கழுகுக் குஞ்சு

ஒரு விவசாயி ஒரு கழுகு முட்டையைக் கண்டெடுத்தார். கொண்டுவந்து அடைகாக்கும் கோழியின் கீழ் வைத்தார். கழுகுக் குஞ்சு முட்டையை உடைத்து வெளிவந்தது. தன் ‘சகோதர’ கோழிகளைப்போலவே அதுவும் வளர ஆரம்பித்தது. தரையில் புழுக்களைத் தின்றது, கொக்கரித்தது, சிறகை அடித்து சிறிது தூரம் பறந்து வீழ்ந்தது.

வருடங்கள் கழிந்தன.

ஒரு நாள் வளர்ந்துவிட்ட அந்தக் கழுகுக் குஞ்சு வானத்தில் ஒரு பிரம்மாண்டமான பறவையை பார்த்தது. வியப்பில் அந்தக் கழுகுக் குஞ்சு கேட்டது, “அது என்ன?” என்று.

”அது கழுகு. பறவைகளுக்கெல்லாம் தலைவன். அது ஆகாயதை சொந்தமாக்கியது. நாம் இங்கே தரையில்தான் வாழவேண்டும்.” எனக் கிடைத்தது பதில்

அந்தக் கழுகுக் குஞ்சும் கோழியாகவே வாழ்ந்து மடிந்தது.
THANKS TO http://cyrilalex.com/?p=555

No comments: