கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சுரண்டிய கதை 1

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் செல்வத்தை சுரண்டியது என்று பள்ளியிலும் பத்திரிக்கைகளிளும் படித்து இருக்கிறோம். ஆனால் அது எவ்வாறு பொருளாதார மற்றும் தொழில் ரீதியாக இந்தியாவை சுரண்டியது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெளிவாக தெரியாது.வரலாற்றை தெளிவாக தெரிந்து வைத்து கொள்வது பிழைகளை திரும்பி செய்வதை தவிர்க்குமல்லாவா?

கடல் வழி வாணிபம் என்பது பல காலமாக பணம் கொழிக்கும் தொழிலாக இருந்தது.அரசாங்கங்களும் தங்கள் நாட்டு வணிபர்களின் தடையற்ற வியாபாரத்திற்காக பல வழிகளிலும் உதவி வந்தனர்.தற்போது இருப்பது போல் மின்னனு பொருட்கள், கார்கள் போன்றவை அந்த காலத்தில் இல்லை. எனவே அந்த கால வணிபம் என்பது வாசனை பொருட்கள் சார்ந்த உணவு பொருட்கள், துணிகள், ஆடம்பர பொருட்கள் சார்ந்ததாகவே இருந்து.பல நுற்றாண்டுகளாக ஜாவா, இந்தோனிசியா, இந்தியா போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் வாசனை பொருட்களுக்கும் சீனா மற்றும் இந்திய துணி வகைக்களுக்கும் உலக சந்தையில் பெரும் மதிப்பு இருந்தது.இந்த வாசனை பொருட்கள் வியாபாரத்தில் தங்களது நாட்டை சேர்ந்த வணிபர்களின் உதவிக்காக போரை நடத்துவது பல காலமாக நடைமுறையில் இருந்துள்ளது.பல நூறு ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் ஜவா,சுமத்திரா போன்ற நாடுகளின் மேல் நடத்தபட்ட போர், உலக வரலாற்றில் வியாபாரத்திற்காக நடத்தபட்ட போர்களில் ஒன்று.

இந்தியா,சீனா, இந்தோனிசியா போன்ற நாடுகளில் இருந்து வியாபார பொருட்களை அய்ரோப்பாவிற்கு கொண்டு செல்ல இரு வழிகள் இருந்தது. ஒன்று பட்டு பாதை(Silk Route) எனப்படும் சீனா,மத்திய ஆசியா வழியாக செல்லும் நில வழி பாதை. மற்றொன்று அரேபியா வரை கடல் வழியும் அங்கிருந்து அய்ரோப்பாவிற்கு தொடர்ந்து செல்லும் நில வழி பாதை.இந்த இரு பாதைகளில் வியாபாரம் நடந்தாலும் எகிப்து மற்றும் அரேபியர்களை தாண்டி செல்ல வேண்டி இருந்ததால் அவர்களது ஆதிக்கம் அதிகம் இருந்தது.

எகிப்து மற்றும் அராபியர்களின் கட்டுபாட்டில் இருந்த வாசனை பொருட்கள் வாணிபம், இந்தியாவிற்கு கடல் வழி கண்டு பிடிக்க பட்ட பின் அய்ரோப்பியர்களின் கட்டுபாட்டிற்கு வர தொடங்கியது.நிலம் மற்றும் கடல் மூலம் வாணிபம் நடந்த வரை, ஆசியாவில் இருந்த பல நாடுகளில் இருந்த வணிபர்கள் இடைதரகர்களாக இருந்து லாபத்தின் பெரும் பகுதியை அனுபவித்து வந்தனர். முழுமையான கடல் வழி வாணிபம் தொடங்க பட்ட பின் ஒட்டு மொத்த லாபமும் அய்ரோப்பிய வாணிபர்களின் கைக்கு போக தொடங்கியது.

கடல் வழி கண்டு பிடிக்க பட்ட பின், ஆசியாவிற்கிடையேயான வாசனை பொருட்கள் வாணிபம் முதலில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஸ்பெயின் நாட்டினர் வசம் இருந்தது. ஸ்பெயின் நாட்டினர் இங்கிலாந்திற்கு எதிராக கடல் வழி போரை தொடுத்து 1588ம் ஆண்டு தோல்வி அடைந்தனர். இந்த சமயத்தில் டச்சுகாரர்களால் டச்சு கிழக்கிந்திய கம்பெனியும் ஆங்கிலேயர்களால் கிழக்கிந்திய கம்பெனியும் ஆரம்பிக்க பட்டது. இவை இரண்டும் தான் முதன் முதலில் தொடங்க பட்ட பன்னாட்டு கம்பெனிகள் எனலாம்.1600ம் ஆண்டு டிசம்பர் 31ம் நாள் கிழக்கிந்திய கம்பெனி தொடங்க பட்டது. அது ஆரம்பிக்க பட்ட போது அதன் பெயர் Governor and Company of Merchants of London Trading into the East Indies.ஆரம்ப காலங்களில் ஒவ்வொரு கப்பலின் கடல் பிரயாணமும் தனி தனி வியாபாரம் போல் எடுத்து கொள்ள பட்டு அதற்கென்று தனி முதலீட்டாளர்கள் இருந்தனர்.பின்னர் 1657ம் ஆண்டு தற்போதைய பெரிய கம்பெனிகள் போல் பங்குகளை தனியாருக்கு வினியோகித்து கூட்டு பங்கு வணிக முறையில் செயல்பட்டு வந்தது.

பல கம்பினிகள் ஆரம்பிக்க பட்டால் போட்டி ஏற்பட்டு விலை குறைந்து லாபம் கிடைக்காது என்பதால் டச்சு மற்றும் ஆங்கிலேய அரசுகள் அந்த இரு கம்பெனிகளுக்கும் வாசனை பொருள் வாணிபத்திற்கு தனியுரிமை கொடுத்தது.1615 ம் ஆண்டு முகலாய மன்னர் ஜகாங்கீருடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து சூரத் நகரில் கிழக்கிந்திய கம்பெனி தன் தொழிற்சாலை மற்றும் தளத்தை அமைத்து கொள்ள அனுமதி அளிக்கபட்டது.அதன் பிறகு பல நகரங்களில் கிழக்கிந்திய கம்பெனி தன் தொழிற்சாலையை தொடங்கியது(சென்னையில் 1639 ம் வருடம்). 1647 ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி 23 நகரங்களில் தன் தொழிற்சாலைகளை தொடங்கி இருந்தது.வியாபரத்தில் ஈடுபட்ட கிழக்கிந்திய கம்பெனிக்கு நாடுகளின் மீது போர் தொடுக்கவும்,ஆட்சி அமைக்கவும், தனி படையை வைத்து கொள்ளவும் 1670ம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் அனுமதி அளித்தார். கிழக்கிந்திய கம்பெனி ஒரு சாதாரன கம்பெனியாக இருந்தாலும், இந்த முடிவின் விளைவாக பிற்காலத்தில் 20% உலக மக்கள் தொகையை ஆளவும், இங்கிலாந்தை விட அதிக அளவு வருமானத்தை ஈட்டவும் , சுமார் 250000 பேர் கொண்ட படையை வைத்து நடத்தவும் வழி வகுத்தது.
thanks
http://tamilfuser.blogspot.com/2010/06/1.html

No comments: