பாண்டியன்---சில வரலாற்று குறிப்புகள்



சைலேந்திரன் என்பது மலையரசன்

என்னும் இமவானையும் குறிக்கும்.

இமவானின் மகளாகிய பார்வதியை 'மலைமகள்' என்றும்

'கிரிஜா' என்றும் சொல்கிறோம்.

சைலேந்திரா என்னும் பெயரில் உள்ள மலைத்தொடர்பு

இன்னும் சில அரசபரம்பரையினருக்கும் இருந்திருக்கிறது.

காம்போஜ நாட்டின் க்மெர் பேரரசர்களும் மலைதொடர்பு

உடையவர்கள்தாம். Phnom Phen என்னும் பெயரிலுள்ள 'ப்ஹ்நாம்'

என்பது மலையைத்தான் குறிக்கும்.

தமிழகத்தில் உள்ள அரச பரம்பரையினரில் பாண்டிய

மன்னர்களுக்கு இப்பெயர் உண்டு. வழுதி, மாறன், பனையன்,

கடலன், செழியன், மலையன் என்ற பெயர்கள் அவர்களுக்கு

உரியவை.

No comments: