ராஜராஜசோழர்

0 c
அன்பர்களே
ராஜராஜசோழர் பற்றிய
மடலாடல்களைத் தொகுத்து
என்னுடைய பதில்களை·பார்வைகளை
எழுதியிருக்கிறேன்.


[1]திரு நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் வரலாறு எனும் நூல் ஒன்று உள்ளது.

[2]சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்காலச் சோழர் வரலாறு என்னும் மூன்று பாகங்கள் கொண்ட நூலும் இருக்கிறது.இது தமிழ் நூல்.
இவை போக இன்னும் சில நூல்கள் இருக்கின்றன.
அவை சோழர் வரலாற்றில் குறிப்பிட்ட சில பகுதிகளைப் பற்றியவை.
சோழர் காலக் கோயில்களைப் பற்றிய மூன்று பகுதிகள் கொண்ட ஆங்கில நூல் சிறப்பு வாய்ந்தது.
'அருளுடைச் சோழமண்டலம்' என்பது
இரண்டாம் ராஜராஜர்þ
இரண்டாம் ராஜாதிராஜர்þ
மூன்றாம் குலோத்துங்கர்
காலத்தைச்
சித்தரிக்கும்.
[5]   ராஜேந்திர சோழன்' என்ற பெரிய நூல் இருக்கிறது.
சோழபாண்டியர் பற்றிய நூல்
ஒன்றும் உண்டு.
[6] குடவாயில் பாலு இரண்டு நூல்கள் எழுதியுள்ளார்.
மூன்றாம் குலோத்துங்கனைப் பற்றிய தனிச்சிறு நூல் இருக்கிறது.
[7] ராஜராஜ சோழரைப் பற்றிய தனிநூல் ஒன்றை திருநெல்வேலி
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
[8] கள்ளர் இனத்தவர்கள் 'ராஜராஜசோழர்' பற்றிய இரண்டு
சிறிய நூல்களை வெளியிட்டுள்ளனர்.
[9] நாட்டார் அவர்கள் வெளியிட்ட நூலில் குறிப்புகள்
மட்டுமேயுள்ளன.

நான் சொல்லவந்தது
என்னவென்றால்þ ராஜராஜ சோழரைப்
பற்றிய விரிவான பெரியநூல்
ஏதும் இதுவரை வெளிவரவில்லை
என்பதுதான்.
அவரைப் பற்றிய தகவல்கள்கூட
அதிகம் வெளியாவதில்லை.
அவர் சம்பந்தமான சில
முக்கியமான மர்மங்கள் இன்னும்
விடுபடவில்லை.
மிகவும் முக்கியமான
மர்மங்கள்.
சாதாரணமானவையல்ல.
சில வரலாற்று ஆய்வாளர்கள்
சொல்லும் பெரும்பான்மையான
விஷயங்களுக்கு விளக்கம்
போதாது.
பல சமயங்களில் 'கொட்டினேன்
கவிழ்த்தேன்' என்றவாறு
சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
இந்தக் குறைபாடுகள்
கவனிக்கப்படவேண்டும்.


இன்னும்
எழுதவேண்டியுள்ளது........

[10] ந.மு வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரம்
எனும் நூல் உள்ளது.
முதற்பதிப்பு 1934-ஆம் ஆண்டு
வெளியாகி இருக்கிறது. இதில்
இராஜ ராஜ சோழரை
பற்றிய தனிபட்ட சரித்திரம்
விரிவாக இல்லை. ஆனால்
சோழர்கள் மற்றும் இதற கள்ளர்
பிறிவைச் சேர்ந்த
தமிழகத்தை ஆண்ட மன்னர்களை
பற்றி விவரிக்கப்
பட்டுள்ளது.


பல பழங்காலத் தமிழ் மன்னர்·சிற்றரசர்·நாட்டுத்தலைவர்
குடியினர் கள்ளர்களில்
விளங்குகிறார்கள்.
ஆகவேதான் இவர்களைத்
'தென்னாட்டு ரஜபுத்திரர்'
என்று குறிப்பிடுவார்கள்.
இந்தக் குடியினர்களிடம்
செப்புப்பட்டயங்கள்þ
சாசனங்கள்
போன்றவை ஏராளமாக இருப்பதாகச்
சொல்லக் கேள்விப்
பட்டிருக்கிறேன்.
செவிவழிச் செய்திகளும்
ஏராளமாகப் புழங்குகின்றன.

[12] கவியோகி சுத்தானந்த பாரதியார்
அறுபது·எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்
கள்ளர்களைப் பற்றி ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

அதிலும் அரிய செய்திகள்
நிறைய இருந்தன.
மதம் பிடித்த யானையைக்
குத்தியே வீழ்த்திய நாட்டுத்
தலைவர் ஒருவரைப் பற்றிய
குறிப்பு ஒன்று அந்த நூலில்
இருந்தது.
பல தகவல்கள் சரியாகச்
சேகரிக்கப்பட்டு தொகுக்கப்
படவில்லை.

சேதிராயர் - சேதிநாட்டு அரசகுலத்தினர்

0 c







தமிழகத்தின் பெருமைவாய்ந்த இன குழுக்களில் முக்குலத்தின் கள்ளர் பெருங்குடி முக்கியமானது ஆகும். சேதிராயர் என்பது கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்றாகும். சென்னை பல்கலைகழகத்தின் தமிழகராதி(Tamil Lexicon University of Madras) சேதிராயர் என்பதற்கு மூன்று பொருள்களை தருகிறது.

[i]சேதிராயர் என்பவர் தமிழகத்தின் நடுநாட்டரசர்.
[ii]திருவிசைப்பா ஆசிரியர்களில் ஒருவரான சிவனடியார்
[iii]கள்ளர்களின் பட்டங்களில் ஓன்று.

தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு இடைப்பட்ட பிரதேசத்தை 'நடுநாடு'{சேதிநாடு} என்று அழைத்தனர். சேதிராயர் என்பவர்கள் தமிழ்நாட்டின் நடுநாட்டை ஆண்ட அரசகுலத்தினர் என்பது புலனாகிறது. தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை 'நடுநாடு' என்றனர். இதற்கு வேறு ஏதும் ஆதாரம் உண்டா ?
உண்டு.

சொல்ஆய்வின் படி சேதிராயர் என்பது சேதி + அரையர் என பிரிபடும்.
சேதி என்பது நாட்டின் பெயர் அரையர் என்பது அரசர் என பொருள்படும்.
ராயர் -> அரையர் -> அரைசர் -> அரசர்
இதன்படி
சேதி + அரசர் -> சேதி நாட்டு அரசர் என நேரடி பொருள் தருகிறது.

சேதிராயர் என பட்டபெயர் தரித்திரிப்போர் சேதி நாட்டு அரச வம்சத்தினர் ஆவார்கள்.
இதற்க்கு மேலும் ஆதாரம் உண்டு.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி தமிழ் பேருரையளராக பணிபுரியும் முனைவர் மு. பழனியப்பன் சில தகவல்களை தருகிறார். அதை கீழே காணலாம். " திரு விசைப்பாவின்
திரு கடைகாப்பு பதிகம்
பாடிய சேதிராயர் " ..........

" ஏறுமாறு எழில் சேதிபர் கோன் தில்லை
நாயனாரை நயந்துரை செய்தன " என்ற அடிகள்
10 ஆம் பாடலில் எடம் பெறுகின்றன.

இங்கு

சேதிராயர் " சேதிபர் கோன் " என விளிக்கப்பட்டுள்ளனர்.
இதன் வழியாக இவர் அரசர் என்பது உறுதிபடுத்தப்படுகிறது.
சேதி என்பது குல பெயர் ஆகும்.

" முதற் குலோத்துங்கன் (1070-1120) காலத்திலும் இராசராசர் சேதிராயர், இராசேந்திர மலையம்மான் என்று பட்டம் தரித்தவர்கள். திருக்கோவிலூர், கிளியூர் ஆகிய நகரங்களை தலைநகரங்களாக கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள்.

திருக்கோவிலூரில் வாழ்ந்த மெய்பொருள் நாயனாரும் சேதிநாட்டை சார்ந்தவர் என்ற பெரிய புராண குறிப்பு இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப் பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது
என முனைவர் மு. பழனியப்பன் குறிப்பிடுவது உறுதியான ஆதாரமாகும்.

ஆனால் வரலாறு என்பது
இலக்கிய ஆதாரத்தை மட்டும் எடுத்து கொள்ளவதில்லை. மேலும் நாணயம், கல்வெட்டு போன்றவற்றையும் துணை கொள்கிறது.
அதன்படி
கல்வெட்டு ஆதாரம் ஏதும் உண்டா? எனில் உண்டு.

(i ) இராசராசன், இராசேந்திரன் முதலான சோழ மன்னர்களின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளில் சேதிராயன் என்ற பெயர் காணப்படுகிறது. என நா.மு. வே. நாட்டார் அவர்கள் கள்ளர் சரித்திரத்தில் குறிப்பிடுக்கிறார்.

(ii ) விழுப்புரம் மாவட்டத்தில்
நெய்வனை என்னும் ஊரில் சிவன்கோவிலில் கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்றும்; இப்பதி "மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது கல்வெட்டு முதல் குலோத்துங்கன் சோழனின் 48 வது ஆண்டு காலத்திலிருந்து ............................... இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோவில் நடராசா மூர்த்தியை பிரதிட்டை செய்தார் என்ற குறிப்பு உள்ளது.

மேலும் சில கருத்துக்களை பார்ப்போம்.

போத்தப்பிராயர், காடவராயர், பல்லவர்(பல்லவதரையர்), தொண்டையர், சம்புவரையர், இலடராயர், மலைமான்(சேதிராயர்),
வானகோவைரையர், முனையதரையர், ஓயமானர், முத்தரயர், மழவராயர், பழுவேட்டரையர், இருக்குவேளிர் முதலிய பல்குடி சிற்றசர்கள் சோழர்களுக்கு அடங்கியவர் என்று சில குறிப்புகள் கூறுகின்றது.

ஆனால் இவர்கள் (சேதிராயர்) சூரியகுலத்தினரான சோழர் குலத்தின் கிளை குலத்தினர் ஆவார்கள்.
மேலும்

சர்க்கரை புலவரின் வழித்தோன்றலான திருவாளர், சர்க்கரை ராமசாமி புலவர் அவர்களின் வீட்டில் இருந்ததொரு மிக பழமையான ஏட்டில் ஏழு கூட்ராமும், பதினெட்டு நாடும், ஏழு ராயரும் குரப்பட்டுள்ளது.

ராயர் எழுதுவராவர்: 1 . சேதிராயர் 2 . காலிங்கராயர் 3 . பாணதிரியர் 4 . கொங்குராயர் 5 . விசையராயர் 6 . கனகராயர் 7 . கொடுமளுர்ராயர் என திரு ந. மு. வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரம் 3 ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

நாம் மேலே கண்ட கல்வெட்டு இலக்கிய ஆதாரங்களில் இருந்து சேதிராயர் என்பவர்கள் சேதிநாட்டு அரசகுலத்தினர் என்பதும் அவர்கள் சூரிய குலமான சோழர் குலத்தின் கிளைகுடியினர் என்பதும் தெளிவாகிறது.

அவர்கள் தமிழ்நாட்டில் திருகோவிலூர், மற்றும் கிளியூர் என்ற நகரங்களை தலைநகரமாக கொண்டு நாடு நாடான செதினாட்டை ஆட்சி செய்தனர் என்பதும் அவர்கள் சேதிராயர் மற்றும் மலையமான் என்ற பட்டங்களை தரித்து ஆட்சி செய்தனர் என்பது புலனாகிறது.

புகழ்பெற்ற மன்னனானகடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிகாரியும் சேதிராயர் குலத்தினரே.மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் [திருமுனைப்பாடிநாடு; சேதிநாடு; மகதநாடு; சகந்நாதநாடு]அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது.
இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.
திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று, கபிலர் குன்று" . சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.

நண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் அந்த இருகுழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது[
சங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர்
இராசராச சோழன்ராசராசனின் தாய் வானவன் மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது.

தற்போது சேதிராயர் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் தஞ்சை மாவட்டத்தில் தென்னம நாட்டிலும் , திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காட்டிலும் மிகுந்து உள்ளனர்.

(கி.மு. 2ஆம் நூற்றாண்டில் கலிங்கத்தை ஆண்ட சேதியரசன் மகாமேகவாகன காரவேலன், உதயகிரி - கந்தகிரி என்று வழங்கப்படும் மலைப்பகுதியிலுள்ள 'ஹத்தி கும்பா' (ஆனைக் குகை) என்ற குடைவரையில் தன்னுடைய வெற்றிகளைப் பறைசாற்றும் கல்வெட்டினைப் பொறித்து வைத்துள்ளான். தமிழ்நாட்டுக் கூட்டணி எனப் பொருள்படுகின்ற ‘த்ரமிர தேச சங்கதம்' பற்றி இக்கல்வெட்டுதான் குறிப்பிடுகிறது. காரவேலன் அக்கூட்டணியை முறியடித்துப் பாண்டிநாடு வரை சென்று முத்துக் குவியலைக் கவர்ந்து வந்த வீரச்செயல் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. காரவேலன், புராணங்களில் குறிப்பிடப்படும் சேதி அரச வம்சத்தவன் ஆவான். (மகாபாரதத்தில் இடம்பெறும் சிசுபாலன் சேதி வம்சத்தவன்.) இம்மன்னனுக்கும் ‘மலைய கந்த' குடியினர்க்கும் தாய் வழியிலோ, தந்தை வழியிலோ உறவு இருந்திருக்க வேண்டும். சங்ககாலத் தமிழகத்தில் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த மலையமான்களைச் சேதிபர் என்றும் மலையமான்களின் ஆட்சிப் பகுதியைச் சேதி மண்டலம் என்றும் குறிப்பிடும் வழக்கம் உண்டு. இம்மரபு சற்றுப் பிற்பட்டதாயினும் இது காரவேலனின் தமிழகப் படையெடுப்புக் காலத்தில் நிகழ்ந்த தொடர்பின் விளைவாகலாம். பாண்டி நாட்டின் மீது காரவேலன் நிகழ்த்திய தாக்குதல் சங்க இலக்கியங்களில் பதிவு பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் திருவிளையாடற் புராணத்தில் மெய்க்காட்டிட்ட படலத்தில், வடபுலத்திலிருந்து படையெடுத்து வந்த சேதிபன் என்கிற கிராதர் கோமானைக் (கிராதர் என்று மலைக் குறவர்களைக் குறிப்பிடுவதுண்டு) கொந்தக வேளாளர் குலத்தைச் சேர்ந்த பாண்டியர் படைத்தலைவன் எதிர்கொள்ள நேர்வது குறிப்பிடப்படுகிறது. இது காரவேலனின் படையெடுப்பு தொடர்பான பதிவே எனத் தோன்றுகிறது----http://www.sishri.org/kurinji.html            )

typed by Kalaivanan -  நர்த்தேவர்
written by mayadevar

கள்ளர் சரித்திரம் --பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார்

0 c
'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் 'கார்காத்த வேளாளர்கள்' காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, "கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்'' என்பதைச் சொல்லிக் குறைப்படுவதுண்டு. ஆனால் கள்ளர் குலத்தவர், நாம் நினைப்பது போல தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்கள் அரசாண்ட இனத்தவர், அவர்களும் அவர்கள் இனத்தைச் சேர்ந்த மறவர், தேவர், அரையர் ஆகியோரும் தமிழகத்தில் தொன்றுதொட்டு கோலோச்சியவர்கள் என்று இந்நூல் மூலம் தெரியவருகிறது. இந்த இனத்தவர் நாளடைவில் நலிவடைந்து, பெருமை குன்றி பின்னாட்களில் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நமக்கு அவர்களது பெருமை தெரியவில்லை. இன்று அவ்வினத்தவர் மீண்டெழுந்து சமூகத்தில் பல உயரிய பதவிகளிலும் அரசியலிலும் முன்னணிக்கு வந்துவிட்டாலும் இன்னும் அவர்களில் பலர் ஏழ்மையில் இருப்பதும், குற்றப்பரம்பரையினராகவே எண்ணப்படுவதும் குறித்து வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இனத்தைச் சேர்ந்த தொண்டைமான் பரம்பரையினர், நாம் அறிய புதுக்கோட்டை மன்னர்ர்களாக இருந்ததையும், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பரம்பரையினர் மறவர் எனவும், கள்ளர் இனத்தவரான சோழ மன்னர்களில் பலர் ஆண்ட நாடுகள் 'கள்ளர் நாடு' என்றே வழங்கப் பட்டிருப்பதையும், முத்தரையர் இனத்தவர் பல்லவ மன்னர்களாக இருந்ததையும், அரையர் என்பார் சோழ பாண்டிய நாடுகளில் தன்னாட்சி புரிந்திருப்பதையும், நாயன்மார்கள், ஆழ்வார்களிலும் இவ்வகுப்பினர் புகழ் பெற்றிருந்ததையும் - சங்க இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும், அரசாங்க கெசட்டீர்களையும் சான்று காட்டி நாட்டார் அவர்கள் 'கள்ளர்'களின் பெருமையை நிறுவுகிறார்.

இந்நூல் 1932ல் முதன் முதல் வெளியானது. இதன் முன்னுரையில் ஆசிரியர், கள்ளர் இனத்தவர்களான ஜமீன்தார்களும், பாளையக்காரர்களும் சமீபகாலம் வரை செல்வமும் செல்வாக்கும் உடையவர்களாக வாழ்ந்திருப்பதை 'இவ்வகுப்பினரைக் குறித்து எழுதினோர் யாரும் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை' என்னும் காரணத்தாலேயே இந்நூல் எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.மேலும், இன்று கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை அடைந்தவர்களாய்க்கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மையால் அத்தகையோர் சிறிதேனும் நன்மையடையத் துணை புரிதலே இதனை எழுதியதன் முதல் நோக்கம் என்றும் குறிப்பிடுகிறார்.

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமும் காணப்படும் கள்ளர் எனப்படும் பெருங்குழுவினரின் முன்னோர்கள் - பழைய நாளில் எவ்விடத்தில் எந்நிலையில் இருந்தனர், இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது, இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பன போன்றவை இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.

முன்னதாக மிகப் பழைய நாளில் இந்தியா முழுதும் பரவி இருந்த நாகர் என்ற ஒரு வகையினர் பற்றிய வரலாறு கூறப்படுகிறது. முதல் அத்தியாயத்தில், அவர்கள் வாழ்ந்த நாகநாடு பற்றியும், அங்கு வாழ்ந்த நாகர்கள், அதன் பின் நிகழ்ந்த - தமிழ்நாட்டுக்கு திராவிடர், ஆரியர் வருகை, நால்வகை வருணப் பாகுபாடு எழுந்த சூழ்நிலை பற்றியெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில், நாக பல்லவ சோழர் மற்றும் கள்ளர் பற்றிய செய்திகளை, சங்ககாலம் முதற்கொண்டு அகநானூறு, புறநானூறு போன்ற பழம்பெரும் நூல்களில் பதிவாகியுள்ளவற்றை எடுத்துக்காட்டி கள்ளர் இனத்தவரின் பல்வேறு பிரிவினரான பல்லவர், சோழர், பாண்டியர் நாடாண்ட பகுதிகள், மற்றும் அவர்களின் இனத்தவரான மறவர், தேவர், அரையர் பற்றிய விவரங்களுடன் ஆசிரியர் கவனப்படுத்துகிறார்.

இவர்களின் பொதுப் பெயரான 'அரையர்'களின் முற்கால நிலமை மூன்றாம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த வகுப்பினர் என்று வலியுறுத்திய பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களைப் பட்டியலிடுகிறார் ஆசிரியர். இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலிருந்து அறியப்படும் அப்பெயர்களாவன: கச்சிராயன், காடவராயன், காடுவெட்டி, காளிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான், நந்திராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன். இவ்வாறே வேறு சில பெயர்களும் கல்வெட்டுகளில் காணப்படுவதையும் குறிப்பிடுகிறார். நூலின் இறுதியில் 348 பட்டப் பெயர்கள் கொண்ட பட்டியல் பின்னிணைப்பாக்கத் தரப்பட்டுள்ளது.

12வது நூற்றாண்டி எழுந்த தமிழ் நூல்களில் இருந்தும் இன்னோரின் உயர்ந்த நிலை வெளிப் படுவதை, முதற் குலோத்துங்கனுடைய முதலமைச்சராக இருந்த கருணாகரத் தொண்டைமானை உதாரணமாகக் காட்டி நிறுவுகிறார். இனி, கள்ளர் சிற்றரசர்களாய் இருந்த காலத்தில் பல இடங்களில் அரண்கள் கட்டியதையும் பட்டியலிடுகிறார்.

நான்காம் அத்தியாயம் இக்குலத்தாரில், அரசரும் குறுநில மன்னருமாய் உள்ளாரின் வரலாறு காட்டப்படுகிறது. இவற்றில் 1686 முதல் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான்களின் பரம்பரையினரின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகள், 'நாடு, நாட்டுக்கூட்டம்,நாடுகாவல்' என்னும் ஐந்தாம் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழரது நாடு தமிழ்நாடு என வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர் மிகுந்துள்ள நாடு கள்ளர்நாடு, எனவும் கள்ளகம் எனவும் வழங்கப் பட்டுள்ளது. சோழ நாடு, தொண்டை நாடு, திருமுனைப்பாடிநாடு, கொங்கு நாடுகள் ஆகியவை பல மண்டலங்களாகவும், கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டிருக்கின்றன. மதுரைக் கள்ளர்நாடுகள் என பத்து நாடுகள் சொல்லப்பட்டுள்ளன. கள்ளர் நாடுகளில் கிராம பஞ்சாயத்து வழக்கமாக இருந்ததை அவர்களது ஆட்சிமுறை பற்றிய தஞ்சை மாவட்ட கெசட்டை ஆதாரம் காட்டி ஆசிரியர் விளக்குகிறார். அடுத்து கள்ளர்
களின் நாடுகாவலின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்.

ஆறாம் அத்தியாயமான கடைசிப்பகுதி, கள்ளர் குலத்தில் புகழ் பெற்றிருந்த பக்தர்கள், ஞானிகள், புலவர்கள், வள்ளல்கள் பற்றி பல அரிய தகவல்களைத் தருகிறது. பெரிய புராணத்தில் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் கூற்றுவர், நரசிங்கமுனையரையர், ஐயடிகள் காடவர்கோன், மெய்ப்பொருளார் ஆகிய ஐவரும் இக்குலத்துக் குறுநிலமன்னராவர். திருமால் அடியவரான திருமங்கை ஆழ்வாரும் இவ்வகுப்பினர் தான். புலவர்கள் பலராலும் புகழ்ந்தேற்றப்பட்ட வள்ளல் அரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத ராசாளியாரும் தமிழ்ப்புலமை வாய்ந்த பெண்மணிகள் சிலரும் இவ்வகுப்பினரின் பெருமைக்குக் காரணமாவர்.

இவ்வினத்து ஜமீன்தார்களும் பெருந்தனக்காரர்களும் பண்டுதொட்டுச் செய்த அறச் செயல்கள் பலவாகும்.கோயில்களுக்குத் திருப்பணி செய்தும், அன்ன சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்தும், குளங்கள் வெட்டியும், தரும வைத்தியசாலை அமைத்தும் போற்றுதலுக்கு உரியவராக இருந்துள்ளனர். போர் புரிதலிலும் இவ்வகுபினர் விருப்பமுடையோராய் இருந்து வீரச்செயல்கள் பல புரிந்துள்ளனர்.

இவ்வளவு சிறப்பும் புகழும் பெற்று வாழ்ந்தவர்களின் இன்றைய நிலை குறித்து, இவ்வினத்தைச் சேர்ந்தவரான நூலாசிரியர் நாட்டார் அவர்கள் கவலையும் வருத்தமும் தெரிவிக்கிறார். கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும், காவல் மற்றும் நீதித் துறைகளில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களாகவும் பலர் இருந்தபோதும், இவ்வினத்தவரில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர், பொருளிழந்து வாழ்க்கையை நடத்த முடியாதபடி தத்தளிப்ப வராய் இருப்பதையும். ஆடம்பர வாழ்க்கையாலும், மதுவுக்கும் தீயபழக்ககங்களுக்கும் அடிமையாகி சீரழிந்திருப் பதையும் வேதனையோடு குறிப்பிடுகிறார். இவர்கள் மீண்டும் பழைய உன்னத நிலைபெற சில யோசனைகளை தன் அவாவாகவும் சொல்கிறார்.

1932ன் வெளியான இந்நூலின் மறுபிரசுரத்தின் பதிப்பாளரான திரு.கோ.ராஜாராம் அவர்கள் தனது பதிப்புரையில் 'ஒரு சமூகத்தின் உபக்குழுக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக சாதியைக் காணும் முயற்சியை இந்த மறுவெளியீடு தொடங்கி வைக்கும் என்று நம்புகிறோம். இந்தியச் சமூகத்தில் மட்டுமல்லாமல், ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற சாதி அமைப்பைப் பற்றியும், கீழைநாடுகளின் சமூக அமைப்பு பற்றியும் மேலும் ஆய்வுகள் வளர இந்நூல் ஒரு புதிய தொடக்கமாய் அமையும் என நம்புகிறோம்' என்கிறார். நூலை வாசித்து முடித்த
பின்னர் நமக்கும் அந்த நம்பிக்கை ஏற்படவே செய்யும். 0


நூல்: கள்ளர் சரித்திரம்
ஆசிரியர்: நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை
thanks to http://www.thevarhistory.webs.com/

“மருத்துவ அகராதி தந்த மேதை - ஒரு துன்பியல் நாடகம்”

0 c
“மருத்துவ அகராதி தந்த மேதை - ஒரு துன்பியல் நாடகம்” என்ற தலைப்பில் சாம்பசிவம் பிள்ளை பற்றிய ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களின் கட்டுரை (காலச்சுவடு ஜனவரி 2007) வெளிவந்துள்ளது. தஞ்சை வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை என்ற டி.வி. சாம்பசிவம் பிள்ளை என அவர் முழுப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மண்ணையார்’ (மன்னையார்) என்பது தஞ்சாவூர்ப் பகுதிக் கள்ளர் சமூகத்தவருள் ஒரு பிரிவினரின் குடும்பப் பெயராகும். சாம்பசிவம் பிள்ளை தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடியைச் சேர்ந்த வில்வையா மன்னையாருக்கும் மனோன்மணி அம்மாளுக்கும் பிறந்தவர் என்ற தகவல் கட்டுரையாசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தமிழறிஞரும் சென்னை நகரப் போலிஸ் துணை ஆணையாளருமான பவானந்தம் பிள்ளையின் சகோதரி மகள் துரைக்கண்ணு அம்மையாரை 1903இல் மணந்துகொண்டார் எனவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாம்பசிவம் அவர்களுக்கு பிள்ளை பட்டம் அகம்படியர் அல்லது வேளாளர் குலத்தவருடனான மண உறவால் வந்திருக்கலாம். அல்லது, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய சமூகச் சூழலுக்குத்தக புனைந்துகொண்ட பட்டமாக இருக்கலாம்.

இவர் 1931ஆம் ஆண்டில் மருத்துவக் கலைச்சொல் அகராதியை வெளியிட்டுள்ளார் என்றும், சாம்பசிவம் பிள்ளையே ஏற்படுத்திக்கொண்ட The Research Institute of Siddhar’s Science, Madras என்ற பெயரளவிலான நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார் என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகராதியின் இரண்டு தொகுதிகள்1938இல் ரூபாய் 12,000க்கும் அதிகமான செலவில் வெளிவந்துள்ளன. 1949இல் சென்னை மாநில அரசு 5,000 ரூபாய் உதவித் தொகையும் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு வீடும் வழங்கிற்று என்ற விவரமும் கட்டுரையாசிரியால் தரப்பட்டுள்ளது. மூன்றாம் தொகுதி பாதி அச்சான நிலையில் 1953இல் சாம்பசிவம் பிள்ளை காலமானார். 1966இல் மறைமலை அடிகள் நூல் நிலைய நிறுவனர் வ. சுப்பையா பிள்ளை சென்னை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அகராதியின் கையெழுத்துப் படிவங்களையும், அச்சிட்ட படிவங்களையும் எடுத்து வந்ததாகவும் அவை 1972இல் அண்ணா நகர் சித்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

சாம்பசிவம் பிள்ளையின் கருத்தியல் பின்புலம் தெளிவாக வெளிப்படவில்லை. இவருடைய குடும்பத்தில் எவருக்கும் முறையான மருத்துவப் பயிற்சி இருந்ததாகவும் தெரியவில்லை. காவல் துறை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் இவர். இவருடைய பாட்டனார் எழுதி வைத்திருந்த சில பழைய மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்தன என 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் பிள்ளை குறிப்பிட்டுள்ளதாகவும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சாம்பசிவம் பிள்ளையின் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டுக் கட்டப்பட்ட பிரதிகளைக் கட்டுரை ஆசிரியர் கண்ணுற இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழப்பங்களையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கீழ்வரும் ஐயங்கள் எழுகின்றன:

சற்றேறக்குறைய சாம்பசிவம் பிள்ளையின் சமகாலத்தில் (1859-1919) தஞ்சையில் வாழ்ந்தவரும், கர்ணாமிர்த சாகரம் என்ற பெயரில் இசைநூல் எழுதி வெளியிட்டவருமான ஆபிரகாம் பண்டிதர் என்ற சான்றோர் குலத்தவர் (நாடார்) சிறந்த மருத்துவராகவும் இருந்துள்ளார். பண்டிதர் என்ற பட்டப்பெயர் கூட அவருடைய குலப் பட்டப்பெயர் அல்ல. தமிழ்ப் பண்டிதர் என்பதையும், மருத்துவ நிபுணர் என்பதையும் குறிப்பதற்குச் சூட்டப்பட்ட பட்டமாகும். அவருடைய குடும்பத் தயாரிப்புகளான மருந்துகள் இன்றைக்கும் தஞ்சை பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவத் துறைப் பிரிவுகளான எலும்பு முறிவுச் சிகிச்சை, வாதக் கோளாறுக்கான சிகிச்சை, வர்ம சிகிச்சை போன்றவற்றில் சான்றோர் குலத்தவர் தன்னிகர் அற்றவர்களாக - குறிப்பாகத் தென் மாவட்டங்களில் - இருப்பது தமிழகம் அறிந்த செய்தியே. ஆபிரகாம் பண்டிதரின் பூர்விகம் தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரை ஆகும். இவருடைய பரம்பரையே சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற பரம்பரையாகும். மேலும், இவர் 1879ஆம் ஆண்டில் சுருளி மலைக்குச் சென்று நேரடியாக மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சுருளிமலையில் கருணாநந்த ரிஷி என்பவரிடம் உபதேசம் பெற்று பல்வேறு சிகிச்சை முறைகளிலும் கைதேர்ந்தவராய் ஆனார். தஞ்சைக்குத் திரும்பி லேடி நேப்பியர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக பணிபுரிந்தார். இவருடைய மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்தார்.

1890ஆம் ஆண்டில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தஞ்சைப் புறநகரில் ஒரு நிலத்தை வாங்கி மூலிகைத் தோட்டம் வைத்து, அதற்குக் கருணாநந்தபுரம் என்று பெயரிட்டார். தஞ்சையில் தாம் வசித்த வீட்டில் வைத்திய சாலை ஒன்றை நிறுவினார். இங்கு தயாரிக்கப்பட்ட கோரோசனை மாத்திரைகள் உலகப்புகழ் பெற்றன. அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநர் சர். ஆர்தர் லாலி இங்கு வருகை புரிந்து இவரைப் பாராட்டியுள்ளார். 1909ஆம் ஆண்டு ராவ் சாஹிப் பட்டம் கிடைத்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஆபிரகாம் பண்டிதரின் நுண்மாண் நுழைபுலம் சாம்பசிவம் பிள்ளையின் மருத்துவ அகராதித் தொகுப்புப் பணிக்குப் பின்புலமாக இருந்திருக்குமோ என்ற ஐயம் எழுகின்றது.

பண்டிதர் 1879ஆம் ஆண்டுக்கு முன்னரே திண்டுக்கல்லில் சடையாண்டி பட்டர் என்பவரிடம் இசை கற்றார். கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் போன்ற இசை மேதைகளுடன் விவாதிக்குமளவுக்கும், அடிப்படையான கேள்விகளை எழுப்புமளவுக்கும் இசை ஞானம் பெற்றுத் திகழ்ந்தார். இராமநாதபுரம் சேதுபதியைப் புரவலராகக் கொண்ட இசைச்சங்கம் தோற்றுவிக்கப்படக் காரணமாக இருந்தார். 1916ஆம் ஆண்டில் பரோடாவில் இசை குறித்த மாநாடு நடப்பதற்குப் பண்டிதர்தான் உந்து சக்தியாகத் திகழ்ந்தார். அம்மாநாட்டில் பண்டிதர் ஆய்வுக்கட்டுரை வாசித்ததோடு, பண்டிதரின் மகள் மரகதவல்லி அம்மாள் ஸ்வரங்கள் பற்றிய செயல்முறை விளக்கமளித்தார். பண்டிதரின் பேரன் தனபாண்டியன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

தமிழிசை தொடர்பான ஆய்வுகளிலும், பிரசாரங்களிலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு எவ்வாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறதோ, அது போன்றே சித்த மருத்துவக் கலைச் சொல் உருவாக்கத்திலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு திட்டமிட்டு இருட்டடிக்கப்பட்டிருக்கலாம்.

சாம்பசிவம் மன்னையார் பிள்ளை என்ற பட்டம் போட்டுக்கொண்டதே கூட வேளாளருடைய ஆதிக்கம் நிலவிய 19-20ஆம் நூற்றாண்டு சமூகச் சூழலின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் எனத் தோன்றுகிறது. தமிழக வேளாளர் சமூகத்தவர் தமிழின அடையாளம் அனைத்தையும் தங்களுக்கும், தங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டவர்களும் மட்டுமே உரியனவாகக் காட்டிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆபிரகாம் பண்டிதர் போன்ற சான்றோர் சமூகத்தவரின் பணியையும் பங்களிப்பையும் அங்கீகரிப்பது இவர்களுக்கு என்றைக்குமே உவப்பானதாக இருந்ததில்லை. இது தீவிரமான ஆய்வுக்குரிய ஒரு விஷயம் ஆகும்.

What they published...
எதிர்வினை
சான்றோர் குலப் பண்டிதரும் சாம்பசிவம் பிள்ளையும்: சில கேள்விகள்
அ. கணேசன்

“மருத்துவ அகராதி தந்த மேதை - ஒரு துன்பியல் நாடகம்” என்ற தலைப்பில் சாம்பசிவம் பிள்ளை பற்றிய ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்களின் கட்டுரை (காலச்சுவடு ஜனவரி 2007) வெளிவந்துள்ளது. தஞ்சை வில்வையா மன்னையார் சாம்பசிவம் பிள்ளை என்ற டி.வி. சாம்பசிவம் பிள்ளை என அவர் முழுப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மண்ணையார்’ (மன்னையார்) என்பது தஞ்சாவூர்ப் பகுதிக் கள்ளர் சமூகத்தவருள் ஒரு பிரிவினரின் குடும்பப் பெயராகும். சாம்பசிவம் பிள்ளை தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்திலுள்ள கம்மந்தங்குடியைச் சேர்ந்த வில்வையா மன்னையாருக்கும் மனோன்மணி அம்மாளுக்கும் பிறந்தவர் என்ற தகவல் கட்டுரையாசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தமிழறிஞரும் சென்னை நகரப் போலிஸ் துணை ஆணையாளருமான பவானந்தம் பிள்ளையின் சகோதரி மகள் துரைக்கண்ணு அம்மையாரை 1903இல் மணந்துகொண்டார் எனவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாம்பசிவம் அவர்களுக்கு பிள்ளை பட்டம் அகம்படியர் அல்லது வேளாளர் குலத்தவருடனான மண உறவால் வந்திருக்கலாம். அல்லது, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய சமூகச் சூழலுக்குத்தக புனைந்துகொண்ட பட்டமாக இருக்கலாம்.

இவர் 1931ஆம் ஆண்டில் மருத்துவக் கலைச்சொல் அகராதியை வெளியிட்டுள்ளார் என்றும், சாம்பசிவம் பிள்ளையே ஏற்படுத்திக்கொண்ட The Research Institute of Siddhar’s Science, Madras என்ற பெயரளவிலான நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார் என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகராதியின் இரண்டு தொகுதிகள்1938இல் ரூபாய் 12,000க்கும் அதிகமான செலவில் வெளிவந்துள்ளன. 1949இல் சென்னை மாநில அரசு 5,000 ரூபாய் உதவித் தொகையும் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு வீடும் வழங்கிற்று என்ற விவரமும் கட்டுரையாசிரியால் தரப்பட்டுள்ளது. மூன்றாம் தொகுதி பாதி அச்சான நிலையில் 1953இல் சாம்பசிவம் பிள்ளை காலமானார். 1966இல் மறைமலை அடிகள் நூல் நிலைய நிறுவனர் வ. சுப்பையா பிள்ளை சென்னை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அகராதியின் கையெழுத்துப் படிவங்களையும், அச்சிட்ட படிவங்களையும் எடுத்து வந்ததாகவும் அவை 1972இல் அண்ணா நகர் சித்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

சாம்பசிவம் பிள்ளையின் கருத்தியல் பின்புலம் தெளிவாக வெளிப்படவில்லை. இவருடைய குடும்பத்தில் எவருக்கும் முறையான மருத்துவப் பயிற்சி இருந்ததாகவும் தெரியவில்லை. காவல் துறை ஆய்வாளராகப் பணிபுரிந்தவர் இவர். இவருடைய பாட்டனார் எழுதி வைத்திருந்த சில பழைய மருத்துவச் சுவடிகளே தமது அகராதிக்கு வித்தாக இருந்தன என 1931இல் அவர் வெளியிட்ட முதல் சஞ்சிகையின் முன்னுரையில் சாம்பசிவம் பிள்ளை குறிப்பிட்டுள்ளதாகவும் கட்டுரையாசிரியர் குறிப்பிட்டுள்ளார். சாம்பசிவம் பிள்ளையின் காலத்தில் முழுவதுமாக அச்சிடப்பட்டுக் கட்டப்பட்ட பிரதிகளைக் கட்டுரை ஆசிரியர் கண்ணுற இயலவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழப்பங்களையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது கீழ்வரும் ஐயங்கள் எழுகின்றன:

சற்றேறக்குறைய சாம்பசிவம் பிள்ளையின் சமகாலத்தில் (1859-1919) தஞ்சையில் வாழ்ந்தவரும், கர்ணாமிர்த சாகரம் என்ற பெயரில் இசைநூல் எழுதி வெளியிட்டவருமான ஆபிரகாம் பண்டிதர் என்ற சான்றோர் குலத்தவர் (நாடார்) சிறந்த மருத்துவராகவும் இருந்துள்ளார். பண்டிதர் என்ற பட்டப்பெயர் கூட அவருடைய குலப் பட்டப்பெயர் அல்ல. தமிழ்ப் பண்டிதர் என்பதையும், மருத்துவ நிபுணர் என்பதையும் குறிப்பதற்குச் சூட்டப்பட்ட பட்டமாகும். அவருடைய குடும்பத் தயாரிப்புகளான மருந்துகள் இன்றைக்கும் தஞ்சை பகுதியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருத்துவத் துறைப் பிரிவுகளான எலும்பு முறிவுச் சிகிச்சை, வாதக் கோளாறுக்கான சிகிச்சை, வர்ம சிகிச்சை போன்றவற்றில் சான்றோர் குலத்தவர் தன்னிகர் அற்றவர்களாக - குறிப்பாகத் தென் மாவட்டங்களில் - இருப்பது தமிழகம் அறிந்த செய்தியே. ஆபிரகாம் பண்டிதரின் பூர்விகம் தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரை ஆகும். இவருடைய பரம்பரையே சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற பரம்பரையாகும். மேலும், இவர் 1879ஆம் ஆண்டில் சுருளி மலைக்குச் சென்று நேரடியாக மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். சுருளிமலையில் கருணாநந்த ரிஷி என்பவரிடம் உபதேசம் பெற்று பல்வேறு சிகிச்சை முறைகளிலும் கைதேர்ந்தவராய் ஆனார். தஞ்சைக்குத் திரும்பி லேடி நேப்பியர் பள்ளியில் தமிழ்ப் பண்டிதராக பணிபுரிந்தார். இவருடைய மனைவி ஞானவடிவு பொன்னம்மாள் அப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்தார்.

1890ஆம் ஆண்டில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தஞ்சைப் புறநகரில் ஒரு நிலத்தை வாங்கி மூலிகைத் தோட்டம் வைத்து, அதற்குக் கருணாநந்தபுரம் என்று பெயரிட்டார். தஞ்சையில் தாம் வசித்த வீட்டில் வைத்திய சாலை ஒன்றை நிறுவினார். இங்கு தயாரிக்கப்பட்ட கோரோசனை மாத்திரைகள் உலகப்புகழ் பெற்றன. அப்போதைய மதராஸ் மாகாண ஆளுநர் சர். ஆர்தர் லாலி இங்கு வருகை புரிந்து இவரைப் பாராட்டியுள்ளார். 1909ஆம் ஆண்டு ராவ் சாஹிப் பட்டம் கிடைத்தது. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஆபிரகாம் பண்டிதரின் நுண்மாண் நுழைபுலம் சாம்பசிவம் பிள்ளையின் மருத்துவ அகராதித் தொகுப்புப் பணிக்குப் பின்புலமாக இருந்திருக்குமோ என்ற ஐயம் எழுகின்றது.

பண்டிதர் 1879ஆம் ஆண்டுக்கு முன்னரே திண்டுக்கல்லில் சடையாண்டி பட்டர் என்பவரிடம் இசை கற்றார். கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயர், அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் போன்ற இசை மேதைகளுடன் விவாதிக்குமளவுக்கும், அடிப்படையான கேள்விகளை எழுப்புமளவுக்கும் இசை ஞானம் பெற்றுத் திகழ்ந்தார். இராமநாதபுரம் சேதுபதியைப் புரவலராகக் கொண்ட இசைச்சங்கம் தோற்றுவிக்கப்படக் காரணமாக இருந்தார். 1916ஆம் ஆண்டில் பரோடாவில் இசை குறித்த மாநாடு நடப்பதற்குப் பண்டிதர்தான் உந்து சக்தியாகத் திகழ்ந்தார். அம்மாநாட்டில் பண்டிதர் ஆய்வுக்கட்டுரை வாசித்ததோடு, பண்டிதரின் மகள் மரகதவல்லி அம்மாள் ஸ்வரங்கள் பற்றிய செயல்முறை விளக்கமளித்தார். பண்டிதரின் பேரன் தனபாண்டியன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.

தமிழிசை தொடர்பான ஆய்வுகளிலும், பிரசாரங்களிலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு எவ்வாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறதோ, அது போன்றே சித்த மருத்துவக் கலைச் சொல் உருவாக்கத்திலும் ஆபிரகாம் பண்டிதரின் பங்களிப்பு திட்டமிட்டு இருட்டடிக்கப்பட்டிருக்கலாம்.

சாம்பசிவம் மன்னையார் பிள்ளை என்ற பட்டம் போட்டுக்கொண்டதே கூட வேளாளருடைய ஆதிக்கம் நிலவிய 19-20ஆம் நூற்றாண்டு சமூகச் சூழலின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் எனத் தோன்றுகிறது. தமிழக வேளாளர் சமூகத்தவர் தமிழின அடையாளம் அனைத்தையும் தங்களுக்கும், தங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டவர்களும் மட்டுமே உரியனவாகக் காட்டிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆபிரகாம் பண்டிதர் போன்ற சான்றோர் சமூகத்தவரின் பணியையும் பங்களிப்பையும் அங்கீகரிப்பது இவர்களுக்கு என்றைக்குமே உவப்பானதாக இருந்ததில்லை. இது தீவிரமான ஆய்வுக்குரிய ஒரு விஷயம் ஆகும்.

http://www.sishri.org/kc.html

(Courtesy: Kalachchuvadu April 2007)

களவியல் காரிகை

0 c

‘எல்லாச் சொத்தும் களவே’ என்றார் சோசலிச முன்னோடி புரூதோன். ‘சொத்துரிமைக்கு எதிரான மிகப் பெரிய குற்றம் சொத்தில்லாமல் இருப்பதுதான்’ என்றார் பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றாசிரியர் இ. பி. தாம்சன். ஆனால் களவுக்குப் பின்பும் வர்க்கம் உண்டு. தாதனூர்க்காரர்களின் எல்லாக் களவுகளையும் காவியப்படுத்தியுள்ளார் சு.வெங்கடேசன். தாது வருஷப் பஞ்சத்தின்போது தானிய வண்டிகளைப் பசித்த ஏழை மக்கள் வழிமறிக்கிறார்கள். பதுக்கல் வியாபாரிகளின் சார்பாகத் தாதனூர் காவல்காரர்கள் வண்டிகளுக்குப் பாதுகாப்புத் தருகிறார்கள்.குடியானவன் உழைப்பில் உருவான ஏழு மாதப் பயிரை இரவோடிரவாகக் கதிர் கசக்குகிறார்கள். காவல் கூலி தண்டுவது போதாதென்று துப்புக்கூலியும் வாங்குகிறார்கள். ஆனால் நாவலாசிரியரின் சார்பு முழுவதும் உழைக்கும் மக்களுக்கு எதிராக இருக்கிறது. காவல்காரர்களின் அக்கிரமங்களைத் தாங்க முடியாமல் மூன்று மாவட்டங்களில் விவசாய வெகுமக்கள் ‘பண்டு’ திரட்டிக் கிளர்ந்தெழுகிறார்கள். இந்த முற்போக்கு நாவல் இவ்வெழுச்சியைக் கொச்சைப்படுத்துகிறது.

1899இல் நாடார் மக்களுக்கு எதிராக நடந்த சிவகாசிக் கொள்ளையில் மேலநாட்டுக் கள்ளர்கள் முக்கியப் பங்காற்றினர் என்பது வரலாறு. மதுரைக்கு வெளியே அமைந்த வண்டிப் பேட்டைக்குத் தாதனூர்க்காரர்கள் காவல் காத்ததைச் சொல்லும் ‘காவல் கோட்டம்’ சிவகாசிக் கொள்ளையைப் பற்றி மௌனம் சாதிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது.

தாதனூரின் ஒவ்வொரு நபரும், பெரியாம்பிளையும், கிழவிகளும்- புத்திக்கூர்மை குறைந்த மங்குணிவரை - தனித்த அடையாளங்களோடு விளங்கும் இந்த நாவலில் சேவைச் சாதிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் அடையாளமுள்ள மனிதர்களாக இல்லை - அதே வேளையில், வேல. ராமமூர்த்தியின் ‘கூட்டாஞ்சோறு’ நாவலில் உள்ளதுபோல் சுயமற்றவர்களாகவும் இல்லை என்பதைச் சொல்ல வேண்டும். பிறரின் வன்முறை கொடூரமாகச் சித்தரிக்கப்படும் இந்நாவலில், கள்ளரின் வன்முறை இயல்பானதாகவும் கொண்டாட்டத்திற்குரியதாகவும் காட்டப்படுகிறது.

இந்த நாவலும் இதன் ஆசிரியரும் இக்கேள்விகளை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றனர்http://www.kalachuvadu.com/issue-110/page70.asp

மதுரை:

0 c
மதுரை:

கீரிப்பட்டியில், ஊர் மக்கள் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப் போடாத 15 தலித் குடும்பத்தினர் மீதுவிதிக்கப்பட்ட தடைகளை பிறமலைக் கள்ளர் சமுதாயத்தினர் வாபஸ் பெற்றுள்ளனர்.

மதுரை மாவட்டம் கீரிப்பட்டி தலித் ஊராட்சித் தலைவர் பதவிக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பெரும்பான்மையானபிறமலைக் கள்ளர் சமுதாயத்தினர், ஊர் மக்கள் சார்பில் அழகுமலை என்பவரை நிறுத்தினர். அவரை எதிர்த்து விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் பூங்கொடி என்பவர் போட்டியிட்டார்.


பூங்கொடிக்கு தலித்கள் யாரும் ஓட்டுப் போடக் கூடாது என்று கள்ளர் சமூகத்தினர் எச்சரித்திருந்தனர். இருப்பினும் 15குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் பூங்கொடிக்கு ஓட்டுப் போட்டதால் கள்ளர் சமூகத்தினர் ஆத்திரமடைந்தனர்.

15 குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். அவர்களுக்கு அசி, பருப்பு, காய்கறி, பால், தண்ணீர் போன்றவற்றைகொடுக்கக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது. இதனால் கீரிப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தடை குறித்து சுப்பன் என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தார்.இதையடுத்து மாவட்ட வருவாய் வட்டாட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் டிஎஸ்பி கோவிந்தராஜ் ஆகியோர்கீரிப்பட்டிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

கள்ளர் சமுதாயத் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தினர். தடையுத்தரவை வாபஸ் பெறுமாறு கோரினர். மேலும் கீரிப்பட்டியில்உள்ள கடைக்காரர்கள், டீக்கடை உரிமையாளர்களை சந்தித்து தடை உத்தரவை பின்பற்ற மாட்டோம் என்று எழுதி வாங்கினர்.

அதிகாரிகளின் வலியுறுத்தலைத் தொடர்ந்து தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக கள்ளர் சமுதாயத்தினர் தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக அதிகாரிகளிடம் எழுத்துப் பூர்வமாகவும் உறுதிமொழி அளித்துள்ளனர்.

கீரிப்பட்டியில் தலித் சமுதாயத்தினர் மீது விதிக்கப்பட்ட தடைகள் குறித்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுந்தரேசன்கூறுகையில், தலித் குடும்பங்களை ஒதுக்கி வைத்தது உண்மை என்றால் அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும். இதுபோன்ற தவறுகளுக்கு தூண்டுதலாக இருப்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.http://thatstamil.oneindia.mobi/news/2005/04/27/27233.html
0 c
இத்தனை மலைகள், குன்றுகள்; சிக்கலான அமைப்புள்ள கணவாய்கள்; குடம்புகள். இந்த வசதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கலாமா? பயன்படுத்தப்பட்டன. பல நூற்றாண்டுகளாகக் கள்ளர் கூட்டங்கள் அழகர்மலையில் இருந்தன. வரலாற்றில் பல சமயங்களில் அந்தக் கூட்டங்கள் பாண்டியர்களின் படைகளாக இருந்தன. வடக்கிலிருந்து படையெடுப்புகள் நிகழும். எதிரியின் படைகள் வரும் பாதைகள் சில இருந்தன. அவற்றில் ஒன்று அழகர் மலைக்குக் கிழக்கே இருக்கிறது. அங்கெல்லாம் ஒரு காலத்தில் பெரும் காடுகள் இருந்தன. எத்தனை பெரிய படை வந்தாலும் அழகர்மலையிலிருந்து தாக்குதல் நடத்தமுடியும். சிறிய படைகளை வைத்துப் பெரிய படைகளைத் தேக்கலாம். விரட்டிவந்தால் ஒளிந்து கொள்ளலாம். ஆனால் அவ்வப்போது கள்ளர்கூட்டம் கொள்ளையடிப்பில் ஈடுபட்டது. ஏராளமான எண்ணிக்கை. கரவடம் என்னும் கலை கைவந்தவர்கள். குதிரை முதலியவற்றில் ஏறிக்கொண்டு தீவட்டிகளை ஏந்திக்கொண்டு இரவில் ஊர்களைச் சூறையாடி, கொள்ளையடித்து, நெருப்பு வைத்துவிடுவார்கள். இவ்வகையான கொள்ளையைத் 'தீவட்டிக்கொள்ளை' என்பார்கள். சிறு சிறு கூட்டங்களாகச் சென்று வீடுகளில் கன்னம் வைத்தல், வழிப்பறி செய்தல் போன்ற பலமாதிரியான கொள்ளை, கொலை, திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டார்கள். நாயக்கர்கள் காலத்தில் இவர்களில் தொல்லை அதிகம். அவர்களுக்கு திறமையான தலைவன் கிடைத்துவிட்டால் ரொம்பவும் Organised ஆகவும் Systematic ஆகவும் கொள்ளைகளை நடத்துவார்கள். கள்ளர்களின் தொல்லை திருமலை நாயக்கர் காலத்தில் மிக அதிகமாக இருந்தது. அவர்களின் தலைவன் மிகவும் திறமையும் மார்ஷியல் கலைகளும் கண்கட்டு வித்தைகள், மாயாஜாலம், செப்பிடுவித்தைகள் போன்றவையும் கைவரப்பெற்ற சங்கிலிக்கருப்பன். சங்கிலிக்கருப்பருக்கு இன்னும் பல கள்ளர் கூட்டங்களுடன் தொடர்பு இருந்தது. இந்தத் தொல்லையை ஒழிப்பதற்காக வீரன் என்னும் பெரிய வீரர் முன்வந்தார். அவர் மிக எளிய குடியைச் சேர்ந்தவர். ஆனால் தம்முடைய மார்ஷியல் கலை ஆற்றலால் பெரும் வீரராகத் திகழ்ந்தவர். அவருடைய பெருமுயற்சியால் சங்கிலிக்கருப்பனின் கூட்டத்தையும் ஒழித்து சங்கிலிக் கருப்பனையும் தாமே கொன்றுவிட்டார். ஆனால் பொறாமை கொண்ட திருமலை நாயக்கரின் நன்றி மறந்த தன்மையால் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டு தெய்வநிலையைத் தம் இரு மனைவியருடனும் எய்தினார். வண்டியூர் மாரியம்மனே நேரில் திருமலை நாயக்கரிடம் வந்து முருகனின் அம்சமாக உள்ளவர் வீரன் என்று அறிவுறுத்தினாள். அதன் பின்னர் மீனாட்சியம்மனுடைய சன்னிதிக்குப் போகும் வாயிலாகிய அஷ்டசக்தி மண்டபத்தின் வடக்குப் பக்கத்தில் தம் இரு மனைவியருடனும் ஒரு விசேஷ சன்னிதியில் வழிபடப்பட்டுவருகிறார். மதுரையைக் கள்ளர் தொல்லையிலிருந்து காத்த வீர்ரர் என்பதால் அவரை 'மதுரை வீரன்' என்றே அழைக்கலானார்கள். சங்கிலிக்கருப்பரும் தெய்வமாக வணங்கப் படுகிறார். அழகர்மலைக் கள்ளர்களின் தொல்லை ஒடுக்கப்பட்டாலும் அது அறவே ஒழியவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியில் அது கட்டுப்பாட்டிற்கு வந்தது. நத்தம் என்னும் ஊரிலிருந்து மதுரைக்கு வரும் பாதை ஒன்று இருக்கிறது. அது அழகர் மலைக் கணவாய்களில் ஒன்றின் வழியாக வரும். அந்த சாலை தரைமட்டத்திலிருந்து சில நூறு அடிகள் உயரத்திற்கு மலையின்மீது ஏறி இறங்கும். நத்தத்திலிருந்து வரும்போது அந்த சாலையிலிருந்து மதுரையும் அதன் சமவெளியும் நன்கு தெரியும். மீனாட்சியம்மன் கோயிலின் பதினான்கு கோபுரங்களும் பெருமாள் கோயிலின் கோபுரமும் திவ்வியமாகத் தெரியும். அது ஒரு மறக்கமுடியாத Panoramic View. இப்போதும் மனக்கண்ணில் தோன்றுகிறது. இப்பேற்பட்ட அழகர்மலையில் பல பிலங்களும் குகைகளும் குடம்புகளும் உண்டு என்று சொன்னேனல்லவா. அழகர்மலையில் எப்போதுமே சித்தர்களின் நடமாட்டம் உண்டு. பல சித்தர்களின் இருப்பு அதுதான். அதுமட்டுமல்லாது பல தெய்வங்களின் இருப்பிடமும் அது. யட்சிணிகள், யோகினிகள், முனிகள் போன்ற கணத்தாரும் நடமாடும் இடம். சித்தர்களின் இருப்பிடமாக அது திகழ்வதால் அங்கு சித்தபுருஷரான பாலய சுவாமிகள் தம் தர்மபத்தினியுடன் தங்கியிருந்தார். அன்புடன் ஜெயபாரதி http://www.treasurehouseofagathiyar.net/39600/39621.htm

குற்றப்பரம்பரை சட்டம் - தோற்றம்

0 c
தக்காங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால்
ஓத்தாங்கு ஒறுப்பது வேந்து (குறள்: 561)

19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பரவலாக, வங்காளத்தில் குறிப்பாக பெருகிவந்த குற்றங்களை அப்போதைய ஆங்கில அரசு ஆராயத் தொடங்கியது.

குற்றங்களின் தன்மை, இடம், எண்ணிக்கை, குற்றவாளிகளின் குணாதிசியங்கள், அவர்களுக்கு இடையே ஆன தொடர்புகள், ஒற்றுமைகள் ஆகியவற்றை ஆங்கிலேயர் கவனமாக குறிப்பெடுத்தனர்.

பல மாறுபட்ட தேசிய மொழிவாரி இனங்களின் கூட்டுகலவையாக விளங்கிய இந்தியா அவர்களுக்கு புரியாத புதிராகவே இருந்தது.
இருப்பினும் தங்களின் ஆராய்ச்சி முடிவில் தகீ (Thuggee/Thug) போன்ற குறிப்பிட்ட சில இன மக்கள் குற்றங்களின் முக்கிய காரணியாக இருப்பதை கண்டுபிடித்தனர்.
தகீ (thuggee) இன மக்கள் நாடோடி கொள்ளையர்களாக 17, 18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தனர்.

வியாபாரிகள், அதிலும் குறிப்பாக நெடுந்தொலைவு நடந்தும், குதிரையிலும் செல்லும் வியாபாரிகளே இவர்களின் முக்கிய இலக்காகினர்.

கொள்ளைக்கு இடையூறாய் உரிமைதாரர் இருப்பதால், பெரும்பாலும் கொலையும் களவின் ஒரு பகுதியாகவே போனது.

20 லட்சதிற்கும் மேற்ப்பட்ட மக்களை தகீயர் கொன்றிருப்பதாக கின்னஸ் புத்தகம் கூறுகிறது.

பெரும்பான்மை மக்களிடமிருந்து விலகி காட்டு பகுதிகளில் வாழ்ந்த இவர்களின் கலாசாரம், பண்பாடு ஆகியவை சராசரி மக்களை விட்டு வேறுபட்டு நின்றது.

சீக்கிய கள்ளர்கள், இசுலாமிய கள்ளர்கள் ஆகியோர் இருந்தபோதும் 'காளி' வழிபாடு செய்யும் இந்து கள்ளர்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர். (குறிப்பு: தமிழ்நாட்டில் வாழும் "கள்ளர்" இன மக்கள் அல்ல)

கொள்ளையை ஒழிக்கும் அளவுக்கு பொறுமையோ, அவகாசமோ, ஆர்வமோ இல்லாத ஆங்கிலேயர் கொள்ளையர்களை ஒழிக்க முடிவுசெய்தனர்.

வில்லியம் ஸ்லீமன் (William Sleeman)தலைமயிலான "Thuggee and Dacoity Department" ஆயிர கணக்கான தகீ இனத்தாரை தூக்கிலிட்டும், நாடு கடத்தியும், வாழ்நாள் சிறை தண்டனை விதித்தும் வங்காளத்தை சுற்றி வழிப்பறி, கொள்ளை சம்பவங்களுக்கு முற்றுபுள்ளி வைத்தனர். குறிப்பாக 1835 முதல் 1850 வரை சுமார் 3000க்கும் மேற்பட்ட கள்ளர்கள் நசுக்கப்பட்டனர்.

அடக்குமுறை வெற்றியடைந்ததை ஒட்டி நாடு முழுவதும் குற்றங்களை குறைக்கவும், தடுக்கவும் இதே முறை கொண்டு வருவதாக தீர்மானம் நிறைவேறியது.

இதன் சட்ட வடிவமே "குற்ற பரம்பரையினர் சட்டம்" (Criminal Tribes Act 1871).

இதை கொண்டுவந்த நீதிபதி James F. Stephen, இந்த சட்டத்தின் சாராம்சமாக முன்மொழிந்த கூற்று,

"...like weaving, carpentry,.. we speak of professional criminals, tribes whose ancestors were criminals from time immemorial, themselves destined by the caste to commit crime and offend law. The whole tribe should be exterminated, like Thugs"

"கைவினை, தச்சு வேலை போல, (தகீயர் போன்ற)சிலருக்கு களவும் குலத்தொழில், அவர்களை முற்றிலுமாக ஒழிப்பது மட்டுமே குற்றங்களை குறைக்க ஒரே வழி"

இப்படியாக முன்மொழியப்பட்ட சட்டம் பின்னாளில் எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டு கோடிகணக்கான அப்பாவி மக்களை "பிறவி குற்றாவாளிகளாக" அடையாளப்படுத்தி அவர்களை சமுதாயத்தின் விளிம்பிற்கு தள்ளியது என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.

http://sempulam.com/index.php/criminal-tribes-act-1871-india-origin

சேதி நாடு -- சில வரலாற்று குறிப்புகள்

0 c
[1]தமிழகச் சிற்றரசர் பரம்பரைகளில் மலையமான் வம்சம்

முக்கியமானது. தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு

இடைப்பட்ட பிரதேசத்தை 'நடுநாடு'{சேதிநாடு}
 என்று அழைத்தனர்.


நடுநாட்டில் திருக்கோவலூரைக் கோநகராகக்கொண்டு

மலையமான்கள் ஆண்டுவந்தனர். சங்க காலத்தில் இவர்கள்

பலமிக்க வம்சத்தினராக விளங்கினர்.மலையமான் திருமுடிக்காரி

என்பனிடம்தான் ஔவையார் தகடூர் அதியமானின் சார்பாகத்

தூது சென்றார்.

சோழர்கள் காலத்திலும் மலையமான்கள்இருந்தனர்.

அப்போது அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிளையினராக

விளங்கினர். அவர்களில் 'கிளியூர் மலையமான்கள்' ஒரு பிரிவு 
[2]கண்மணி குணசேகரனின் நடுநாட்டு சொல்லகராதி

‘விருத்தாசலம், நெய்வேலி, வடலூர், கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, நடுநாடு என்று சொல்லப்படுகின்ற இடங்களில் வாழும் மக்களின் பயன்பாட்டில் உள்ள பல்வேறு சொற்களையும் சேகரித்துhttp://abedheen.wordpress.com/2009/03/21/kanmani_akarathi/

[3]இத்திருத்தலத்திற்கு சேதிநாடு, நடுநாடு என பல பெயர்கள் உண்டு.

http://www.karma.org.in/product_info.php?cPath=32_405&products_id=௫௨௧

[4] பாடல் பெற்ற சிவதலங்கள்

நடுநாடு


1. திருநெல்வாயில்அரத்துறை

2. திருத்தூங்கானைமாடம்

3. திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்)

4. திருச்சோபுரம் (தியாகவல்லி)

5. திருவதிகை

6. திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)

7. திருநெல்வெண்ணெய்

8. திருக்கோவலூர்

9. திருஅறையணிநல்லூர் (அரகண்ட நல்லூர்)

10. திருவடுகூர் (ஆண்டார்கோவில்)

11. திருமாணிக்குழி

12. திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)

13. திருபுறவார்பனங்காட்டூர்

14. திருஆமாத்தூர்

15. திருவண்ணாமலை

16. திருமுண்டீச்சுரம்

17. திருக்கூடலையாற்றூர்

18. திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)

19. திருநாவலூர் (திருநாமநல்லூர்)

20. திருஇடையாறு

21. திருவெண்ணெய்நல்லூர்

22. திருத்துறையூர் (திருத்தளூர்)

[5]விழுப்புரம் மாவட்டம் வரலாறு :

தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை 'நடுநாடு' என்றனர். கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது.

எ-கா : திருமுனைப்பாடிநாடு; சேதிநாடு; மகதநாடு; சகந்நாதநாடு.


சங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர். பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப் பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது.

 பாரி மகளிரை மணந்த தெய்வீக மன்னனும் திருக்கோவிலூரை ஆண்டவன். கடைசி பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன் கெடிலத்தின் தென்கரையில் உள்ள சேந்த மங்கலத்தில் கி.பி.1243 முதல் 37 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டான் என அவன் கல்வெட்டு உரைக்கிறது. http://anusisoft.tamilpayani.com/tn/villupuram/index.ஹதம்

[௬]   கள்ளர் சரித்திரம்

மூன்றாம் அதிகாரம்

அரையர்களின் முற்கால நிலைமை      

இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் சிற்சில காணப்படுகின்றன. அவை:- கச்சியராயன், காடவராயன், காடுவெட்டி, காலிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான் , நந்தியராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன் முதலியன.

[7]திருநெல்வெண்ணெய் (நெய்வெணை)

கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்றும்; இப்பதி "மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்குலோத்துங்க சோழனின் 48-வது ஆண்டுக் காலத்திலிருந்த கீழையூர் இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோயில் நடராசமூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தார் என்ற குறிப்பும் உள்ளது. (ஆனால் இன்று கோயிலில் நடராச மூர்த்தமே இல்லை.) http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_nelvenney.htm

[8]சேதிராயர்------முனைவர் மு. பழனியப்பன்

[i]ஒன்பதாம் திருமுறை- திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தமர், சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்களால் பாடப்பெற்றதாகும்

[ii]திருவிசைப்பாவின் நிறைவுப் பதிகமாக அமைவது சேதிராயர் அருளிய ’சேலுலாம்’’ எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகம், தில்லைக் கோயில் இறைவனைப் போற்றிப் பாடுவதாக உள்ளது. இப்பதிகம் திருவிசைப்பாவின் ’திருக்கடைக்காப்புப் பதிகம்‘என்ற பெருமைக்கும் உரியதுமாகும்

[iii]சேதிராயர்

’’ஏயு மாறு எழில் சேதிபர் கோன் தில்லை

நாயனாரை நயந்துரை செய்தன‘‘

என்ற அடிகள் பதிகத்தின் பத்தாம் பாடலில் இடம்பெறுகின்றன. இங்கு சேதிராயர் ’சேதிபர்கோன்‘’என விளிக்கப் பெற்றுள்ளார். இதன் வழியாக இவர் அரசர் என்பது தௌ¤வாகின்றது.

’சேதி’’ என்பது குலப்பெயர் ஆகும்.

’’முதற்குலோத்துங்கன் (1070-1120) காலத்தில்(லும்) இராசராசசேதிராயன், இராஜேந்திர மலையமான் என்று பட்டம் தரித்தவர்கள் திருக்கோவிறலூர், கிளியூர் ஆகிய நகரங்;களைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இதனால் 11-12 ஆம் நூற்றாண்டுகளில் சேதிராயர் குறுநிலமன்னராய்ச் சோழரின் கீழ் வாழ்ந்தமை தௌ¤யப்படும். இவர்களுள் திருவிசைப்பாப் பாடியவ்ரும் ஒருவர‘‘(மு. அருணாசலம், திருவிசைப்பா திருப்பல்லண்டு பாவும் பயின்ற நிலையும், சென்னைப் பல்கலைக்கழகம், 1974, ப. 126-127) என்ற குறிப்பின்படி சேதிராயரின் மரபுவழி பெறப்படும்.



திருக்கோவலூரில் வாழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரும் சேதி நாட்டைச் சார்ந்தவர் என்ற பெரியபுராணக் குறிப்பு இங்;கு ஒப்புநோக்கத்தக்கது. மேற்கண்டவற்றின் வழியாகச் சேதிராயர் திருக்கோவகரலூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, சோழமன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு குறுநிலமன்னராக அரசாண்டவர் என்பது பெறப்படுகின்றது. இச்சேதிராயர் சைவ சமயம் சார்ந்து, தில்லைப்பதியை வணங்கி, திருமுறை தந்த பெருமைக்குரியவரும் ஆகின்றார்.

சேதிராயரின் பக்திச்சிறப்பு

இவர் தில்லையுள் உள்ள பெருமானைப் பதிகப் பாடல்தோறும் போற்றிப் பரவுகின்றார்
http://manidal.blogspot.com/2006/01/blog-post_113774088136751734.ஹ்த்ம்ல்


[9]மலையமான் திருமுடிக்காரி

மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான மலையமான் குலத்தை சேர்ந்தவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.

திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று கபிலர் குன்று. சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.

நண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் அந்த இருகுழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது[1].

 பக்தி இலக்கிய காலம்

இராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது.

http://ta.wikipedia.org/wiki

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_1/kulottunga_3.html

 
 
 
 
0 c
பாண்டியன்---சில வரலாற்று குறிப்புகள்



சைலேந்திரன் என்பது மலையரசன்

என்னும் இமவானையும் குறிக்கும்.

இமவானின் மகளாகிய பார்வதியை 'மலைமகள்' என்றும்

'கிரிஜா' என்றும் சொல்கிறோம்.

சைலேந்திரா என்னும் பெயரில் உள்ள மலைத்தொடர்பு

இன்னும் சில அரசபரம்பரையினருக்கும் இருந்திருக்கிறது.

காம்போஜ நாட்டின் க்மெர் பேரரசர்களும் மலைதொடர்பு

உடையவர்கள்தாம். Phnom Phen என்னும் பெயரிலுள்ள 'ப்ஹ்நாம்'

என்பது மலையைத்தான் குறிக்கும்.

தமிழகத்தில் உள்ள அரச பரம்பரையினரில் பாண்டிய

மன்னர்களுக்கு இப்பெயர் உண்டு. வழுதி, மாறன், பனையன்,

கடலன், செழியன், மலையன் என்ற பெயர்கள் அவர்களுக்கு

உரியவை.