ராஜராஜசோழர்

அன்பர்களே
ராஜராஜசோழர் பற்றிய
மடலாடல்களைத் தொகுத்து
என்னுடைய பதில்களை·பார்வைகளை
எழுதியிருக்கிறேன்.


[1]திரு நீலகண்ட சாஸ்திரி எழுதிய சோழர்கள் வரலாறு எனும் நூல் ஒன்று உள்ளது.

[2]சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்காலச் சோழர் வரலாறு என்னும் மூன்று பாகங்கள் கொண்ட நூலும் இருக்கிறது.இது தமிழ் நூல்.
இவை போக இன்னும் சில நூல்கள் இருக்கின்றன.
அவை சோழர் வரலாற்றில் குறிப்பிட்ட சில பகுதிகளைப் பற்றியவை.
சோழர் காலக் கோயில்களைப் பற்றிய மூன்று பகுதிகள் கொண்ட ஆங்கில நூல் சிறப்பு வாய்ந்தது.
'அருளுடைச் சோழமண்டலம்' என்பது
இரண்டாம் ராஜராஜர்þ
இரண்டாம் ராஜாதிராஜர்þ
மூன்றாம் குலோத்துங்கர்
காலத்தைச்
சித்தரிக்கும்.
[5]   ராஜேந்திர சோழன்' என்ற பெரிய நூல் இருக்கிறது.
சோழபாண்டியர் பற்றிய நூல்
ஒன்றும் உண்டு.
[6] குடவாயில் பாலு இரண்டு நூல்கள் எழுதியுள்ளார்.
மூன்றாம் குலோத்துங்கனைப் பற்றிய தனிச்சிறு நூல் இருக்கிறது.
[7] ராஜராஜ சோழரைப் பற்றிய தனிநூல் ஒன்றை திருநெல்வேலி
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
[8] கள்ளர் இனத்தவர்கள் 'ராஜராஜசோழர்' பற்றிய இரண்டு
சிறிய நூல்களை வெளியிட்டுள்ளனர்.
[9] நாட்டார் அவர்கள் வெளியிட்ட நூலில் குறிப்புகள்
மட்டுமேயுள்ளன.

நான் சொல்லவந்தது
என்னவென்றால்þ ராஜராஜ சோழரைப்
பற்றிய விரிவான பெரியநூல்
ஏதும் இதுவரை வெளிவரவில்லை
என்பதுதான்.
அவரைப் பற்றிய தகவல்கள்கூட
அதிகம் வெளியாவதில்லை.
அவர் சம்பந்தமான சில
முக்கியமான மர்மங்கள் இன்னும்
விடுபடவில்லை.
மிகவும் முக்கியமான
மர்மங்கள்.
சாதாரணமானவையல்ல.
சில வரலாற்று ஆய்வாளர்கள்
சொல்லும் பெரும்பான்மையான
விஷயங்களுக்கு விளக்கம்
போதாது.
பல சமயங்களில் 'கொட்டினேன்
கவிழ்த்தேன்' என்றவாறு
சொல்லிவிட்டுப் போகிறார்கள்.
இந்தக் குறைபாடுகள்
கவனிக்கப்படவேண்டும்.


இன்னும்
எழுதவேண்டியுள்ளது........

[10] ந.மு வேங்கடசாமி நாட்டார் எழுதிய கள்ளர் சரித்திரம்
எனும் நூல் உள்ளது.
முதற்பதிப்பு 1934-ஆம் ஆண்டு
வெளியாகி இருக்கிறது. இதில்
இராஜ ராஜ சோழரை
பற்றிய தனிபட்ட சரித்திரம்
விரிவாக இல்லை. ஆனால்
சோழர்கள் மற்றும் இதற கள்ளர்
பிறிவைச் சேர்ந்த
தமிழகத்தை ஆண்ட மன்னர்களை
பற்றி விவரிக்கப்
பட்டுள்ளது.


பல பழங்காலத் தமிழ் மன்னர்·சிற்றரசர்·நாட்டுத்தலைவர்
குடியினர் கள்ளர்களில்
விளங்குகிறார்கள்.
ஆகவேதான் இவர்களைத்
'தென்னாட்டு ரஜபுத்திரர்'
என்று குறிப்பிடுவார்கள்.
இந்தக் குடியினர்களிடம்
செப்புப்பட்டயங்கள்þ
சாசனங்கள்
போன்றவை ஏராளமாக இருப்பதாகச்
சொல்லக் கேள்விப்
பட்டிருக்கிறேன்.
செவிவழிச் செய்திகளும்
ஏராளமாகப் புழங்குகின்றன.

[12] கவியோகி சுத்தானந்த பாரதியார்
அறுபது·எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்
கள்ளர்களைப் பற்றி ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

அதிலும் அரிய செய்திகள்
நிறைய இருந்தன.
மதம் பிடித்த யானையைக்
குத்தியே வீழ்த்திய நாட்டுத்
தலைவர் ஒருவரைப் பற்றிய
குறிப்பு ஒன்று அந்த நூலில்
இருந்தது.
பல தகவல்கள் சரியாகச்
சேகரிக்கப்பட்டு தொகுக்கப்
படவில்லை.

No comments: