பொப்பண்ண காங்கேயன்

கள்ளர் குல பட்டங்கள். 
கா எழுத்தில் பட்டப்பெயர்கள்

0285. காங்கயார், காங்கயர், காங்கெயர், காங்கேயர், காங்கியர் 
thanks to http://kandiyar.hpage.us/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_45105418.html

மோரூருக்கும் அப்படிப்பட்ட வரலாறுதான். காங்கேயர் என்னும் அரச வம்சம் ஆட்சி புரிந்த பகுதி அது. அதற்கும் ஆயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட வரலாறு உண்டு.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் அடியார்க்குநல்லார். அவரை ஆதரித்த அரசன் பொப்பண்ண காங்கேயன் என்பவன். ' பொப்பண்ண காங்கேயர் கோனளித்த சோற்றுச் செருக்கல்லவோ தமிழ் மூன்றுரை சொல்வித்ததே' என்று கூறுகிறது அந்த உரைப்பாயிரம். மோரூர் காங்கேயர் வம்ச மன்னன் பொப்பண்ண காங்கேயன்.

இப்போது சிறிய கிராமமாக இருந்தாலும் மக்களிடையே செல்வாக்கு உள்ள       ஊராகவே விளங்குகிறது. ஒரு ஊர் பிரபலம் பெறுவதற்கு நம் சமூகத்தில் பெரிய காரணம் வேண்டியதில்லை. அங்கே கோயில் ஒன்று இருந்துவிட்டால் போதும். மக்கள் கூடும் தலமாகப் பேர் பெற்றுவிடும். என்ன, அந்தக் கோயிலில் ஏதாவது     விசேடம் என்று கதை பரப்பிவிட வேண்டும்.  மோரூரில் மிகப் புகழ் பெற்ற கோயில் எதுவும் இல்லை. நல்லபுள்ளி அம்மன் என்று அழைக்கப்படும் குலதெய்வக் கோயில் ஒன்று உள்ளது. அதற்குச் சில கதைகளும் உண்டு. அந்தக் கோயிலுக்கு உரிமை உடையோர் வெகுதூரம்வரை பரவி இருக்கிறார்கள். வசதியானவர்கள் பலர். நன்றாகக் கட்டப்பட்ட அந்தக் கோயிலில் கிடாவெட்டு காதுகுத்து விசேடங்கள் தொடர்ந்து நடக்கும். குலதெய்வக் காணிக்கை செலுத்த வந்துபோவோர் அதிகம். அதனால் இந்த மோரூர் பரவலாக அறிமுகமாகி உள்ளது. 


thanks to http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=164&Itemid=59&limit=1&limitstart=2


No comments: