கள்வன் கள்ளன் வேறு வேறா ?

கள்வன் வேறு என்றும் கள்ளன் வேறு என்றும், கள்ளர் என்ற சொல் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் இல்லை என்றும், இப்பொழுது அழைக்கப்படும் கள்ளன் என்ற சொல் திருடனை மட்டுமே குறிப்பதாகவும் சில தற்குறிகள் பரப்புரை செய்கிறார்கள்.
போர்க்குடியில் பிறந்தவர்களுக்கும், முத்தமிழையும் கற்றுணர்ந்த அறிஞர்களுக்கு மட்டுமே தெரியும் கடந்த நூற்றாண்டு முன்பு வரை களவு என்பது போரின் ஒரு முறை, அது ஒரு திணை.
புறத்திணையை 7 வகையாகத் தொல்காப்பியமும், 12 வகையாகப் புறப்பொருள் வெண்பாமாலையும் தொகுத்துக் காட்டுகின்றன. அவற்றுள் ஒன்று வெட்சித் திணையாகும். ஒரு நாட்டின் வீரர் தன் அரசன் ஆணைப்படி சென்று பகை நாட்டினரின் பசுக்கூட்டங்களை (ஆ நிரைகளை) கவர்ந்து வந்து காத்தல் இத்திணையாகும்
புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும்.
"வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந் தோம்பல் மேவற் றாகும்"
எட்டாம் நூற்றாண்டுக்கு பின் கள்வன் என்ற சொல் கள்ளன், கள்வன் என்று குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்துகளும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் தன் வடிவத்திலும் மாற்றம் கொண்டது. (“ஒரு மொழி 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிடத்தக்க மாற்றம் அடைகிறது”)
எட்டாம் நூற்றாண்டுக்கு முன் :
* கள்வர் கோமான் புல்லி
(வேங்கடத்தை ஆட்சி செய்த கள்வர் தலைவன் புல்லி )
* கள்வர் பெருமகன்
(கள்வர் பெருமகன் சங்ககாலப் பாண்டிய நாட்டில் ஒரு நிலப்பகுதியை ஆண்ட ஒரு குறுநில மன்னன். இவன் வெட்சிப் போர் பல புரிந்தவன் எனத் தெரிகிறது)
* ஸ்ரீ கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்
(இதனை இறுதியில் காணலாம்)
எட்டாம் நூற்றாண்டில் இருந்து :
1) கல்வெட்டுகளில் கள்வ, கள்ள என்றும் மேலும் கள்ளதிருமங்கையாழ்வார் மற்றும் ஸ்ரீ கள்ள சோழன், ஸ்ரீ கள்வன் ராஜராஜன் என்றும் உள்ளது (ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது)
2) திருமங்கையாழ்வார் பாடலில்
" வள்ளலே உன்றமர்க் கென்றும் நமன்றமர்
கள்ளர்போல் கண்ண புரத்துறை யம்மானே."
(திவ். பெரியதி. 8, 10, 7). திருமங்கையாழ்வார் - 8 ஆம் நூற்றாண்டு
மேலும் சைவ சித்தாந்த அகராதியில் கள்ளர், கள்வர் என்பது இறைவனை குறித்து நிற்கின்றது.
கள்ளர், கள்வன் - இறைவன். எ-டு கள்வன் தான் உள்ளத்திற் காண் (சிபோ பா 55) இறை வனைக் கள்வன் எனக்கூறுவது சமய மரபு. - கள்ளர் புகுந்த இல்லம் - ஆன்மாவின் அறிவு. ( சைவ சித்தாந்த அகராதி)
மேலும் தமிழில் மருவிய சொற்கள்:
* கல்வெட்டுகளில் காணப்படும் “மதிரை” மருதையாகி இன்று “மதுரை”யாக மாறியுள்ளது.
* குறிஞ்சி என்னும் சொல்லே மருவிக் குருச்சிஆயிற்று.
* குசவன் -> குயவன்
குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக் - உரை: மட்கலத்தை வனைகின்ற குயவன் (திருமுறை)
* பழந்தமிழில் 'நேற்று' என்பதைக் குறிக்க 'நெருநல்' மற்றும் அதன் திரிபாகிய 'நென்னல்' ஆகியவைப் பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறள்: "நெருநல் உளனொருவன் இன்றில்லை.." - நேற்று இருந்தவன் இன்றில்லை).
* மரித்தல் => மரணம்
(அரயன் உடையான் மரித்தமையில்)
* சாதல் -> சாவு
சாதலின் இன்னாத தில்லை இனிததுஉம் ... கலைஞர் உரை: சாவு எனும் துன்பத்தைவிட
பெயர் மருவிய ஊர்கள்:
* தன்செய்யூர் --> தஞ்சாவூர் --> தஞ்சை
(கள்ளர் குல சோழர்கள் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பகுதி)
* திருமெய்யம் --> திருமயம்
(கள்ளர் குல தொண்டைமான் தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பகுதி)
* ஆருக் காடு --> ஆற்காடு
 * ஈரோடை --> ஈரோடு
* உகுநீர்க்கல்--> ஒகேநக்கல்
* மகிசூர் --> மைசூர்
* ஏரிக்காடு --> ஏற்காடு
* ஒத்தை கால் மண்டபம் --> உதகமண்டலம் --> ஊட்டி
* கசத்தியாறு --> கயத்தாறு
* கரவூர் -- கரூர்
 * குடமூக்கு -- கும்பகோணம்
* குன்றூர் - குன்னூர்
* குளிர் தண்டலை - குளித்தலை
* குவளாலபுரம் - கோலார்(தங்க வயல்)
* கோவை - கோயமுத்தூர்
* செங்கழுநீர்பட்டு - செங்கல்பட்டு
* சேரலம் - சேலம்
* சோளிங்கர் - சோழலிங்கபுரம்
* தகடூர் - தருமபுரி
 * தர்மபுரம் - தாம்பரம்
* திண்டீஸ்வரம் - திண்டுக்கல்
 * திருச்சுரம் - திரிசூலம்
* பல்லவன் தாங்கல் - பழவந்தாங்கல்
* ராஜராஜேஸ்வரம் - தாராசுரம்
* வென்க‌ல்லூர் - பெங்களூர்
* வெற்றிலைக்குன்று - வத்தலக்குண்டு
"பெரையூர் நாட்டு பனையூர் அரையன்(அரசன்) கள்வன்"
கள்ளர் குல பட்டங்களில் "வங்காரம்" என்ற பட்டம் பேரையூர் எனும் ஊர்களை உருவாக்கி அரசாண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டமாகும். மேலும் பேரையூர்
சிவ தலத்தை உருவாக்கியதும் கள்ளர் தான். ஆக இதன் மூலம் "கள்வர்" என்பதுதான் பின்னாலில் கள்ளராக திரிந்துள்ளது என உறுதியாகின்றது.
குறிப்புகள் :
காவிரிகிழவன் கிள்ளிவளவன் புறநானூறு பாடலில், "அறவர் அறவன் மறவர் மறவன் மள்ளர் மள்ளன்" என பாடியுள்ளனர். இதற்க்கு பொருள் அந்தனரில் தலைசிறந்தவன் மறவரை போல போரில் சிறந்தவன் மள்ளரை போல உழவில் சிறந்தவன்.
* ஸ்ரீ கள்வர் கள்வன் - களப்பிரரை வென்ற கள்வன் தலைவன் (அ) கள்வர்களில் தலை சிறந்தவன்
* இராஜராஜன் - அரசர்களில் தலைசிறந்தவன்
* மாமன்னன் - மன்னர்களில் தலை சிறந்தவன் என்று தான் பொருள்.
* கள்ளர் (கள்வர்) என்ற இனத்தவர் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழும் ஆதி தமிழ் இனம் மேலும் சென்ற நூற்றாண்டு வரை போர் குடிகளாக இருந்தவர்களும் (முக்குலத்தோர் ) இவர்களே. (இன்றும் சொந்த பெயரில் வரலாறு தேடும் ஒரே இனம் முக்குலத்தோர் மட்டுமே மற்றவர்கள். ......)
* சம்ஸ்கிருத்ததில் "காளா" என்பது கரிய நிறம் என்பதும் "காளி என்பவள் கரிய நிறமுடைய கன்னனின் தங்கை என்பது . காளி தேவிக்கு 'கிருஷ்ன பிங்கலா' என்றொரு பெயர் உண்டு அதற்கு கரிய நிறத்துடையவள் என்று பொருள்.
கண்ணனும் கள்ளனும் கருப்பனும் கிருஷ்னனும் யாதும் ஒரே பொருளையுடைய பல பெயர்களே.
கன்னனை கோவல மைந்தன் என கூறுகின்றது. இதன் அர்த்தம் 'கோவலர்' என்னும் இம்மன்னையுடைய பூர்வ முல்லை நில குடியினை குறிக்கும் வார்த்தையாகும்.
இந்த கோவலர்------>கோளவர்------>களவர்----->கள்ளர்குடி ஆயினர்.
இப்படி தமிழ் நாடெங்கும் கோவில் கொண்ட முல்லை நிலத்து மாதவன் மதுரை அழகர் கோவிலில் "கள்ளழகன்" என்றும் திருவைகுண்டத்தில் "கள்ளர்பிரானாகவும்" கேரள ஆலப்புழாவில் "கள்ளர்பெருமானாகவும்" திருப்பதியில் "கள்ளர் கோமானாகவும் கோவில் கொண்டுள்ளான்
thanks to 

No comments: