அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு மாயம்

அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு மாயம்
[ வெள்ளிக்கிழமை, 29 ஒக்ரோபர் 2010, 09:21.05 AM GMT +05:30 ]

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டு மாயமாக மறைந்துள்ளதாக இலங்கை தொல்பொருளியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மொழியின் முன்னைய வடிவமான பிராஹ்மி எழுத்து வடிவத்தில் அமைந்திருந்த குறித்த கல்வெட்டை ஜேர்மனியைச் சேர்ந்த நிபுணரொருவர் கண்டுபிடித்து இலங்கையின் தொல்பொருளியல் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தார்.
திஸ்ஸமஹாராமையின் கொடவாய பிரதேசத்தில் அமைந்திருக்கும் பௌத்த விகாரையொன்றினை அண்மித்த கற்பாறையொன்றிலிருந்து பிரஸ்தாப கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
அம்பாந்தோட்டை புராதன துறைமுகத்துடன் தமிழர்கள் தொடர்பு வைத்திருந்தமைக்கான ஆதாரமாக குறித்த கல்வெட்டு திகழ்வதாக தொல்பொருள் துறை நிபுணர்கள் பலரும் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், அது தற்போதைக்கு மாயமாக மறைந்து போயுள்ளது.
thanks to http://www.tamilwin.com/view.php?2e2IPV00bZjoK2edQG174bch98scd4E2F3dc27pi3b430QH3e23nLW20

No comments: