிர் மேல் யாரேனும் படையெடுத்தால், தமிழகம் காக்க மூவரும், தங்களுக்குள் என்ன மாறுபட்டாலும், அதைப் பொருட்படுத்தாது, ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்;
3. தமிழகத்தில் இருந்து தக்கணப்பாதைவழி வடக்கே போய்வரும் சாத்துக்களைக் காப்பாற்றும் வகையில், மொழிபெயர் தேயத்தில் மூவேந்தர் நிலைப்படைகள் (standing armies) நிறுத்திச் செயற்பட வேண்டும். [நிலைப்படையை மாமூலனார் பாடல்கள் குறிப்பாக சொல்லுகின்றன.]

இந்தத் ”திராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம்.
http://valavu.blogspot.com/2010/05/6_14.html

Kharavela

0 c
From Wikipedia, the free encyclopedia
Jump to: navigation, search

Maximum extent of Khārabeḷa (காரவேலன்(கி.மு 176-163)) Kaḷingan Empire: 2nd century B.C.E

Hātigumfā on Udayagiri Hills, Bhubaneswar

Hātigumfā inscription of King Khārabeḷa at Udayagiri Hills

Khandagiri caves
Khārabeḷa (Oriya: ଖାରବେଳ) (IAST: Khārabeḷa, Devanagari: खारवेल, Odia: ଖାରବେଳ) (?209 – after 170 BCE) was the greatest emperor of the Maha-Meghavahana Dynasty of Kaḷinga (present-day OrissaIndia). The Chedi dynasty of Kaḷinga under the kingship of Khārabeḷa ascended to eminence and restored the lost power and glory of Kaḷinga state of , which was subdued since the devastating Kaḷinga war with Ashoka. All these happened within a century of Ashokan era. The Kaḷingan military might was reinstated by Khārabeḷa. Under Khārabeḷa's generalship, the Kaḷinga kingdom had a formidable maritime reach with trade routes linking it to the then Simhala (Sri Lanka), Burma(Myanmar), Siam(Thailand), Vietnam, Kamboja(Cambodia), Borneo, Bali, Samudra(Sumatra) and Jabadwipa (Java). On religion side, though extremely liberal, Emperor Khārabeḷa patronised Jainism.
Emperor Khārabeḷa (ଖାରବେଳ) led many successful campaigns against Kingdoms of Magadha, Anga, Satavahanas and the then South Indian regions of Pandya kingdom, present Tamil Nadu state, and expanded Kaḷinga till the river Ganga in North and river Kaveri in South, with full West to East coverage. Khārabeḷa (ଖାରବେଳ) was the third king of the Mahāmeghabāhana dynasty. The main source of information about Khārabeḷa is his famous seventeen line rock-cut hātigumphā inscription in a cave in Udayagiri hills near Bhubaneswar in Odisha.

Contents

[hide]

[edit] Introduction

The chief source of information about emperor Kharavela is the Hathigumpha inscription at Udayagiri caves, near present Bhubaneswar city. According to the inscription, Kharavela belonged to the Chedi clan, and was a lineal descendant of the sage king Vasu. Apart from this eulogic descent amounting to a myth, several historians have tried to speculate the origin of Kharavela. However, in absence of any material evidence to the converse, Kharavela has been accepted as being from an Odia descent.
Etymologically, the name Kharavela is the prakrit transformation of Sanskrit word Ksharavela (Devanagari:क्षारवेल). The first syllable Khāra (Devanagari:खार) is the corrupt form of Kshāra (Devanagari:क्षार) meaning 'saltish'. The letter Khā (Devanagari:खा) in the Hathigumpha inscription is the transformed corrupt (Apabhramsha) form of kshā (Devanagari:क्षा). The second syllable, Vela means 'wave' or 'shore'.
Incidentally, in north-western part of India, there is a clan of Jats having the clan name Khārvel, which claims descent from the Emperor Kharavela, originated during the north-western conquest of the emperor. Similarly, in history books Air (ऐर) has been stated as a clan that originated from Nagavanshi ruler named Airawat. [1] However, deep and multi-disciplinary research is required to arrive at the exact origin of Kharavela.

[edit] Hathigumpha Inscription

This inscription, consisting of seventeen lines has been incised in deep cut Brahmi script on the overhanging brow of a natural cavern called Hathigumpha (Oriya: ହାତିଗୁଂଫା) (Meaning in English: The Elephant’s Cave) in the southern side of the Udayagiri hills near present day Bhubaneswar. The inscriptions date back to the 1st Century BCE. It faces straight towards the rock Edicts of Ashoka at Dhauli, which is situated at a distance of about six miles.
The inscription was first discovered/noticed by A. Stirling in 1820 who published an eye copy of it in Asiatic Researches, XV , as well as , in his book titled “An Account, Geographical, Statistical and Historical of Orissa or Cuttack”. Thereafter, indologist and linguist James Princep succeeded in deciphering the inscription. Subsequently, Princep’s reading along with a facsimile prepared by Kittoe was published in the Journal of the Asiatic Society Bengal, VI (1837).
According to Princep, the referred personality in the Hatigumpha inscription was a king named ‘Aira’. Towards the end of 1871 A.D., a plaster cast of the inscription was prepared by H. Locke, which is now preserved in the Indian Museum, Calcutta. Later, Alexander Cunningham published this inscription in 1877 in the Corpus Inscriptionum Indicarrum Vol. I and in 1880 R.L. Mitra published a slightly modified version in the book Antiquities of Orissa, Vol. II.
The first authentic reading of the inscription is credited to historian Bhagwan Lal Indraji. Indraji presented the novel approach before the Sixth International Congress of Orientalists in 1885, which was widely accepted. Pandit Indraji was the first scholar to declare that the King referred to and eulogised in the Hathigumpha inscription was named Kharavela' and not Aira. However, there are a large number of lacunae and faults (Both syntactical and physical deformities) in the inscription, which obstruct its correct reading and the mutilated condition of the inscription has given the space for rival claims and given rise to controversies.

[edit] Salient features of the Hathigumpha Inscription

The Hathigumpha inscription starts with a version of the auspicious Jain Namokar Mantra: नमो अरहंतानं [।।] णमो सवसिधानं [।।] for in Jainism.
The body-text mentions that:
  • In the very first year of his coronation, (His Majesty) caused to be repaired the gate, rampart and structures of the fort of Kalinga Nagari, which had been damaged by storm, and caused to be built flight of steps for the cool tanks and laid all gardens at the cost of thirty five hundred thousand mudra (coins) and thus pleased all his subjects.
  • In the second year, without caring for Satakarni, (His Majesty) sent to the west a large army consisting of horses, elephants, infantry and chariots, and struck terror to Asikanagara with that troop that marched up to the river Kanhavemna.
  • Then in the fourth year, (His Majesty] .... the Vidhadhara tract, that had been established by the former kings of Kalinga and had never been crossed before. The Rathika and Bhojaka chiefs with their crown cast off, their umbrella and royal insignia thrown aside, and their Jewelry and wealth confiscated, were, made to pay obeisance at the feet (of His Majesty).
  • And in the fifth year, (His Majesty) caused the aqueducts that had been excavated by king Nanda three hundred years before, to flow into Kalinga Nagri through Tanasuli.
  • And in the seventh year of his reign [the Queen] of Vajiraghara, blessed with a son attained motherhood.
  • In the 12th year of his reign, he attacked the king of Uttarapatha. Then brought back the holy idols of Kalinga's Jain Gods (The Blessed Tirthankars) which earlier Magadha rulers had carried away with them after Kalinga War in Past. Tirthankar’s idol was brought back with its crown and endowment and the jewels plundered by king Nanda from the Kalinga royal palace, along with the treasures of Anga and Magadha were regained.
  • (His Majesty) then attacked and vanquished the kingdom of Magadha, and Pataliputra, the then capital of the Sunga, and made king "Bahasatimita" (May be a Sunga king Bruhaspatimitra, or Pusyamitra himself) bow at his (His Majesty’s) feet.
The inscription states that the Emperor Kharvela had a liberal religious spirit. Kharavela describes himself as:
“ सव पासंड पूजको सवदेवायतन संकार कारको ” (Prakrit Language, Devanagari script)
Translation: The worshipper of all religious orders, the restorer of shrines of all gods.

[edit] Minor Inscriptions of Kharavela

Besides the celebrated Hathigumpha inscription of Kharavela, there are several other minor inscriptions in the twin hills of Udayagiri and Khandagiri Caves, which were deciphered earlier by Prof. R. D. Banerjee during the years 1915-16 (Epigraphic Indica - XIII) and subsequently by B. M Barua (Indian Historical Quarterly-XIV). These minor inscriptions pertaining to Emperor Kharavela have been engraved in Brahmi script, prakrit language. Shri Sadananda Agrawal, historian, has given details and clarifications about those.

[edit] Period

The dating of Kharavela's period has been highly debatable and controversial. It has been a formidable challenge to ascertain the correct date of Kharavela’s ascendancy and reign within a definite chronological frame work.
The internal evidence from the Hathigumpha inscription, reasonably places the date of emperor Kharavela’s reign in second half of the first century BC. An exact time bracketing has been unachievable at present. The exact time bracket of Kalingan emperor Kharavela will continue to be controversial so long any other corroborative evidences have not been discovered.
The Indian numismatist P.L. Gupta has suggested that the Hatigumpha inscription is from the 2nd century CE:[2]: "The Hâthîgumphâ inscription refers in line 8 to a yavana-râja, who fled to Mathura when he realized the might of Khâravela. The name of the yavana-râja bears three letters, of which the second letter may be fairly read as ma or mi. It has been doubtfully restored as Dimita, meaning Demetrius the Indo-Greek king. But as early as 1951, I thought it to be Vimaka, meaning Vima Kadphises. The Patna Museum has a plaster cast of this inscription, which I personally examined when I was there as Curator. It confirms my suggestion."
There are some issues with this interpretation, since the stated facts are that the name consists of three letters, of which the second is mi or ma, and that the king is categorized as yavana, not kushan or tukhara, nor saka or pahlava. It is otherwise unknown for a Kushan king to have been referred to as a yavana, and for Vima Kadphises to be referred to as Vimaka (expanded from Vema/Vima). Also, there are palaeographic problems with dating the Hâthîgumphâ text so late as Wema Kadphises (Reign 90s-110s CE). The period of 1st century BC, or approximately contemporary with the Sanchi inscriptions from the reign of the Satavahana Satakarni, has been preferred by Indic script specialists.

[edit] Wars & Expeditions

It is revealed from Line-4 of the Hathigumpha inscription that Kharavela in the second year of his reign dispatched a strong force comprising cavalry, elephants, infantry and chariots to the western quarter without caring for or bothering about Sātakarnī, and the kingdom of Asikanagara was frightened of its (Kharavela’s army) reaching the river Kanhavemṇā. Some scholars prefer to read Masikanagara instead of Asikanagara and locate it in the coastal region of Andhra Pradesh.
An article about Emperor Kharavela mentions about the rule of Kaswan in 2nd century of Vikram samvat. It has been mentioned in ‘Hathi Gumpha and three other inscriptions’ (page 24) in Sanskrit as under:
Sanskrit - कुसवानाम् क्षत्रियानां च सहाय्यतावतां प्राप्त मसिक नगरम्
IAST - “Kusawānāṃ kshatriyānāṃ ca Sahāyyatāvatāṃ prāpt masika nagaraṃ”.
Translation: The city of 'Masiknagara' was captured with the help of 'Kuswan' Kshatriyas.
According to Sadananda Agrawal, interpretation of the city as Masikanagara is not well-supported. Kanhavemṇā is commonly equated with the river Krishna coastal flowing in Andhra Pradesh. However, Krishna lies much to the south of Kalinga, and not west as averred in the epigraph (Devanagari: पछिमदिसं). But there is another stream flowing to the west of Kalinga in Vidarbha and known locally at present as Kanhan which flows about 17 km northwest of Nagpur and joins the river Vena (Wainganga), and it is the combined flow of these two streams that is spoken as Kanhavemṇā in our records.
The recent find of a seal belonging to the Asikajanapada in course of intensive archaeological excavations at Adam (Nagpur district) has solved also the problem of locating the historical Asikanagara whose king or and people became frightful at the arrival of Kharavela's army at Kanhavemṇā, as per the Hatigumpha inscription. In view of the evidence of a highly prosperous city unearthed at Adam, Prof. A. M. Shastri is of the opinion that Adam itself represents the Asikanagara of Hathigumpha inscription. It is worth noting in the present context that a terracotta sealing having a legend, has been discovered from Adam, situated on the right bank of the river Wainganga, which reads Asakajanapadasa (Devanagari: असकजनपदस).
The Hathigumpha inscription tells us that again in his fourth regnal year Kharavela directed his invasion against the Satavahana territory. In course of the campaign the army of Kalinga marched headlong against the Rathikas and Bhojakas who inhabited the western Deccan and whose chiefs might have been subordinates or vassals under Satavahana king Satakarni.
It is quite likely that the Rathikas are to be located in southern Maharashtra region and adjoining Karnataka, Andhra Pradesh where a large number of coins of some chiefs styled Mahārathi have been found in excavations. Likewise , as regards the Bhojakas, it is not impossible that they flourished in the region of Goa and adjoining parts of Karnataka where the Bhoja Kings are found a few centuries later. As a result of this victory Kharavela’s suzerainty spread over the land from the eastern sea to western sea.
The eighth regnal year of Kharavela, three years after his war in western India, heard the war trumpets of Kalinga blowing in direction of the north.
Kharavela entered into the territory of Magadha and fought out important engagement with the army of that empire at Gorathagiri and stormed that outlying fortress which guarded Rajagrha, the former capital of Magadha. The strong fort was demolished and Rajagrha was put to great trouble.
Gorathagiri has been identified with the modern Barabar hill in the Gaya district in Bihar state. In the Sabhaparva of the Mahabharata this hill has been referred to by the name Gorathagiri wherefrom Girivraja (Rajagrha) the capital of Magadha was surveyed by Krishna, Bhima and Arjuna on the way of their campaign against Jarasandha.
It is worth nothing here that two small inscriptions are found engraved in that hill, which read Gorathgiri and Goradhagiri respectively. While the former belongs to Asokan period the latter seems to be incised by one of the men who had accompanied Kharavela in this campaign.
It was by that critical time that one Yavana King (Indo-Greek) who was then in occupation of Mathura was advancing against Magadha. The king's name has been read extremely doubtfully as "Dimita", and has been identified by many scholars with the famous Indo-Greek King Demetrius, son and successor of Euthydemus belonging to 2nd century BC.
In commemoration of this victory over the Indo-Greeks and age old enemy Magadha, Kharavela constructed the great victory palace in Kalinganagari at a cost of thirty eight hundred thousand coins which stood to personify in all its grandeur the great victory a great conqueror.
The tenth year witnessed another expedition towards north. According to Hathigumpha inscription that year he caused his army much towards Bharatavarsha. Dr Sahu remarks:
“In the epigraphic records of India the name Bharatavarsha appears for the first time in Hathigumpha inscription. This name however, denoted to Northern India by that time.”
When the twelfth year of his reign dawned Kharavela marched against Uttarapatha (Northwest India) with a vast army. This was his third onslaught against North India, forcing several chiefs to submission, who were very likely the Indo-Greeks. On his return from Uttarapatha Kharavela planned for the final encounter against Magadha and the Kalingan army encamped on the banks of the Ganges not far off Pataliputra. The people of Magadha were struck with terror at the sight of the elephants and horses and Brhaspatimitra, the king of Magadha was humbled by Kharavela and made the Magadhan king touch his feet. Many renowned scholars equate Brhaspatimitra with Pushyamitra, the founder of Sunga dynasty.
It is worth nothing in the present context that for recording the events of his reign Kharavela chose the Hathigumpha in the southern side of Udayagiri hill which faces straight towards the Dhauli hill bearing Rock Edicts of Ashoka. In the former hill we find the inscription of the victory of Magadha and in the latter that of the victory of Kalinga. Kharavela’s inscription seems to have been intended to counter affect Asoka’s inscription.
Before his home ward march the monarch brought back from Magadha the greatest and by far the most significant war trophy to his home land was the Original Idol of Kalinga's Jain Tirthankars (Gods) Idol that adorned the spiritual realm of Magadha. This Kalinga Tirthankars (Jain God) was once the invaluable religious property of Kalinga but was carried away from Kalinga during the first wave of the northern invasion under Mahapadmananda emperor of Magadha.
Dr. N.K.Sahu aptly remarks about his expeditions: “Thus within a short span of ten years (form his 2nd to 12th regnal years.) Kharavela could achieve a series of brilliant victories extending his suzerainty from the North-Western part of India to the farthest extend in the South. “
The political and military performances of Kharavela have, in fact, no parallel in history and this great monarch fully justifies the epithet Chakravarti given to him in the inscription of his chief queen.
He seems to have abandoned his throne in the 13th year of his reign, and was succeeded by his son Kudepasiri.

[edit] Dynasty

In the first line of Hathigumpha inscription Kharavela styles himself as
IAST-Airena Mahārājena Mahāmeghavāhana Chetarāja vasa Vadhanena Pasath Suvalakhanena Chaturantalunthana Gunaupenetta Kalimgādhipatinā Siri Khāravelan
(Devanagari:ऐरेण महाराजेन महामेघवाहनेन चेतराज वस वधनेन पसथ सुभलखलेन चतुरंतलुठन गुणउपेनेत कलिंगाधिपतिना सिरि खारवेलेन)
While the earliest scholar J. Princep and R. L. Mitra take the word Aira as the name of the king of Kalinga eulogised in the inscription, other few scholars are inclined to take the word as dynastic name and connected the ancestry of Kharavela with the puranic Aila belonging to the lunar Kshatriya dynasty. Bhagwan Lal Indraji is the first scholar to assert that the King whose activities are glorified in the inscription in named Kharavela.
It is a significant to note here that there is also no direct evidence in Hathigumpha inscription to show that Kharavela belongs to Cedi Dynasty. The only meaning conveyed by this expression is that Kharavela was the son of Cetarāja (Devanagari:चेतराज).
There is a small crack in the stone above the letter ta (त) giving the impression of medial i. this crack misled some eminent scholars like R.D. Banerji and D.C. Sircar to decipher the word as Ceti (Devanagari:चेति) and this conjectural reading led the renowned scholars to hold the view that Kharavela belongs to Cedi dynasty. But in no way this can be accepted. It is pertinent to note in this context that a small inscription is found engraved in the Mancapuri Cave where King Kudepasiri (one of the successor of Kharavela) styled himself as Aira Maharaja Kalingadhipati Mahameghavahana (Devanagari:ऐरे महाराजा कलिंगाधिपतिना महामेघवाहन).
The King Sada has also been styled himself as Maharaja Kalinga Mahisika Adhipati Mahameghavahana. Both Kudepasiri and Sada, happen to be the successors of Kharavela, have never been stated in their respective inscription to be belonging to Cedi dysasty. It is significant that the word Aira has not been prefixed with the name of Sada.
The Vahana ending dynastic (and personal) names were quite popular during the few centuries preceding. The meaning of Mahameghavahana is the great one riding on clouds. Dr. Sahu takes Maha as the prefix of Megha and opines: “ Mahameghavahana literary means one whose vehicle is great cloud”.
In line 17 of the Hathigumpha inscription Kharavela claims to have been descended from Rajarsi Vasu Kula. King Vasu recorded in Hathigumpha inscription can not be taken as Cedi king. It is pertinent to note in the context that in Mahabharata, Meghavahana as a dynastic name is found mentioned (Sabha Parva, XIV, 13) while the same epic preserves detailed accounts regarding the activities of Cedi dynasty. Cedi and Meghavahana have been flourished as two distinct dynasties since the early times, so both the dynasties should not be equated.
Cetaraja was the father of Kharavela and it seems probable that he was the immediate predecessor of Kharavela, belonging to be the second king in the Mahameghavahana line in Kalinga.
The line-7 of the Hathigumpha inscription indicates that the Queen of Vajiraghara (Chief Queen of Kharavela ?) gave birth to a son. Another inscription in the lower storey of the same caves informs us that it had been executed by the Aira Maharaja Kalingadhipati Mahameghavahana Kudepasiri. In this cave another inscription is incised which reveals the name of Kumara Badukha. It is to be noted here that Kumara Badukha has not assumed any royal title. Badukha is brobably Prakrat form of Burdak. However, it is difficult to be sure of the relationship between Kharavela and Kudepasir. As no available record speaks any thing more about prince Badukha, he stands an obscure figures, in history but seems to be the son or brother Kudepasiri.
Mahiska country denoted the modern coastal Andhra (Guntur – Krishna region) which was apparently added to the Mahameghavahana kingdom at least during the reign of Maharaja Sada.
The Sada rule came to an end during end first century / early second century A.D. On basis of above discussion we can say that Kharavela belonged to Mahameghavahana dynasty and the Genealogical chart of can be given as under:
1- Mahameghavahana 2- Cetaraja 3- Kharavela 4- Kudepasiri 5- Badukha 6- Mahasada 7- Sada’s successors.

[edit] Queens of Kharavela

The Hathigumpha inscription mentions that in the seventh year of his reign [the Queen] of Vajiraghara was blessed with a son attained motherhood. Sometime before his coronation the prince very probably married chief queen as per presence was essentially required in anointation ceremony. The chief queen, whose record has been engraved in the upper storey of Mancapuri Cave, was the great-grand daughter of Hastisimha and the daughter of king Lalaka or Lalarka. It is to be pointed out here that not much is known about Hastisimha and Lalarka from any other source. We find mention of Lal (लल) as a gotra of Jats living in Muzaffarnagar district in Uttar Pradesh, India, who originated from mahapurusha Lala (लल). The famous Panjtar stone inscription, now in (Pakistan), written in the year 122 of Saka ara, referse to one “ Lala, the protector of the Kushana dynasty of Maharaja Kanishka”. This Lala, was a Lalli “Jat” It also refers to the gift of two trees by one Moika in the eastern region of “ Kasua”. That last word Kasua is the same as Kasuan the name of the Kushana clan (and territory) which is still existing. [3][4]
R. D. Banerjee has identified Vayiraghara with Wairagarh in present Chanda district of Maharastra, because in some medieval inscription this place is found referred to as Vayirakara. However, Dr. M. K. Sahu identifies this place with Vajradantadesa mentioned in the Kamasutra of Vatsyayana.
King Kharavela is known to have two queens. Line-15 of the Haithgumpha inscription refers to the queen of Simhapatha, who was very likely his second queen. Simhapatha may be same as Simhapura which was the capital of Kalinga during the rule of the Matharas in the 4th century A.D. The place is identified with modern Singupuram in Srikakulam district of Andhra Pradesh.

[edit] Remembering Kharavela

Kharavela Nagar is an important commercial district of Bhubaneswar and home to the city's first mall. With the rise of industry, in particular IT and higher education, the history of ancient Kalinga and in particular Kharavela is being revived as Orissa's golden age.

[edit] See also

Middle kingdoms of India
Timeline: Northern Empires Southern Dynasties Northwestern Kingdoms
 6th century BCE
 5th century BCE
 4th century BCE

 3rd century BCE
 2nd century BCE

 1st century BCE
 1st century CE


 2nd century
 3rd century
 4th century
 5th century
 6th century
 7th century
 8th century
 9th century
10th century
11th century














(Persian rule)
(Greek conquests)






(Islamic conquests)
(Islamic Empire)

[edit] External links

[edit] References

  1. ^ Dr Mahendra Singh Arya, Dharmpal Singh Dudee, Kishan Singh Faujdar & Vijendra Singh Narwar: Adhunik Jat Itihas (In Hindi) (Modern History of Jats), Agra 1998, Jaypal Agencies, Agra, Pp. 224 and 234
  2. ^ Kusâna Coins and History, D.K.Printworld, 1994, p.184, note 5; reprint of a 1985 article
  3. ^ EI, Vol.XIV, p-134
  4. ^ History of Lal Clan
  • 5. Shashi Kant (2000): The Hathigumpha Inscription of Kharavela and the Bhabru Edict of Ashoka, D K Printworld Pvt. Ltd.
  • 6. Mahajan, Dr. Malati (2003): Orissa : From Place Names in Inscriptions C. 260 B.C.-1200 A.D. (Cultural and Historical Geography), Sundeep Prakashan.
  • 7. Agrawal, Sadananda (2000): Śrī Khāravela, Sri Digambar Jain Samaj, Cuttack, Orissa.

thanks to wikipedia