நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்

nalli        நள்ளி








நள்ளி 
- துளிமழை பொழியும் நளிமலை (நீலகிரி) நாடன். 

நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன்.
(நண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன்

நள்ளி கடையெழு வள்ளல்களுள் ஒருவர்.
மலைவளம் செறிந்த கண்டீர நாட்டினர்.
இவரை நளிமலை நாடன் என்றும்,
கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். 


நள்ளி,
தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும்,
வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.
நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதும்,
உள்ளத்தில் கருணை இல்லாமல் பிறர்க்கு ஈதலும் (கொடுத்தல்) பயன் தராது
என்ற கொள்கை உடைய இம்மன்னனின் வள்ளல் தன்மையைச் சிறுபாணாற்றுப்படை 103-107 அடிகளில் சுட்டுகிறது.
முட்டாது கொடுப்போன்
தன்னிடம் வந்த இரவலர்கள் மனம் மகிழ்கின்ற வகையில் பரிசுப்பொருள்களை அள்ளிக் கொடுப்பவன் இவன்.
தன்னிடம் வந்தவர்கள் மீண்டும் வறுமையில் வாடாதவாறும் வேறொருவரிடம் சென்று இரவாதவாறும் நிரம்பக் கொடுக்கும் இயல்பு உடையவன் நள்ளி.
 இதனால் இவன்,

முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
............ ........... ................... ..................
நளிமலை நாடன் நள்ளி...
(சிறுபாணாற்றுப்படை 105-107)

(முட்டாது = தடையில்லாது; முனை = போர்முனை; நளிமலை = குளிர்ந்த மலை)
என்று பாராட்டப்படுகிறான்.

No comments: