தமிழகம் ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லையா? சேதுராமன் கண்டனம்

0 c
First Published : 26 Oct 2010 12:00:00 AM IST


சென்னை, அக். 25: தென் மாவட்ட மக்களால் வணங்கப்படும் ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் டாக்டர் ந. சேதுராமன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  தமிழ்ப் பெயர் இல்லை என்று கூறி "ஒச்சாயி' படத்துக்கு வரிவிலக்கு தராமல் இருப்பது வேதனையான செயல். தமிழைக் காக்க வேண்டிய தமிழக அரசே தமிழ்ப் பெயரைப் புறக்கணிக்கலாமா?

                  மதுரை மாவட்டம் கருமாத்தூரில் மூத்த தமிழ்ச்சாதியினர் வணங்கக்கூடிய ஒச்சாண்டம்மன் கோயில் உள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் ஒச்சாண்டம்மனை "ஒச்சாயி', "ஆச்சிக்கிழவி' என்ற பெயரில் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர்.  இப்பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களது ஆண் குழந்தைகளுக்கு ஒச்சு, ஒச்சப்பன், ஒச்சுக்காளை என்றும், பெண் குழந்தைகளுக்கு ஒச்சாயி, ஒச்சம்மாள், ஒச்சுப்பிள்ளை என்றும் பெயர் வைக்கும் வழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. எனவே ஒச்சாயி தமிழ்ப் பெயர் இல்லை என்று கூறுவது கண்டிக்கத்தக்கது என்று சேதுராமன் கூறியுள்ளார்.

thanks to www.dinamani.com