Journey of a man

0 c
Jaya Menon 
Posted: Sun Jun 18 2006, 00:00 hrs

Eight years ago, an obscure village, nestling among hills and surrounded by paddy fields near Madurai was cause for much excitement for a project team from the US. It was on a mission to trace human roots to a single origin. An unremarkable farmer’s son and the placid Jyotimanickam village shot into the limelight when renowned population geneticist, Spencer Wells, landed on its dusty square.
Wells had hoped to prove that a few descendants of the first humans from Africa, trekking through India to reach Australia, had settled in south India. It took him several days to collect about 700 samples from in and around Madurai and put them through the DNA sequencer. But his search paid off. Virumandi Andi Thevar, an 18-year-old student, now a librarian, whose family had settled in the village for generations, was discovered to have the rare ‘NRYM130’ genetic mutation or ‘marker’ found in the first exodus out of Africa. The same marker was also found in some aborigines in Australia. 
This discovery shot Spencer Wells to fame and he convinced the National Geographic Society, IBM and The Ted Waitt Family Foundation to fund a massive global project called Genographic. The project was officially launched in April 2005. The project hopes to unravel the mysteries of what compelled a band of their descendants to leave their home continent and spread across Eurasia. Field scientists will fan out across six continents to gather close to 100,000 samples from interesting and ancient isolated populations of the world. India is a critical link in this project.
Experts in ten regional research centres in Australia, Brazil, China, France, Lebanon, Russia, South Africa, UK, US and India will collate and interpret their findings. In India, the project roped in immunologist, Prof Ramasamy Pitchappan, chairman, School of Biological Science and Head of the Department of Immunology, Madurai Kamaraj University (MKU), and a key contributor to the discovery of the first coastal migration through India 50,000 years ago. Pitchappan had helped Wells in his Madurai project in 1998.
The MKU professor, with a deep fascination for the population structure of India, had been working extensively on immunogenetic basis of tuberculosis and leprosy susceptibility. ‘‘My association with Spencer Wells goes a long way. We knew the answer for the first coastal migration would be found somewhere in south India. Since I am based at Madurai, we performed the sampling here,’’ he recalls.
An MOU will be signed shortly between National Geographic Channel and the Madurai Kamaraj University, says Pitchappan. The Madurai chapter of the project would cost $1 million. Ten laboratories around the world will study 100,000 people across the continents for NRY (Non Recombinant Y chromosome) and mitDNA (Mitochondrial DNA). The Indian chapter will study 10,000-20,000 population samples from the country.
Explains Pitchappan: ‘‘The human genome sequence contains about 30,000 genes and this represents only 5 per cent of our genome. Though most of our sequences are 99 per cent identical, it is the mutations, mostly called single nucleotide polymorphisms, which are responsible for changing a character. Such changes in a gene is responsible for our individual differences, in eye colour or disease risk. Once in an evolutionary blue moon, a random, harmless mutation that occurs in one of these functionless stretches, is passed down to all of that person’s descendants. Generations later, finding that same mutation, or marker, in two people’s DNA indicates that they share the same genes—and perhaps the same ancestor.’’

Such changes are often obscured by the genetic reshuffling that takes place each time a mother and father’s DNA combine to make a child. Luckily some chromosomal regions preserve the telltale variations. One, called the mtDNA is passed down intact from mother to child. Similarly, most of the NRY chromosome, which determines maleness, travels intact from father to son. By comparing the mtDNA and Y chromosomes of people from various populations, geneticists can tell where and when those groups parted ways in the great migrations around the planet.
Pitchappan’s studies on several populations of Tamil Nadu described enormous variations in their genes ascribed to migration and selection. ‘‘I am interested in HLA (human leucocyte antigens, similar to red blood group on white cells) diversity in Indian population, with its various linguistic groups, tribes and caste, each unique in its own way in terms of language, culture, marriage pattern, value system and food habits. These populations are isolated in their gene pool. Though separated by space and culture, each community retains the gene pool,’’ points out Pitchappan.
The first samples will be collected from the Gond community in Orissa. “They speak the central Dravidian language. There are similarities between them and people from Tamil Nadu. They too celebrate Pongal that we observe here. It will be interesting to find out what the relationship is between two groups of people so far apart,’’ says Pitchappan. 

The team will also take up village clusters in Tamil Nadu, which have names similar to those in Madhya Pradesh. ‘‘When people travel, they carry their memories. It will be interesting to study whether there are any cultural similarities and if they are accidental or incidental,’’ he says. 

Eventually, India too hopes to have public participation like in the US where individuals can participate in the research effort by purchasing Genographic Project kits for $100 through the National Geographic website. DNA material is collected through cheek swab samples. To ensure participant privacy, the personal results would be included anonymously in the genetic database. Interactive element would give participants an opportunity to follow the progress of their own migratory history and the global research process through their website, providing regular updates on project findings. Presently there is no public participation in India and China, where export of genetic materials requires government approval.
http://www.indianexpress.com/news/journey-of-a-man/6685/0

சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்

0 c

சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்

rani-velu-nachiyarஎழுதியவர்: கீதா ரவீந்திரன்
சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது.  இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது.  சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ரங்கராயன், மானாமதுரை பிரைட்டன், பூரியான், மார்டினஸ் ஆகியோர் மண்டியிட்டனர்.
இந்தச் சூழ்நிலையில் காளையார் கோவில் கோட்டையோ போருக்கு ஆயத்தமாகத் தொடங்கியது.  படைவீரர்கள் களைப்பைக் களைந்துவிட்டு அன்று அதிகாலை வேளையில் வேலுநாச்சியாரின் அவசர அழைப்புக் கேட்டு முக்கிய தளபதிகள் அனைவரும் கொலுமண்டபம் விரைந்தனர்.  அங்கே ராணி வேலுநாச்சியார், அவர்களுக்கு முன்னதாக வந்து காத்திருந்தார்.  தளபதிகளைக் கண்டதும் ராணி முகத்தில் புன்னகை மொட்டு விட்டது.  “அனைவரும் வாருங்கள்.  நீங்கள் எதிர்நோக்கிய காலம் வந்துவிட்டது.  நமது படைகளை மூன்று பிரிவாகப் பிரித்து விடுங்கள்.  ஒரு பிரிவுக்கு சின்ன மருது தலைமை தாங்குவார்.  அந்தப் பிரிவு 3 ஆயிரம் படைவீரர்களோடும் எட்டு பீரங்கிகளோடும் திருப்பத்தூர் நோக்கிப் புறப்படட்டும்.  இன்னொரு பிரிவு பெரிய மருது தலைமையில், 4 பீரங்கிகளோடு சிவகங்கை சென்று அரண்மனைக்கு வெளியே தெப்பக்குளக்கரையில் உள்ள உமராதுல் உபராகானையும் அவனது படைகளையும் தாக்கி வெற்றி கொள்ளட்டம்,” என்று நாச்சியார் கூறி முடிக்கும் முன்பே சின்ன மருது அவசரமாய் இடைமறித்து, “மகாராணி சிவகங்கைக் கோட்டையைக் கைப்பற்றுவதுதானே நமது முக்கிய வேலை? அதைப் பற்றி…”

“சின்ன மருது படையும், எனது தலைமையில் மற்றொரு பிரிவுப் படையினரும், நமது பெண்கள் படையும் அந்த வேலையைச் செய்துமுடிக்கும், போதுமா?”

“மகாராணி மன்னிக்க வேண்டும். சிவகங்கைக் கோட்டையோ பலம் வாய்ந்தது. அந்தக் கோட்டையை எப்படி சின்னப் படைப்பிரிவு மூலமும் அதுவும் வெள்ளையரின் பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் எதிர்த்துப் போரிட்டுப் பிடிக்க…?”

இந்த முறை குறுக்கிட்ட பெரிய மருது தனது கருத்தை முடிக்கும் முன்னே, ஒரு புதுக்குரல் மண்டபத்தின் வாயிலில் இருந்து ஒலித்தது.

அங்கே தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.

சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.

“தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.”

அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விர்ந்தன.

பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள். “பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?” என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.

ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.

“என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!” என்றபடியே ராணி சிம்மாசனத்தில் இருந்து குயிலியோடு அந்தப்புரம் நோக்கிச் சென்றார்.

ராணி குறித்ததுபோல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர். 
பூமாலைக்குள் கத்தியும் வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது. வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. “எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!” என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது. 
வரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.

ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.

ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.

அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, “வீரவேல்! வெற்றிவேல்!!” என்று விண்ணதிர முழங்கினாள்.

அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் வளரியும் தோன்றின.

ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த பார்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.

சார்ஜ்!..” என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள். சிவகங்கைக் கோட்டைக்குள் பூகம்பம் வெடித்தது.

ராணி வேலுநாச்சியாரின் வாள் மந்திரமாய் சுழன்றது. ஆயுதமின்றித் தவித்த சிலர் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓட்டம் பிடித்தனர்.

வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, “வீரவேல், வெற்றிவேல்” என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே கீழே குதித்தாள். அந்தப் பெண் நேராக நிலாமுற்றத்தில் இருந்த ஆயுதக் குவியலில் வந்து விழுந்தாள்.

ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோருக்கும், அவனது வீரர்களுக்கும் அஸ்தியில் காய்ச்சல் கண்டது.

பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது. இதே நேரத்தில் பெரிய மருது உமராதுல் உபராக்கானை விரட்டி அடித்துவிட்டு வெற்றியோடு வந்தார்.

திருப்பத்தூர்க் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்கள் மட்டும் கூட்டத்தை அளவெடுப்பது போல சுற்றிச் சுற்றி வந்தன. 


போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், “நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்னைத் தடுக்காதே,” என்று கூறியபடியே உடல் முழுவது நெய்யில் குளித்தபடி கோயிலில் இருந்த பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.

அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள். வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி நமக்கு வெற்றியை அள்ளித்தர, …. தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.

மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக தன்னையே பலிகொடுத்த அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.

அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள். அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக!

நன்றி: விஜயபாரதம் 25.06.2010
http://www.tamilhindu.com/2010/07/great-women-warriors-of-sivagangai/

குற்றப்பரம்பரை

0 c
குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவதில் தேவரின் பங்கு
டாக்டர். என். மகேஸ்வரி,
ஆராச்சியாளர்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்,
மதுரை.


இந்தியாவில் ஆங்கிலேயர் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தியபின், அவர்களுடைய ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் பெரும் பகுதிகளில் புரட்சி வெடித்தது. விடுதலை இயக்கங்கள் தோன்றின. இத்தகைய எதிர்ப்பு இயக்கங்களை ஒடுக்குவதில் ஆங்கில அரசு தீவிரம் காட்டியது. 1871 ஆம் ஆண்டு பஞ்சாப், மத்திய இந்தியா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் வாழ்ந்த நிரந்தர குடியட்ட்ற மக்களை அடக்கும் பொருட்டு 1871 ஆம் ஆண்டு குற்றப்பரம்பரை சட்டம் என்ற ஒரு சட்டத்தை ஆங்கில அரசு பிரகடனம் செய்தது. ஆனால், அச்சட்டத்தின் விதிமுறைகள் சென்னை மாகாணத்தில் அமுல்படுத்தவில்லை.

குற்றபரம்பரைச் சட்டம் Act III of 1971 என்று அழைக்கப்படும் இச்சட்டத்தின் படி அரசாங்கம் எந்த ஒரு ஜாதியையும், எந்த ஒரு கூட்டத்தையும், ஜாமீனில் வர முடியாத பல குற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்று கருதினால், அவர்கள் மீது இச்சட்டத்தை புகுத்தலாம். அப்படி எந்த ஒரு ஜாதியின் மீதும் இச்சட்டம் பயன்படுத்தும் போது, அந்த ஜாதியினர் தங்கள் உரிமையை நிலை நாட்ட நீதி மன்றங்களுக்கு செல்ல முடியாது. 1911 - ஆம் ஆண்டு, பிரிவு 11 மற்றும் 12 இன் படி, எந்த ஒரு உருபினரும் சுதந்திரமாக ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்ல முடியாது. அன்றாடம் இரவு நேரங்களில் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டவர்கள் தினமும் இருமுறை தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிகின்ற போது கல்வியறிவு இல்லாத காரணத்தால், கைரேகை வைப்பது வழக்கம். எனவே, இச்சட்டம் "ரேகைச் சட்டம்" என்று அழைக்கப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் பிரமலைக் கள்ளர்கள் கொண்டுவரப்பட்டார்கள். இவ்வாறாக இக்குற்றபரம்பரை சட்டத்தால் பிரமலை கள்ளர்களின் தனி மனித உரிமை முழுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. W.J. Hatch என்பவர் இச்சட்டத்தை விமர்சிக்கும் போது, " I was doubtful whether any other act on the statue book so far in givingthe police powers to take away a man's freedom" என்று கூறுகிறார்.

இத்தகைய கொடுமையான சட்டம் நடைமுறையில் இருந்த போடு, அதை கண்டிக்க வேண்டும் என்று ஆரம்ப காலத்தில், காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்ட கேரளாவை சேர்ந்த வழக்குரைஞர் ஜார்ஜ் ஜோசப் என்பவர் இச்சட்டத்தின் கொடுமைகள் பற்றயும், இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட பிரமளைகள்ளர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இச்சட்டத்தை எதிர்த்து 1920 ல் புரட்சி செய்த பெருங்காமநல்லூர் மக்கள் சார்பாகவும், தன் வாதங்களை அவர் முன் வைத்தார்.

1933 ஆம் ஆண்டு இராமநாதபுரத்தை சார்ந்த "ஆப்ப நாடு மறவர்கள்" மீது இக்குற்றபரம்பரை சட்டம் பாய்ந்த பொது, இச்சட்டத்தின் கொடுமைகளை தேவர் உணர்ந்தார். அது முதற்கொண்டு இச்சட்டத்தை நீக்க முழு மூச்சாக செயல்பட்டார். 1934 ஆம் ஆண்டு அபிராமம் என்ற ஊரில் காங்கிரஸ் தலைவர் வரதராஜுலு நாயுடு என்பவர் தலைமையில் குற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்பு மாநாடு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் வரதராஜுலு நாயுடு தலைமையில் ஒரு குழு அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் முகம்மது உஸ்மான் அவர்களை சந்தித்து ஆப்ப நாட்டு மறவர்கள் மீது போடப்பட்ட சட்டத்தை நீக்க வேண்டும்மென்று வேண்டிக்கொண்டது. ஆனால் சென்னை மாகாண ஆளுநர் முகம்மது உஸ்மான் இந்த சட்டத்தை நீக்கும் உரிமை தனக்கு இல்லையென்றும், இது குறித்து தலைமை ஆளுநரிடம் தான் சிபாரிசு செய்வதாகவும் தெரிவித்தார்.

அதன் விளைவாக 2000 ம பேர் விதிக்கப்பட்டிருந்த குற்றப்பரம்பரைச் சட்டம் 400 பேராக குறைக்கப்பட்டது. இதுபோல பசும்பொன் முத்துராமலிங்க தேவர், நீதிக்கட்சி ஆட்சியிலிருந்த போதும், 1911 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை நீக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார்.

1936 ஆம் ஆண்டு நடைபெற்ற பேரையூர் மாநாட்டில் குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்க வேண்டும் என்று தவர் மிகக் கடுமையாகப் பேசினார். இச்சட்டம் இந்தியாவில் வீரம் மிக்க சாதியினரான சீக்கியர்கள், மராத்தியர்கள் மீது இச்சட்டம் பாய்ந்துள்ளது. அது போன்று தமிழ் நாட்டிலுள்ள கள்ளர்கள் மற்றும் மறவர்கள் மீது, பாய்ந்துள்ளது. அவ்வேளையில் கைரேகை வைப்பதற்கு பதிலாக கட்டை விரலை வெட்டிக் கொள்ளுங்கள். என்று தேவர் முழங்கினார். 
தேவரின் பேச்சு வேகத்தை கன்னுட்ட்ற காவல் துறையினர் இவரை பேச அனுமதிக்க கூடாதென்று நீதி மன்றத்தில் முறையீடு செய்து 144 தடை உத்தரவு பெற்றனர்.இது சம்பந்தப்பட்ட வழக்கில் கூறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் தன் தேவர் மேடைகளில் பேசுவது தடை செய்யப்பட்டது. இது தான் "வாய்பூட்டுச் சட்டம்" என்று அழைக்கப் பட்டது. இந்த வாய் பூட்டுச் சட்டம், தென்னிதியாவில் தேவருக்கும் மற்றும் வட இந்தியாவில் லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு மட்டும் தான் போடப்பட்டது.
தேவர் பல ஊர்களில் பேசிய பேச்சின் காரணமாகவும், இச்சட்டத்தை நீக்க அவர் கொடுத்த கடுமையான எதிர்ப்பின் காரணமாகவும், ராஜாஜி தலைமையிலான அரசு 1938 ஆம் சென்னை மாகாணத்தின் அணைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களிடமிருந்தும் குற்றப்பரம்பரைச் சட்டத்தின் செயல் பாடுகள் குறித்து அறிக்கையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது. மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிக்கையை சமர்பித்தனர்.

அதன் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக இரண்டாம் உலகப்போர் ஏற்பட்ட காரணத்தால், காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்தது. அதன் பின்னரும் தேவர் இக்குற்றபரம்பரைச் சட்ட எதிர்ப்பை தீவிரப்படுத்தினார். பல கிராமங்களுக்கு சென்று குற்றபரம்பரை சட்டத்தை நீக்க போராடவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 1939 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உசிலம்பட்டியில் நடைபெற்ற "கள்ளர் இளைஞர் மாநாட்டில்" இக்குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தீவிரமாகப் பேசினார். அப்போது அச்சட்டத்தை நீக்க தவறிய காங்கிரஸ் ஆட்சியை விமர்சித்தார். பிரிடிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக்கப்படவேண்டுமானால், குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இந்த, குற்றப்பரம்பரை சட்டத்தை வைத்து தேசீயவாதிகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒடுக்குகிறது என்று கூறினார். சுத்தமான ரதம், மறவர்களின் நரம்புகளில் ஓடுவது உண்மையானால், "நீ கை ரேகை வைப்பதிற்க்கு பதிலாக, கை விலங்கை மாட்டிக்கொள்ள thayaaraagu" (இச்சட்டத்தை எதிர்த்து) என்று அறைகூவல் விடுத்தார். சென்னை மாகாண ஆளுநர், உசிலம்பட்டி பகுதியில் நடைபெறுகின்ற ஜல்லிக்கட்டை பார்க்கவருவதாக திட்டமிட்ட போது தேவர் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று கருது, ஜல்லிகட்டை புறக்கணிக்குமாறு பிரமளைக்கள்ளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதன் காரணம், காளைகளை அடக்குவதில் பிரமளைகள்ளர்கள் காடும் வீர தீரத்தைக் கண்டு, இவர்கள் மீது குற்றப்பரம்பரைச்சட்டம் புகுத்தியது சரி என்று கருதி விடுவார் என்று அஞ்சினார். இவருடைய வேண்டுகோளின் படி பிரமளைகள்ளர்கள் ஜல்லிகட்டை புறக்கணித்தனர். 1940 ஆம் ஆண்டு செப்டம்பெர் மாதம், இந்திய பாதுகாப்புக்கு சட்டைன்படி கைது செய்யப்பட்ட தேவர் 1945 ஆம் ஆண்டுவரி சிறையில் இருந்தார். 1942 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸ் நிறுவிய "இந்திய பார்வர்டு பிளாக்" கட்சி தடை செய்யப்பட்டது.

இச்சட்டத்தை நீக்கவேண்டும் என்று 1946 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அப்போதைய சென்னை மாகான உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர். பி.சுப்புராயன், மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தினார். அம்மசோதா மெது ஆளுங்கட்சி, எதிர் கட்சி மற்றும் குற்றப்பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்டவர், பாதிக்கப்படாதவர் என்ற பாகுபாடின்றி இச்சட்டத்தை விளக்கிக் கொள்ள கருத்துக்களை வழங்கினார்கள். அப்போது, எதிர் கட்சியாக முஸ்லிம் லீக் செயல்பட்டது.

எதி கட்சி உறுப்பினரான பேகம் சுல்தான் மீர் அம்ருதீன் என்ற பெண்மணி கூறுகையில் "நாகரீகமான நாட்டில் உள்ள சட்டப்புத்தகத்தில் எழுதப்பட்ட ஒரு கரும் புள்ளி தான் இந்தச் சட்டம்" என்று கூறினார். மேலும் ஆர்.வி. சுவாமிநாதன், வி.ஐ. முனியசாமி பிள்ளை(ஆதி திராவிடர்), இராஜாராம் நாயுடு, ரெங்கா ரெட்டி மற்றும் பலர் இச்சட்டத்தை நீக்கக்கோரி சட்டமன்றம் மற்றும் சட்ட மேலவையில் பேசினர். அதனடிப்படையில் குற்றப்பரம்பரைச் சட்டம் ரத்துச் செய்யும் மசோதா சட்டமாக நிறைவேறியது.

இறுதியாக இம்மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, 1947 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் நாள் தலைமை ஆளுநரின் ஒப்புதல் பெற்று, 1947 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி முதல் குற்றப்பரம்பரைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது.

தேவரின் குற்றப்ப்பரம்பரி சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தேவரை சாதியவாதியாக காட்ட முற்படுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் 89 க்கும் மேற்பட்ட ஜாதிகள் இக்கொடூர சட்டத்தின் கோரப்பிடியில் சிக்கி இருந்தனர். தமிழகத்தில் தேவரினதைத் தவிர வேப்பூர் பறையர்களும், படையட்சிகளும், குரவர்களும் கூட இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே இப்போராட்டம் விடுதலை போராட்டத்தின் ஒரு பகுதியே தவிர, தான் ஜாதிக்காக போராடிய போராட்டமல்ல !. 

Tamil Nadu´s Ancient Cities May Predate Mesopotamian Civilization

0 c

Tamil Nadu´s Ancient Cities May Predate Mesopotamian Civilization

Hindustan Times
CHENNAI, INDIA, January 5, 2003: A British marine archaeologist Graham Hancock has been examining a submerged city on the East Coast of Tamil Nadu.
Mr. Hancock says a civilization thriving there may predate the Sumerian civilization of Mesopotamia in present-day Iraq and definitely existed before the Harappan civilization in India and Pakistan. He has been excavating the site off the coast of Poompuhar, near Nagapattinam, 400 km south of Chennai.
At a meeting of the Mythic Society in Bangalore in early December, Mr. Hancock said underwater explorations in 2001 provided evidence that corroborated Tamil mythological stories of ancient floods. He said tidal waves of 400 feet or more could have swallowed this flourishing port city any time between 17,000 and 7,000 years ago, the date of the last Ice Age.
The Gulf of Cambay was also submerged, taking with it evidence of early man´s migration. The populations Mr. Wells and Mr. Pitchappan (see previous article) mapped settled on India´s East Coast 50,000 to 35,000 years ago and developed into modern man. According to Hancock, "the Poompuhar underwater site could well provide evidence that it was the cradle of modern civilization." Hancock´s theory is strengthened by findings of India´s National Institute of Oceanography (NIO), which has explored the site since the 1980s.
Man-made structures like well rims, horseshoe-shaped building sites are some of the lost city´s secrets. At low tide, some brick structures from the Sangam era are still visible in places like Vanagiri. The region, archaeologists say, has been built over and over again through the ages and some of its past is now being revealed. Mr. Glenn Milne, a British geologist from Durham University, has confirmed Hancock´s theory.

மாணவிகள் கடத்தல் தடுக்கப்படுமா?

0 c
First Published : 10 Dec 2010 12:18:00 AM IST


கோவையில் முஸ்கின், ரித்திக் எனும் இரு மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்டதும், சென்னையில் கடத்தப்பட்ட மாணவர் கீர்த்திவாசனை போலீஸாரே பணம் கொடுத்து மீட்ட சம்பவமும் அண்மையில் அடுத்தடுத்து நடந்தன. இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதையடுத்து, பள்ளிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான சுற்றறிக்கைகளை தமிழக அரசு அனுப்பியுள்ளது. கல்வி நிலையங்களையும் கண்காணித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீஸாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
 உண்மையில், மாணவிகள் கடத்தல் தொடர்கதையாகவே உள்ளது. இது, நாள்தோறும் எங்காவது ஓரிடத்தில் அன்றாடம் நடைபெற்றுவரும் சம்பவமாகவே ஆகிவிட்டது. மாணவிகளை இளைஞர்கள் அல்லது உடன் படிக்கும் மாணவர்களே ஆசை வார்த்தை கூறி காதலில் வீழ்த்தி, திருமணம் செய்துகொள்வதே இப்போதைய "வீர விளையாட்டு'.
 மாணவிகள் கடத்தப்பட்டால் பெற்றோர்கள் பலர் தங்களது குடும்ப கௌரவத்தை மனதில் கொண்டு போலீஸில் புகார் தெரிவிப்பதில்லை. வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், இத்தகைய செய்திகளைப் பத்திரிகைகளும் ஊக்குவிப்பதில்லை. இவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளோருக்கு சில நாள்கள் பொழுதுபோக்காகப் பேசப்படும் விஷயமாகவே இருக்கும்.
 ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வகை கடத்தல்களில் சிக்கி, தங்களது எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருகின்றனர். பெற்றோருக்குப் பயந்து காதலனோடு ஊரைவிட்டு வெளியூர் செல்வதால், இவர்களின் கல்வியும் தடைபடுகிறது.
 "ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பதற்கேற்ப இவர்களில் பலர் கொஞ்சநாளில் கணவனைவிட்டுப் பிரியும் நிலையும் ஏற்படுகிறது. அப்போது இவர்களைப்  பெற்றோர்கள் அரவணைப்பதில்லை. தடைபட்ட கல்வியால் சரியான வேலைவாய்ப்புக் கிடைக்காமலும், அன்றாட வாழ்க்கையை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே நடத்தியும் வருகின்றனர்.
 இதுமட்டுமன்றி, மாணவிகளோடு நெருக்கமாகப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அவர்களது பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் விஷமிகளும் உண்டு.
 இன்டர்நெட், திரைப்படங்கள், சின்னத்திரை மெகா சீரியல்கள், குடும்பப் பிரச்னைகள், பெற்றோர் அரவணைப்பு இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் இளம்வயதுக் காதல் அதிகரித்து வருகிறது.
 கல்வி நிலையங்களில் வாரந்தோறும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த "நீதிபோதனை' வகுப்புகளும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுவிட்டன. இயந்திரமயமான உலகில் தம்பதி, பணிக்குச் சென்றுவிடுவதால், தங்களது பிள்ளைகள் மீது அரவணைப்போ அல்லது கண்டிப்போ காட்டுவதில்லை. இதனால், அவர்கள் மீது மாற்றுப் பாலினத்தவர் செலுத்தும் அன்பு காதலாக மாறுகிறது. அது அன்பா(!) அல்லது விஷமா(?) என்பது அவர்களுக்கே புரிவதில்லை. அப்பாவி மாணவிகளின் வாழ்க்கையும், கனவுகளும் சிதைக்கப்பட்டு வருகின்றன.
 மாணவர்கள் செல்போன்கள் எடுத்து வருவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். கல்வி நிலையங்களுக்கு அருகே செயல்படும் பிரத்தியேக தொலைபேசி நிலையங்களும், செல்போன் ரீசார்ஜ் கடைகளும் உண்டு. இவற்றை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளே கண்காணித்து, தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதேநேரத்தில், மாணவர்களின் பெற்றோரும் தங்களது ஓய்வுநேரத்தில் தங்களது பிள்ளைகள் மீது அரவணைப்போடு இருத்தல் வேண்டும். பிள்ளைகளுக்குத் தெரியாத விதத்தில் அவர்களைக் கண்காணித்து, கண்டிப்பும் செலுத்த வேண்டும்.
 பஸ் நிலையங்கள், திரையரங்குகள் ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் ஜோடியாகப் பேசுவதை மக்கள் தடுக்க வேண்டும். யாரோ.. எவரோ நமக்கு ஏன் வம்பு என்று இருந்துவிடாமல், அவர்களை விசாரித்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கோ அல்லது அவர்களது பெற்றோருக்கோ தகவல் தெரிவிக்கலாம்.
 இதோடு, முக்கிய இடங்களில் சந்தேகப்படும்படியாகத் திரியும் ஜோடிகளை போலீஸாரே விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். மகளிர் காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸாரை நியமித்து, இப்பணியில் ஈடுபடுத்தலாம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கலாம்.
 எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறாமல் இருப்பதற்காக, மாணவிகள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையே இப்போது உடனடித் தேவை! ஏனென்றால் "பெண்கள்தான் நாட்டின், வீட்டின் கண்கள்'.
thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=344140&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?

குடிபோதை

0 c

குடி - ஜெயமோகன்

நண்பர் ஜீவானந்தம் அவர்கள் தமிழ்நாட்டின் சுற்றூச்சூழல் இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவர். முப்பதுவருடங்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துக்களை பரப்புவதற்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கும் கடுமையாக உழைத்துவருபவர். அதற்கும் மேல் அவர் ஒரு மருத்துவர். மயக்கவியல் நிபுணர். நலம்தா மருத்துவமனை என்ற பேரில் மதுஅடிமை மீட்பகம் ஒன்றை ஈரோட்டில் நடத்திவருகிறார்.

அவரது மருத்துவமனையில் அமர்ந்து அவரிடம் நான் நிறைய உரையாடியதுண்டு. ஒருமுறை ஒரு லாரி ஓட்டுநர் வந்து குடியை நிறுத்தியபின்புள்ள வாழ்க்கையைப்பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றார். அவரது மனைவி மிக நெகிழ்ந்த நிலையில் டாக்டருக்கு நன்றி சொன்னாள். அவ்வாறு வந்துபேசுவது என்பது குடியை நிறுத்துவதில் மிக முக்கியமானது. அந்த உறுதிப்பாட்டை நீடிக்கச்செய்யும் ஒரு முயற்சி அது.

அவர் போனபின் டாக்டர் சொன்னார், ‘அவரைக் கவனித்தீர்களா , கையில் உயர்தர வாட்ச் அணிந்திருக்கிறார்.நல்ல சட்டை. மனைவி கழுத்தில் தங்கச்சங்கிலி. குடியை நிறுத்தி ஒருவருடம் ஆகவில்லை. பொருளாதார நிலை பலமடங்கு மேம்பட்டிருக்கிறது”. ”எப்படி?” என்றேன் ஆச்சரியமாக.

குடிப்பவர்களின் குடும்பங்கள் மிகமிகக் குறைவான வருவாயில் வாழக்கற்றுக் கொண்டிருக்கின்றன…என்றார் டாக்டர். தினம் முந்நூறு ரூபாய் சம்பாதிப்பவர் ஐம்பது ரூபாய்கூட குடும்பத்துக்குக் கொடுப்பதில்லை. அந்த சிறு தொகையில் அனைத்துத்தேவைகளையும் ஒடுக்கிக் கொண்டு அந்த குழந்தைகளை மனைவி வளர்க்கிறாள். சட்டென்று குடியை குடும்பத்தலைவர் விடும்போது கிட்டத்தட்ட முக்கால்பங்கு சம்பளம் மிச்சமாகிவிடுகிறது. சிலநாட்களிலேயே குடும்பம் மேலேறிவிடுகிறது.
'
'
குடி ஒரு பண்பாட்டு அம்சமோ ஒரு வாழ்க்கைமுறையோ கேளிக்கையோ ஒன்றுமல்ல, அது ஒருவகை நோய் மட்டுமே. நோயாக மட்டுமே அதைக் கண்டு அதற்கு சிகிழ்ச்சை அளித்து குணப்படுத்துவதே தேவையான செயலாகும். பெரும்பாலான குடிகாரர்கள் விளையாட்டாக நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கிறார்கள். சட்டென்று உடல் அதற்குப் பழகிவிடுகிறது. அந்தப்பழக்கம் மெல்ல அடிமைப்படுத்துகிறது. அந்த பழக்கத்தை நியாயப்படுத்த ஆயிரம் காரணங்களைக் கண்டுபிடிக்கிறார்கள் மனிதர்கள். உடல்உளைச்சல் முதல் குடும்பப் பிரச்சினைகள் வரை. அந்த நியாயங்களுக்குள் சென்று விவாதிப்பதில் பொருளே இல்லை. நோயை குணப்படுத்துவதே தேவை
'
'
இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டில் குடியின் பாதிப்பு மிகமிக அதிகம். பெரும்பாலும் வறுமைவாய்ப்பட்டவர்கள் வாழும் நம் நாட்டில் குடியினால் உழைப்பு குறைகிறது. உடல்நலம் குறைகிறது. விளைவாக குடும்பத்தில் பொருளியல் இழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம்பேர் மனைவிகுழந்தைகளை பட்டினி போட்டுத்தான் குடிக்கமுடியும்.
குடியை ஒரு நோயாக எண்ணமுடிந்தால் அதை சிகிழ்ச்சை செய்து குணப்படுத்துவது எளிது. ஆனால் சிகிழ்ச்சை பெறுபவர்களில் மீண்டும் குடிக்குத் திரும்பாமல் இருப்பவர்கள் கால்வாசிப் பேர்தான் என்றார் டாக்டர். ஏனென்றால் குடியை நாடுபவர்களில் பலர் குடிசார்ந்து ஓர் உலகை உருவாக்கி வைத்திருப்பார்கள். நெடுங்காலம் வேறு எதிலும் அவர்களுக்கு ஆர்வமே இருப்பதில்லை. சட்டென்று குடியை நிறுத்தும்போது ஒரு வெற்றிடம் உருவாகி வருகிறது. அந்த வெற்றிடத்தை அவர்கள் வேறுசெயல்பாடுகள் மூலம் நிரப்பிக்கொள்ளாவிட்டால் குடி அதை மீண்டும் கைப்பற்றும்.

தமிழ்நாட்டில் குடி ஒரு பெரும் சமூகச்சிக்கலாக நெடுங்காலம் முதலே இருந்து வருகிறது. தெருவில் கள்ளுண்டு பிதற்றும் குடிமகன்களை நாம் மணிமேகலையிலேயே காண்கிறோம். ஏழை மக்கள்தான் எப்போதும் குடிக்கு அடிமைகள். அவர்களின் அடிமைத்தனத்துக்கு குடியே காரணமாக இருக்கிறது.
'
'
நாகர்கோயில் கார்மல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிழல் உலக நிதர்சனம்என்ற பேரில் 2006 டிசம்பர் 7,8,9 தேதிகளில் ஜெயபதி அடிகள் முயற்சியால் நடத்தப்பட்ட கருத்தரங்கு இத்துறையில் ஒரு முக்கியமான முயற்சி. குடிகுறித்த பண்பாட்டுத்தகவல்களை தொகுப்பதற்கும் அதைப்பற்றிய ஓர் உரையாடலைத் தொடங்கி வைப்பதற்கும் இது முகாந்தரமாக அமைந்தது. அந்த அரங்கில் மூன்று நாட்களில் ஆறு அமர்வுகளிலாக 24 கட்டுரைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை தொகுத்து குடிபோதை:புனைவுகள் தெளிவுகள்என்ற பேரில் ஒரு நூலாக ஆக்கியிருக்கிறார்கள் முனைவர் அ.கா.பெருமாள் மற்றும் சின்னச்சாமி.

இந்த நூல் குடிக்கு எதிரான ஒரு பிரச்சார நூல் அல்ல. குடிகுறித்த பலகோணங்களிலான ஒரு விவாதநூலே. இந்நூலில் உள்ள குடியும் குடிசார்ந்த எண்ணங்களும்என்ற நாஞ்சில்நாடனின் புகழ்பெற்ற கட்டுரை உண்மையில் அளவோடு குடிப்பது நல்லது என்றே வாதிடுகிறது. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்றுஎன்று அது குடியை வர்ணிக்கிறது. குடி என்பது அறப்பிரச்சினை அல்ல, ஒழுக்கப்பிரச்சினை மட்டுமே. ஒழுக்கம் சார்புநிலைகொண்டது என்று வாதிடுகிறார் நாஞ்சில்நாடன்.
'
'
பிரான்ஸிஸ் ஜெயபதி அவர்களின் கட்டுரை மருத்துவ நோக்கில் குடி என்பது எப்படி ஒரு நோயாகவே கருதப்படுகிறது என்பதை மிக விரிவாக ஆராய்கிறது. கடற்கரைச் சமூகத்தில் 65 சதவீதம் ஆண்கள் குடிகாரர்கள் அவர்களில் 40 சதவீதம்பேர் குடியடிமைகள் என்று சொல்கிறார் ·பிரான்ஸிஸ் ஜெயபதி.
டார்டர் என்னும் ஆங்கில மருத்துவர் 1880ல் இரு பெரும் நூல்களை எழுதினார். நியூயார்க்கைச்சேர்ந்த டாக்டர் சில்க்வர்த் [William Duncan Silkworth]என்பவரும் குடி ஒரு நோய்தான் என்று வாதிட்டார். அவரால் குணமான பில் வில்சன் என்பவரே பின்னர் குடிக்கு எதிரான ஆல்ககாலிக் ஆனானிமஸ் என்னும் அமைப்பை உருவக்கினார்


குடி ஓர் அறப்பிரச்சினை அல்ல. ஒழுக்கக்கேள்வி அல்ல. புலனடக்கம் சார்ந்தது அல்ல. குடிகாரர் உண்மையில் ஒரு நோயாளி. அவருக்கு தேவை அறிவுரையோ புறக்கணிப்போ அல்ல. பிற நோய்களைப்போல அதற்கும் மருத்துவ உதவிதான் தேவை என்றார்கள் இவர்கள். மெல்ல மெல்ல அமெரிக்க மருத்துவக் கௌன்ஸில் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டது. குடியை ஒரு நோயாக நிர்ணயம் செய்வதற்கான விதிகளை அது இரண்டாண்டுக்கால விவாதத்துக்குப் பின் உருவாக்கிக்கொண்டது.
'
'
பலவருடங்கள் கழித்துக்கூட குணமான குடிநோயாளி மீண்டும் திரும்பிவிடக்கூடும். ஆகவே தொடர்ச்சியான கண்காணிப்புடன் விரிவான பண்பாட்டு மாற்று அமைப்பும் அதற்கு தேவையாகிறது. மொத்தத்தில் குடியை நிறுத்துவது என்பது எளிய செயலல்ல என்று சொல்லும் பிரான்ஸிஸ் ஜெயபதி குடிக்கு எதிரான மனத்தடையை சமூகம் உருவாக்கி குடியை தொடங்காமல் இருக்கச்செய்வதே சிறந்த வழி என்கிறார்.
'
'
காந்திய சிந்தனையில் குடி குறித்த கருத்துக்கள் எப்படி உருவாயின என்பதை காந்தியவாதியான தே.வேலப்பனின் கட்டுரை விரிவாகச் சொல்கிறது. காந்தி குடிக்கு எதிரான தன் தீவிரமான கருத்துக்களை மதத்தின் ஒழுக்கவியலில் இருந்து பெற்றுக்கொண்டவரல்ல. அவர் ஓர் நடைமுறைவாதி. குடி எப்படி உடலையும் மனதையும் அடிமைப்படுத்துகிறது என்ற நேரடி அனுபவங்கள் மூலமே அவர் தன் எண்ணங்களை அடைந்தார்.
பாட்டர்சன் என்ற ஆஸ்திரேலியப் பொறியியலாளர் குடி அடிமையாக இருந்து காந்தியால் மீட்கபப்ட்டார். ஆனால் சிலவருடங்கள் கழித்து ‘;நான் மீண்டும் மதுவசமானேன் என்று காந்திக்கு எழுதிவிட்டு மீண்டும் குடிகாரர் ஆனார். காந்திக்கு குடியின் வல்லமையைக் காட்டிய நிகழ்வு அது. குடியில் உள்ள பொருளியல் சுரண்டலை காந்தி நன்கறிந்திருந்தார். கள்ளுக்கடை ஆங்கில அரசின் மையமான சுரண்டல்களில் ஒன்று என்று உணர்ந்தபின்னரே அவர் அதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்



குடிபோதை:புனைவுகள் தெளிவுகள்தொகுப்பாசிரியர்கள் அ.கா.பெருமாள், சின்னச்சாமி. தமிழினி வெளியீடு.

லிங்க்: http://www.jeyamohan.in/?p=2215



Tuesday 6 April 2010

குடிப்பழக்கம் - தேவைதானா?

மது (ஆல்கஹால்):

ஆல்கஹால் அல்லது சாராயம் சாதாரணமாக மக்களால் உட்கொள்ளப்படும் போதைப்பொருட்களில் ஒன்று. இது பெரும்பாலான சமுதாயங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் எளிதில் கிடைக்கக் கூடியதுமாகும். ஆல்கஹால் பல்வேறு விதங்களில் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களால் போதைப்பொருளாகக் குடிக்கப்படுவது (ஈதல் ஆல்கஹால்) எனும் வகையாகும். இது தெளிந்த, நீர்த்த நிலையில் உள்ள ஒருவித எரியும் சுவையுடன் கூடிய திரவம். புளிக்க வைத்தல் மற்றும் காய்ச்சி வடிகட்டும் முறைகளில் இது தயாரிக்கப்படுகிறது.

குடிநோய் (ஆல்கஹாலிசம்) :

குடிநோய் என்பது தீவிரமான தொடர்ந்த உடல் மற்றும் மன பாதிப்பை ஏற்படுத்தி, இறுதியில் மரணத்திற்கு வழிவகுக்கும் நோயாகும். அதன் முக்கிய அடையாளங்கள்.

1. குடிப்பதற்கான அடக்க முடியாத தீவிர வேட்கை எப்போதும் இருப்பது.

2. கட்டுப்பாடின்மை, குடிக்க ஆரம்பித்த உடன் நிறுத்த முடியாமல் மேலும் மேலும் குடிப்பது.

3. உடல் பாதிப்புகள், குமட்டல், வியர்வைப் பெருக்கம், நடுக்கம், தேவையற்ற பரபரப்பு போன்ற விலகல் அடையாளங்கள், குடிப்பதை நிறுத்தினால் ஏற்படுவது.

4. மேலும் மேலும் அதிகமாகக் குடித்தால் மட்டுமே போதை ஏற்படுவது.


குடிப்பழக்கத்தின் அபாயம்:
இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிநோயும் ஒன்று. நம் நாட்டில் உள்ள மனநல சிகிச்சை மையங்களில் சேர்க்கப்படும் குடிதொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதைப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இளம் பருவத்தினரிடையே, முக்கியமாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் பெருகிவருவது கவலையளிப்பதாக உள்ளது. போதை காரணமாக ஏற்படும் பல்வேறு உடல் பாதிப்புக்கள், படிப்பில் ஆர்வமின்மை போன்றவை இதன் உடனடி விளைவுகள். இது இளைஞர்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக அமைந்துவிடுவதால் பல குடும்பங்களும் சமுதாயமும் வெகுவாகப் பாதிப்படைகின்றன.


ஒருவருக்கு குடிநோய் இருப்பதை எவ்வாறு அறியலாம்...?

பின்வரும் நான்கு கேள்விகளில் ஒன்றுக்கேனும் உங்கள் பதில் “ஆம்” என்றிருந்தால், நீங்களோ அல்லது சம்பந்தப்பட்டவரோ குடிநோயின் ஆதிக்கத்திற்குட்படும் வருகிறீர்கள் என்றறியலாம்.

1. நீங்கள் எப்போதாவது குடிப்பழக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று எண்ணியதுண்டா...?

2. உங்களது குடிப்பழக்கத்தின் காரணமாக மற்றவர்கள் உங்களை விமர்சித்து அதனால் நீங்கள் கோபமடைந்ததுண்டா?

3. நீங்கள் எப்போதாவது குடிப்பது தவறு என்று எண்ணி அதனால் குற்றவுணர்வு அடைந்ததுண்டோ?

4. நீங்கள் காலையில் எழுந்த உடன் முதல் காரியமாக உங்கள் நடுக்கத்தைக் குறைக்கவோ முந்தைய தினம் குடித்ததன் விளைவை அகற்றவோ குடிப்பதுண்டா...?

இந்நிலையில் உடனடியாக இந்தக் கொடிய அடிமைப் பழக்கத்திலிருந்து விடுபட இதற்கென உள்ள மையங்களில் உள்ள மருத்துவர்களைச் சந்தித்தல் அவசியம். அவர்கள் உங்களுக்குத் தக்க ஆலோசனைகளையும் செயற்திட்டத்தையும் அளித்து உங்களை மீட்பது உறுதி.


மக்கள் ஏன் குடிக்கிறார்கள்...?

சிறிதளவு மதுவை உட்கொள்ளும் போது ஏற்படும் பின்வரும் “குறுகியகால விளைவுகள்” மக்களை வெகுவாக ஈர்த்துவிடுவதால் குடிப்பதை விரும்புகின்றனர்.

1. மன இறுக்கம் அகன்று ஒருவித தசைத்தளர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

2. சுணக்கத்தை அகற்றி சுதந்திரமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது.

3. பசி உண்டாகிறது.

4. வேதனை தரும் விஷயங்களை மறக்க உதவுகிறது.

இவையனைத்தும் அப்போதைக்கு மட்டுமே என்பதை அறியத் தவறிவிடுகின்றனர்.


குடிப்பது தொடர்பாக மக்களிடையே பரவலாக இருந்துவரும் “தவறான கருத்துக்கள்” :

1. தினசரி சிறிதளவு மது அருந்துவது நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். இந்த சிறிதளவு என்பது வரையறுக்கப்படாத ஒரு அளவு.

2. ஆல்கஹாலை அருந்தியவர் மாமிச உணவை உட்கொண்டு விட்டால் எந்த வித உடல் பாதிப்பும் ஏற்படாது.

3. பீர் மற்றும் திராட்சை மது உடலுக்குத் தீங்கு விளைவிக்காது.

4. சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது.

5. ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பகரமானதாக ஆக்கும்.

6. குடிப்பதால் ஒருவர் தனது மனச்சோர்விலிருந்து விடுபட முடியும்.

7. குடித்துவிட்டால் மற்றவர்களுடன் நட்புடனும் தயக்கமின்றியும் பழகமுடியும்.

8. குடித்தால் இரவில் நன்கு உறக்கம் வரும்.

9. அலுவலக நேரங்களில் குடிப்பதால் நன்கு வேலை செய்ய முடியும்.

10. மன அழுத்தம் மற்றும் கவலைகள் காரணமாக ஏற்படும் பரபரப்பை அகற்றும்.

11. ஜலதோஷம் மற்றும் இருமலை, விக்ஸ் களிம்பு போன்று போக்கிவிடும்.

12. குடிப்பதால் மனத்திடமும் தைரியமும் ஏற்படும்.

13. தீவிர உடலுழைப்பில் ஈடுபடுவர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கும்.

14. உடற்களைப்பைப் போக்கும்.

15. பிரசவித்த பெண்களுக்கு நல்லது.

16. உணவிற்கு முன்பு குடிப்பது பசியைத் தூண்டும்.

17. குடித்தால் மசாலா சேர்த்த மாமிச உணவு மேலும் ருசியுடையதாக இருக்கும்.

18. நண்பர்களை வருத்தமடையச் செய்வதைக் காட்டிலும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குடிப்பதே மேல்.

மேற்சொன்னவை எல்லாம் மனித மனதின் தவறான கற்பிதங்களேயன்றி வேறில்லை..


ஒருவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டான் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள் :

1. உடல் ஆரோக்கியம் நலிவடைதல் சிவப்பேறிய கண்கள், சருமம், வெளிறிய தோற்றம், எடை மாற்றங்கள் போன்றவை.

2. உடலில் ஒருவித துர்நாற்றம்.

3. பள்ளிக்குச் செல்லாமை, படிப்பதில் ஆர்வமின்மை, பள்ளி வேலைகளை சரிவர செய்யாதிருப்பது, கடைநிலைக்குச் சென்றுவிடுவது.

4. வீடுகளில் கூறப்படும் புத்திமதிகள் பள்ளி வீதிகள் ஆகியவற்றை எதிர்ப்புணர்வுடன் மீறத் தலைப்படுவது.

5. பள்ளி மற்றும் வீட்டருகே தகாத செயல்களில் ஈடுபடுவது.

6. காரணமின்றி பள்ளி மற்றும் வேலைக்குச் செல்லாமல் திரிவது.

7. வழக்கமான நண்பர்களை விட்டகலுதல்

8. புதிய நண்பர்களைப் பற்றி ரகசியமாக வைத்திருப்பது.

9. வீட்டு விவகாரங்களிலிருந்து விலகியிருப்பது, தனது செயல்களை யாருமறியாது ரகசியமாகச் செய்வது.

10. எதிலும் ஈடுபாடு குறைவு: சோர்வாகவும் வழக்கத்திற்கு அதிகமாக தூங்கிக் கொண்டும் இருப்பது.

11. உடல் சுத்தத்தில் கவனமின்மை. சரியாக தினசரி குளிக்காமலும் அழுக்கமான ஆடைகளைத் தொடர்ந்து அணிந்தும் இருப்பது.

12. இரவில் தாமதமாக வருதல். அதற்கு பல கட்டுக் கதைகளைக் கூறுதல்.

13. வீட்டில் யாருடனும் பேசாமல் இருப்பது அல்லது தவிர்ப்பது.

14. பணம் காணாமல் போவது, தனது சொந்த உடமைகளை விற்று விடுவது

15. கடைகளில் திருடுவது.


குடிநோயின் உச்சம்:

1. மிகவும் அதிகமாகக் குடிப்பது.

2. ஒரே மூச்சில் குடிப்பது.

3. கடுமையான நடத்தை கோபப்பட்டு கண்டபடி கத்துவது, சண்டையிடுவது.

4. எரிச்சலூட்டும் நடத்தை தூக்கமின்மை, உணவை உட்கொள்ளாமல் இருப்பது.

5. குடிப்பதை நிறுத்த முயற்சித்தாலும் தோல்வியடைதல்

6. திடீரென மாறும் மனநிலை.

7. இடையறாது குடித்தல்

8. தனிமையில் குடித்தல்

9. ஏற்க முடியாத காரணங்களைக் கூறி மேலும் குடித்தல்.

10. மயங்கி விழும்வரை குடிப்பது.

11. உடல் பிரச்னைகள் அதிகரிப்பது

12. முற்றிலுமாக மறந்து போதல்

13. மது பாட்டில்களை பிறர் அறியாவண்ணம் மறைத்துப் பாதுகாத்தல்.

14. மன எழுச்சி, குடும்பம் மற்றும் நிதிப் பிரச்சனைகள்

மேற்கூறியவற்றில் சில பிரச்னைகள் இருந்தாலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதை அறிய வேண்டும்.


குடிப்பதற்கு ஆரம்பித்து குடிநோயாளியாக மாறுவதற்குகிடையில் உள்ள நிலைகள்:

1. சோதித்துப் பார்க்கும் நிலை...

ஆல்கஹாலை உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை அறிய ஆவலால் சிலர் குடித்துப் பார்க்க முயல்கின்றனர்.

2. சமூக நிகழ்ச்சிகள் நிலை...

நண்பர்களைச் சந்திப்பது விருந்துக் கூட்டங்கள் போன்ற சமூக நிகழ்ச்சிகளின் போது மது அருந்துவது.

3. சார்பு நிலை...

குடிக்காமல் இருக்க முடியாது எனும் நிலை. தொடர்ந்து தனியாகக் குடிக்கும் நிலை.

4. தீவிரமடைந்த நிலை

குடிப்பவர் எப்போதும் உடல் மற்றும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். மேலும், குடித்தால் மட்டுமே இதிலிருந்து தப்ப முடியும் எனக் கருதுகிறார்.


ஆல்கஹால் ஒரு போதைப் பொருளா...?

இதில் சந்தேகத்திற்கிடமே இல்லை. ஆல்கஹால் குடித்தவுடன் விரைவிலேயே ரத்த ஓட்டத்தில் கலந்துவிடுவதால் மூளைக்கும் செல்கிறது. இதன் விளைவே போதை எனப்படும் இயல்பான நடவடிக்கைகளிலிருந்து ஏற்படும் மாற்றங்கள், ஆல்கஹால் ஊக்கமழித்துச் சோர்வை ஏற்படுத்தும் போதை மருந்தாகும்.


நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்


thanks to http://uravukkalam.blogspot.com/

Origin of Cholas- Tamil Myth

2 c



Origin of Cholas- Tamil Myth

Cholas are said to be the three dynasties who ruled Tamil nadu from ancient times, But all three dynasties origin remain a question. Let us see the cholas origin.

Sora
The etymology of the word Chola has been agreed upon by many historians and linguists to be derived from the Tamil word Sora or Chora. Moreover, numerous inscriptions confirm that the name of the Dynasty was Sora but pronounced today as Chola(sanskrit).

kalvar caste
Cholas belong to kalvar caste, Kalvar are said to be invaders in sangam literatures better known as kalabhras. The kalvar people still live around tanjor. So are the Cholas natives of Tamil nadu.

chalukya cholas
The Eastern Chalukyas ruled a kingdom in Vengi (eastern Andhra Pradesh) from about 625 until 1070, Then they took over the chola kingdom and dynasty. Earlier three generations of Eastern Chalukyan prince have married chola princess. So the question is how they did not face any resistance. In this background Rajendra Chalukya accended chola throne as Kulothunga chola I , thus annexing chola empire to Eastern chalukya empire and there again was no resistance eventhough Virarajendra died and his son and successor Adhirajendra was assassinated. That clearly caste doubts on cholas as any different from chalukya stock.

Chalukya author Bilhana gives a version of the background to Athirajendra’s troubles in his Vikramankadeva Charita.
'On hearing news of trouble and revolt in the Chola country following the emperor’s death, Vikramaditya, immediately marched to Kanchipuram to quell troubles there. Then he went to Gangaikonda Cholapuram, destroyed the forces of the enemy and installed the prince (Athirajendra) on the throne. After spending a month in the Chola capital, Vikramaditya apparently satisfied that peace was restored, returned to his country. '

Vikramaditya VI has come to chola country and he is called Kannadasandhivigrahi as said by his kannada inscription at the Ranganatha Swami Temple, Srirangam as peacemaker between fighting cousins.

Udayaditya, Choda wrote a treatise Udayadityalankaram in Kannada, 75 stanzas on the art of Poetry based on Dandin Kavyadarsa

And they never combined with pandyas and after accession Rajendra chalukya defeated pandyas and annexed the whole of tamil nadu. This raises the question whether chola are kannada stock.

Cholas and Prakrit.
All the Inscriptions are in prakrit, not in tamil. That has to be noted. If they are Tamil rulers then what was the hesitancy in promoting tamil.

Telugu chola
We do not know the origin of Cholas dynasty,but we know the origin of Telugu cholas pronounced Chodas from 5th century AD onwards. We have inscriptions on the following telugu dynasties who were feudataries of Chalukyas. The chodas trace their decent to Ikshavakus , who trace their origin to Manu, the cholas also trace their origin to Manu, Manu Needhi Cholan

  • Velanati Cholas ( Ruled the Velanadu Region Current E.G,W.G and Krishna Districts)
  • Renati Cholas (Ruled the Renadu Regions Current Cuddapah, Kurnool Regions)
  • Pottapi Cholas (Ruled the Renadu Regions Current Cuddapah, Chittor Districts)
  • Konidena Cholas (Ruled the Palanadu region Current Guntur, Prakasam Districts)
  • Nannuru Cholas (Ruled the Pakanadu region Current Anantapur District)
  • Nellore Cholas (Ruled the Nellore,Chittor, Chengalpeta and Cuddapah Regions)
So the chola dyansty who started under 8th century can also have origin from above telugu cholas. Most apt description would be cholas are telugus , not tamil.

But Rajendra chola came to help Eastern chalukya king Danarnava against Telugu choda king jata choda bhima(Amma II brother in law). Later after Kulothunga I acended throne as chola king, they shifted loyalty to Chola kings.

Pallava origin
Killivalavan was a chola king mentioned in Sangam Literature, and of a period close to that of Nedunkilli and Nalankilli , in the Purananuru and Agananuru.The etymology of Killi is kilai (Branch in Tamil)

The word Pallava means branch in Sanskrit, denoting that they are a later offshoot (Kilai-> Branch(tamil)) of Chutus (satkarnis).Pallava is rendered as Tondaiyar in the Tamil language. The Pallava kings at several places are called Thondamans or Thondaiyarkon.The territory of the Pallavas was known as Tundaka Visaya or Tundaka Rashtra.(tundaka - Branch) The Sanskrit meaning of Pallava is Kilai The Tamil Thondai means the same, It shows that Pallavas are descendants (Kilay or Pirivu) of Chutus(satakarnis).

Karnata dynasties Chalukyas and Rastrakutas call themselves Vallabhas and Pallava also from Karnata have called themselves vallabhas in some places, which translates to valavan in Tamil.

If we take the killi -> Kilai and Pallava -> kilai and vallabha -> valavan

We have killi valvan and it shows that killi valavan is generic term applied to pallava vallabha.

After the pallavas revenge against pulikesin II, Ganga king who had marital relations with chalukyas defeated the pallavas and chased them out of kanchi. So the pallavas shifted themselves to a place called Kaduvetti, which is now in chola country. Many of their inscriptions are from kaduveti. Only after this time we see cholas rising. Cholas might have marital relations with pallavas and  putting killivalavan as one of their ancestors, shows their ancestors are  pllavas. Until Nirputunga pallava cornation ,they were feudatories of pallavas.
This also solves myth Pallavas are not mentioned in Sangam literature ,so sangam literature has to be dated before pallavas.

Others
There is no tiger in chola country ,but their emblem is Tiger has to be noted, which show they are from outside Chola region.

Chola kingdom fell despite efforts to propup their proxy administration by Hoysalas of Halebidu against Pandyas.

Bengali 's
The Following is a interesting take from Bengali community. Some Sangam works talks about five tribes who settled in Tamil Nadu. These are Naga tribes from north who moved down to south.the
  • VaeLir - the farmers,
  • Mazhavar - the hill people who gather hill products, and the traders
  • Naagar - people in charge of border security, who guarded the city wall and distant fortresses .
  • Kadambar - people who thrive on forests
  • Thiraiyar - the seafarers.
Pallavas are said to be sect of Thiraiyar. Later sub sects arose and one of the important sects is MaRavar( warriors, conquerors and rulers; including the major Tamil dynasties of Cheras, Cholas and Pandyas. The Following Paragraph is bengali take on the above subject.

Bengali's say many Naga-worshipping tribes proceeded from Bengal as well as from other parts of Northern India to establish their supremacy in Tamil Nadu. Of these tribes, the Marans, the Cheras and the Pangala Thiraiyar interest us most. The Cheras, it is stated, proceeded to Southern India from the north-west of Pangala or Bengal and established the "Chera" kingdom of much historical note. It is significant that the Cheras are mentioned in the old Brahmin literature as occupying the eastern tract of the Magadba country. As to the Marans, who are said to have been the neighbours of the Cheras in Northern India, it is equally important to note, that the Pandya kings claim to be of Maran descent. The Marans, who were also called Maravars, are reported to have been a very fierce and warlike people, and that they worshipped the goddess Kali on the top-knot of whose hair stood an infuriated cobra snake. The Pangala Thiraiyars are recorded as the latest immigrants, and it is narrated of them, that they proceeded from the sea coast of Bengal by boat and founded the Chola kingdom at Kanchi. As the phrase Pangala or Bangala Thiraiyar is equivalent to (Tlra-Vanga), we can assert un- hesitatingly, that these people had received Aryan influence in Bengal before they left for the Madras coast.

So the question is who are cholas , From the above points they are not definitely tamils, they are either Telugu or kannada stock

THANKS TO  http://controversialhistory.blogspot.com/2007/10/origin-of-cholas-tamil-myth.html

பிறமலைக் கள்ளர்--கொக்குளம்

0 c
பிறமலைக் கள்ளர் என்கிற சாதியினர் அதிகம் வாழும் பகுதி மதுரை மாவட்டம். எட்டு நாடுகளைக் கொண்டதாக சொல்லப்படும் இந்தப் பகுதியில், செக்கானூரணியை அடுத்த கொக்குளம் முக்கியமானது. இது ஒரு நாடு என்றழைக்கப்படுகிறது. இந்த மக்களின் பிரதான வழிபாட்டு மரியாதை, பேய்க்காமன் என்கிற நாட்டார் தெய்வத்திற்கு வழங்கப்படு கிறது. இத்தெய்வத்திற்கு பூசை புனஸ் காரங்களை நிகழ்த்துபவர் ஒரு பறையர். கள்ளர்கள் கோவிலாக இருந்தாலும், தீண்டத் தகாதவர்களுக்கும் வழிபாடு செய்ய உரிமை உண்டு. இக்கோவிலின் நான்காம் நாள் திரு விழா பறையர்களுக்கானது, என்று லூயிஸ் டூமாண்ட் என்ற பிரெஞ்சு நாட்டு மானுவியல் அறிஞர், தனது பிரமலைக் கள்ளரின் சமூக அமைப்பு மற்றும் மதம் எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். லூயிஸ் டூமாண்ட் தனது ஆய்வினை பிரமலைக் கள்ளர் வசிக்கும் அனைத்துப் பகுதிகளிலும், சுமார் 2 ஆண்டு காலம் (1957-59) தங்கியிருந்து ஆய்வு நடத்தி தெரிவித்த தகவல்களில் ஒன்றுதான், மேலே நாம் குறிப்பிட்டது. இன்றைய நிலை குறித்து விசாரித்த போதும், ஆமாம், பறையர் சாதியைச் சார்ந்த மனிதர் பூசை செய்து தருகிற பொருள் களை பக்தியோடு கள்ளர் சாதியைச் சார்ந்த மனிதர்கள் பெற்றுக் கொள்வதைப் பார்க்க முடியும், என்கிறார்கள். இது நெடுங்காலமாக, தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப் பட்டுவரும் உண்மை என்பதை தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் அறியாதது.

thanks to   http://esskannan.blogspot.com/2010/05/blog-post_7950.html

தமிழின் தலையெழுத்து...!

0 c

தமிழின் தலையெழுத்து...!

>> Sunday, August 17, 2008

அண்மையில் தமிழர்களுக்கும் சிந்துவெளி நாகரீகத்திற்கும் உள்ளத் தொடர்பை மொழி ஆய்வியல் ரீதியாக நிரூபணமாக்கும் சில திடுக்கிடும் தகவல்களைக் கொண்ட கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. இக்கட்டுரையை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ம.இராசேந்திரன் படைத்திருந்தார். இதோ வாசகர்களுக்காக அக்கட்டுரை...

தமிழின் தலையெழுத்து, பெருமையும் வியப்பும் தருகிறது. தலைக்காவிரி என்பதைப்போல தலையெழுத்தைத் தொடக்க கால எழுத்து என்றும் பொருள் கொள்ளலாம். மன அனுபவ வெளிப்பாடு பேச்சு மொழி என்றால், பதிவு எழுத்து மொழியாகும். எழுத்து என்றால் ஒலிஎழுத்து என்றும் வரி எழுத்து என்றும் இரண்டையும் குறிக்கும். எழுப்பப்படுதலாலும் எழுதப்படுதலாலும் இரண்டு வகைக்கும் பொதுச் சொல்லாக இருந்த எழுத்து பிறகு வரி வடிவ எழுத்திற்கு மட்டுமே உரியதாக வழக்கத்திற்கு வந்துவிட்டது.

நெடுங்காலத்திற்கு முன்பே தமிழுக்கு எழுத்து இருந்திருக்கிறது. இப்போதும்கூட எழுத்தில்லா மொழிகள் பல உள்ளன. பாரசீக மன்னன் டரையசு என்பவனுக்கு சிந்தியர்கள் ஒரு தூது அனுப்பியதாக கிரேக்க வரலாற்றாசிரியர் அராடோட்டசு குறிப்பிடுகிறார். அஞ்சி ஓடாவிட்டால் இறந்துவிடுவாய் என்பதே தூதின் செய்தி. தவளை தண்ணீருக்குள் அஞ்சி மறைவதுபோலவும், எலி வளைக்குள் ஒளிவது போலவும் ஓடாவிட்டால் அம்புகளால் நீ கொல்லப்படுவாய் என்பதைச் சொல்வதற்காக, ஒருவரிடம் தவளை, எலி, அம்பு ஆகியவற்றைக் கொடுத்தனுப்பினார்கள். அது எழுத்தில்லாத காலம்.

தொல்காப்பியர் மெய்யெழுத்துகளும் எ,ஒ குறில்களும் புள்ளிபெறும் என்று வரிவடிவ எழுத்துகளைப் பற்றி நூற்பா தந்துள்ளார். சித்திரக் கோடுகள், குறியீடுகள், எழுத்துகள் என்று உலக மொழிகளின் எழுத்து வளர்ச்சியும் வரலாறும் அறியப்பட்டு வருகின்றன.

ஒரு பொருளைக் குறிக்க வரையப்பட்ட சித்திர எழுத்து உரு எழுத்து என்றும்; எண்ணத்தை வெளிப்படுத்துவது கரு எழுத்து என்றும்; ஓசையைக் காட்டுவது ஒலி எழுத்து என்றும்; உணர்வை வெளிப்படுத்துவது உணர்வெழுத்தென்றும் தமிழில் பல்வேறு எழுத்துகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.



சிந்துவெளி எழுத்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்ட தொன்மையான எழுத்துகளாகும். எல்லோரும் ஏற்கத் தக்க வகையில் இதுவரை யாரும் இவற்றைப் படித்தறிய முடியவில்லை. சிந்துவெளிக்குப் பின் கிடைப்பவை குறியீடுகள். குறியீடுகளையும் படித்தறிய முடியவில்லை. ஆனால் சிந்துவெளி எழுத்துகளும் குறியீடுகளும் முத்திரைகள், மோதிரங்கள், பானை ஓடுகள், கல்வெட்டுகள் நாணயங்கள் என்று மக்கள் வாழ்க்கையோடு கலந்து இடம்பெற்றுள்ளன.

சிந்துவெளி எழுத்துகள், குறியீடுகளுக்குப் பிறகு வந்தவை பிராமி எழுத்துகள். தமிழுக்கும், சமற்கிருதத்திற்கும், பிராகிருதத்திற்கும், பாலிக்கும் பொதுவாகவும் தமிழ் தவிர மற்ற மொழிகளுக்கு வர்க்க எழுத்துகளைக் கூடுதலாகவும் கொண்டு பிராமி எழுத்துகள் உள்ளன.

அப்படியென்றால் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உட்பட்ட நாடுகள் அடங்கிய நிலப்பகுதி முழுவதும் மொழிகள் வேறுவேறாக வழங்கப்பட்டு வந்திருப்பினும் பொதுவாக ஒரே எழுத்து முறை (சிற்சில கூடுதல் எழுத்துகளுடன்) இருந்து வந்துள்ளது.

அசோகன் கல்வெட்டுகளால் அறியப்பட்ட பிராமி எழுத்து, அசோகன் ஆட்சிக்கு உட்படாத தமிழ் நாட்டில் தமிழுக்கு உரியதாக இருந்திருக்கிறது. அசோகன் கல்வெட்டுகளில் குசராத்து மாநிலம் கிர்நார் 16ஆம் பாறைக் கல்வெட்டில் சேர சோழ பாண்டியர்களும் சத்தியபுத்திரராகிய அதியமான் மரபினரும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தமிழ் நாட்டில் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் கிடைத்த எழுத்தாதாரங்கள் அசோகன் காலத்துக்கும் முற்பட்டவை என்று தொல்லியல் அறிஞர்கள் பேராசிரியர் முனைவர் கா.ராசனும் முனைவர் தூ.இராசவேலும் கருதுகின்றனர்.

'அத்திபடாவிலும்' அயோத்தியாவிலும் கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமற்கிருத கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அசோகன் கல்வெட்டுகளில் பிராகிருத மொழிக் கல்வெட்டுகள் உள்ளன. தமிழகத்தின் மாங்குளம், புலிமான் கோம்பைப் பகுதிகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் ஒரே எழுத்து (பிராமி) முறையில் (வர்க்க எழுத்துகள் தவிர) அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புத்தமத நூலான லலித விசுத்தாரத்திலும் சமண நூலான பன்னவனசுதாவிலும் 'பிராமி' குறிப்பிடப்படுகிறது. பிராமி எழுத்தை உருவாக்கியவர் புத்தர் என்றும் சமண சமய தீர்த்தங்கரர் ரிசபதேவர் மகள் பிராதமி பெயரில் உருவாக்கப்பட்டதென்றும் பிராமி பற்றிய சமயக் கதைகள் பல உள்ளன.

அசோகன் கல்வெட்டில் இடம் பெற்றதால் பிராமி என்று அழைக்கப்படுகிறது. மொழியின் பெயரில் எழுத்து அமைக்கப்படுவதே மரபு. அசோகன் என்பதோ பிராமி என்பதோ மொழிகளின் பெயர்களாக இல்லை.

எந்த ஒரு தனிப்பட்ட மொழிக்கும் பிராமியை உடைமையாக்கிவிடக் கூடாது என்பதால் பயன்படுத்தியவர் பெயரில் அசோகன் பிராமி என்று அழைக்கப்படிருக்கலாம். அதிலும் தமிழ் மொழிக்கான பிராமியைத் தென்பிராமி என்றும் தமிழ் பிராமி என்றும் தமிழில் அழைக்கிறோம். தொல்காப்பியரும் சங்க இலக்கியப் பாடல்களும் 'தமிழியில் தாம் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் பேராசிரியர் மதிவாணன் கூறுகிறார்.

இந்தியாவின் தொன்மையான வரிவடிவமாம் சிந்து வெளிக் குறியீடுகள் பூம்புகார், மயிலாடுதுறை, செம்பியம், கண்டியூர் முதுமக்கள் தாழிகளிலும், சூலூர் மண்வட்டிலிலும் இடம் பெற்றுள்ளமையைத் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார். சிந்துவெளி எழுத்துகளின் காலம் குறைந்தது கி.மு1500 என்று கருதப்படுகிறது.

சிந்துவெளி எழுத்துகளுக்கும் பிராமி எழுத்துகளுக்கும் இடைப்பட்ட குறியீடுகள் இந்தியாவின் தமிழகத்தில்தான் குறிப்பாக சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஊர்களில்தான் அதிக அளவில் கிடைத்துள்ளன. பிராமி இந்திய மொழிகளுக்கான எழுத்துகளின் தாய் என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார்.

புதிய கற்காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் (விந்தியமலைப் பகுதி நீங்கலாக) திராவிட இன மொழிகளே பேசப்பட்டன என்று பேராசிரியர் பி.டிசீனிவாச ஐயங்காரும் (Stone Age in India) பேராசிரியர் டி.ஆர்.சேச ஐயங்காரும் (Dravidian India) திராவிட மொழி தென்னிந்திய மொழி மட்டுமன்று, காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்பட்ட மொழி என்று அறிஞர் அம்பேத்காரும் (The unTouchables) கூறியுள்ளார்.

தமிழ் பிராமி எழுத்துகளோடு கிடைத்துள்ள குறியீடுகளை அதற்கும் முற்பட்ட சிந்துவெளி எழுத்துகளோடு இணைத்துக் கொள்ளத் தேவைப்படும் இணைப்புக் கண்ணிகள் கிடைக்குமாயின் தமிழின் தலையெழுத்து தீர்மானமாகிவிடும்.
0 c
மெல்ல நகை பூத்து
மேனி மலர் போர்த்தி
துள்ளி நடை போடும்
பொன்னி நதி ஓடும்
வண்டை வளநாடா !
வண்டை வளநாட்டை
ஆண்ட குல கொழுந்தே!
சோழர் குல விளக்கே !

வண்டை நிலமான
சோழ வளநாட்டை
ஆண்ட பரம்பரையால்
வாண்டையார் என பெற்ற
சேர பாண்டியரின் ரத்த உறவினறே !
முடி வேந்தர் மூவரின்
வழி வந்த காரணத்தால்
முக்குலம் என கொண்டோய் !

மூவேந்தர் முன்னேற்ற
கழகம் கண்ட கொற்றவனே !
முன்னவனின் பின்னவனே!
தேவர்களின் மன்னவனே !
வாழ்க
நீ பல்லாண்டு !

அவதார் – ஒரு வாக்குமூலம்

0 c
 


 

1988ல் மங்களூர் திரையரங்கு ஒன்றில் ராபர்ட் போல்ட் எழுதி ரோலண்ட் ஜோ·ப் இயக்கிய ‘த மிஷன்’ என்ற திரைபப்டத்தைப் பார்த்தேன். என்னுடைய சிந்தனையில் ஆழமான ஒது திருப்புமுனையை உருவாக்கிய திரைப்படம் அது. அதுவரை நான் கிறித்தவ மதத்தையும் ஐரோப்பிய ஆதிக்கத்தையும் பார்த்துக்கொண்டிருந்த பார்வையை மிகவும் விரிவாக்கியது. அதன்பின் நான் வாசித்த ஏராளமான நூல்களுக்கான தொடக்கம் அந்த திரைப்படம்தான்.
 
1750களில் தென்னமேரிக்க பழங்குடிகளின் நிலங்களை ஸ்பானிஷ் ஆக்ரமிப்பாளார்கள் கைப்பற்றி அவர்களை அடிமையாக்கி வணிகம் செய்ததின் சித்தரிப்பு இந்த திரைப்படம்.  திரையை விட்டு அரங்குக்குள் கொட்டுவதுபோல இகுவாழ்சு [ Iguazu ]  அருவியைக் கண்டதுமே நான் வேறு ஓர் உலகுக்குள் சென்றுவிட்டேன். ஒரு பாதிரியாரை அங்கே காட்டுக்குள் வாழக்கூடிய  குவாரன்னி [Guaranni] சிவப்பிந்தியர்கள் சிறைப்பிடித்து அந்த அருவில் போட்டு விடுகிறார்கள். அதுதான் படத்தொடக்கம்.

மீண்டும் ஒரு ஜேசு சபைப் பாதிரியார் அந்த பிரம்மாண்டமான அருவியின் விளிம்பில் வழுக்கும் பாறை வழியாக தொற்றி மேலே ஏறும் காட்சியுடன் படம் மீண்டும் ஆரம்பிக்கிறது. ·பாதர் கப்ரியேல் [ஜெர்மி அயன்ஸ்] அந்த காட்டுக்குள் சென்று சிவப்பிந்தியர் நடுவே அமர்ந்து தன் புல்லாங்குழலை இசைக்கிறார். அன்னியர் எவரையும் கொல்லக்கூடிய அந்த மக்கள் அந்த இசையால் மயங்கி அவரை தங்களுடன் வாழ அனுமதிக்கிறார்கள். சேவையால் அவர் அவர்களில் ஒருவராக ஆகிறார்.
 
ஒரு முறை ஸ்பெயினுக்கு வரும்போது தன் காதலியின் தோழனைக் கொன்ற குற்றவுணர்ச்சியில் இருக்கும் ரோட்டிரிகோ மெண்டாஸா [ராபர்ட் டி நீரோ] வைச் சந்திக்கும் ·பாதர் கப்ரியேல் அவனை தன்னுடன் வந்து சேவையாற்றி குற்றவுணர்ச்சியை தீர்க்கும்படி அழைக்கிறார். அவனும் அவருடன் செவ்விந்தியர்களின் காட்டுக்குள் வருகிறான்.

மெண்டாஸா ·பாதர் கப்ரியேலுடன் இணைந்து அந்தக் காட்டுக்குள் செவ்விந்தியர்களுக்குச் சேவை செய்கிறான். அந்த மக்களுக்கு கல்வி கற்பிப்பதே ·பாதர் கப்ரியேல்லின் பணி. கல்வி என அவர் சொல்வது ஸ்பானிஷ் மொழி பைபிளை வாசிக்கக் கற்றுக்கொடுப்பதைத்தான். இந்நிலையில் ஸ்பெயின் தன் நிலங்களை ஓர் போர் ஒப்பந்தம் மூலம் போர்ச்சுக்கலுக்கு அளிக்கிறது. செவ்விந்தியப் பழங்குடிகளை அடிமைகளாக ஆக்கி விற்பதற்கான அனுமதியுடன்.
 
செவ்விந்தியர்களை ஆன்மா இல்லாதவர்கள் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே அவர்களை அடிமைகளாக விற்க கிறித்தவ அறவியல் அனுமதிக்கும். ஆகவே அவர்களை மதம் மாற்றுவதற்கு போர்ச்சுக்கல் அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அந்த மக்கள் கிறித்தவர்கள் தான் , அவர்களால் ஜெபம்செய்யவும் பைபிளை புரிந்துகொள்ளவும் முடியும் என்று ·பாதர் கப்ரியேல் வாதிடுகிறார். அவர்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கத்தோலிக்க தேவாலயத்தின் உயர்பீடம் வரைச் சென்று மன்றாடுகிறார்

ஆனால் போர்ச்சுக்கல் அரசின் ஆதரவை இழக்க விரும்பாத கத்தோலிக்கத் திருச்சபை செவ்விந்தியர்கள் மனிதர்களல்ல, அவர்களை மதம் மாற்றியது செல்லாது என்று ஆணையிடுகிறது. போர்ச்சுக்கல் படைகள் குவாரன்னி மக்களை ஒடுக்கி சிறைப்பிடிக்க வருகின்றன. அருவியின் கீழே செவ்விந்தியர்களை அடிமைகளாக்கி பெரும் தோட்டங்களை நடத்தும் முதலாளிகளும் அவர்களுடன் கைகோர்த்துக்கொள்கிறார்கள். சிலுவையேந்தி கத்தோலிக்க பாதிரிகளும் உடன் வருகிறார்கள்.

படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் என் நெஞ்சை உலுக்கின. படைகளின் எதிரே குவாரென்னி இனத்து சிறுவர் சிறுமியர்களை அழைத்துக்கொண்டு ·பாதர் கப்ரியேல் வருகிறார். அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றிக்கொண்டு கிறிஸ்துவின் நாமத்தைப் பாடியபடி வருகிறார்கள். அவர்களை கண்டு கொஞ்சமும் தயங்காத காலனியப்படைகள் அவர்களை சுட்டு வீழ்த்துகிறார்கள். கூட்டம்கூட்டமாக அவர்கள் செத்து குவிகிறார்கள்.

·பாதர் கப்ரியேலின் வழிகளை நம்பாத மெண்டாஸா அம்மக்களை திரட்டி அம்புவில்லுடன்  ஆதிக்கவாதிகளுக்கு எதிராக போரிடுகிறார். கடுமையான போருக்குப்பின்னர் அவர்களும் கொல்லப்படுகிறார்கள். குவாரென்னி இனக்குழுவின் சில குழந்தைகள் மட்டுமே எஞ்சுகிறார்கள். அவர்கள் அந்தபப்டுகொலை நடந்த இடத்துக்கு வருகிறார்கள். அங்கிருந்து ·பாதர் கப்ரியேல்லின் வயலின் புல்லாங்குழல் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் சிறிய படகில் ஏறி காட்டுக்குள் செல்லும் நீரோடை வழியாக தப்பி இன்னும் அடர்ந்த காட்டுக்குள் செல்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு மரச்சிலுவை, ·பாதர் கப்ரியேல் அவர்களுக்குக் கொடுத்த சிலுவை, கிடைக்கிறது. ஒரு பையன் அதை எடுத்துக்கொள்கிறான். அவர்கள் காட்டுக்குள் சென்று மறைகிறார்கள். அவர்கள் மறைந்தபின் அந்தக்காட்டை காட்டியபடி படம் முடிகிறது.

·பாதர் கப்ரியேல் உண்மையில் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டார். குவாரென்னி இனக்குழுவின் காட்டுக்குள் ஊடுவுவதற்கான ஒற்றராக அவரை அறியாமலேயே அவர் பயன்படுத்தப்பட்டார். அவர் காட்டுக்குள் செல்ல ஏற்பாடுகளைச் செய்தவர்கள் அடிமை வணிகம் செய்யும் தோட்டமுதலாளிகள் மற்றும் ராணுவத்தினர்தான். ஆனால் அவரது மனசாட்சி அவர்களுடன் இணைந்து  அவரை பலியாகச் செய்தது.

என்யோ மோரிகனின் [Ennio Morricone] அற்புதமான இசையை இன்னமும் நான் மறக்கவில்லை. அந்த கடைசிக்காட்சியின் இசை அவ்வப்போது என்னை வந்து தீண்டுவதுண்டு. சமீபத்தில் அமெரிக்கா சென்று மிஷனரிகளாலும் காலனியவாதிகளாலும் கலி·போர்னியாவில் கொன்றே அழிக்கப்பட்ட பூர்வகுடிகளின் நினைவுக்காக அமைக்கப்பட்டிருந்த அருங்காட்சியகத்தை பார்த்தபடி இருந்தபோது ஒரு மெட்டு என் மனதில் ஓடியபடியே இருந்தது. அது எனியோ மோரிகோனின் அந்த  உச்சகட்ட இசைதான் என பின்னரே அறிந்தேன்.

***
 
நேற்று ஜேம்ஸ் கேமரோன் எழுதி இயக்கிய ‘அவதார்’ என்ற படத்தை குழந்தைகளுடன் பார்த்தேன். 2154ல் விண்வெளியில் உள்ள பாலி·பிமஸ் என்ற வாயுவாலான கிரகத்தின் நிலவாகிய பண்டோரா என்ற கோளத்தில் நிகழ்கிறது கதை. பூமியளவுக்கே பெரியது இந்த நிலவு. இங்கே நாவி என்ற மனிதவகையினர் வாழ்கிறார்கள். மனிதர்களை விட இருமடங்கு பெரிய, மனிதர்களைவிட அறிவுத்திறன் கொண்ட, நீல நிறமான உயிரினங்கள் இவர்கள்.

பண்டோராவில் மனிதர்கள் குடியேறிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் அங்கே ஆக்ரமிப்பாளர்களாகவே வந்திருக்கிறார்கள். தங்கள் உயர்தொழில்நுட்ப முகாமில் அனைத்து வகையான ஆயுதங்களுடனும் இருக்கும் மனிதர்கள் நாவிகளுக்கு ‘கல்வி’ கற்றுகொடுக்கிறார்கள். அவர்களை ‘முன்னேற்ற’ முயல்கிறார்கள். ஆனால் நாவிகள் இவர்களை நம்புவதோ ஏற்றுக்கொள்வதோ இல்லை. நாவிகளுடன் நிகழும் போர்களில் ஏராளமான மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். நாவிகள் ‘பண்படாத’வர்களாகவே இருக்கிறார்கள்

நாவிகள் அங்கிருக்கும் இயற்கையுடன் கலந்து அதன் ஒரு பகுதியாகவே வாழ்கிறார்கள். அவர்கள் இயற்கையை ஏய்யா என்ற தாய்தெய்வமாக வழிபடுகிறார்கள். அவர்களுக்கு இயற்கையுடனும் அதன் உயிர்களுடனும் உரையாடக்கூடிய நுண்ணறிவு  இருக்கிறது.ளந்த கிரகத்தின் அத்தனை மரங்களும் வேர்கள் பின்னி ஒன்றுடன் ஒன்று உரையாடுகின்றன, அந்தக்கிரகமே ஒரு மகத்தான மூளை!
 
பண்டோராவில் அபூர்வமான ஒரு தனிமம் கிடைக்கிறது. அதைக் கொள்ளையடிப்பதற்காகவே அங்கே மனிதர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நாவிகளை நெருங்க முடிவதில்லை. பண்டோராவில் மனிதர்கள் சுவாசிப்பதற்கான ஆக்ஸிஜன் இல்லை. ஆகவே மனிதர்கள் கண்ணாடி அறைக்கு வெளியெ செல்ல முடியவில்லை. கடைசியில் அதற்காக ஒரு வழி கண்டுபிடிக்கப்படுகிறது. நாவிகளின் உடலின் மரபணுக்களையும் மனித மரபணுக்களையும் கலந்து நாவிகளை போலவே சில உடல்களை உருவாக்குகிறார்கள்
 
இந்த செயற்கை நாவிகளுக்கு மனம் இல்லை. அந்த மனம்  மனிதர்களில் ஒருவருடையது. அவர் ஒரு கருவிக்குள் படுத்துக்கொள்ளும்போது அவரது மூளையுடன் அந்த நாவியின் மூளை இணைப்பு பெறுகிறது. அந்த நாவியின் உடலில் தன் மனதுடன் அந்த மனிதர் வெளியே சென்று  உலாவி வரமுடியும்.  அந்த பயணம் ஒரு கனவு போல் இருக்கும். 

ஜாக் ஸல்லி போலியோ வந்து நடக்க முடியாமலிருக்கும் இளைஞன். அவனது சகோதரன் பண்டாரா கிரகத்தில் கொல்லப்பட்டதனால் அவனுக்குப் பதிலாக இவன் வருகிறான். அவனுடைய சகோதரனைப்போல ஜாக் ஒரு ஆராய்ச்சியாளன் அல்ல, படைவீரன். தன் சக்கர நாற்காலியில் இருந்தே அவனால் போரிட முடியும். அவனுக்கு கால்களை செய்து தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு ஜாக் கொண்டுவரப்பட்டிருக்கிறான்.
அந்த முகாம் ராணுவ கர்னலான மைல்ஸ் குவாரிட்ச் ஜாக்கை ஏன் நாவிகளுக்குள் அனுப்புகிறார் என்பதை விளக்குகிறார். அவன் பணி அந்த நாவிக்குலத்திற்குள் ஒரு நாவியாக ஊடுருவுவது. அவர்களில் ஒருவனாக ஆவது. அவர்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து எப்படியாவது அவர்களை அந்த பகுதியில் இருந்து விரட்டியடிப்பது. ஜாக் ஒப்புக்கொள்கிறான்.

மனப்பரிமாற்றம் செய்யும் கருவியில் படுத்து நாவியின் உடலுக்குள் புகுந்து விழித்துக்கொள்கிறான் ஜாக். பண்டோராவின் காட்டுக்குள் செல்பவன் அங்குள்ள அதிசயங்களில் மெய்மறக்கிறான். ஆபத்தில் சிக்கி வழிதவறுபவனை அங்குள்ள இளவரசி நெய்த்ரி காப்பாற்றுகிறாள். அவனை தன் அப்பாவாகிய அரசனிடம் இட்டுச்செல்கிறாள். ஜாக் மீது எப்படியோ நம்பிக்கை கொள்ளும் அந்த நாவிகள் குலம் அவனை தங்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்கிறது. அக்குலத்துக்கு ஒம்மட்டிகாயா என்று பெயர்.

ஜாக் அவர்களை உளவறிந்து அந்த தகவல்களை குவாரிட்ச்சுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறான். அவர்களுக்கு ஒரு தாய்மரம் இருக்கிறது. அந்த மாபெரும் மரம் அவர்களுக்கு கடவுள் போன்றது. இயற்கையின் மையம் அது. அந்த மரத்தின் அடியில்தான் மனித ஆக்ரமிப்பாளர்கள் தேடிச்செல்லும் கனிமம் உள்ளது. அந்த மரத்தை நாவிகளை துரத்திவிட்டு அவர்கள் அழித்தாகவேண்டும். ஆனால் அந்த மரத்தை நாவிகள் எக்காரணம்கொண்டும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள் என்கிறான் ஜாக்.
 
இளவரசி நெய்த்ரியுடன் ஜாக் மெல்ல மெல்ல காதல் கொள்கிறான். அவன் மனம் அந்த நாவிகளில் ஒன்றாக ஆகிறது. ஒருமுறை அவன் நாவிகளின் காட்டை அழிக்கவரும் பிரம்மாண்டமான புல்டோசரை செயலிழக்கச் செய்வதைக் கண்ட குவாரிட்ச் அவன் மனம் தடம் மாறிவிட்டதை உணர்ந்துகொள்கிறான். மேற்கொண்டு அவன் நாவிகளிடம் செல்லவேண்டாம் என தடுக்கிறான்.

ஆனால் அந்த முகாமில் இருந்து தப்பும் ஜாக்கும் அவன் நண்பர்களும் நாவிகளுக்கு ஆதரவாக போரிடுகிறார்கள். குவாரிட்ச் தன் பெரும் விமானபப்டையுடனும் வெடிப்பொருட்களுடனும் நாவிகளுடன் போர்புரிந்து அந்த தாய்மரத்தை அழிக்கிறான். நாவிகள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். அவர்களின் வனம் சூறையாடப்படுகிறது.

அவர்கள் செயலிழந்து தங்கள் தாய்தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று கூடியிருக்கையில் அங்கே செல்லும் ஜாக் அவர்களிடம் உண்மைகளை சொல்கிறான். அவர்களை திரட்டி மனிதர்களுக்கு எதிரான பெரும்போரை நடத்துகிறான். மனித இனம் தோற்கடிக்கப்பட்டு சிறையிடப்பட்டு பூமிக்கே திருப்பி அனுப்பப்படுகிறது.
 
மனிதனாகிய ஜாக்கில் இருந்து அவன் ஆன்மாவை இயற்கையாகிய தாய் தெய்வத்தின் உதவியுடன் அவனுடைய நாவி உடலுக்கு மாற்றுகிறார்கள். நாவியாக மாறிய ஜாக் அவர்களுடனேயே இருந்துவிடுகிறான்.

*
 
அவதார் ஒரு பிரம்மாண்டமான படம். திரைத்தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டப்பாய்ச்சலுக்கான  முதற்புள்ளி இது. இதன் பெரும்பகுதி முழுக்க முழுக்க வரைவிய நுட்பத்தாலெயே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த கதைச்சூழலே செயற்கையாக வடிவமைப்பட்டிருப்பது அனேகமாக உலகிலேயே இதுதான் முதல்முறை.  மையக்கதாபாத்திரங்கள், பல்லாயிரம் துணைக்கதாபாத்திரங்கள், பறவைகள், மிருகங்கள், பூச்சிகள், மரங்கள், நிலம்,வானம் எல்லாமே வரைவியம் உருவாக்கியவை.

அந்த வரைவியப் பிம்பங்களின் ‘நடிப்பு’ மிகுந்த நுட்பத்துடனும் உணர்ச்சிகரமாகவும் இருப்பது ஒரு கட்டத்தில் என்னை இனிமேல் நடிப்பு என்றால் என்ன பொருள் என்றே எண்ணச்செய்துவிட்டது. இனி நடிப்பதற்கு மனிதர்களோ காட்டுவதற்கு நிலமோ தேவையில்லையா என்ன? அந்த விசித்திரமான குதிரைகளின் ஒவ்வொரு தசைச்சிலிர்ப்பும் துல்லியம்.  அந்த மாபெரும் வவ்வால்பறவைகளின் ஒவ்வொரு சிறசைப்பும் துல்லியம். ஒளிவிடும் தாவரங்கள் பறக்கும் மலர்கள் – அவதார் ஒரு மகத்தான கனவு.  
 
திரும்பி வரும்போது சட்டென்று எனக்கு தி மிஷன் நினைவுக்கு வந்தது. இரண்டுமே ஒரே படங்கள் அல்லவா? உலகத்தைக் காலனியாக்கி முடித்த ஐரோப்பா வேறு கிரகங்களைக் காலனியாக்குகிறது.  அவதாரில் ஒரு வசனம் வருகிறது ‘நமக்கு வேண்டிய ஒன்று அவர்களிடம் இருக்கிறது என்பதற்காக அவர்களை எதிரிகளாக எண்ணுவது அநீதி’ ஆனால் ஐரோப்பா முந்நூறு வருடங்களாகச் செய்துகொண்டிருப்பது அதைத்தான்.

·பாதர் கப்ரியேலுக்கும் ஜாக்குக்கும் எத்தனை ஒற்றுமை. ஏதோ ஒரு வாக்குறுதியால் அந்த அன்னிய மனிதர்கள் நடுவே ஊடுருவ விடப்படுகிறார்கள் அவர்கள். உள்ளூர வெள்ளையர், வெளியே இன்னொருவர். அந்த  அன்னிய மனிதக்கூட்டத்திற்குள் செலுத்தப்பட்ட நுட்பமான உளவுப்படை அவர்.  அதை உணரும்போது அவரது மனசாட்சி அவரை திசை திருப்புகிறது.

இந்தியாவுக்கு வந்த மிஷனரிகளிலேயே பலர் அத்தகையவர்கள். உதாரணம், ஜி.யு.போப், ஹெர்மன் குண்டர்ட். ஆனால் பலர் அந்த உளவுத்தொழிலை தங்களை அறியாமலேயே செய்து இந்திய சமூகங்கள் மீது காலனியாதிக்கம் வேர்விட்டெழுவதற்குக் காரணமாக அமைந்தார்கள் என்பதே வரலாறு.

இந்த சினிமாவில் ஜாக் நாவிகளுக்குள் செல்வதை அப்படியே ஒத்திருக்கிறது சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ காட்டும் ஒரு நிகழ்வு.. பிறமலைக்கள்ளர்களை ஒடுக்கவோ வெல்லவோ முடியாத வெள்ளைய ஆட்சி பிறமலைக்கள்ளர்களில் இருந்து எடுத்து வளர்க்கபப்ட்டு கிறித்தவ பாதிரியாராக ஆக்கப்பட்ட ஒரு ஜேசுசபை உறுப்பினரை அனுப்புகிறது. அவருக்கு அந்த மக்கள் மீது பிரியம்தான்.  தன் சொந்த முன்னோர்களை அறியும் ஆர்வத்துடன்தான் அவர் அந்த மக்களை ஆய்வுக்கு உட்படுத்துகிறார். ஆனால் அந்த ஆய்வேடு வெள்ளையர்களுக்கு மாபெரும் ஆயுதமாக ஆகிறது. பிறமலைக்கள்ளர்களின் எல்லா குலரகசியங்களும் அவர்களுக்கு தெரிந்துவிடுகின்றன. அவர்களை குற்றபரம்பரை என்று முத்திரை குத்தி வேருடன் கெல்லி எறிகிறார்கள்!

ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் ‘உலகைவெல்லும்’ இலக்கியங்கள் எழுதப்பட ஆரம்பித்தன. உலகம் என்பது ஐரோப்பியனுக்கான புதையலை ஒளித்து வைத்திருக்கும் மர்மவெளி என்று சித்தரிக்கப்பட்டது. ‘புதியஉலகத்தின்’ ஆச்சரியங்கள் களியாட்டங்கள் அபாயங்கள் விதந்து எழுதப்பட்டன. அங்குள்ள ‘பண்படாத’ ‘மூர்க்கமான’ ‘மனிதத்தன்மை குறைவான’ மக்களுக்கு அங்குள்ள செல்வங்களால் பயனில்லை. அவர்களை வென்று, கொன்றழித்து, அச்செல்வங்களை எடுத்துக்கொள்வதே ஐரோப்பிய வெள்ளையனின் அறம். அவனுடைய சாகசத்திற்கான பரிசு அது.
பலநூறு ஹாலிவுட் படங்களில் இந்த புதையல்வேட்டை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. எனக்கு இப்போது நினைவுக்கு வருவது ‘கிங் சாலமோன்ஸ் மைன்ஸ்’ என்ற மாபெரும் படம். இளமையில் நான் அதன் அகன்ற காட்சியமைப்புக்காக மீண்டும் மீண்டும் அதைப்பார்த்திருக்கிறேன். எச். ரைடர் ஹகார்ட் எழுதிய சாகச நாவல் இது. 1985 ல் இது படமாக வெளிவந்தது. புகழ்பெற்ற பெரும்பட இயக்குநரான லீ தாம்ஸன் இயக்கியது. ஏற்கனவே இந்த நாவல் மூன்று முறை படமாக வெளிவந்திருக்கிறது.  எம்.ஜி.எம் தயாரிப்பாக வந்த முந்தையபடம் நாகர்கோயில் பயோனியர் சரஸ்வதி அரங்கில் அக்காலத்தில் ஐம்பதுநாள் ஓடியிருக்கிறது.

புதையலை பயன்படுத்த தெரியாத ‘காட்டுத்தனமான’ மக்கள் நடுவே அது இருக்கிறது. சாகசக்காரனான வெள்ளையன் அபாயங்கள் வழியாக அந்த புதையலை கண்டுபிடித்து எடுக்கிறான். அந்தப்பயணத்தில் அந்தக் காட்டுஜனங்களுக்கு உதவி அவர்களுக்கும் வேண்டியவனாக ஆகிறான் என்பதே இந்நாவலின் கதை. அந்த ஜனங்கள் மனிதர்கள் போல அல்லாமல் ஏதோ பூச்சிக்கூட்டம் போல பெரும்திரளாக காட்டப்படுகிறார்கள். எந்தவிதமான அறிவுக்கூர்மையும் இல்லாமல் விலங்குகள் போல  கதாநாயகனை துரத்தி வந்து கொண்டே இருக்கிறார்கள். அவனை பிடித்ததும் பெரிய பானையில் தக்காளி வெங்காயம் பூண்டு சேர்த்து தண்ணீர் விட்டு வேகவைக்கப்போட்டுவிட்டு ஈட்டிகளை உன்றியபடி ஊகா ஊகா என்று ஒலியெழுப்பி நடனமாடுகிறார்கள். தெளிவாகவே ஐரோப்பா அல்லாத உலகத்தைப்பற்றிய ஐரோப்பிய மனச்சித்திரத்தைக் காட்டும் படம்.
மீண்டும் மீண்டும் நமக்கு வந்துசேரும் படக்கதைகளில் இந்தக்கதையின் வேறு வேறு வடிவங்களே உள்ளன. டார்ஜான், வேதாளர் போன்ற கதைகளில் இதன்  இன்னொரு நுட்பமான மறு வடிவம் உள்ளது. அந்த அறிவில்லாத காட்டு மக்களின் செல்வங்களைக் காப்பாற்றும் ரட்சகராக வெள்ளையர் இருக்கிறார். அவர்கள் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்.

ஐரோப்பிய சாகச நாவல்கள், திரைப்படங்கள் அனைத்துமே மனிதனை மையமாக்கியவை. மனிதன் என்றால் ஐரோப்பிய மனிதன். அவனுக்கு எதிரான தீய சக்திகளாகவே பிற  நாகரீங்கள், பிற மனிதர்கள், பிற உயிர்கள் காட்டப்படுகின்றன. அது ஆப்ரிக்க காட்டுமனிதர்களாக இருக்கலாம் அல்லது வேற்று கிரக உயிராக இருக்கலாம் அல்லது அனகோண்டா போல வேறு உயிராக இருக்கலாம். அவற்றை நோக்கி சடசடனெ குண்டு மழை பொழியும் ஐரோப்பியன் அந்தப்படங்களின் கதாநாயகன். அவனது வெறுப்பும் சினமும் பொங்கும் கடைசித் தாக்குதல் காட்சியே உச்சம். அதற்காக அந்த ‘மாற்று சக்தி’ படத்தில் தீமையின் வடிவமாக காட்டப்பட்டிருக்கும்.

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற மம்மி படவரிசைகளில் புதையலைக் காக்கும் மம்மிகளும் பூதகணங்களும் எப்படிச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன? கிங்க்ஸ் சாலமோன்ஸ் மைன்ஸ்-ல் ஆப்ரிக்கப் பழங்குடிகள் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றனவ் அப்படியேதான். அதே காட்சிப்பிம்பங்கள்தான். காதலியுடன் புதையலிருக்கும் அன்னிய நிலத்தில் அலையும் சாகசக்காரனான கதாநாயகன்!  

அந்த வழக்கமான சித்தரிப்பை தலைகீழாக்குகிறது என்பதே அவதாரின் மிகமுக்கியமான தனித்தன்மை. இங்கே மனிதர்கள் பேராசையின் அழிவின் தீமையின் வடிவங்களாகக் காட்டப்படுகிறார்கள். கதை அவர்களின் கோணத்தில் சொல்லப்படாமல் அவர்கள் சுரண்டி அழிக்க விரும்பும் தரப்பின் கோணத்தில் சொல்லப்படுகிறது. அந்த மக்கள் இயற்கையின் மடியில் வாழும் வாழ்க்கையின் சுதந்திரமும் அழகும் சித்தரிக்கப்பட்டு அதற்கு நேர்மாறாக தனக்குத்தானே கட்டிக்கொண்ட கண்ணாடிக்கூண்டுக்குள் கொலையந்திரங்கள் சூழ வாழும் மனிதர்கள் காட்டப்படுகிறார்கள். இந்தப்படம் முழுக்க காட்சிரீதியாகவே இந்த முரண்பாடு மீண்டும் மீண்டும் நிறுவப்படுகிறது. பேரழகு கொண்ட பண்டோராவின் நிலக்காட்சி முடிந்த கணத்தில் பளபளக்கும் இயந்திரங்கள் நிறைந்த இடுங்கலான ராணுவ முகாம் காட்டப்படுகிறது.

பேராசையால் வளங்களை சுரண்டுவது அப்படிச் சுரண்டுவதற்கு தேவையான ராணுவத்தை உருவாக்குவது அந்த ராணுவத்திற்கு தீனிபோட மேலும் உலகை சுரண்டுவது என்ற ஐரோப்பிய வாழ்க்கைமுறையை திட்டவட்டமாகச் சித்தரிக்கிறது அவதார். ராணுவவெறியும் அறிவியலும் கைகோர்த்துக்கொள்வதை பிற உலகத்தை முழுக்க அவர்கள் துச்சமாக நினைப்பதை காட்டுகிறது. அந்த கூட்டணி நடத்தும் தாக்குதல்களில் தெரியும் ஆணவமும் கண்மூடித்தனமான அழிவு மோகமும் மனதை பெரிதும் பாதிக்கின்றன.

குறிப்பாக அந்த அதிபிரம்மாண்டமான தாய்மரம் வேருடன் சரியும் காட்சி மகத்தானதோர் குறியீடு போல் உள்ளது. சென்ற இருநூறு வருடங்களில் ஐரோப்பிய காலனியாதிக்கம் உலகமெங்கும் உள்ள இயற்கைச்செல்வங்களில் முக்கால்பகுதியை அழித்திருக்கிறது என்ற பிரக்ஞையுடன் பார்க்கும் ஒருவருக்கு நெஞ்சடைக்கச் செய்யும் தருணம் அது. பறவைகள் பறந்து தவிக்க உயிரினங்கள் சிதற நாவிகள் கதறி அழ அது சரிவது ஒரு முதுமூதாதையின் மரணம் போலிருக்கிறது.

உலகம் முழுக்க இருந்த பன்மைத்தன்மை கொண்ட பண்பாடுகளில் நாமறியாத எத்தனையோ வாழ்க்கைச் சாத்தியங்கள் ஞானங்கள் இருந்தன, மூர்க்கமான ஒற்றைப்படையாக்கும் போக்கால் அவற்றை அழித்துவிட்டோம் என்ற உணர்வை அடைந்துவரும் நவீன ஐரோப்பிய மனத்தின் வெளிப்பாடாக அமைந்த திரைப்படம் இது. அமெரிக்கா சென்றபோது அங்குள்ள அருங்காட்சியகங்களில் வரலாற்று மையங்களில் ஐரோப்பிய மிஷனரிகளும் ஆக்ரமிப்பாளர்களும் அங்கு இருந்த நாகரீகத்தை முற்றாக அழித்ததை எந்தவிதமான மழுப்பல்களும் இல்லாமல் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டேன்.  அந்த வெளிப்படைத்தன்மை அவர்களின் அடுத்த தலைமுறைக்கு அறவுணர்ச்சியை ஊட்டும் என்பது உறுதி

பலநுறு நூல்கள் வழியாக பேசப்பட்ட விஷயம்தான். எஞ்சும் உலகையாவது ஐரோப்பியமைய லாபவெறியில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற  பதற்றம் உலகமெங்கும் இன்றுள்ளது. அவதார் போன்ற ஒரு மகத்தான கேளிக்கைப்படம் இளம் மனங்களில் அந்தச் சித்திரத்தை ஆழமாக நிலைநாட்டுமென்றால் அது மானுடத்திற்கு லாபமாக அமையும்.

ஆனாலும் இந்த எளிய திரைப்படத்திலும் ஓர் ஐரோப்பியமையவாதம் உள்ளது. அந்த நாவிகளில் ஒருவருக்குக் கூட மனிதர்களை எதிர்க்கும் நுண்ணிய  அறிவு வாய்க்கவில்லை. தங்கள் அனைத்து சக்திகளுடன் அவர்களும் பழங்குடிகளாகவே இருக்கிறார்கள். ஆப்ரிக்க மனிதர்களைப்பற்றி பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பியன் என்ன வகையான மனச்ச்சித்திரத்தை வைத்திருந்தானோ அதுதான் நாவிகளைப்பற்றி இந்தப்படத்திலும் உள்ளது.  ஆம் கிங்க்ஸ் சாலமோன்ஸ் மைனிலும் தி மிஷனிலும் பழங்குடிகள் காட்டப்படுவதுபோல, மம்மியில் வேதாளாபப்டை காட்டப்படுவதுபோல இதில் நாவிகள் காட்டப்படுகிறார்கள்! முகமற்ற பெருந்திரளாக. மூர்க்கமான உடல்கூட்டமாக.

அவர்களை காப்பாற்ற வெள்ளை மனிதன் உருமாறிச் செல்லவேண்டியிருக்கிறது. இன்னொரு டார்ஜான்! ஆனால் இந்த டார்ஜான் தன் வெள்ளைய அடையாளத்தை இழந்து அந்த மனிதர்களில் ஒருவனாக ஆகிறான். அந்தவரைக்கும் ஐரோப்பியமைய உலகநோக்கு முன்னகர்ந்திருப்பதே ஆச்சரியமளிப்பதுதான்.

thanks to http://www.jeyamohan.in/?p=6018