மதுரை மாவட்டம் கள்ளர் சமுதாயத்தின் குலதெய்வம்

ஒச்சாயி என்‌பது ஒச்சாண்டம்மன் தெய்வத்தின் பெயர்.

மதுரை மாவட்டம் கள்ளர் சமுதாயத்தின் குலதெய்வம்..

முக்குலத்தோரின் மூத்த கடவுள்.

மதுரை மீனாட்சி அம்மன் மனித பிறப்பெடுத்து குழந்தை இல்லாத தடியன் தம்பதிக்கு வளர்ப்பு பிள்ளையாக வளர்ந்து பருவயதில் தன்னை தெய்வமாக, அனைவருக்கும் தெரியவைத்து, மறைந்த நொச்சியம்மா - காலப்போக்கில் ஒச்சாயி என்று மாறி, பிறகு ஒச்சாண்டம்மானாக கருமருத்தூரிலும், பாப்பாபட்டியிலும் மற்றும் பல கிராமங்களிலும் சாதிமத பேதமின்றி வழி‌படும்‌ தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.

தெய்வ பக்தியாக அந்த சமுதாயத்தில்
தலபிள்ளை ஆண் குழந்தை என்றால்

ஒச்சாத்தேவன், ஒச்சப்பன் என்றும்,

பெண் குழந்தை என்றால்

ஒச்சம்மா, ஒச்சாயி என்றும் பெயர் சூட்டும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக தொன்று தொட்டு வருகிறது.

No comments: