குடும்ப பாசம் , சாதி பாசம்

சாதி ஒழிப்பாளர்கள் ...கவனிக்க ...
இதை தான் குடும்ப பாசம் , சாதி பாசம்
என்று சொல்கிறார்கள்
----------------------------------------------------------------------
டிசம்பர் மாதம் முதுமலை பயணம் சென்றிருந்தேன். யானை தன் குட்டியை
மிகவும் அதிக கவனத்துடன் பாதுகாத்து அழைத்துச்செல்வதை நிறைய சந்தர்ப்பங்களில் பார்த்து இருக்கிறேன் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால்
முதுமலையில் ஆறு யானைகள்
குளித்துக்கொண்டு இருந்த போது
எங்களது இடதுபுறம் சரிவில் நின்றிருந்த
ஒரு யானை, குட்டியுடன் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தயானையைப் பார்த்து கத்திக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்தது.
அந்த யானையின் பிளிரல் தொடரவே குளித்துக்கொண்டிருந்த யானைகள் கரை ஏறத்தொடங்கின.
வளர்ந்த யானைகள்சாதுரியத்துடன் கரை ஏறுகையில், குட்டி கரை ஏறமுடியாமல் தவித்த போது, தாய் யானை தனது முன் இரண்டுகால்களுக்கு இடையில் குட்டியை இருத்திக்கொண்டு அது விழாமல் கரை ஏற தனது முன்காலில் குட்டியை உந்திஏற உதவியது.
இருந்தபோதிலும் எங்களது இடது பக்கம் பிளிரிக்கொண்டிருந்த யானை தனது அறைகூவலைதொடர்ந்து கொண்டே
எங்களை நோக்கி மிக அருகில் வந்து கொண்டிருந்தது. கரை ஏறிய யானை தனது குட்டியை பாதுகாப்பாக தனது அருகிலேயே வருமாறு அழைத்துக்கொண்டு பிளிரிய யானையை நோக்கி சென்றது
. குட்டி யானை பாதுகாப்பாக
தாய் யானையுடன் பிளிறிய யானை அருகில் வந்த போது உணர்ச்சிப்பூர்வமானது.
பின்னர் யானைகள் அனைத்தும்
குட்டியை யாரும் பார்க்காதவாறு அனைத்தும் சென்றது.
விலங்குகள் ஆறு அறிவுள்ள
மனிதனைப் காட்டிலும்
பாசமாக பாதுகாப்பாக
தனதுகுட்டியை அழைத்துச்சென்ற முறை மெய்சிலிர்க்க வைத்தது.
‎Ponmoorthy Ramasamy‎ பெறுநர் காடுகள் (forest)
25 நிமிடங்கள்










No comments: