கள்ளர் சீரமைப்புத் துறை - பள்ளிகள்

மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில் 260 பள்ளிகள் உள்ளன.

இதில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 45. இப்பள்ளிகளின் வளர்ச்சியில் கல்வித்துறை போதிய அக்கறை காட்டவில்லை என கள்ளர் பள்ளிகளின் ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

இதற்கு உதாரணமாக பல புகார்களையும் தெரிவிக்கின்றனர். பள்ளிகளில் சிறப்பு கட்டணம், கல்வி கட்டணம் வசூலிக்க தடைவிதித்து அரசு உத்தரவிட்டது. அதற்கு பதிலாக பள்ளிகளுக்கு அரசே கட்டணத்தை வழங்கி உதவியது. இவை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டது.

இரண்டு ஆண்டுகளாக கள்ளர் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை. நிலுவைத் தொகை ரூ. 17 லட்சத்து 98 ஆயிரத்து 701. ஆண்டுதோறும் நூறு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக கள்ளர் பள்ளிகள் ஒன்று கூட தரம் உயர்த்தப்படவில்லை. கள்ளர் பள்ளிகளில் 110 பட்டதாரி ஆசிரியர், 52 முதுகலை ஆசிரியர், 40 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2 ஆண்டுகளாக இப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 14ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம்.

இதற் காக மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 300ம், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ. 200ம் வழங்கப்பட்டது. இது மற்ற பள்ளிகளுக்கு வழங்கப்பட்டும் கள்ளர் பள்ளிகளுக்கு இதுவரை வழங்கவில்லை. ஆண்டு துவக்கத்தில் அரசு இலவச பாடப் புத்தகங்களை பள்ளிகளுக்கு எடுத்துச் செல்ல ரூ.ஆயிரத்து 200 வழங்கப்படும். இதுவும் தராமல் கள்ளர் பள்ளிகள் வஞ்சிக்கப்பட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரப்படி விளையாட்டு ஆசிரியர், அலுவலர் பணியிடம் எந்த கள்ளர் பள்ளியிலும் நியமிக்கப்படவில்லை.

நபார்டு வங்கி மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் கட்டடம், தளவாடங்கள் வாங்குகின்றனர். கள்ளர் பள்ளிகளுக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை. ரூ. 27 கோடி அளவுக்கு கருத்துரு அனுப்பியும் நீண்ட நாட்களாக பலனில்லை. இதுபோன்ற பல குறைபாடுகள் உள்ளன.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் எம்.சின்னப் பாண்டி கூறுகையில், கள்ளர் சீரமைப்புத் துறையில் பலகுறைபாடுகள் இருந் தாலும் கடந்த ஆண்டு 10ம் வகுப்பில் 83, பிளஸ் 2ல் 73 சதவீதம் தேர்ச்சி இருந்தது. பெண்களுக்கென உயர் நிலை,மேல்நிலை பள்ளிகள் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. கள்ளர் பள்ளிகள் புறக்கணிக்கப்படும் நிலையில் உள்ளன. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
thanks to http://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?cat=1&id=5052

No comments: