கள்ளர் வரலாற்றுச் சுருக்கம் ---- 4

                           தமிழகத்தை ஆண்ட பல தரப்பு மன்னர்களும், முடிவேந்தர்களும் இவர்களுடன் தொடர்புடையவர்கள். தமிழர்கள் பலவகையிலும் மற்ற எல்லா நாட்டினரையும் விட பல கலைகளில் தேர்ந்து விளங்கினர். அவ்வகையில் அம்மரபு மாறாமல் சென்ற நூற்றாண்டு வரை ஈங்காங்கே கிராமப் புறங்கிளல் தெருக்கூத்துகள் நடைபெறும் .

                       அதில் கண்ணகி கூத்தும் ஒன்று அதில் இடம் பெறும் பாண்டிய மன்னன் வேடம் அணிந்தவன் மேடையில் தோன்றும் போது

“தெற்கத்திக் கள்ளனடா தென்மதுரை பாண்டியனடா” 

என்று பாடி வருவான் இவ்வரிகளை ஆழ்ந்து நோக்கினால் இதில் இரு பொருள்கள் தோன்றுவதை உணரலாம் ஒன்று தெற்கத்திக்கள்ளன்தான் பாண்டியன் மரபினர் என்பது மற்றது தென் மதுரை!

                       தென்மதுரை பஃறுளி யாற்றின் கரையில் அமைந்து இருந்த தலைச்சங்க தென்மதுரையாகும். ஆக அவர்களது தொன்மையரியப்படும் இதற்க ஆதரவாக மற்றொன்றையும் காணலாம்.

                        அகநானூற்றில் மதுரை கணக்காயனார் ஒரு பாண்டியனை

“கள்வர் பெருமகன் - தென்னர்” 
 
என்று குறிப்பிடுவதைக் காணும்போது கள்ளர்கள்தான் பாண்டியர்கள் என்று அறியமுடிகிறது.

பிற்காலப் பாண்டியர்களில் குலசேகர பாண்டியன் மற்றும் வீரபாண்டியன், ஆகியோர் தங்களது அரசிருக்கைகளுக்கு கள்ளர்களின் பட்டப்பெயரான காலிங்கராயன், மழவராயன், முனையதரையன் என்று பெயர்களைச் சூட்டி கள்ளர்கள் அவர்களுக்குச் செய்த உதவிக்கு பாராட்டு தெரிவிக்கும் முகமாகவும் தங்கள் பாண்டிய ஆட்சியில் அமர அருந்துணை நின்ற அத்தலைவர்களின் பட்;டப்பெயர்களை சூட்டி நன்றி பாராட்டினார். எனவே பாண்டியர்கள் கள்ளர்கள் என்று உறுதிபடக்கூறலாம்.


இதற்குச் சான்றாக ஒன்றினை கூறினால் நலமாய் இருக்கும் சீனித்தேவர் தன் கள்ளர் வரலாறில் முக்குலம் என்று ஒன்று இல்லை எல்லோரும் கள்ளர்களே என்று கூறியுள்ளார். ஆவர் கூறிய வரிகள் தற்போது திரிந்து வழங்குகின்றது. அது பின்வருமாறு

“கள்ளர், மறவர் கணத்த அகம்படியர்
மெல்ல மெல்ல வெள்ளாளரானார்” என்று கூறப்படுகிறது.

இதக் உண்மை வரிகள்

கள்ளர், மறவார் கனத்த அகமுடையோர் 
மெல்ல மெல்ல வள்ளளானார் என்பதாகும், 

இக்கூற்றுப்படி பாண்டியர்களை மறவர் என்பதை தவிர்த்து கள்ளர் என ஒப்பலாம். கள்ளர்கள் மறத்தண்மையில் எல்லோரையும் விஞ்சி நிற்பவர் உயிர்க்கு அஞ்சா நெஞ்சினர் எனவே அவர்களே மறவரும் ஆவார். எனவே கள்ளரும், மறவரும் அகம்படியரும் வேரல்லர் மூவரும் ஒரே இனத்தவர் ஆவர்.

No comments: