அஞ்சினான் புகலிடம் ( NO FIRE ZONE )

 "அஞ்சினான் புகலிடம்"
( NO FIRE ZONE )
--------------------------------------------------------------
இந்த வார்த்தை தமிழகத்தின்
பண்பாட்டின் உச்சம் ..
.
ஏன்
இன்றைய போர் துறையை சார்ந்த
நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும்
.
இன்றைய நாடுகளால் கூட இந்த பண்பாட்டின் உச்சத்தை
அடைய இயலவில்லை ..
.
அவர்கள் பண்பாட்டின் உச்சியில்
இருப்பதாக சொல்லிக்

கொல்லும் நாடுகளே ...
NO FIRE ZONE என்று
ஈழபோரில்
மக்களை
வரவழைத்து கொன்றதை நாம் பார்த்தோம் .
.
இந்த NO FIRE ZONE தான்
அன்றைய அஞ்சினான் புகலிடம்
.
இது உண்மையா என்றால்
.
சங்க பாடல் .
-----------------------
,பண்டைத் தமிழர்கள்
பகைவர் நாட்டின் மீது படையெடுக்கப்
புறப்படும் முன்

தாங்கள் படையெடுத்து வருவதை
முன்கூட்டி அறிவித்தலும் உண்டு.
.
அவ்வாறு அறிவிக்கும் பொழுது
தங்கள் படையெடுப்பால்
சாதாரணப் பொதுமக்கள் உள்ளிட்டோர்
துன்பப் படக்கூடாது,
தக்க பாதுகாப்பில் இருக்கலாம்
என்று கூறிப் போர் தொடுப்பதாக இப்பாடல் குறிப்பிடுகிறது.
.
ஆனிறை, அந்தணர், பெண்கள், நோயாளிகள், புதல்வரைப் பெறாதவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்ற செய்தி பண்டைத் தமிழர் போர்ப் பண்பாட்டைக் கூறுவதாக அமைந்துள்ளது.
.

அந்த பாடலை பின்பு பார்ப்போம்
.
அதற்க்கு முன்
கிபி 2 ஆம் நூற்றாண்டை சார்ந்த
துளு நாட்டு கல்வெட்டு ஒன்று சொல்லும் செய்தியை பார்ப்போம்

.
சச்சவிட வணிகர், சேனையங்காடிகள், கோயிலங் காடிகள், செக்கு வணிகர், உறைகாரர் ஒன்றுகூடி, தனிநின்று வென்றான் நல்லூர், மாதேவிமங்கலம் ஆகிய ஊர்களையும் அஞ்சினான் புகலிடமாக நிறுவினார்கள். - என்று ஒரு கல்வெட்டு (Epi.Rept 62/32-34) brhšY»‹wJ.

இப்பொது பாண்டியனின் செய்தியை பார்ப்போம்

----------------------------------
பாண்டியன் பற்றிய ஒரு பாடல்
---------------------------------------------------
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, நெட்டிமையார் பாடிய பாடல் அவனுடைய இயல்பான கொடைத் திறத்தைப் புலவர் பாராட்டி அவன் பல்லாண்டு காலம் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்ற பாடலாக அமைந்துள்ளது. இப் பாடலில் கீழ்வரும் பகுதி தமிழரின் பண்பாட்டைப் பெருமையாக எடுத்துக் கூறும் பகுதியாகும்.

~~ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்

பெண்டிரும் புpணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என

அறத்துஆறு நுவலும் ப10ட்கை மறம்” (பா. 9)

இப்பாடற் பகுதியில் பண்டைத் தமிழர்கள் பகைவர் நாட்டின் மீது படையெடுக்கப் புறப்படும் முன் தாங்கள் படையெடுத்து வருவதை முன்கூட்டி அறிவித்தலும் உண்டு. அவ்வாறு அறிவிக்கும் பொழுது தங்கள் படையெடுப்பால் சாதாரணப் பொதுமக்கள் உள்ளிட்டோர் துன்பப் படக்கூடாது, தக்க பாதுகாப்பில் இருக்கலாம் என்று கூறிப் போர் தொடுப்பதாக இப்பாடல் குறிப்பிடுகிறது. ஆனிறை, அந்தணர், பெண்கள், நோயாளிகள், புதல்வரைப் பெறாதவர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்ற செய்தி பண்டைத் தமிழர் போர்ப் பண்பாட்டைக் கூறுவதாக அமைந்துள்ளது.

மேலும் புதல்வர் பெறுதல் வாழ்வின் சிறப்புக்கு அடித்தளமாக அமையும் என்ற பண்பாட்டையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.

அத்துடன் புதல்வரின் கடமையையும் சுட்டிக் காட்டுகிறது.

புதல்வர்கள் என்போர் தன்னுடைய முன்னோர்களுக்கு நினைந்து படையல் செய்து கடமையாற்ற வேண்டும் என்ற பண்பாட்டுச் செய்தியையும் இப்பாடல் குறிப்பிடுகிறது.

WWW.VAAA.IN

No comments: