சேதி நாடு -- சில வரலாற்று குறிப்புகள்

[1]தமிழகச் சிற்றரசர் பரம்பரைகளில் மலையமான் வம்சம்

முக்கியமானது. தொண்டை நாட்டிற்கும் சோழநாட்டிற்கு

இடைப்பட்ட பிரதேசத்தை 'நடுநாடு'{சேதிநாடு}
 என்று அழைத்தனர்.


நடுநாட்டில் திருக்கோவலூரைக் கோநகராகக்கொண்டு

மலையமான்கள் ஆண்டுவந்தனர். சங்க காலத்தில் இவர்கள்

பலமிக்க வம்சத்தினராக விளங்கினர்.மலையமான் திருமுடிக்காரி

என்பனிடம்தான் ஔவையார் தகடூர் அதியமானின் சார்பாகத்

தூது சென்றார்.

சோழர்கள் காலத்திலும் மலையமான்கள்இருந்தனர்.

அப்போது அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கிளையினராக

விளங்கினர். அவர்களில் 'கிளியூர் மலையமான்கள்' ஒரு பிரிவு 
[2]கண்மணி குணசேகரனின் நடுநாட்டு சொல்லகராதி

‘விருத்தாசலம், நெய்வேலி, வடலூர், கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, நடுநாடு என்று சொல்லப்படுகின்ற இடங்களில் வாழும் மக்களின் பயன்பாட்டில் உள்ள பல்வேறு சொற்களையும் சேகரித்துhttp://abedheen.wordpress.com/2009/03/21/kanmani_akarathi/

[3]இத்திருத்தலத்திற்கு சேதிநாடு, நடுநாடு என பல பெயர்கள் உண்டு.

http://www.karma.org.in/product_info.php?cPath=32_405&products_id=௫௨௧

[4] பாடல் பெற்ற சிவதலங்கள்

நடுநாடு


1. திருநெல்வாயில்அரத்துறை

2. திருத்தூங்கானைமாடம்

3. திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்)

4. திருச்சோபுரம் (தியாகவல்லி)

5. திருவதிகை

6. திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)

7. திருநெல்வெண்ணெய்

8. திருக்கோவலூர்

9. திருஅறையணிநல்லூர் (அரகண்ட நல்லூர்)

10. திருவடுகூர் (ஆண்டார்கோவில்)

11. திருமாணிக்குழி

12. திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)

13. திருபுறவார்பனங்காட்டூர்

14. திருஆமாத்தூர்

15. திருவண்ணாமலை

16. திருமுண்டீச்சுரம்

17. திருக்கூடலையாற்றூர்

18. திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)

19. திருநாவலூர் (திருநாமநல்லூர்)

20. திருஇடையாறு

21. திருவெண்ணெய்நல்லூர்

22. திருத்துறையூர் (திருத்தளூர்)

[5]விழுப்புரம் மாவட்டம் வரலாறு :

தொண்டை நாட்டிற்கும்-சோழ நாட்டிற்கும் நடுவில் இருப்பதால் இம்மாவட்டத்தை 'நடுநாடு' என்றனர். கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடிக்காரி இப்பகுதியை ஆண்டதால் 'மலையமானாடு' எனவும் 'மலாடு' எனவும் பெயர் பெற்றது விளங்கியது. இது தவிர வேறு பெயர்களிலும் அவரவர் காலங்களில் அழைக்கப்பட்டது.

எ-கா : திருமுனைப்பாடிநாடு; சேதிநாடு; மகதநாடு; சகந்நாதநாடு.


சங்க கால கவிஞரான மாற்றோகத்து நப்பசலையார். மலையமான் சோழி ஏனாதி திருக்கண்ணன் என்பவரைப் பாடியிருக்கிறார். இவர் சோழனின் படைத்தலைவனாய் இருந்ததால்தான் 'ஏனதி' பட்டம் கிடைத்தது என்பர். பெரியபுராணம் குறிப்பிடும் மெய்ப் பொருள் நாயனார் 'சேதியர்' என்ற பட்டப் பெயருடன் இப்பகுதியை ஆண்டதாக அறிகிறோம். இதுபோலவே சுந்தரமூர்த்தி நாயனாரின் வளர்ப்புத் தந்தை நரசிங்க முனையரையர் திருநாவலூரில் ஆண்டதாக தெரிகிறது.

 பாரி மகளிரை மணந்த தெய்வீக மன்னனும் திருக்கோவிலூரை ஆண்டவன். கடைசி பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கன் கெடிலத்தின் தென்கரையில் உள்ள சேந்த மங்கலத்தில் கி.பி.1243 முதல் 37 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டான் என அவன் கல்வெட்டு உரைக்கிறது. http://anusisoft.tamilpayani.com/tn/villupuram/index.ஹதம்

[௬]   கள்ளர் சரித்திரம்

மூன்றாம் அதிகாரம்

அரையர்களின் முற்கால நிலைமை      

இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் சிற்சில காணப்படுகின்றன. அவை:- கச்சியராயன், காடவராயன், காடுவெட்டி, காலிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான் , நந்தியராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன் முதலியன.

[7]திருநெல்வெண்ணெய் (நெய்வெணை)

கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் "பொற்குடங் கொடுத்தருளிய நாயனார்" என்றும்; இப்பதி "மிலாடு ஆகிய சனாதன வளநாட்டுக் குறுக்கை கூற்றத்துக்கு உட்டபட்ட ஊர்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் முதற்குலோத்துங்க சோழனின் 48-வது ஆண்டுக் காலத்திலிருந்த கீழையூர் இராசேந்திர சோழ சேதிராயர் என்பவர் இக்கோயில் நடராசமூர்த்தியைப் பிரதிஷ்டை செய்தார் என்ற குறிப்பும் உள்ளது. (ஆனால் இன்று கோயிலில் நடராச மூர்த்தமே இல்லை.) http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_nelvenney.htm

[8]சேதிராயர்------முனைவர் மு. பழனியப்பன்

[i]ஒன்பதாம் திருமுறை- திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தமர், சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்களால் பாடப்பெற்றதாகும்

[ii]திருவிசைப்பாவின் நிறைவுப் பதிகமாக அமைவது சேதிராயர் அருளிய ’சேலுலாம்’’ எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகம், தில்லைக் கோயில் இறைவனைப் போற்றிப் பாடுவதாக உள்ளது. இப்பதிகம் திருவிசைப்பாவின் ’திருக்கடைக்காப்புப் பதிகம்‘என்ற பெருமைக்கும் உரியதுமாகும்

[iii]சேதிராயர்

’’ஏயு மாறு எழில் சேதிபர் கோன் தில்லை

நாயனாரை நயந்துரை செய்தன‘‘

என்ற அடிகள் பதிகத்தின் பத்தாம் பாடலில் இடம்பெறுகின்றன. இங்கு சேதிராயர் ’சேதிபர்கோன்‘’என விளிக்கப் பெற்றுள்ளார். இதன் வழியாக இவர் அரசர் என்பது தௌ¤வாகின்றது.

’சேதி’’ என்பது குலப்பெயர் ஆகும்.

’’முதற்குலோத்துங்கன் (1070-1120) காலத்தில்(லும்) இராசராசசேதிராயன், இராஜேந்திர மலையமான் என்று பட்டம் தரித்தவர்கள் திருக்கோவிறலூர், கிளியூர் ஆகிய நகரங்;களைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இதனால் 11-12 ஆம் நூற்றாண்டுகளில் சேதிராயர் குறுநிலமன்னராய்ச் சோழரின் கீழ் வாழ்ந்தமை தௌ¤யப்படும். இவர்களுள் திருவிசைப்பாப் பாடியவ்ரும் ஒருவர‘‘(மு. அருணாசலம், திருவிசைப்பா திருப்பல்லண்டு பாவும் பயின்ற நிலையும், சென்னைப் பல்கலைக்கழகம், 1974, ப. 126-127) என்ற குறிப்பின்படி சேதிராயரின் மரபுவழி பெறப்படும்.



திருக்கோவலூரில் வாழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரும் சேதி நாட்டைச் சார்ந்தவர் என்ற பெரியபுராணக் குறிப்பு இங்;கு ஒப்புநோக்கத்தக்கது. மேற்கண்டவற்றின் வழியாகச் சேதிராயர் திருக்கோவகரலூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, சோழமன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு குறுநிலமன்னராக அரசாண்டவர் என்பது பெறப்படுகின்றது. இச்சேதிராயர் சைவ சமயம் சார்ந்து, தில்லைப்பதியை வணங்கி, திருமுறை தந்த பெருமைக்குரியவரும் ஆகின்றார்.

சேதிராயரின் பக்திச்சிறப்பு

இவர் தில்லையுள் உள்ள பெருமானைப் பதிகப் பாடல்தோறும் போற்றிப் பரவுகின்றார்
http://manidal.blogspot.com/2006/01/blog-post_113774088136751734.ஹ்த்ம்ல்


[9]மலையமான் திருமுடிக்காரி

மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான மலையமான் குலத்தை சேர்ந்தவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.

திருக்கோயிலூருக்கு அருகே இருக்கும் பண்டையகால குன்று கபிலர் குன்று. சங்க காலத்தில் மலையமான் குல மரபினர் இந்தப் பகுதியை ஆண்டு வந்ததாக இலக்கியங்கள் கூறுகிறது. சங்ககால புலவரான கபிலர் வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் ஆவார். பாரிக்கு கிடைத்த புகழைக் கொண்டு பொறாமையடைந்த மூவேந்தர்கள் பாரியையும், பறம்ப நாட்டையும் முற்றுகையிட்டு அழித்து விட்டனர். தன் பெண்மக்கள் இருவரையும் தன் உற்ற நண்பரான கபிலரிடம் அடைக்கலமாக தந்து விட்டு பாரி உயிரை நீத்தார்.

நண்பரின் இழப்பை தாங்கமுடியாத கபிலர் அந்த இருகுழந்தைகளையும் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரியிடம் ஒப்படைத்து விட்டு ஒரு குன்றின் மீது உயிர்விட்டதாக திருக்கோயிலூர் வீரட்டானத்தில் உள்ள இராசராசன் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது[1].

 பக்தி இலக்கிய காலம்

இராசராசனின் தாய் வானவன் மாதேவி மலையமான் குலத்தில் தோன்றியவர் கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இவளுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக் கோயிலில் வைக்கப்பட்டது.

http://ta.wikipedia.org/wiki

http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_22/part_1/kulottunga_3.html

 
 
 
 

No comments: