0 c

சோழரின் கீழ் தென்னகம்

கி.இரா.சங்கரன் வெள்ளி, 20 ஏப்ரல் 2012 10:29
இந்திய வரலாற்றைச் சமூகப் பொருளியல் பின்னணியில் பகுத்தறிந்து ஆய்வு செய்யும் முதன்மையானவர்களில் பேராசிரியர் எ.சுப்பராயலுவும் ஒருவர். தென்னிந்திய வரலாற்றை ரசனைப் பூர்வமான கலைக்கோட்பாடு, சமயப் பின்னணியில் கணிக் காமல் சமூகப் பின்னணியின் காரணியான பொருளி யலை அறிவதில் தலைப்பாடாக உழைக்கிறவர். வெவ்வேறு வரலாற்று அறிஞர் குழுக்களிடையே ஓர் இணைப்புப் பாலமாக இயங்கிவருகிறவர். எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன்வேலுதட், ராஜன் குருக்கள், அர.சம்பகலக்ஷ்மி போன்ற வரலாற்றுக் கோட்பாட்டாளர்களுக்கும், கே.வி.ரமேஷ், எம்.டி. சம்பத், கட்டி, இராகவ வாரியார், நடன.காசிநாதன் போன்ற கல்வெட்டு ஆய்வாளர்களுக்கும், வெ.வேதா சலம், சொ.சாந்தலிங்கம், ச.ராசகோபால், சு.ராச வேலு, வீ.செல்வகுமார், கா.இராஜன் போன்ற skilled researchers களுடனும், ர.பூங்குன்றன், பர்டன் ஸ்டெயின், நொபொரு கரஷிமா, ரொமிலா தாப்பர் போன்ற கருத்துநிலையினைக் கட்டமைக்கும் அறிஞர்களுடனும் இணைந்து பணியாற்றுகிறார்.
இந்தியாவிற்கு வெளியில் இருந்து தென்னிந்தியா பற்றி ஆயும் அறிஞர்களுக்கு ஆற்றுப்படுத்து நராகவும் இருந்து வருகிறார். தென்னிந்தியா பற்றி வரலாற்று நூல்களை ஒவ்வொன்றாக OUP நிறுவனம் வெளியிட்டு வருகையில் பேராசிரியர் YS அவர்களின் நூல் ஒன்றினையும் வெளியிட்டு அந்நிறுவனம் தன் தகுதியினை உயர்த்திக்கொள்ளவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கையில் இந்நூல் (South Indian Under Cholas) வெளிவந்துள்ளது. இந்நூல் இளம் ஆய்வாளர்களுக்குக் கூடுதலான புரிதலுக்கு வழிகாட்டும் ஒன்றாக அமைய வேண்டும் என்று தம் அவாவினைப் பேராசிரியர் வெளியிட்டுள்ளார்.
முதல் வணக்கம்
பேரா.தி.வை.மகாலிங்கம் தம்முள் காத்திரமான ஆய்வினைத் தொடங்கி வைத்தவர் என்றும், சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு பர்டன் ஸ்டெயின் வருகை, தம்மைப் போன்றவர்களுக்கு கல்வெட்டுகளை அறிவியல்பூர்வமாக ஆய்வதற்குத் தூண்டுதலைத் தந்தது என்றும் மனம் திறந்த மரியாதையினைப் பதித்திருக்கிறார். பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி சோழர் வரலாற்றை எழுதிய பிதாமகன் என்றும் மிகப்பெரிய வரலாற்றாசிரியர் என்றும் மலர் தூவியுள்ளார்.
ஆய்வுமுறை
தென்னிந்திய வரலாற்றாய்வினை இருமுறைகளில் அறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குத்துமதிப்பு ஆய்வுமுறை (data of random sample) குவியல்முறை ஆய்வு (quantitative method). இவ்விரு முறைகளையும் பின்பற்றிச் சோழர் ஆட்சி பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.வை.சதா சிவ பண்டாரத்தார், மா.இராசமாணிக்கனார், எம்.எஸ்.கோவிந்தசுவாமி, வி.பாலாம்பாள், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் போன்றோரின் ஆய்வுகளை முதல் வகைக்குள் வைக்கலாம். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, நொபொரு கரஷிமா, எ.சுப்பராயலு, ப.சண்முகம், ஜேம்ஸ் ஹெய்ட்ஸ்மேன், லெஸ்லி. சி. ஓர், வல்லிபுரம் மஹேஸ்வரன் போன்றோரின் ஆய்வுகளை இரண்டாவது வகைக்குள் வைக்கலாம். பேரா.எ.சுப்பராயலு குவியல்முறை ஆய்வினைப் பின்பற்றி இந்நூலினைச் செய்துள்ளார். காட்டாக, எட்டாவது கட்டுரையினை எழுதுவதற்கு சுமார் நாலாயிரம் கல்வெட்டுகளைப் பயன்படுத்தியுள்ளார். ஒன்பதாவது கட்டுரைக்கு மூவாயிரத்து ஐந்நூறு கல்வெட்டுகளைப் பயன்படுத்தியுள்ளார்.
ஒரு epigraphist, epigrapher, historian என்ற நிலைகளில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வெட்டுகளைப் படியெடுத்தல், படித்தறிதல், கூடிப்படித்தல், கலைச் சொற்களுக்குப் பொருள் கண்டுணர்தல், முன்னோர் வாசிப்பினை மீளவாசித்தல், கருத்துரு செய்தல், கட்டமைத்தல், வரலாற்றுக் கூறுகளை வரிசைப்படுத்தித் தெளிவாக்கல் என்பது இவரது நிலை. இதற்குச் சிறந்த காட்டு, பூலாங்குறிச்சி கல்வெட்டுகளின் மீதான கட்டுரை. கூட்டுமுயற்சி ஆய்வில் சங்கடம் பார்க்காமல் பிற அறிஞர்களுடன் கலந்துரையாடி கல்வெட்டுகளைப் படித்தறிவதில் ஆர்வம் காட்டி இன்றைய இளைஞர்களுக்கு முன்னேராய் இருந்து வருகிறார். சோழராட்சி தொடர்பான கட்டுரைகளில் வழக்கமான நான்கு நிலைக் கால கட்டங்களைப் பின்பற்றியுள்ளார். இது நல்ல புரிதலுக்கு வழிவகுப்பதாய் உள்ளது.
நூலின் பெரும்பாலான கட்டுரைகளின் மையத் தடம் சோழர் அரசு கூறுகளைக் கண்டறிவதிலேயே கவனம் கொள்கிறது. சோழர் அரசு, சோழர் அரசுக் கூறுகள் பற்றிய இரு கட்டுரைகள் இந்நூலின் முத்தாய்ப்பு.
பிறர் பயனுற வேண்டும்
குவியல்முறை ஆய்வினை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்ட எட்டாம் ஒன்பதாம் கட்டுரைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட அத்தனை கல்வெட்டு எண்களையும் சான்றாதாரங்களாக பேராசிரியர் தந்துள்ளார். அக்கல்வெட்டுகளைக் கொண்டு வேறு வேறு கருப்பொருளில் ஆய்வோருக்கு இவை பெரிதும் பயன்படுவன. இத்துறையில் புதிதாக ஆய்வு செய்யும் ஒருவருக்கு இதனால் பெருமளவு சான்றுகளைத் தேடும் நேரம் மிச்ச மாகும். நிலவிலை ஆவணம்பற்றிய கல்வெட்டுகள் முதல் காலகட்டத்தில் அதிகமாகவும் அடுத்தடுத்த காலகட்டங்களில் குறைந்துபோவதனையும் இக் கட்டுரையின் அடிக்குறிப்புகளில் தரப்பட்டுள்ள கல்வெட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அறியலாம். எட்டாம் கட்டுரையில் தரப்பட்டுள்ள நஒயீடயயேவடிசல nடிவநள, கல்வெட்டுகளைப் பதம் பிரித்து ஆய்வதற்கும் கல்வெட்டுச் சொற்களை எப்படி விளக்குவது என்பதற்கும் ஆய்வாளர்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது.
அறுபடாத தொடர்ச்சி
தென்னகச் சமூகம் ஓர் அறுபடாத தொடர்ச்சி யினைக் கொண்டுள்ளது என்பது கட்டுரைகளின் ஊடுபாவாகும். பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளில் பேராசிரியரால் கண்டுணரப்பட்ட பிரம்மதேயக் கிழவர், காராண்மை, மீயாட்சி போன்ற சொற்கள் சமூகத்தின் உயர்நிலை மக்களையும், நிலவுடைமை யாளர்களையும் குறிக்கும் என்று அறியப்படுகிறது. இதனைச் சங்க இலக்கியச் சொற்களான கிழவன், கிழவோன், கிழமையோன், கிழத்தி, கிழமையர், கிழான், கிழவியர் போன்ற சொற்களுடன் ஒப்பிடலாம். இவ் வகைச் சொற்கள் சங்க இலக்கியக் கால கட்டத்துச் சமூகத்தினையும், அதன் தொடர்ச்சியான பூலாங் குறிச்சிக் காலகட்டத்துச் சமூகத்தினையும் விளக்கும். சங்க இலக்கியச் சொற்களான இழிசினன், இழி பிறப்பாளன், இழிபிறப்பினோன் போன்ற சொற்கள் அடிநிலை மக்களைக் குறிக்கிறது எனக் கொண்டால் இதன் தொடர்ச்சியினை ஈ / தா / கொடு என்ற தொல்காப்பியத்து வினைச் சொற்களால் அறியலாம். இங்குச் சொல்லப்பட்ட இரு வர்க்கக் கூட்டங் களுக்கு இடையிலான இடைத்தட்டு மக்களைப் பேராசிரியர் பூலாங்குறிச்சி கல்வெட்டுகளில் கண்டுணர்ந்த களக்கிழமை, பாண்டங்கர், விருமாச் சாரி, தருமி, உள்மனையாளர் போன்ற சொற் களால் அறியலாம். ஏவல் மரபு உடையவரையும் (தொல் : 970) அடியவர் மரபினையும் (தொல் : 969) தொல்காப்பியம் விளக்குகிறது. இந்த வகையில் பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் பற்றிய கட்டுரை தொல்காப்பியம் காட்டும் சமூகத்தினை அறியப் பெரிதும் உதவும்.
தென்னிந்திய மொழிகளில் போதிய புலமை யுள்ளபோதே தென்னிந்திய வரலாற்றினைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு நல்ல காட்டாக நூலின் நான்காம் கட்டுரை அமைகிறது. அக்கட்டுரையின் மங்கலம் என்ற சொல்லிற்கான பொருளினைச் சுற்றிச் சுற்றி வருகையில் இச்சொல்லிற்கு இரு திராவிட மொழிகளிலும் (தமிழ், தெலுங்கு) ஒத்த பொருள் தொழிற்படுவதன் அடிப்படையில் முடிவான கருத்து நிலைக்கு வரமுடியும் என்று பேராசிரியர் சுட்டிக் காட்டுகிறார். மூலபருடை என்ற தமிழ்க் கல்வெட்டுச் சொல்லினை விளங்கிக்கொள்ள மலையாள மொழியறிவு தேவை என்பதனைப் பிறிதொரு கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது. இம்முறையான ஆய்வு தென்னிந்திய மொழிகளின் புலமைத்துவம் தென்னிந்திய வரலாற்று ஆய்விற்குப் போதிய பலனளிக்கும் என்று புரியவைக்கிறது. இக்கட்டுரையின் இரண்டாம் பகுதி சோழர் ஆட்சியில் அலுவலர் பற்றிக் கூறுகிறது. புள்ளி விவரப்படி மொத்த சோழ அலுவலர்களின் எண்ணிக் கையில் பிராமணர்கள் ஏழு சதவீதத்தினரே என்றும், அலுவலர்களை அமர்த்துவதில் சாதி முதன்மைப் பாத்திரம் வகிக்கவில்லை என்றும் முடிவு காண்கிறார்.
சில கல்வெட்டுச் சொற்களை நுணுகி ஆராயும் அய்ந்தாம் கட்டுரையின் இறுதிப் பத்தி இதுவரை தென்னக ஆய்வில் உண்டான நெருடல்களையும் அவற்றினை நிவர்த்தி செய்யும் போக்கினையும் விவரிக்கிறது. இக்கட்டுரையின் கோநேரின்மை கொண்டான் என்ற சொல்லின் ஆய்வு இடைக் காலத் தமிழக வரலாற்றில் அரசரின் அழுத்தமான செல்வாக்கினை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. இத்தன்மையினைச் சோழர்கள் பல்லவரிடமிருந்து பெற்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அய்ம்பது சதவீதம் கல்வெட்டுகளிலேயே அரச கட்டளையும் அலுவலரின் பணியும் குறிக்கப் பட்டுள்ளது அறியப்பட்டுள்ளது. இதனை அரசனின் அதிகாரம் அளவோடு இருந்ததாகக்கூடக் கருதலாம்.
சோழர் ஆட்சியில் நிலஅளவை பற்றிய கட்டுரை மிகவும் நுணுக்கமானது. சோழர்களின் நுணுக்கமான அளவை முறையினை இக்கட்டுரை விளக்குகிறது. இதனைத் தமிழகத்தில் கணக்கியல் நன்கு வளர்ந்துள்ளதாகவே கருதவேண்டும். இத் துறையில் நன்கு வளர்ந்த சமூகம் பிற துறைகளான கட்டடக்கலை, ஓவியக்கலை, படிமக்கலை, நீர்ப் பாசனம் போன்றவற்றிலும் வளர்ச்சி பெற்றிருக்கும். இவ்வனைத்தையும் சோழர் அரசு வெளிப்படை யாக்கியுள்ளது. அளவைகளின் புள்ளிவிவரங்களை விளக்கும் இக்கட்டுரை ஒரு கணக்குப் பாடத்தினைப் படிப்பது போன்றுள்ளது. நிலஅளவைக் கோல்கள் இரட்டை எண்களின் அடிப்படையில் 12 அடி, 16 அடி, 18 அடி என்று தெரிவு செய்யப்பட்டதில் தமிழரின் உளவியல் என்ன என்பதனை அறிய வேண்டும். ஈரடிக் குறள், நாலடியார், எட்டுத் தொகை, அகம் 400, புறம் 400, இரட்டைக் காப்பியம், நான்முகன், அறுமுகன், ஆறடிநிலம், எட்டடி குச்சு, 18 சித்தர்கள் என்ற இரட்டைப்படை எண்களையும் தமிழர் உளவியலையும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும். Geometryஇல் இரட்டை எண்களின் அளவையியல் தொழிற்பாடு என்ன என்பதனையும் அறிய வேண்டும். வெவ்வேறு வட்டாரத்தில் வெவ்வேறு அளவைகளில் நிலங்கள் அளக்கப்பட்டன என்பதும் தஞ்சாவூர்க் கல்வெட்டில் சொன்னபடி அளக்கப்பட்ட நிலஅளவு மனக் கணக்குப்படி நிகழ்ந்தது என்பதும் ஆட்சியதி காரத்தின் மனச்சாய்வினை அளந்து காட்டும்.
வெட்டி, அந்தராயம், பாட்டம் என்ற வரிகளே அதிகமுறை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டவை களாக உள்ளன. இவற்றுள் எச்சோறு, வெட்டி இரண்டும் முதல் காலகட்டத்தில் அதிக முறையும் பாட்டம் நான்காம் காலகட்டத்தில் அதிகமுறையும் குறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு காலகட்டங்களிலும் நீர்ப்பாசன வசதிகள் மேலதிக அக்கறையுடன் கவனிக்கப்பட்டன என்பதனை இதனால் அறியலாம். நீர்ப்பாசன வசதிக்கேற்ப ஆற்றுப் பாசனப் பயிருக்கும், குளத்துப்பாசனப் பயிருக்கும், வரண்ட நிலப்பகுதிகளின் பயிர் விளைச்சலுக்கும் வரி விதிப்புகள் வேறுபட்டுள்ளன. வரிகள் வளமான பகுதிகளில் தானியமாகவும், வரண்ட பகுதிகளில் பணமாகவும் வசூலிக்கப்பட்டது, விந்தையே. இதனை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். வளமையான காவிரிச் சமவெளிப் பகுதிகளிலேயே படிமக்கலைக்கான உலோகத் தேவை மிகுந்து இருந்ததால் இங்கு உலோகத்தினாலான பணப் புழக்கம் குறைவாக அமைவது இயல்பே.
ஊரார், நாட்டார், பெரிய நாட்டார் என்ற கட்டுரை சோழர் காலத்தின் சமூக மாற்றத்தினை விளக்குகிறது. ஊரார் பொதுவாக நிலவுடைமை யுள்ள வெள்ளாளர் ஆவர். இது வரலாற்று உண்மை. எனினும், பேராசிரியரின் ஆய்வு வரண்ட பகுதி யான புதுக்கோட்டை வட்டாரத்தின் விரையாச் சிலை என்ற ஊரின் போர்க்குலத்தவரான மறவரும், அரச மக்களும் (கள்ளரும்) ஊராராக எழுந்துள்ளனர் என்பதனை 13ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு அடிப்படையில் விளக்குகிறது. இதனைக் கள்ளர், மறவர், கணத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆவர் என்ற சொலவடையினை மெய்ப்பிப்பதாக அமைகிறது. இதனை feudalism from the below என்ற கொசாம்பியின் பார்வையில் காண வேண்டும். இது ஒருவகையான சமூக மாற்றம். புதுக்கோட்டையின் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் இருந்துவந்த அம்பலக்காரர்களே பின்னாட்களில் முஸ்லிம்களாக மாறினர் என்ற செய்தியும் உண்டு. அங்கு வெள்ளையப்ப ராவுத்தர், சீனியப்ப ராவுத்தர் என்ற பெயர்கள் வழக்கில் உண்டு. இப்படி இவ்வட்டாரம் அடிக்கடி சமூக மாற்றத்தினைப் பெற்றுள்ளது.

பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சபையாரும், ஊராரும் இணைந்து செயற்படவில்லை. சபையார் பதினோராம் நூற்றாண்டிற்குப் பிறகு தம் ஆதிக்கத் தினை இழந்தனர்; நான்காம் காலகட்டத்தில்தான் மீள எழுந்தனர். பேராசிரியரின் கூற்றுப்படி சோழ அரசினைத் தாங்கி நிற்கும் கால்களாக அமைந்த நாடு நீர் கிடைக்கும் வளமைக்கு ஏற்ப பரப்பளவில் சிறிதாகவோ, பெரிதாகவோ அமைந்திருக்கும். நாட்டார்களின் இயக்கம் பெரும்பாலும் விளிம்பு நிலப்பகுதிகளிலேயும், புதுக்கோட்டை போன்ற வரண்ட நிலப்பகுதியிலும் அதிகாரம் பெற்றிருந்தது. நாட்டார்களுக்குச் சோழ அரசின் மையப்பகுதியில் செல்வாக்கு இல்லை. காலம் செல்லச் செல்ல நாடு அமைப்பு தம் தனித்தன்மையினை இழந்து பல இனக்குழுக்களுக்கும் வாழ்வாதாரமாக அமைந் திருந்தது. தெற்கில் போர்க்குலத்தவரான கள்ளர், மறவர் ஊரார் எனவும் நாட்டார் எனவும் வேளாண் மைக்குத் திரும்ப வடக்கின் போர்க் குலத்தவரான பள்ளியர், ஸ்ரீகோபாலர் என்ற ஆயர்குலத்தவரும் பெரிய நாட்டார் என்ற தொணியில் வேளாண் மைக்குத் திரும்பினர். ஒவ்வோர் கட்டுரையும் இப்படியான சமூக மாற்றத்தினைப் பதிவு செய்கிறது.
அஞ்சுவண்ணமும் எரிவீரப்பட்டினமும்
அஞ்சுவண்ணம் என்ற கட்டுரை தென்னகத்தின் கண்டம் தாண்டிய வணிகத்தினை ஆய்கிறது. சமயமும், சமய நிறுவனங்களும் வணிகத்திற்கு எந்த அளவிற்குத் துணைநின்றன என்பதனையும் விளக்குகிறது. மேற்குலகின் அயொனியன் தீவுகள் தொடங்கி கிழக்கே ஜாவா வரைக்கும் வணிகப் பொருளியல் கூறுகள் தெளிவாக்கப்பட்டதனை இக்கட்டுரை வழியே அறியலாம். இது ஒரு வகையான globalizationஐ விளக்குகிறது. எரிவீரப்பட்டினம் என்ற கட்டுரை தென்கிழக்காசியாவின் நீர்நிலப் பரப்பின் மேலான வணிக நகர்வினை வெளிப் படுத்துவதாயுள்ளது. இவ்வணிக நடவடிக்கை களில் மேற்காசிய இனத்து மக்களுடன் தென்னகத் தினர் இரத்த உறவினை நிகழ்த்தியிருப்பர் - குறிப்பாக கடற்கரை நகரங்களில் இப்போக்கு நடந்தேறியிருக்கும்.
நிலவுடைமைச் சமூகத்தில் அடிமைமுறை நிலவியதுபோல் அஞ்சுவண்ணம் என்ற வணிகக் கூட்டத்திற்கு கீழ்கழனை என்ற மக்கள் பணிசெய்துள்ளனர் என்ற பேராசிரியரின் கருத்து கருதத்தக்கது. எரிவீரப்பட்டினம் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல என்றும் வழிப்பறிக் கொள்ளையினைத் தவிர்ப்பதற்கு என்றே உருவாக்கப் பட்ட காவல் அமைப்பு என்றும் பேராசிரியர் விளக்குகிறார். முறியடிக்கப்பட்ட இது போன்ற தொரு கொள்ளை நடவடிக்கை திருமயம் அருகே நிகழ்ந்ததாகக் கல்வெட்டுக் குறிப்பினைப் பேராசிரியர் அறியத் தருகிறார். திருமயம் வரண்ட பகுதியான புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள ஊராகும். பெருமளவிலான கற்பாறைகளைக் கொண்டுள்ள அப்பகுதி கணிசமாக கள்ளர் இனத்தினர் வாழும் நிலப்பரப்பாகும்.
அப்பகுதியில் அண்மைக் காலம் வரை கொள்ளையர்கள் இயங்கியதாகக் கதை உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் புண்ணிய மூர்த்தி என்ற கொள்ளையர் தலைவர் ஒருவர் புகழுற வாழ்ந்துள்ளார். சோழர் அரசு மிகவும் உன்னத நிலையில் இருந்த பதினோராம் நூற்றாண்டில் தான் எரிவீரப்பட்டினம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. சோழர் அரசின் புறநிலப் பகுதி களிலேயே வழிப்பறி, கொள்ளை நடந்தது என்பது சோழர் அதிகாரம் மையத்தில் குவிந்து விளிம்பு நிலப் பகுதிகளில் செல்லுபடியாகவில்லை என்பதைக் காட்டும். வணிகர் குழுக்கள் படையணியினரைத் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கும் அளவிற்குச் செல்வாக்கு பெற்றிருந்தனர் என்பதனை இக்கட்டுரை விளக்குகிறது. தென்னிந்தியாவின் சோழராட்சியில் சைவமதம் வேளாண்மைக்கு உதவியது போல் இலங்கையில் பவுத்தம் வணிகத்திற்கு உதவியது என்பதனையும் இக்கட்டுரை பேசுகிறது. மக்களைச் சுரண்டுவதில் சமயங்கள் வேறுபாடு காட்டுவதில்லை என்பதே இதன் விளக்கமாகும்.
சோழர் அரசு
சோழர் அரசின் கூறுகள் இரு தனித்தனிக் கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளன. கட்டுரைகளின் ஊடாக சமூக, பொருளியல் மாற்றங்களையும் அறியலாம். இக்கட்டுரைகள் கூடுதலாக பர்டன் ஸ்டெயின் கூற்றுகளுக்குப் பதிலிறுப்பதாகவும் சோழர் அரசினை வகைப்படுத்துவதாகவும் அமை கின்றன.
சோழராட்சியின் 400 ஆண்டுக் காலம், தேங்கி யிருந்த பழங்குடி இனத்துச் சமூகங்களைப் படி நிலை சார்ந்த சமூகத்திற்குள் திணித்தது, கூட்டு நிலவுடைமையினை உடைத்து நிலவுடைமை உறவு களையும் உடைத்தது, இவை அரசனை மையப் படுத்திய அரசு உருவாவதற்கு வழிவிட்டது, நிலைப் படையும் அலுவலமைப்பும் வளர்ந்தன. கவனமாக மேற்கொள்ளப்பட்ட நில அளவை நிலவருவாயினை உறுதி செய்தது. பிராமண ஊர்களையும் கோயில் களையும் கட்டுக்குள் வைத்தது.
ஓர் அரசு உருவாக்கிய சமூக மாற்றத்தினை இவ்வொரு சொற்றொடரில் பேராசிரியர் பதிக் கிறார். பேரா.நீலகண்டசாஸ்திரி சில கூறுகளை வரையறுத்தார் : பேரரசு, திறமையான அலுவல் அமைப்பு, உள்ளூர் அரசியல், அரசனின் வரை யறுக்கப்பட்ட தலையீடு. பர்டன் ஸ்டெயின் இரு கூறுகளை மட்டும் வரையறுத்தார் : கூறாக்க அரசு, தெய்வீக அரசன்.
அரசன்
இவ்விருவரின் கூற்றுகளும் தருக்க முறையிலும், சான்றுகளைக் கொண்டும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பத்தாம் நூற்றாண்டில் பெருமான், அடிகள், பெருமானடிகள் போன்ற பட்டப் பெயர்களைக் கொண்டிருந்த அரசர்கள் அந்நூற்றாண்டிற்குப் பிறகு மக்களிடமிருந்து சற்று விலகி இருந்தனர். அரசரும் உடையார் என்று அழைக்கப்பட்டுள்ளார். அவரே, பதினோரு, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் உலகுடைய பெருமாள், உலகுடைய நாயனார் என்று மாறு கிறார். தொடர்ந்து சக்கரவர்த்தி, திரிபுவன சக்கர வர்த்தி, போன்ற பட்டங்களை இட்டுக்கொள்ளத் தொடங்கினார். தேவா என்றழைக்கப்பட்ட அரசர் சில சந்தர்ப்பங்களில் இறைவனின் தோழன் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார். சோழ அரசரின் ஆளுமை வளர்ச்சி (stature) பற்றிய பேராசிரியரின் இக்கூற்று சோழ அரசர் தெய்வீகத் தன்மை பெற்றவர் என்ற பர்டன் ஸ்டெயின் கருத்திற்குச் சற்று வலுசேர்ப்பதாயுள்ளது.
சோழர் அரச குடும்பம் தொடக்கத்தில் வட்டார, ஆட்சித் தலைவர்களுடன் திருமண உறவினை உருவாக்கிக் கொண்டனர்; நன்கு வளர்ந்த அதிகாரக் கட்டமைப்பினை உருவாக்கிய பின்பு சாளுக்கியர் போன்ற பலம் பொருந்திய அரசர் குடும்பத்தினருடன்தான் மணவுறவு கொண் டிருந்தனர். இதன்மூலம் ஓர் அகன்ற தமிழகத்தினை உருவாக்க முயன்றனர் என்று கருதலாம்.
தந்தையும் தனயனும்
இராஜராஜன் ஓர் அறிவுத் திட்பம் கொண்ட அரசனாகவும் சோழ மன்னர்களிலேயே மிகப் பெரிய போராளி என்றும், மிகச்சிறந்த ராஜதந்திரி என்றும் கணிக்கப்படுகிறான். வளநாடு என்ற அமைப்பினை உருவாக்கி வட்டாரத் தலைவர் களை அலுவலர் நிலைக்குத் தள்ளி மொக்கை யாக்கி அவர்களின் இனக்குழுத்தன்மை சிதைக்கப் பட்டு வரிவசூலிக்கும் வெற்றுத்தட்டுகளாக மாற்றியது ஒரு தந்திரமான ராஜ நடவடிக்கை. இவனையும் தாண்டிச் செயல்பட்ட முதலாம் இராஜேந்திரன் அரசகுலம் சார்ந்த மாகாணங்களை உருவாக்கினான். ஆனால் மன்னர்களின் அதிகார நிலை நூற்றாண்டுகள் தோறும் மாறிக்கொண்டே இருந்தது என்றும் விளக்கப்பட்டுள்ளது. வட்டாரத்து அரச குடும்பங்கள் சோழர் குடும்பத்துடன் திருமண உறவுகள் மூலம் கலந்ததால் சோழரின் குடும்ப இயக்கம் வலு வாக்கப்பட்டது. பெரும்பாலும் பெண்களைக் கொடுத்துச் சாதித்தனர். மிக இலகுவான முறையில் சேதாரம் இல்லாமல் இங்கு அரசியல் வெற்றி நடந்தேறியது. சேதாரம் பெண்ணுக்குத் தானே; வருமானம் ஆணுக்குத்தானே. முதல் பராந்தகனின் மகள் சோழப் பெருந்தேவியைக் கொடும்பாளூர் இருக்குவேள் தலைவன் பூமி பராந்தகன் மணந் தான். முதலாம் ஆதித்தனின்மகள் அனுபமாவை இராஷ்டிரகூடத்து அரசன் சபரமிராமன் மணந் தான். முதலாம் சுந்தரசோழனின் தங்கை வரகுண பெருமானார் என்பவரை பிறிதொரு கொடும் பாளூர் தலைவன் மணந்தான். இராஜராஜன் மகள் குந்தவை சாளுக்கிய அரசர் விமலாதித்தனை மணந்தாள். இவர்களின் மகனை இராஜேந்திரனின் மகள் மணந்தாள். இப்படி அரசகுலப்பெண்கள் மொழிபெயர் தேயங்களின் அரண்மனைகளில் உலா வந்தனர். முதல் காலகட்டத்தில் வட்டாரத் தலைவர்களின் துணைப்படையோடு ஆண்டு வந்த அரசர்கள் இரண்டாம் காலகட்டத்தில் தானே கோலோச்சினர். ஆனால் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இரண்டாம் கூற்றில் இவர்கள் மீளவும் வட்டாரத் தலைவர்களின் துணைப்படையினை நாட வேண்டி இருந்தது.
சோழ மன்னர்கள் மக்கள் மனத்தில் அரும்பி வருகின்ற உணர்வினை ஊதிப் பெருக்கி அறுவடை செய்யும் உத்தியினைப் பின்பற்றியுள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களை ஏதாவதொரு கருத்தியல் இயக்கிவரும். சோழர் காலத்திலும் இதுபோன்ற இயக்கம் இருந்தது. மக்களின் நநேசபல இங்கு வெவ்வேறு வகையில் சிதறடிக்கப்பட்டுள்ளது. இத்திறன், போரிடுதல் மூலம் நிறைவேறியது. உடல் வலிமையும், மனத்தில் உக்கிரமும் கொண்ட மக்கள் திரள் கோபமுறும்போது வெடித்துக் கிளம்பும் ஆற்றல் உள்நாட்டில் சிக்கலை உண்டு பண்ணும் என்று எண்ணித் தமிழகத்தின் வெளி நிலப்பரப்பில் சண்டையிடுவதற்குச் செலவளிக்கப் பட்டது. இதனால் உள்நாட்டில் கலகம் தவிர்க்கப் பட்டுள்ளது. மக்களின் மனோநிலை மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொருளாசை காட்டி அவர் களின் படை நகர்வு நியாயப்படுத்தப்பட்டுள்ளது. படையணியின் ஆண்கள் வெளிநிலப் பிரதேசத்தில் இயங்குகிற போது அவர்களின் மனைவிகள் கற்புடன் பொறுமை காக்க வேண்டும் என்ற போதனையே கம்ப இராமாயணத்தின் அறிவுறுத்தலாகும். வெற்றிக் களிப்புடன் திரும்பிய படையணியினர் மீதமுள்ள வீரத்தினை உள்நாட்டில் விதைக்காமல் இருக்க அவர்கள் கைக்கோலர்கள் என்ற பெயரில் கை வினைஞர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இங்கு தான் சோழ அரசின் தந்திரம் பொதிந்துள்ளது. இப்பத்தியின் முதல் வரியில் சொன்ன கருத்தினை அண்மைக் காலத்திய அரசியல் போக்குடன் இணைத்துப் பார்க்கலாம். சென்ற நூற்றாண்டில் தமிழகத்து மக்களின் மனத்தில் பதிந்திருந்த திராவிட உணர்வு, தமிழ் உணர்வு, உரைநடை மறுமலர்ச்சி, மேடைப் பேச்சு, திரைப்படக்கலை, நாடகக்கலை, இதழியல் போன்றவற்றைத் திராவிடக் கட்சிகள் லாகவமாக சாதகமாக்கிக் கொண்டு ஆட்சியினைப் பிடித்தனரே அன்றி மேற்சொன்ன கலைகள் முன்பே நன்கு வளர்ந் திருந்தன. இதே போன்று அரும்பிக் கொண்டிருந்த மக்கள் உணர்வினைப் பயன்படுத்தித்தான் சோழர் அரசு கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
உள்ளூர்ப்பற்று உணர்வினைச் சிறிது வட்டார உணர்வாகவும் மாற்றும் நிலையிலுள்ள மக்களின் மனோபாவம் சிறப்பாக அறுவடை செய்யப் பட்டிருக்கும். இதனை அறிந்தேற்பு செய்ய ஒரு நூல் தேவைப்பட்டிருக்கும். அதனை ஏற்கனவே தேவாரம் நிறைவேற்றியிருந்தது. அப்பிரதியே அகன்ற தமிழகத்தினை உருவாக்கும் ஊக்கத்தினை இராஜராஜனுக்குத் தந்திருக்கும். இதற்காகவே அப்பிரதி சுவடி உருவில் தில்லையில் மீட்டெடுக்கப் பட்டிருக்கும். இவ்விடத்தில் இராஜராஜனின் ஈழப் படையெடுப்பினை நாயன்மார் கோணேஸ்வரர் மீது பாடிய பாட்டுடன் ஒப்பிட வேண்டும். கப்பலை ஓட்டாமலே கடலினைத் தாண்டினர் நாயன்மார்; கடலினை அடைக்காமலே கரையினைத் தாண்டினான் இராஜராஜன். போரும் நடந்தது; பொருளும் குவிந்தது.
சோழர் அரசு உருவாக்கத்தில் நீர்ப்பாசன வசதி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஊர்த் தொகுப் பினைக் கொண்ட ஒவ்வொரு நாடும் ஏதாவ தொரு நீராதாரத்தினை மையமாகக் கொண்டே உருவாகியுள்ளது. நாடுகளின், வளநாடுகளின் எல்லைகள் பெரும்பாலும் நீராதாரங்களாக இருந்துள்ளன. சிறப்பாக இயங்கிவந்த தலைவாய், தலைவாய்ச் சான்றார், தலைவாயர் போன்ற குழுக்களின் வரலாற்று இருப்பு நீராதாரங்களின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகிறது. நீராதாரங் களின் பராமரிப்பிற்கென்றே வசூலிக்கப்பட்ட வரிவகைகளின் எண்ணிக்கை அதிகமாயுள்ளதனை அவதானிக்க வேண்டும். காவிரிச் சமவெளியில் பத்தாம் நூற்றாண்டில் வசதி ஸ்திரத்தன்மைக்கு வந்துள்ளது; இதற்குப் பிறகு நீர்ப்பாசன செய்திகள் இல்லை.
நாட்டார்களை அரசு நிர்ணயித்தது இல்லை. அவர்கள் நாட்டுக்குள் இருந்து எழுந்தனர். அரசாணை களில் இவர்கள் முதன்மை இடம்பெறவில்லை. ஆளுங்கணம் என்ற சிறப்பு பிராமணர் ஆட்சிக் குழுவினர் பற்றிய செய்திகள் தெற்கு, மேற்கு நிலப்பிரதேசங்களைத் தவிர தமிழகத்தின் பிற வட்டாரங்களில் கிடைப்பதில் இருந்து அங்கு வேறு மாதிரியான சமூக அமைப்பு இயங்கியுள்ளது என்று அறியலாம். அதாவது பிற வட்டாரங் களைவிட இங்கு பிராமணப் பண்புக் கூறுகள் வலிமையாக இடம்பெறவில்லை எனலாம். பிரா மணக் கோயில்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் அடிப்படையில் இதனை உறுதிப் படுத்தலாம். இவர்கள் பிராமணக் குழுக்களுக்கான ஆட்சிநிலை அலுவலர்கள் என்று கருத வேண்டி யுள்ளது.
அடிமை
சோழர் சமூகத்தில் அடிமை பற்றிய ஆய்வு மிக நுண்ணியதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தின் படிநிலை உழக்கிற்குள் வைக்கப்பட்ட உழக்குகள் போன்று ஒன்றிற்குள் ஒன்றாக அமைந் துள்ளதனைப் பேராசிரியர் விளக்கியுள்ளார். பிராமணர்களைத் தவிர்த்துப் பார்த்தால் நில வுடைமை கொண்ட வெள்ளாளர்கள் வெள்ளாண் வகை நிலமுடையோர் என்றும், இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட உழைக்கும் வெள்ளாளர்கள் உழுகுடி வெள்ளாளர்கள் என்றும் வகைப்படுத்தப் பட்டுள்ளனர். இவ்வகை உழைக்கும் வர்க்கம் கி.பி.1117க்குப் பிறகு கல்வெட்டுகளில் பதியப் பட்டதனை நிலவுடைமைச் சமூகத்தின் கிடையான வெடிப்பாகக் கருதலாம்; நெடுக்கான வெடிப் பாகவும் கருதலாம். இப்போக்கு கீழத்தஞ்சைப் பகுதியில் நிகழ்ந்ததனை அங்கு நிகழ்ந்த சமூகப் படிமாற்றம் என்றே கருத வேண்டும். பிராமணர்கள் மங்கலத்திலும், வெள்ளாளர்கள் ஊரிலும் வசித்து வருகையில் உழுகுடி வெள்ளாளர்கள் பிடாகை என்ற பகுதியில் வசித்தனர். பிராமணர் பெருங்குடி என்றும் பிராமணர் அல்லாத நிலவுடைமை யாளர் நிலத்தில் உழுவோர் உழுகுடி என்றும் அடித்தளத்தில் இருப்போர் அடிமை என்றும் பணி செய் மக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலவுடைமை வெள்ளாளர்களுக்கும், உழுகுடி வெள்ளாளர் களுக்கும் மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அடிமைகள் பிராமணர்களிடத்திலும், படைத் தலைவர் களிடத்திலும், கோயிலிலும் பணி செய்துள்ளனர்.
சோழர் அரசு : கூறுகள்
பர்டன் ஸ்டெயின் அவர்களின் நூல் வெளி வந்தவுடன் தமிழகத்தில் இரு அறிஞர்கள் மட்டுமே எதிர்வினையாற்றினர். ஒருவர் பேராசிரியர் எ.சுப்ப ராயலு, இன்னொருவர் மொழியியலறிஞர் து.மூர்த்தி, வடக்கில் பலரும் இந்நூலுக்கு எதிர்வினையாற்றினர்.
பேரா.கே..ஏ.நீலகண்ட சாஸ்திரி சோழர் அரசு, அதிகாரம் குவிந்த மையப்படுத்தப்பட்ட ஒன்று என வரையறுத்தார். இதனை மறுத்து ஸ்டெயின் சோழரின் அதிகார மையங்களை மூன்றாக வகுத்தார். காவிரி பாயும் வளமையான மையப்பகுதி, தொண்டை மண்டலம் போன்ற கலவையான நீர்ப்பாசனம் கொண்ட இடைநிலப்பகுதி, கங்கைவாடி போன்ற விளிம்புநிலைப்பகுதி. இவற்றுள் காவிரி நிலப் பகுதியில் மட்டுமே அரச குலத்தினர் அதிகார வலுவுடன் இருந்தனர் என்று தம் வாதத்தினை முன்வைத்தார். இக்கருத்திற்கு வலுசேர்ப்பதாக ஜார்ஜ் டபிள்யூ ஸ்பென்ஸர், கென்னத்.ஆர் ஹால் இருவரும் சோழர் பிரதேசத்தில் சீரற்ற நிலையில் பரவிக் கிடந்த கல்வெட்டுகளை உதாரணம் காட்டினர். நாடு அமைப்புகளின் மாறாத தன்மையே சோழர் அரசின் கூறாக்க நிலைக்குக் காரணம் என்று ஸ்டெயின் கருதினார். நாட்டிற்குள்ளேயே நடந்த அகமணமுறையே காரணம் என்றும் கருதினார்.
மேற்சொன்ன கூற்றுகளைத் தக்க ஆதாரங் களுடன் பேராசிரியர் மறுக்கிறார். தொடக்கநிலை ஆய்வாளர்களின் எழுத்தினைக் குத்துமதிப்பு ஆய்வுமுறை என்று கிண்டலடித்த ஸ்டெயினும் அதே பிழையினைச் செய்தார் என்று சுட்டிக் காட்டு கிறார். நீர்ப்பாசன வளம் குறைந்த நாடுகளின், நாட்டார்களின் நடவடிக்கைகளின் பின்னணியில் இடைநிலப்பகுதி என்ற வகையினை ஸ்டெயின் மேற்கொள்கிறார். ஆனால் இவ்வாதமே அவரின் கருத்தினை உடைக்கிறது என்று இந்நூல் நிரூபிக்கிறது.
வலங்கை இடங்கைப் பிரிவு, தமிழக வரலாற்றின் முக்கிய சமூகக்கூறாகக் கருதப்பட்டது. இதனை ஸ்டெயின் தவறாகப் புரிந்துகொண்டார். விளிம்பு நிலையில் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற் கூற்றில் மட்டும் நிகழ்ந்த இச்சமூகப் போக்கினைச் சோழர் நாடு முழுக்க நிகழ்ந்ததாகக் கருத இயலாது என்பது பேராசிரியரின் வாதம். மதிப்புறு பட்டம் பெற்ற பலம் பொருந்தியவரையும் அதிகாரிகளையும் ஒன்றாகப் பார்த்து ஸ்டெயின் குழப்பிக் கொண்ட தாகச் சொல்கிறார். சோழர் அரசின் உண்மை யான இயல்புநிலை தெரிந்தும் வலிந்து மாற்றுக் கருத்தினை ஸ்டெயின் முன்வைத்தார் என்றும் சுட்டப்படுகிறது. ஆனால், இவ்விரு பிரிவுகளுக்கு இடையிலான சண்டை என்பது உண்மையில் பழைய நிலவுடைமைக் குழுக்களுக்கும் புதிதாக எழுந்த நிலவுடைமைக் குழுக்களுக்கும் இடையில் நிகழ்ந்த போட்டி என்று நிரூபிக்கப்படுகிறது.
சோழர் அரசு வலுவாக இருந்ததற்கான காரணங்களைப் பேராசிரியர் முன்வைக்கிறார்:
1. உள்ளூர் அளவிலும் நாடு அளவிலும் தானியக் கிடங்குகள் இருந்தன 2. தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து தானியங்கள் சென்றன 3. விளிம்பு நிலைப் பகுதிகளிலேயே நாட்டார் களும் பெரிய நாட்டார்களும் செயற்பட்டனர், அதிலும்கூடப் பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் மட்டுமே.
தென்னிந்திய அரசுபற்றிப் பலரும் சுட்டி யுள்ள கருத்துகளை வாதிட்டு விலகும் பேராசிரியர் சோழர் அரசு Darcy Ribeiro முன்வைத்த Archaic State, Kathleen Gough tiuewj Early State என்ற அரசக் கூறுகள் சிலவற்றோடு பொருந்திப் போகிறது என்கிறார். அவை : அரசனின் முதன்மையான இயக்கம், படிநிலைச் சமூக அமைப்பு, ஆளும் வர்க்கம் - ஆளப்படும் வர்க்கம். என்றாலும், எந்த புராதன அரசக் கூறுகளுக்கும் சோழர் அரசின் தன்மைகள் பொருந்திவரவில்லை என்று நூலினை முடிக்கிறார். சோழர் அரசு பற்றிய இருகட்டுரைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

சோழர் கால இந்துக்கோயில் சிதைவுகள் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு!

0 c
thanks to http://meenakam.com/2012/03/04/40728
சோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலயம் ஒன்றின் சிதைவுகள் அகழ்வு ஆராய்ச்சி நிபுணர்களால் இந்தோனேசியாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆலயம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என அறியப்படுகிறது.
சிவபெருமான், விநாயகர் ஆகியோரின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கப்பல் படை

0 c

thanks to http://tamilhistory.blogspot.in/2012/03/blog-post_04.html


இந்தியாவின் முதல் கப்பல் படையை நிறுவி தெற்காசியா வரை தன் மகன் சோழ கொடி நாட்ட வழி...வகுத்த ராஜ ராஜா சோழன் படை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய படகின் மாதிரி வடிவம் !.இந்திய தொல்பொருள் ஆய்வகத்தால் உருவாக்கப்பட்டது."திருநெல்வேலி" அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது !! .

உலகின் சிறப்பு வாய்ந்த இந்த ஆயிரம் வருட அற்புதமான கப்பல் படையை பற்றிய சில அற்புதமான தகவல்கள் உங்களுக்காக .இந்த கப்பல்களானது போர்க்கருவிகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டது .இந்த கப்பல் படையை நிறைய குழுக்களை கொண்டிருந்தது . அனைத்து குழுவிற்கும் தலைவர் "அரசர்". இதில் " கனம் " (நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ) என்பது தான் தலைமைப் பிரிவாக செயல்பட்டது ,இதை நிர்வகிப்பவர் " கனாதிபதி " . . "கன்னி" (போர் நேர / சிறப்பு பணிக்காக குழுமுதல்) ,இதை நிர்வகிப்பவர் உயரிய "கலபதி", "கன்னி" என்பது தமிழில் "பொறி" என்று கூட பொருள் படும் ,இந்த குழுவின் செயலானது எதிரிகளை ஒரு இடத்தில லாவகமாக வரவழைத்து ( எலி பொறியில் சிக்குவதைப்போல ) பின்பு அங்கு கூடி இருக்கும் தங்கள் நாட்டு பெரும் படையிடம் சிக்கவைத்ததும் இவர்கள் பணி முடிந்து விடும், மிச்சத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் ! .அடுத்து "ஜதளம்" சுருக்கமாக "தளம்" (நிரந்தரப்போர் பிரிவு ) இதை நிர்வகிப்பவர் "ஜலதலதிபதி",இது ஒரு சிறிய மிக சக்திவாய்ந்த குழுவாக செயல்பட்டது. "மண்டலம்" (பாதி நிரந்தர போர்ப்பிரிவு ) இதை நிர்வகிப்பவர் "மண்டலாதிபதி" இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும் , இவர்கள் தனித்தனியாக மற்றும் குழுவாக சென்று போர் புரிவதில் வல்லவர்கள் ! ."கனம்" (நிரந்தர பிரிவு ) 100 முதல்150 கப்பல்கள் கொண்ட பிரிவு , மூன்று மண்டலங்களை உள்ளடக்கியது ஒரு கனம் ! பெரும் பாலும் பெரிய போர்களுக்கு மட்டுமே இந்த குழு செயல்பட்டது !."அணி" இதை நிர்வகிப்பவர் 'அணிபதி" மூன்று கனங்களை கொண்ட பிரிவு, அதாவது இந்த பிரிவில் சுமார் 300 முதல் 500 கப்பல்களை வரை இருந்தது ! மிக பெரிய பலமான ஒரு பிரிவாக இது செயல் பட்டது. "பிரிவு" மிக முக்கியமான பிரிவு இது , இதை நிர்வகிப்பவர் இளவரசர் அல்லது மன்னருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் இவர்களை திசைக்கு ஏற்றவாறு அழைப்பர் உதாரணத்திற்கு கிழக்கு திசையில் போர் நடந்தால் " கீழ்பிரிவு-அதிபதி / தேவர் " என்று அழைத்தனர் .இது தான் உச்சகட்ட அதிபயங்கர பிரிவாக செயப்பட்டது,உதாரணத்திற்கு இன்று நவீன ஆயுதங்களை வைத்து போர் புரிவது போன்று. இந்த கப்பல் பட்டையை வைத்து தான் "இலங்கை","இந்தோனேசியா","ஜாவா","மாலைதீவு",மலேசியா",சிங்கப்பூர் " போன்ற அனைத்து நாடுகளையும் நம் மன்னன் கைப்பற்றினான் ! .இவை அனைத்துமே ஆயிரம் வருடங்களுக்கு முன் ! .இன்றைக்கு இருக்கும் கப்பல் படையில் கூட இவ்வளவு பிரிவுகள் உள்ளனவா என்பது சந்தேகம் !! இன்னொரு ஆச்சர்யமான செய்தி, இன்று புழக்கத்தில் இருக்கும் " NAVY " என்ற ஆங்கில வார்த்தை "நாவாய்" என்ற நம் கப்பல் படையின் பெயரில் இருந்து வந்த வார்த்தையே ஆகும் !! இவ்வளவு பெருமைகளை கொண்ட நம் வரலாறு எத்தனை "தமிழர்களுக்கு" தெரிந்திருக்கும் ? நமக்கே இது தெரியாத போது உலகத்திற்கு எப்படி தெரியப்படுத்த முடியும் ? சிந்தியுங்கள் !! தேடல் தொடரும்
0 c
படம் பிடிக்கும்போது மாடு முட்டியது!

First Published : 12 Feb 2012 12:00:00 AM IST

ஜல்லிக்கட்டு... மஞ்சுவிரட்டு... என்ற வார்த்தைகளைக் கேட்டாலே உற்சாகமாகிவிடுகிறார்...சிவகங்கை மாவட்டம் குமாரபட்டியைச் சேர்ந்த எம்.ஏ. படித்த இளைஞர் செல்வா. சில ஆண்டுகள் மஸ்கட்டில் இருந்து ஊர் திரும்பி தந்தையின் ஃபோட்டோ ஸ்டுடியோவை நடத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு நடப்பதை ஊர் ஊராகச் சென்று ஒளிப்பதிவு செய்வதுதான் இவரின் விருப்பம். அவரின் விடியோ அனுபவங்கள் இனி...""உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டை பொழுதுபோக்குக்காக விடியோ எடுக்க 2005-ல் சென்றேன். எடுத்துவந்த விடியோ காட்சிகளை தொகுத்து 5 நிமிடங்கள் ஓடக்கூடிய அளவுக்கு சிடிக்களில் பதிவு செய்து தெரிந்தவர்களுக்கு அளித்தேன். அதற்கு அமோக ஆதரவு கிடைத்தது. பலரும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டினர்.இதனால் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு விரட்டு, மாட்டுவண்டி பந்தயம் போன்றவை எங்கு நடந்தாலும் அங்கு சென்று விடியோ படம் எடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன். இதை அறிந்து பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்னிடமிருந்து ஜல்லிக்கட்டு டிவிடிக்களை வாங்கிச் செல்லத் தொடங்கினர். இது அப்படியே பரவி இப்போது இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் ஜல்லிக்கட்டு டிவிடி கேட்டு எனக்கு ஆர்டர்கள் வருகின்றன. ஜல்லிக்கட்டை விடியோ படம் பிடிக்க சரியான இடத்தை தேர்வு செய்வது முக்கியமானதாகும். ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகர் எனது விடியோ சிடிக்களைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து ஒவ்வோர் ஆண்டும் எனக்கு அவர் சார்பில் விடியோ படம் எடுக்க ஏற்பாடு செய்து தருகிறார். புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஊர்களில் சென்று ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் ஆகியவற்றைப் படம் பிடித்திருக்கிறேன்.ஜல்லிக்கட்டு எந்த ஊரில் நடக்கிறதோ அந்த ஊரின் கோயில்கள் உள்ளிட்ட பெருமை வாய்ந்த பகுதிகளை விடியோ படம் எடுத்து அந்த டிவிடியில் சேர்ப்பதால் அந்த பகுதி மக்கள் விரும்பி பார்க்கின்றனர்.ஜல்லிக்கட்டை விடியோ எடுக்க வேண்டுமென்றால் காலை 6 மணிக்குள்ளாக சென்று இடம் பிடிக்க வேண்டும். போட்டி தொடங்கினால் காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை எங்கும் நகர முடியாது. இயற்கை உபாதைகளுக்காக சென்றால்கூட நம் இடம் பறிபோய்விடும், நல்ல கோணத்தில் படம் பிடிக்க முடியாது என்பதால் எங்கும் செல்லாமல் படம் பிடிப்பேன். சில ஊர்களில் சில அவமானங்களையும் தாங்கி படம் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.பாகனேரி கிராமத்தில் நடந்த மஞ்சுவிரட்டு காட்சிகளை படமாக்கியபோது, எனக்கு பின்னால் வந்த மாடு முட்டியதில் தூக்கி எறியப்பட்டு காயமடைந்தேன். முகம், சட்டை முழுவதும் ரத்தம். நண்பர்கள் எங்கிருந்து ரத்தம் வழிகிறது என்று பார்த்தபோதுதான் மூக்கு எலும்பு உடைந்து ரத்தம் வருவது தெரிந்தது. சிறிது நேரத்தில் ரத்தப்போக்கை நிறுத்திவிட்டு வேறு சட்டையை அணிந்துகொண்டு அரை மணி நேர இடைவெளியில் மீண்டும் வந்து முழு காட்சிகளையும் எடுத்து முடித்தேன்.என்னிடமிருந்து வாங்கிச் செல்லும் டிவிடிக்களை அனுமதியின்றி பிரதி எடுத்து சிலர் விற்பனை செய்கின்றனர். சிங்கப்பூரில் ஒரு டிவிடி விற்பனை நிலையத்தில் ஒரு தமிழ்ப்பெண் தனக்குத் தேவையான தமிழ் சினிமா படங்களின் பெயர்களை எழுதி கொடுத்துள்ளார். அந்த பட்டியலில் அவர் ஜல்லிக்கட்டு என்ற சத்யராஜ் நடித்த சினிமா பெயரையும் எழுதியுள்ளார். அந்த கடைக்காரர் தந்த டிவிடிகளை வீட்டில் சென்று பார்த்தால் ஜல்லிக்கட்டு சினிமாவுக்கு பதிலாக நான் எடுத்த ஜல்லிக்கட்டு விடியோ வந்துள்ளது. அதைப்பார்த்து முதலில் ஏமாற்றம் அடைந்தவர், விறுவிறுப்பான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்த்து மகிழ்ந்து திரையில் தெரிந்த எனது தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பாராட்டினார். இன்டர்நெட்டில் நான் எடுத்த ஏராளமான ஜல்லிக்கட்டு விடியோ காட்சிகள் உள்ளன. அவற்றை யார் வெளியிட்டது எனத் தெரியவில்லை.பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என் டிவிடிக்களை பார்த்து பிரமித்துப்போய், ""இந்தப் போட்டிகள் எப்போது எங்கு நடக்கிறது. நடந்தால் எங்களுக்கு தெரிவிக்க முடியுமா?'' என்று போனில் கேட்கிறார்கள். அவர்களுக்கு போட்டிகள் நடைபெறும் இடம், தேதி ஆகியவற்றை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பிவைக்கிறேன்.ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகளில் மாடுகள் துன்புறுத்தப்படுவதில்லை. இந்த ஆண்டு மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் எந்த உயிரிழப்பும் இன்றி சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. இதுபோல ஜல்லிக்கட்டை நடத்தி இந்த வீர விளையாட்டு அழியாமல் காக்கப்பட வேண்டும்'' என்றார் செல்வா.
thanks to http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Sunday%20Kondattam&artid=551413&SectionID=144&MainSectionID=144&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81!
0 c

 சோழர்கள் கடாரம் மீதும் இலங்கை மீதும் படையெடுக்கவில்லையா? 
இலங்கை மீது சோழர்கள் படையெடுத்தது வரலாறு. நமக்கெல்லாம் தெரியும். ஜாவா, சுமத்ரா ஆகிய நாடுகளுக்கும் படையெடுத்தார்கள் சோழர்கள். இலங்கையில் அனுராதபுரத்தை அவர்கள் தாக்கினார்கள். எந்தப் படையெடுப்பையும் போலவே அதுவும் அழிவைக் கொண்டு வந்தது. உதாரணமாக, அனுராதாபுரத்தில் சோழ வீர்ர்கள் அங்கிருந்த பௌத்த ஆலயங்களைத் தாக்கினார்கள். ஆனால் படையெடுப்புக்குப் பின்னர் ராஜராஜ சோழனின் நடத்தை எப்படி இருந்தது எனப் பார்க்க வேண்டும். திரிகோணமலை கல்வெட்டுச் செய்திகள், ராஜராஜ சோழன் ஒரு பௌத்த விகாரத்தையும் / மடாலயத்தையும் சீர் செய்து அதற்கு நிலத்தையும் செல்வத்தையும் அளித்த செய்தியைக் கூறுகின்றன. தாங்கள் கடல்கடந்து வென்ற சுமத்ராவின் சைலேந்திர குல அரசர்கள், நாகப்பட்டினத்தில் பௌத்த சூடாமணி விகாரத்தை நிறுவ நிலமும் ஆதரவும் அளித்தது ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும்தான். மேலும், அவர்களின் கடல்கடந்த சாம்ராஜ்ஜிய உருவாக்கம் வெறும் போர்களால் மட்டுமல்ல; உறுதியான வணிக – கலாசார உறவுகளால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த உறவினை நிலைநிறுத்த கோவில்களையும் பௌத்த விகாரங்களையும் சோழர்கள் கட்டினார்கள்.
அதாவது, சோழர்கள் கடல் கடந்து மதச்சூறையாடல்களைச் செய்யவில்லை. மாறாக, அவர்கள் உருவாக்கிய பண்பாட்டு உறவுகள் இருவழிப்பாதையாக இருந்தன. ராஜராஜ சோழன் தான் பவுத்தர்களைத் தண்டித்து சைவ மதத்தைப் பரப்பியதாக எந்த க் கல்வெட்டு ஆதாரமும் சொல்லவில்லை. ராஜ ராஜ சோழனோ, ராஜேந்திர சோழனோ ஒரு நாட்டின்மீது படையெடுத்தால் அங்குள்ள மக்களைக் கொன்று, தேவாலயங்களை – புத்த விகாரங்களை உடைத்ததாகத் தங்கள் மெய் கீர்த்திகளில் தங்களைப் புகழ்ந்துகொண்டது கிடையாது. தப்பித்தவறி அவர்களுடைய வீரர்கள் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபட்டால் அது அரசனுக்கு இழுக்காகக் கருதப்பட்டதே ஒழிய, பெருமையாக அல்ல.
0 c
ஒரு ஜாயன்வாலாபாக்!

First Published : 01 Jan 2012 12:00:00 AM IST


ஊர் பிரமுகர்களுடன் சா. கந்தசாமி, ரோகிணி கந்தசாமி
1911-ஆம் ஆண்டில் சென்னை, மாகாணத்தில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமுல் செய்யப்பட்டது. அதன்படி பிரமலை கள்ளர், மறவர், வலையர், கேப்மாரி... எனச் சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர்.1920-ஆம் ஆண்டில் குற்றப் பரம்பரைச் சட்டத்தின்படி பிரமலை கள்ளர்களிடம் கைரேகை எடுப்பதற்காக போலீஸ் முற்பட்டது. அதனை அவர்கள் தீவிரமாக எதிர்த்துக் கிளர்ச்சி செய்தார்கள். போலீஸôர் துப்பாக்கி சூடு நடத்தி ஒரு பெண்மணி உட்பட பதினாறு பேர்களைக் கொன்றனர்.தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமலுக்கு வந்த நூற்றாண்டில் அதனை எதிர்த்து உயிர்த் தியாகம் புரிந்தவர்களின் நினைவிடத்திற்குச் சென்று எழுத்தாளர் சா.கந்தசாமி, அவர் துணைவியார் ரோகிணி, பேராசிரியர் சுபாசு ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து பெருங்காம நல்லூரில் நடந்த சம்பவம் குறித்து இங்கே சா.கந்தசாமியுடன் நிகழ்த்திய நேர்காணல்:* குற்றப் பரம்பரைச் சட்டம் என்றால் என்ன?19-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பெரும் பகுதி ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குக் கீழ் வந்துவிட்டது. விக்டோரியா, இந்தியாவின் மகாராணியாகப் பட்டம் கட்டிக் கொண்டுவிட்டார்.பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் ஆங்கில மொழி கற்பிக்கப்பட்டது. ஏராளமானவர்கள் ஆங்கிலம் படித்து ரயில்வே, தபால் தந்தி, நிர்வாகம், சட்டம், நீதி எனப் பல்வேறு துறைகளில் வேலைக்குச் சேர்ந்து சம்பளம் வாங்கிக் கொண்டு சந்தோஷமாக அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.ஆனால் வனப் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் வாழ்ந்த ஆதி, பழங்குடி மக்கள் ஆங்கிலேயர் அரசாங்கத்தை மதிக்காமல் சுதந்திரமாகத் தங்களின் பாரம்பரிய முறையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் போரிடவும், வேட்டையாடவும் விவசாயம் செய்யவும் ஆயுதங்கள் இருந்தன. அவர்களில் பலர் அரசுக்கு எதிராகக் கலவரங்கள் செய்தார்கள். சிலர் திருட்டு, கொள்ளை, கொலைச் செயல்கள் புரிந்தார்கள். அவர்களை ஒடுக்க, சீர்திருத்த 1871-ஆம் ஆண்டில் குற்றப் பரம்பரைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.* குற்றப் பரம்பரைச் சட்டம் என்ன சொல்லியது?குற்றப் பரம்பரைச் சட்டத்திற்குள் கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் குறிப்பாக 16 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் போலீஸ் கண்காணிப்பில் இருக்கவேண்டும். அவர்களிடம் கைரேகை பதிவு செய்யப்படும். அவர்கள் மாலை 6 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஆஜர் கொடுக்க வேண்டும். இரவு முழுவதும் காவல் நிலையம் முன்பாக தங்கி இருக்கவேண்டும். இரவில் குற்றம் நிகழாமல் தடுக்க அந்த முறை அவசியம் என்று அரசு கூறியது.* தமிழகத்தில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமல்படுத்தப்பட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார்?1911-ஆம் ஆண்டில் தமிழகத்தில் குற்றப் பரம்பரைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பிரமலை கள்ளர்கள். காவல் என்பதைத் தொழிலாகக் கொண்டு இருந்தவர்களில் சிலர் திருடரானார்கள். அதனால் மொத்தமாக பிரமலை கள்ளர்களைக் குற்றப் பரம்பரைக்குள் கொண்டுவந்துவிட்டார்கள்."ஒரு திருடனுக்குப் பிறந்த குழந்தையின் ரத்தத்தில் திருட்டு உணர்வும் குற்றம் செய்யும் மனப்பான்மையும் அந்தக் குழந்தையின் மூன்று வயதிலேயே வந்துவிடுகிறது..' என்னும் ஐரோப்பிய ஆய்வுகளை வைத்துக் கொண்டு சொன்னார்கள்.தமிழ்நாட்டில் எந்தெந்த ஊர்களில் குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது?அது அமல் செய்யப்பட்ட எல்லா ஊர்களிலும் எதிர்ப்பு இருந்தது. ஆனால் பெருங்காம நல்லூரில் பெரும் கிளர்ச்சியே நடந்தது.* பெருங்காமநல்லூரில் அப்படி என்னதான் கிளர்ச்சி நடந்தது?1920, ஏப்ரல்-3. பெருங்காமநல்லூரை ஒரு போலீஸ் படை சுற்றி வளைத்தது. ஊரில் உள்ள வயது வந்த எல்லா ஆண்களும் ரேகை வைத்து குற்றப் பரம்பரையினர் என்று பதிவு செய்து கொள்ள வேண்டுமென உத்தரவு போட்டது.பெருங்காமநல்லூர் மக்கள் உத்தரவுக்குப் பணிய மறுத்தார்கள். நாங்கள் எல்லோரும் குற்றப் பரம்பரை இல்லை. எங்களில் சிலர் திருடலாம். அதற்காக எல்லோரையும் திருடர்கள் என்று சொல்வது அரசாங்கத்திற்கே அவமானம். எந்த மனிதனும் குற்றவாளியாகப் பிறப்பது இல்லை. பிறப்பிற்கும் குற்றத்திற்கும் சம்பந்தம் கிடையாது. எனவே நாங்கள் குற்றப் பரம்பரை என்று கைரேகை வைத்துப் பதிவு செய்து கொள்ள மாட்டோம் என்று அரிவாள், கத்தி, ஈட்டியை எடுத்துக் கொண்டு போலீஸôரை எதிர்த்தார்கள். கலவரம் ஏற்பட்டது. போலீஸôர் துப்பாக்கி சூடு நடத்தினர்.  அதில் பதினாறு பேர்கள் இறந்து போனார்கள். அதில் ஒருவர் பெண். பெயர் - மாயக்கா. வயது 43. குண்டடி பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்குத் தண்ணீர் கொண்டு போய் கொடுத்தார். அவர் கூடையில் கற்கள் கொண்டு போய் கொடுத்ததாக போலீஸ் சொல்லியது. பெருங்காமநல்லூரில் துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்கள் பெயர் பெற்ற பெரிய மனிதர்கள் இல்லை. ஆனால் மனிதநேயத்தின் மகத்துவம் அறிந்தவர்கள். எந்த மனிதனும்  பிறப்பின் வழியாகக் குற்றவாளியில்லை என்பதைத் தங்கள் உயிரைக் கொடுத்தே நிலைநாட்டினார்கள்.* பெருங்காமநல்லூர் தியாகிகளுக்கு ஏதாவது நினைவு மண்டபம் இருக்கிறதா?பெருங்காமநல்லூர் தியாகிகள் அளப்பறிய தியாகம் அறியப்படாமல்தான் இருந்தது. அவர்கள் உசிலம்பட்டியில் ஒன்றாகப் புதைக்கப்பட்டார்கள். ஆனால் உண்மையான தியாகம் ஒருநாள் அறியப்படும் என்பது போல, 1981-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்த நாராயணசாமி நாயுடு, பெருங்காமநல்லூரில் மனித உரிமைக்காக உயிர்த் தியாகம் புரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முறையைத் தொடங்கிவைத்தார். அது கனலாக மக்களைப் பற்றிக் கொண்டுவிட்டது.ஊர் மக்களில் இருவர் நினைவு மண்டபம் எழுப்ப ஆறேமுக்கால் செண்ட்  நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள். அதில் ஒரு நினைவுத் தூணில் உயிர்த்தியாகம் புரிந்த பதினாறு பேர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.* பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபம் எவ்வாறு காக்கப்படுகிறது?பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவுத் தூண் இருக்கும் இடம் புனிதமானது. அது ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடம் போல காக்கப்பட வேண்டியது. எளிய சாதாரணமான மக்கள் இயல்பாக உயிர்த் தியாகம் புரிந்து மனித உரிமைகளைக் காத்த அசாதாரணமான நிகழ்வின் உச்சம். சுதந்திரம், சுயமரியாதை, மனித மாண்பு ஆகியவற்றின் குறியீடாக உள்ள அது புனிதமானது. மக்கள் விரோதமான எந்தச் சட்டத்தையும் ஏற்கமாட்டோம் அதை எதிர்த்து உயிர் துறப்போம் என்று எழுந்த மக்களின் மாண்பைச் சொல்வதாகும். ஆனால் அதில் ஒரு சமுதாய கூடம் எழுந்திருக்கிறது. இப்போது அந்த சமுதாயக் கூடத்தை நினைவு மண்டபமாக மாற்றி தியாகிகளின் வாழ்க்கைக் குறிப்பு - நூலகம் போன்றவற்றை அமைக்கலாம்.பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவிடம் பொது மக்கள் மனித உரிமை, ஆர்வலர்கள் சமூகநீதிப் போராளிகள் கூடும் இடமாகவும், கருத்துப் பரிமாற்றத்திற்கான இடமாகவும் அமையவேண்டும்.1871-ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசு இந்தியா முழுவதிலும் உள்ள 150 சாதிகளைக் குற்றப் பரம்பரை என்று அறிவித்தது. அதை எதிர்த்து போரிட்டு உயிர்த் தியாகம் செய்தது, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரமலைக் கள்ளர்கள்தான். அவர்களின் இடைவிடாத போராட்டத்தால் 1947-ஆம் ஆண்டில் கொடுமையான குற்றப் பரம்பரைச் சட்டம், சுதந்திரத்திற்குப் பின்னர் நீக்கப்பட்டது.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஜார்ஜ் ஜோசப், ப. ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி உள்பட சில தலைவர்கள் மக்களோடு சேர்ந்து குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராகப்   போராடினார்கள்.
thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Kadhir&artid=530376&SectionID=146&MainSectionID=146&SEO=&Title=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D!

உலகின் மிகப்பெரிய வேலி

0 c
சீனப்பெருஞ்சுவர் இன்றளவும் வரலாற்றின் சாதனையாக நின்றுகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதனுடன் ஒப்பிடத்தக்க ஒன்று பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்திருக்கிறது.  மகாராஷ்டிராவில் பர்ஹான்பூரில் இருந்து தொடங்கி மத்தியப்பிரதேசம் வழியாக உத்தரப்பிரதேசம் வழியாக ஹரியானா வழியாக பஞ்சாப் வழியாக பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம் வழியாகக் கிட்டத்தட்ட காஷ்மீரின் எல்லை வரை சென்று முடியும் ஒரு மாபெரும் வேலி.

ராய் மாக்ஸ்ஹாம்
இது உயிர்வேலி.  முள்மரங்கள் வளர்த்து அவற்றை இணைத்துக்கட்டி எவரும் கடந்து போகமுடியாதபடி அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 12 அடி உயரம் உடையது இது. உலகவரலாற்றின் மிகப்பெரிய வேலி இதுதான். கிட்டத்தட்ட வட இந்தியாவை இரு நேர்பாதிகளாக இது பிளந்தது. 4000 கிமீ மைல் நீளத்துக்கு பெரும் பொட்டல்களை, விளைநிலங்களை, கிராமங்களை, நகரங்களை, பாலைவனங்களை, குன்றுகளைப் பகுத்தபடி ஓடியது இது.  இதன் உச்சகாலகட்டத்தில் 1872ல் கிட்டத்தட்ட 14000  முழுநேர பிரிட்டிஷ் அரசூழியர்கள் இதை காவல்காத்துப் பராமரித்தார்கள். கிட்டத்தட்ட முக்கால்நூற்றாண்டுக்காலம் இது பிரிட்டிஷ் -இந்திய அரசின் அதிகாரத்தின் சின்னமாக நீடித்திருந்தது.
இந்த மாபெரும் அமைப்பைப்பற்றி இந்தியாவின் வரலாற்றாசிரியர்கள் எவருமே எழுதியதில்லை. இந்தியாவைப்பற்றிய எந்த நூலிலும் இது குறிப்பிடப்பட்டதில்லை. இதைப்பற்றி சுதந்திர இந்தியாவின் எந்த ஆவணத்திலும் ஒரு குறிப்பும் இல்லை. இந்தியாவில் உள்ள எந்த சமூக, பொருளாதார அறிஞரும் இதைப்பற்றி கேள்விப்பட்டதுகூட இல்லை. 1995 வரை.
பயணக்கட்டுரையாளரும் லண்டன் நூலக ஆவணப்பராமரிப்பாளருமான ராய் மாக்ஸ்ஹாம் 1995 இறுதியில் லண்டனில் ஒரு பழைய புத்தகக் கடையில் மேஜர் ஜெனரல் டபிள்யூ எச். ஸ்லீமான் என்ற பிரிட்டிஷ் வீரரின் நினைவுக்குறிப்புகளை வாங்கினார். 1893ல் பிரசுரிக்கப்பட்ட நூல் அது. ஸ்லீமான் 1850களில் பிரிட்டிஷ் இந்தியாவில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றி அன்றைய இந்தியா முழுக்க பயணம் செய்திருக்கிறார். அவரது பயணக்குறிப்புகளில் மன்னர்கள், சிற்றரசர்கள், கொள்ளையர்கள், புனித நகரங்கள், கோயில்கள் பற்றிய சித்தரிப்புடன் அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் வரிவசூல் முறைகளைப்பற்றிய குறிப்பும் இருந்தது. அதில் ஸ்லீமான் இந்த மாபெரும் உயிர்வேலியைப்பற்றிச் சொல்கிறார்
ராய் மாக்ஸ்ஹாம் ஆச்சரியம் கொள்கிறார். இது கற்பனையா என ஐயம் அடைகிறார். பிரிட்டிஷ் ஆவணங்களை ஆராய்கிறார். பெரும்பாலான குறிப்புகள் 1870களுக்குப் பின்னால் வந்தவை. அவற்றில் வேலியைப்பற்றிய தகவல்களே இல்லை. லண்டனில் முறையாகப் பராமரிக்கப்படும் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகங்களில் பொறுமையாகத் தேடுகிறார். ராய் மாக்ஸ்ஹாம் தொழில்முறையாக ஒரு அரிய ஆவணக்காப்பாளர் என்பது அவருக்கு உதவுகிறது. கடைசியில் அந்த வேலிபற்றிய சர்வே தகவல்களும் அதை நிறுவிப் பராமரித்ததைப்பற்றிய கணக்குவழக்குகளும் அவருக்குக் கிடைக்கின்றன.
இந்த வேலியை பிரிட்டிஷ்காரர்களின் ஒரு கிறுக்குத்தனம் என முதலில் நினைக்கும் ராம் மாக்ஸ்ஹாம் மெல்லமெல்ல அதன் பின்னால் உள்ள கொடூரமான சுரண்டலைக் கண்டுகொள்கிறார். மிக விரிவான ஆய்வுகள் வழியாக அதை அவரது இந்தியாவின் மாபெரும் வேலி என்ற பயண நூலில் சித்தரித்துக்காட்டுகிறார்.
சுங்கவேலி 1870

இந்த வேலி முழுக்க முழுக்க உள்நாட்டு உப்புவணிகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. இது சுங்கவேலி [Customs hedge] என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசின் முக்கியமான வருமானமே அவர்கள் உப்புக்கு போட்ட உள்நாட்டுச் சுங்க வரிதான். அதை வசூலிக்கும் பொருட்டு உள்நாட்டு உப்புப்பரிமாற்றத்தை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பிரிட்டிஷார் இந்தியாவில் அவர்கள் வேரூன்றிய 1803  முதல் இதை உருவாக்க ஆரம்பித்தனர். படிப்படியாக இதை நாற்பதாண்டுக்காலத்தில் கட்டி முடித்தார்கள். 1843ல் இந்த வேலி முழுமையடைந்து உள்நாட்டுச் சுங்கத் துறையின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.
இதைப் புரிந்துகொள்ள முதலில் இந்தியாவின் நில அமைப்பையும் அதில் உப்புக்கு உள்ள இடத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். இந்தியாவின் வட இந்தியப்பகுதி மிக அகலமானது. கடலை விட்டு மிகவும் தள்ளி இருக்கக்கூடிய பிரம்மாண்டமான நிலப்பகுதிகளைக் கொண்டது.  வடகிழக்கு மாநிலங்கள், இமயமலைப் பகுதிகள், மக்கள் செறிந்த பிகார், உத்தரப்பிரதேசம்,மத்தியப்பிரதேசம் போன்ற பகுதிகள் அனைத்துமே உப்புக்குத் தென்பகுதிக் கடலோரங்களை நம்பி இருந்தன.
உப்பு பெருமளவுக்கு காய்ச்சப்பட்டது குஜராத்தில் கட்ஜ் வளைகுடா பகுதியில். இப்பகுதியில் கடலில் பெரிய ஆறுகள் கலப்பதில்லை. ஆகவே உப்புச்செறிவு அதிகம். வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் உக்கிரமான வெயிலும் அடிக்கும். சாம்பார் ஏரி போன்ற உப்பு ஏரிகள் கோடைகாலத்தில் தானாகவே வற்றி உப்புவயல்களாக ஆகும். ஆகவே  பாரம்பரியமாக குஜராத்தில் இருந்து உப்பு வட மாநிலங்களுக்குச் சென்றது. அதற்காக நீண்ட உப்புப்பாதைகள் இருந்தன. மகாராஷ்டிரா ஒரிசா கடலோரங்களிலும் உப்பு பெருமளவுக்கு விளைந்தது. அவையும் கரைவழியாக வடமாநிலங்களுக்கும் இமய மலைப்பகுதிகளுக்கும் சென்றன.
சரி அப்படியென்றால் எதற்கு காஷ்மீர் வரை வேலி? இன்று பாகிஸ்தானில் இருக்கும் இமயமலைப்பகுதிகளில் உலகின் மிகப்பெரிய உப்புமலைகள் உள்ளன. மிகச்சுத்தமான இந்த உப்பு மிகமிக மலிவானதும்கூட. திபெத் உட்பட இமயமலைப்பகுதிகளுக்கு நூற்றாண்டுகளாக இந்த உப்புதான் சென்றுகொண்டிருந்தது. அதைத் தடுக்கவே அங்கே வேலி அமைக்கப்பட்டது.
உப்பு அவ்வளவு முக்கியமான வணிகப்பொருளா என்ன? ஆம் என்கிறார் ராய் மாக்ஸ்ஹாம். அன்றைய இந்தியாவில் பெரும்பாலான கிராமங்கள் தன்னிறைவு கொண்டவை. மக்களுக்குத் தேவையான தானியங்கள் காய்கறிகள் நெய் போன்ற நுகர்பொருட்கள் துணிகள் ஆயுதங்கள் எல்லாமே கிராமசமூகங்களுக்குள்ளாகவே உற்பத்திசெய்யப்படும்.  வெளியே இருந்து வந்து சேரக்கூடிய ஒரே உற்பத்திப்பொருள் என்பது உப்புதான். ஆகவே அதுவே அன்றைய இந்தியாவின் மிக முக்கியமான வணிகம்
உப்பு அந்த அளவுக்கு இன்றியமையாததா? இன்று உப்பு ஒரு முக்கியமான தேவையாகக் கருதப்படுவதில்லை. ஏனென்றால் இன்று பதப்படுத்தியும் சேமித்தும் உண்ணப்படும் பல்வேறு உணவுப்பொருட்களில் உப்பு நிறையவே இருக்கிறது. புலாலில் உப்பு உண்டு. ஆனால் அன்றைய இந்தியாவில் விவசாயியின் சாதாரண உணவு தானியமும் காய்கறிகளும் மட்டுமே. அவன் உப்பு சேர்த்துக்கொண்டே ஆகவேண்டும். மேலும் வியர்த்து வழிய வெயிலில் நின்று வேலைசெய்யும் இந்திய விவசாயி பெருமளவு உப்பை இழக்கிறான். அவன் உப்பு இழப்பை அவன் உணவு மூலம் ஈடு கட்டியாகவேண்டும். அத்துடன் வட இந்திய நிலங்களில் உப்பு குறைவு. ஆகவே மிருகங்கள் மண்ணைநக்கி உப்பை எடுத்துக்கொள்ளமுடியாது. அவற்றுக்கும் உப்பு கொடுக்கப்பட்டாகவேண்டும்.
வட இந்தியாவின் மக்கள்தொகையை வைத்துப்பார்த்தால் எந்த அளவுக்கு உப்பு தேவைப்படும் என்று பார்க்கலாம். அந்த அளவுக்கான உப்பு எவ்வளவு பெரிய வணிகம்! அந்த உப்பு குஜராத் அல்லது ஒரிசாவில் இருந்து மாட்டுவண்டிகளிலும் கோவேறு கழுதைகளிலும் தலைச்சுமைகளிலுமாக பல ஆயிரம் கிலோமீட்டர் தாண்டி வந்துசேரும்போது அதன் விலை எத்தனை மடங்கு பெருகியிருக்கும் என ஊகிக்கலாம். பிகாரில் ஒரு விவசாயி சராசரியாக ஒரு மாதம் ஈட்டும் வருமானம் ஒரு வருடத்து உப்புச்செலவு என்று பல குறிப்புகளைக் கொண்டு கணித்துச் சொல்கிறார் ராய் மாக்ஸ்ஹாம். மலைப்பகுதி மக்கள் தானியத்துக்குச் செலவழிக்கும் அதே அளவு பணத்தை உப்புக்குச் செலவிட்டிருக்கிறார்கள்!
உப்பு மிகமிக அருமையான பொருளாக இருந்திருக்கிறது. பல இடங்களில் அது நாணயமாகக் கூட புழங்கியது. உப்பு மழைக்காலம் முழுக்க சேமிக்கப்பட்டாகவேண்டும் என்பதனால் உப்பு கைமாற்றாக அளிக்கப்படுவது பெரும் உதவியாக இருந்திருக்கிறது. உப்புமேல் சத்தியம் செய்வது மிக அழுத்தமானதாகக் கருதப்பட்டிருக்கிறது.
உப்பு அத்தனை அவசியப்பொருளா என்ன? ஒருநாளைக்குக் குறைந்தது  1500 முதல் 2500 மில்லிகிராம் சோடியம் மனித உடலுக்குத் தேவை. அதிகமாக உப்பு உடலை விட்டு வெளியேறும் இந்தியா போன்ற கோடைநிலங்களில் வாழும் மனிதனுக்குக் குறைந்தது இரண்டு அவுன்ஸ் உப்பு தேவை என்று ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடுகிறார். அந்த உப்பு அவனால் உண்ணப்படாவிட்டால் Hyponatremia என்ற நோய்க்கு அவன் ஆளாகிறான். குழந்தைகள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். உப்புக்குறைவு நோயின் அடிப்படையான கோளாறு என்னவென்றால் உப்புக்குறைவால்தான் அந்நோய் உருவாகிறது என்று நோயாளியோ மருத்துவனோ உணர முடிவதில்லை என்பதே
உப்பு உடலின் திரவச்சமநிலையை தக்கவைத்துக்கொள்ள இன்றியமையாதது. உப்பு குறையும்போது ரத்தம் கனமிழக்கிறது. ஆகவே உடல் நீரை வெளியேற்றுகிறது. ஆகவே ரத்த அழுத்தம் குறைகிறது. நோயாளிக்கு தலைச்சுற்றும் வாந்தியும் சமநிலை இழப்பும் ஏற்படுகிறது. மூச்சுத்திணறலும் மயக்கமும் உருவாகிறது.  இந்நிலை தொடர்ந்தால் மரணம் நிகழ்கிறது. பட்டினியால் வாடிய இந்தியாவில் பெரும்பாலும் உப்புகுறைவு நோய் பட்டினியின் விளைவான பலமிழப்பாகவே கருதப்படுகிறது. ஆகவே அது எளிதாக உயிரைக்குடிக்கிறது
இந்த பிரம்மாண்டமான வணிகத்தை முகலாயர்களும் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். ஆனால் அவர்களின் வரி மேலோட்டமானது, குறைவானது. ஒட்டுமொத்தமாக உப்புப்பரிமாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் முயலவில்லை. பிரிட்டிஷார் அதை சுங்கவேலி வழியாக சாதித்தார்கள்
ராய் மாக்ஸ்ஹாம் இது உருவான வரலாற்றை சொல்கிறார்.  ஆரம்பத்தில் பிரிட்டிஷார் வங்காளத்தைத்தான் கைப்பற்றினார்கள். வங்காளத்தில் உப்புக்காய்ச்சுவது மிகக் கடினமானது. கங்கை கொண்டு வந்து கொட்டும் நல்ல நீரின் காரணமாக அங்கே நீரில் உப்பு குறைவு. ஆகவே நீரை வற்றச்செய்து மேலும் விறகால் எரித்து சுண்டச்செய்துதான் உப்பை எடுப்பார்கள். இந்த உப்பு மிக மிகக் கீழான நிலையில் வாழ்ந்த மக்களால் தயாரிக்கப்பட்டது. உப்பின் விலையும் அதிகம்.
இந்த உப்பு காய்ச்சப்பட்டதாகையால் வங்காள பிராமணர்கள் இதை உண்ண மாட்டார்கள். சமைக்கப்பட்ட உணவுக்குச் சமம் அது. ஆகவே சூரிய ஒளியில் சுண்டிய உப்பு ஒரிசாவில் இருந்து வந்தது.  பிளாசி போரில் கிளைவ் வங்காள நவாபை வென்று வங்கத்தைப் பிடித்ததும் வங்காளம் முழுக்க விரிவான வரிவசூல் முறையை நிறுவினார். உப்புக் காய்ச்சும் ஆலைகளுக்கு வரியைப் பலமடங்காக ஆக்கினார். அது முக்கியமான வருமானமாக ஆகியது
இந்த உப்பு வரி உப்பின் விலையை அதிகரித்து  ஒரிசாவில் இருந்து வரும் உப்பின் விலையை விட அதிகமாகியது. ஆகவே ஒரிசாவில் இருந்து வரும் உப்புக்குக் கடும் வரி போடவேண்டியிருந்தது. அவ்வாறுதான் ஒரிசா வங்க எல்லையில் மகாநதி ஓரமாக முதலில் சுங்கச்சாவடிகளை அமைக்க ஆரம்பித்தார்கள் பிரிட்டிஷார்.ஒரிசாவின் சோனாப்பூர் என்ற ஊரில் முதல் சாவடி அமைந்தது. அதில் இருந்து சந்திரபூர் வரை சுங்கத்தடுப்புக்கோடு உருவாக்கப்பட்டது.
மெல்லமெல்ல பிரிட்டிஷாரின் அதிகாரம் பிகாருக்கும் உத்தரபிரதேசத்துக்கும் மத்தியப்பிரதேசத்துக்கும் பரவியது. ஆகவே சுங்கச்சாவடிகளை பர்ஹான்பூர் வரை நீட்டித்தார்கள். உப்புச் சுங்கத்தின் பெரும் லாபத்தை பிரிட்டிஷார் கண்டுகொண்டார்கள். அதற்காகப் பெரும்பணத்தை முதலீடுசெய்ய முன்வந்தார்கள்.  மத்தியப்பிரதேசத்தின் விரிந்த பொட்டல்நிலத்தை சுங்கக் கண்காணிப்புக்குள் வைத்திருப்பது கடினமாக இருந்தது. ஆகவே ஒரு பெரிய வேலியை உருவாக்கும் எண்ணம் வந்தது. இவ்வாறுதான் பர்ஹான்பூர் முதல் சுங்க வேலி தோன்றியது.
இதே காலகட்டத்தில் 1823ல் ஆக்ரா சுங்க ஆணையர் ஜார்ஜ் சாண்டர்ஸ் என்பவர் கங்கை யமுனைக்கரையிலூடாக மிர்சாப்பூர் முதல் அலஹாபாத் வரை ஒரு பெரிய வேலியை அமைத்தார். அலஹாபாதில் இருந்து நேப்பாளம் வரையில் அங்கிருந்து சிந்து வரையில் 1834ல் ஜி.எச்.ஸ்மித் ஒரு வேலியை அமைத்தார். தொடந்து சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்து அந்தச்சாவடிகளை வேலியால் இணைத்துக்கொண்டே சென்றார்கள். இவ்வ்வாறுதான் சுங்கவேலி படிப்படியாக உருவாகிவந்தது.

ஆரம்பத்தில் காய்ந்தமரத்தாலும் மூங்கிலாலும் ஆன வேலியைத்தான் கட்டினார்கள். வேலிக்கு இருபக்கமும் ஆழமான கிடங்கு வெட்டப்பட்டது. ஆனால் அந்த வேலியைப் பாதுகாப்பது கடினமாக இருந்தது. வருடம்தோறும் அது சிதல்பிடித்தும் தீப்பிடித்தும் அழிந்தது. அதற்காக நிறைய பணம்செலவிட வேண்டியிருந்தது.  அப்போதுதான் 1867ல் சுங்க ஆணையராகப் பதவிக்கு வந்தார் ஹ்யூம்.மூன்றாண்டுகள் அப்பதவியில் இருந்த அவர்  இந்தவேலியைப் பராமரிப்பதற்கான செலவைக் கணக்கிட்டு ஆராய்ந்தார்.   ஹ்யூம் சுங்கவேலியை உயிர்வேலியாக அமைப்பது ஆரம்பத்தில் செலவேறியதென்றாலும் சில வருடங்களில் பராமரிப்பே தேவையற்ற ஒன்றாக அது ஆகிவிடுமெனக் கண்டுபிடித்தார். மிக எளிதில் உயரமாக வளரும் முள்மரங்களைக் கண்டுபிடித்து அவற்றை நட்டு அந்த உயிர்வேலியை அவர்தான் உருவாக்கினார்.
ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்
ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்  இந்தியாவின் முதல் சுதந்திர எழுச்சியான சிப்பாய்க் கலகத்தை ஒடுக்குவதில் பெரும்பங்காற்றி முக்கியமானவராக ஆனவர். அவரே இந்தியா மீதான பிரிட்டிஷாரின் பிரம்மாண்டமான முதல் சுரண்டலமைப்பைக் கட்டி எழுப்பினார் என்பது மிக ஆச்சரியமான விஷயம். ஏனென்றால் அவர் பின்னாளில் இந்திய தத்துவ ஞானத்திலும் ஆன்மீகத்திலும் ஈடுபாடுகொண்டவராக ஆனார். இந்தியர்களுக்கு அதிகமான தன்னுரிமை தேவை என வலியுறுத்தினார். நிர்வாகத்தில் இந்தியர்களுக்கு அதிக இடம் அளிக்கவேண்டுமென வாதாடி அதற்காக ஓர் அமைப்பை உருவாக்க முன்கை எடுத்தார். காந்தியின் தலைமையில் பின்னாளில் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் 1885ல் அவ்வாறுதான் உருவானது.
ராய் மாக்ஸ்ஹாம் அளிக்கும் தகவல்கள் நம்மை ஆழமான மனச்சோர்வில் கொண்டுசென்று தள்ளுபவை. முதல் விஷயம் இந்தியாவில் உருவாகிவந்த பிரிட்டிஷ் ஆட்சி அதன் ஆரம்பகட்டம் முதல் உச்சகட்ட ஊழலையே நிர்வாகத்தின் இயல்பான வழிமுறையாகக் கொண்டிருந்தது என்பதை சித்தரித்துக் காட்டுகிறார் ராய் மாக்ஸ்ஹாம். கிளைவ் இந்தியாவை வென்றதே ஊழல் மூலம். சாதாரண அலுவலக குமாஸ்தாவாக இந்தியா வந்த அவர் அந்த ஊழலில் சம்பாதித்த பணத்தால் பிரிட்டனின் முதல் பத்துப் பணக்காரர்களில் ஒருவராக ஆனார். அன்றைய ஒவ்வொரு பிரிட்டிஷ் அதிகாரியும் மிகக்குறுகிய காலகட்டத்தில் உச்சகட்டமாக ஊழல் செய்து பணக்காரர்களாக ஆனார்கள்
அத்துடன் கீழ்மட்டத்தில் ஊழியர்களுக்கு மிகமிகக் குறைந்த ஊதியத்தை  அளித்தோ அல்லது ஊதியமே இல்லாமலோ வேலைசெய்ய வைத்தது கம்பெனி. அவர்கள் ஊழல்மூலம் சம்பாதிக்க ஊக்குவித்தது.அதன் மூலம்தான் பல்லாயிரம் இந்தியர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் பணிபுரிய ஆர்வத்துடன் திரண்டு வந்தார்கள். மிகச்சில வருடங்களிலேயே பிரிட்டிஷார் தங்களுக்குரிய அதிகார வர்க்கத்தை இவ்வாறுதான் உருவாக்கிக்கொண்டார்கள். அதாவது இன்றும் நீடிக்கும் நம் அதிகார வர்க்கமானது ஊழலால் ஊழலுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று
இவ்வாறு ஊழலில் அதிகாரிகள் ஈடுபடும்போது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே அடிமட்ட மக்கள்தான். பிரிட்டிஷாரை ஆதரித்த நிலப்பிரபுக்களுக்கு அதிக இழப்பு ஏற்படாமல் எந்த விதமான ஒருங்கிணைப்பு பலமும் இல்லாமல் இருந்த ஏழைகளுக்கே அதிக பாதிப்புவரும் வகையில் வரிகள் போடப்பட்டன. ஆகவேதான் உப்புவரிக்கு இத்தகைய முக்கியத்துவம் வந்தது. சிலர் இன்று எழுதுவதுபோல பிரிட்டிஷ் ஆட்சி அடித்தள, தலித் மக்களுக்கான விடிவாக இருக்கவில்லை. அவர்களை மிகக்கொடுமையாக ஒடுக்கிப் பேரழிவை நோக்கித் தள்ளக்கூடியதாகவே இருந்தது
பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாக இந்தியாவில் உருவான மாபெரும் பஞ்சங்களில் இரண்டாவது பெரும் பஞ்சத்தில் 11876–78 ல்  கிட்டத்தட்ட  ஆறரைக்கோடிப் பேர் இந்தியாவெங்கும் பட்டினிகிடந்து செத்தார்கள். அதாவது அன்றைய இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசி. அதில் 30 லட்சம்பேர் அன்றைய ஒருங்கிணைந்த வங்க மாநிலத்தில் செத்தார்கள்.உலகவரலாற்றின் மாபெரும் பஞ்சம் இதுவே .இது பஞ்சம் என்பதைவிடப் பொருளியல் சுரண்டல் வழியாக நிகழ்ந்த ஒரு மாபெரும் படுகொலை என்பதை இந்நூல் மிக துல்லியமாகச் சித்தரிக்கிறது. வெள்ளையர்களின்தாசர்களான நம் ஆய்வாளர்கள் மழுப்பிச்செல்லும் இந்த இடத்தில் ஒரு ஆங்கிலேய ஆய்வாளர், பிரிட்டிஷ் இந்தியாவில் அதிகாரியாக இருந்த ஒருவரின் பேரன், இந்த அளவுக்குத் திட்டவட்டமாக எழுதியிருப்பதை ஆச்சரியமென்றே கொள்ளவேண்டும்.
பஞ்சத்தை உருவாக்கிய கூறுகள் என்ன? மாபெரும் வங்கப்பஞ்சம் தொடங்குவதற்கு முந்தைய ஆண்டு 1874, 1875களில் வடஇந்தியா முழுக்க மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது என பிரிட்டிஷ் ஆவணங்கள் சொல்கின்றன என்கிறார் ஆசிரியர். பொதுவாக இந்தியாவில் ஒரு நல்ல விளைச்சல் ஐந்தாண்டுவரை பஞ்சம்தாங்கும் தன்மை கொண்டது, காரணம் சராசரி இந்தியர்களின் நுகர்வு  இன்றுபோலவே அன்றும் மிகமிகக் குறைவு. அப்படியானால் எப்படி பஞ்சம் வந்தது?
இந்தியாவில் போடப்பட்ட ரயில்பாதைகளினால்தான். அந்த ரயில்கள் அனைத்துமே மைய நிலங்களைத் துறைமுகங்களுடன் இணைப்பதற்காகப் போடப்பட்டவை. அவற்றின் வழியாக இந்தியாவின் விளைச்சல் முழுக்கத் திரட்டப்பட்டுக் கப்பல்களில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. உலகமெங்கும் விரிவாக்கப்போர்களில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் முடிவிலாத உணவுத்தேவைக்காக அவை சென்றன.  அதற்கு முன்னர் விளைச்சல்கள் அந்தந்த இடங்களிலேயே சேமிக்கப்படும், பஞ்சங்களில் பயன்படுத்தப்படும். ஆனால் ரயில்பாதை காரணமாக உபரியே இல்லாத நிலை வந்தது.
இரண்டாவதாக, பிரிட்டிஷாரின் இந்த மாபெரும் சுங்கவேலி. அந்த வருடங்களில் பஞ்சாபில் மிகச்சிறந்த விளைச்சல் இருந்தது. ஆந்திரம் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில்  ஓரளவுக்கு நல்ல விளைச்சல் இருந்தது. அந்த நிலப்பகுதிகளில் இருந்து இந்த வேலி வங்கத்தை முழுமையாகவே துண்டித்துவிட்டது. வங்கத்தில் மக்கள் லட்சகணக்கில் செத்துக்கொண்டிருந்தபோது பம்பாயிலிருந்தும் சென்னையில் இருந்தும் கப்பல்கப்பலாக தானியம் வெளியேறிக்கொண்டிருந்தது
கடைசியாக, ராய் மாக்ஸ்ஹாம் உப்புவரியைச் சொல்கிறார்.  இந்த பெரும்பஞ்சங்களின்போதுகூட பிரிட்டிஷார் உப்புவரியை நீக்கவில்லை. ஒருங்கிணைந்த வங்கத்திலும் வடகிழக்கிலும் உப்பின் விலை அதிகமாகவே இருந்தது. ஆகவே தானியமே வாங்கமுடியாத மக்கள் உப்பை முழுக்கவே தவிர்த்தார்கள். உப்புக்குறைபாட்டால் கால்நடைகளும் குழந்தைகளும் ஏராளமாக இறந்தார்கள். பின்னாளில் அன்று இறந்தவர்களைப்பற்றிய அறிக்கைகளில் இருந்து பல லட்சம்பேர் உப்புக்குறைபாடு நோயால்தான் இறந்திருக்கிறார்கள் என மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்தார்கள்.
இவ்வாறு இந்த மாபெரும்வேலி இந்தியாவை ஒரு பிரம்மாண்டமான விலங்கால் கட்டிப்போட்டது. இந்தியாமீதான பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கான பொருண்மையான ஆதாரமாக இருந்தது. ஒரு புற்றுநோய்க்கட்டிபோல இந்தியாவின் உயிரைக்குடித்துக்கொண்டிருந்தது இது.
துறைமுகங்களும் ரயில்பாதைகளும் உருவாகி பிரிட்டிஷாருக்கு இந்தியாவின் மீது முழு பொருளியல் கட்டுப்பாடு வந்தபோது எல்லாப் பொருட்களிலும் வரிவிதிக்கமுடிந்தது. ஆகவே உப்புவரி முக்கியத்துவம் இழந்தது. மேலும் தென்னாட்டில் உப்பளங்களின் மீது போடப்பட்ட நேரடி வரிமூலம் சுங்கவேலி அளித்த வருமானத்தை விட அதிகமான வருமானம் வர ஆரம்பித்தது. ஆகவே வைஸ்ராய் லார்ட் லிட்டன் 1879ல் உள்நாட்டு சுங்கவரியை ரத்துசெய்தார். உப்பு மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்டது. உப்புக்காக உருவாக்கப்பட்ட சுங்கவேலி கைவிடப்பட்டு அழிந்தது.
காந்தியின் உப்புசத்தியாக்கிரகத்தைப்பற்றி நான் நினைவுதெரிந்த நாள் முதலாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். பலகோணங்களில் அது எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவில் எரியும் பிரச்சினைகள் பல இருக்க, ஒடுக்குமுறைச் சட்டங்களே பல இருக்க,  உப்புக்காய்ச்சுவதற்கு எதிரான சட்டத்தை மீறும் முடிவை எதற்காக காந்தி எடுத்தார்?
அதற்கான விளக்கமாக இன்றுவரை கொடுக்கப்பட்டுவந்ததுது இதுதான். ஆங்கிலேயர் கப்பல்களில் இந்தியாவிற்குத் துணிகளை இறக்குமதி செய்தபோது கப்பல்களின் அடித்தளத்தில் எடைக்காக உப்பு நிரப்பிக் கொண்டு வந்தார்கள்.  அந்த உப்பு விலை அதிகமானது. அதை விற்பதற்கு உள்ளூர் உப்புக்கு வரிபோட்டு விலையை ஏற்ற வேண்டியிருந்தது. காந்தி ஏன் உப்புசத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தாரென்றால் இந்தியாவின் எல்லா அடித்தள மக்களுக்கும் பாதிப்பை உருவாக்கக்கூடியதாக உப்புவரி இருந்தது.
அது ஓரளவே உண்மை, அதாவது வங்க அளவுக்கு. வங்காளத்தில் உப்பு ஏற்கனவே விலை அதிகம். தீயில் காய்ச்சப்படாத உப்பை வங்க பிராமணர் விரும்பினார்கள். அந்த இடத்தில் இந்த கப்பல் உப்பை பிரிட்டிஷார் விற்றார்கள். அதனுடன் நிகராக இருப்பதற்காக உள்ளூரில் காய்ச்சப்படும் உப்புக்கு அதிக வரி போட்டார்கள். ஆனால் இந்திய அளவில் இது உண்மை அல்ல.
ஒட்டுமொத்தமாக உப்புசத்தியாக்கிரகத்தின் சமூகவியல் உள்ளடக்கம் என்ன என்பதை சரேலெனத் திறந்து காட்டுகின்றன இந்த நூல் அளிக்கும் தகவல்கள். இந்தத் தகவல்கள் எவையும் இன்றுவரை இந்தியச்சூழலில் பேசப்பட்டதில்லை. உப்புசத்தியாக்கிரகம் காந்தியின் ஒரு காரியக்கிறுக்கு என்றே இங்கே சொல்லப்பட்டுவந்தது. மார்க்ஸிய சோஷலிச அறிஞர்கள் உப்புசத்தியாக்கிரகத்தை காந்தி வாழ்ந்த காலம் முதல் இன்றுவரை கிண்டல் செய்து ஏராளமாக எழுதியிருக்கிறார்கள்.
காந்தி தண்டி யாத்திரை

தன் சமகால அரசியல்வாதிகளில் இருந்தும், நம் சமகால ‘அறிஞர்களில்’ இருந்தும் காந்தி எப்படி உண்மையான வரலாற்றறிவால், விரிவான சமூகப்புரிதலால் அவர்கள் எட்டவே முடியாத அளவுக்கு மேலே நின்றார் என்பதைக் காட்டுகிறது இந்தத் தகவல்புலம். அவர்கள் எவருக்கும் அன்றும் இன்றும் இந்திய வரலாற்றில் உப்பு என்றால் என்ன என்று தெரிந்திருக்கவில்லை. பண்பாட்டிலும் சமூக உளவியலிலும் உப்பு வகிக்கும் இடம் புரிபட்டிருக்கவில்லை.
காரணம், அவர்கள் எவருமே அடித்தள மக்களை அறிந்தவர்கள் இல்லை. அடித்தள மக்களுக்காகப் போராடும்போதுகூட அவர்களின் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் தங்களை நினைத்துக்கொண்டார்களே ஒழிய அவர்களில் ஒருவராக எண்ணிக்கொள்ளவில்லை. உதாரணமாக மார்க்ஸிய முன்னோடி எம்.என்.ராய்  உப்பு சத்தியாக்கிரகம் பற்றி எழுதிய நக்கலும் கிண்டலும் நிறைந்த கட்டுரைகளைச் சுட்டிக்காட்டலாம். எம்.என்.ராய் இந்தியாவில் பயணம்செய்து ஏழை இந்தியர்களை அறிந்தவர் அல்ல. காந்தி என்றும் அவர்களில் ஒருவராக இருந்தார். ஆகவே எம்.என்.ராய்க்குத் தென்படாத உண்மையான மக்கள் வரலாறு காந்திக்கு தெரிந்தது.
மிக நுட்பமான ஒரு விஷயத்தை ராய் மாக்ஸ்ஹாம் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் எப்போதுமே நிலவரி x உப்புவரி என்ற இருமை இருந்திருக்கிறது. நிலவரி நில உடைமையாளர்களை பாதிப்பது, உப்புவரி அடித்தள மக்களைப் பாதிப்பது. பிரிட்டிஷ் அரசு எப்போதுமே உப்புவரியை அதிகரிக்க இந்திய உயர்குடிகளால் கட்டாயப்படுத்தப்பட்டது.
1930 மார்ச் 12ல் உப்புசத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டபோது அடுத்த தலைமுறை கிராமவாசிகளின் நினைவுகளில்கூட முந்தைய உப்பு ஒடுக்குமுறை இல்லாமலாகியது. அப்போது உப்புமீது இருந்த வரி ஒப்புநோக்க மிகச்சிறியதாக இருந்தது. தென் மாநிலங்களில் அது ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை
ஆனால் மொழியிலும் பண்பாட்டிலும் உப்பு ஆழமாக வேரோடியிருந்தது. உப்பு என்ற சொல்லே ஆழமான உணர்வெழுச்சியை உருவாக்கக்கூடியதாக இருந்தது. அதை காந்தி அம்மக்களிடையே மூன்றாம்வகுப்பு ரயில்பெட்டிகளில் பயணம் செய்து வாழ்ந்து அறிந்திருந்தார். அதை கோகலேயோ, திலகரோ, நேருவோ, சுபாஷ்சந்திரபோஸோ, அம்பேத்காரோ அறிந்திருக்கவில்லை. ஆகவே அவர்களால் உப்புசத்தியாக்கிரகத்தை ஒரு தவிர்க்கமுடியாத கிழவரின் கிறுக்குத்தனம் என்று மட்டுமே புரிந்துகொள்ள முடிந்தது. அது நம்பமுடியாத அளவுக்கு விளைவுகளை உருவாக்கியபோது அதற்கு விளக்கமளிக்கவும் முடியவில்லை
காந்தி உப்புசத்தியாக்கிரகத்தை அறிவித்தபோது அவரைச்சுற்றி இருந்த காங்கிரஸ் தலைவர்கள் நிலவரி அல்லது சுங்கவரிக்கு எதிராக போராடலாம் என்று ஆலோசனை சொல்லி வற்புறுத்தியதை ராய் மாக்ஸ்ஹாம் குறிப்பிடுகிறார்.  காந்தி அதை நிராகரித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், உப்புசத்தியாக்கிரகத்தை ஆரம்பிக்கும்படி அவரிடம் சொன்னது அவரது அந்தராத்மா என்பதுதான். நிலம் உயர்சாதி உயர்குடியின் பிரச்சினை. உப்பு அடித்தள மக்களின், தலித் மக்களின் பிரச்சினை என காந்தி அறிந்திருந்தார்.  அவரது அந்தராத்மாவை அன்றும் இன்றும் கிண்டல்செய்யும் எந்த அறிஞனை விடவும் அந்த அந்தராத்மாவுக்கு வரலாறு தெரிந்திருந்தது.
இந்தியாவின் கடந்த அறுபதாண்டுக்கால அறிவுலகச் செயல்பாடுகளில் பல்லாயிரம் நூல்களை எழுதித்தள்ளிய நம் சமூகவியல் பேராசிரியர்களின் ஆய்வுகளின் அடித்தளமின்மையை அதிர்ச்சியளிக்கும்படி அம்பலப்படுத்துகிறது இந்நூல். 1996ல், இந்தியா சுதந்திரம் பெற்று கிட்டத்த அரைநூற்றாண்டு கழித்து, உப்புசத்தியாக்கிரகம் நிகழ்ந்து முக்கால்நூற்றாண்டு கழித்து, இந்தியா வரும் ராய் மாக்ஸ்ஹாம் இங்குள்ள வரலாற்று அறிஞர்களை ,சமூக ஆய்வாளர்களை, அரசியல் விமர்சகர்களை சந்தித்து இந்த வேலிபற்றிக் கேட்கிறார். எவருக்கும் எந்த அறிதலும் இல்லை என்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார்.
எப்படி இருந்திருக்கும்? இங்கே நம் கல்விப்புலம் சார்ந்து ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மட்டுமே பயணங்கள்செய்யவும் ஆவணங்களை ஆராயவும் வசதி உள்ளது. அவர்களுக்கு மேலைநாட்டு ஆய்வுகளை மேற்கோள் காட்டுவது மட்டுமே உண்மையான நவீன ஆய்வு என்ற ஆழமான நம்பிக்கை இருக்கிறது. ஓரளவு முறைமையுடன் ஆராய்பவர்கள் மேலைநாட்டுப் பல்கலைகளில் ஆய்வுப்பட்டம் பெற்றவர்கள். அவர்கள் அனேகமாக அனைவருமே இந்தியா என்ற பிற்பட்ட நிலப்பரப்பை நவீன தேசமாகக் கட்டியவர்கள் ஆங்கிலேயர் என்ற கொள்கையைக் கிட்டதட்ட மதநம்பிக்கை போலப் பெற்றுக்கொண்டுதான் இங்கே வருகிறார்கள்.
ராய் மாக்ஸ்ஹாமின் நூல் மிகசுவாரசியமான வாசிப்புத்தன்மை கொண்டது. உண்மையில் இது ஒரு பயணநூல். சுங்கவேலியைத் தேடி இந்தியாவுக்கு வரும் ராய் மாக்ஸ்ஹாம் அதன் எச்சங்களைத் தேடி இந்தியாவுக்குள் பயணம்செய்கிறார். எருமையின் மூச்சு பிடரியில் பட யமுனைக்கரை கிராமத்தின் கயிற்றுக்கட்டிலில் படுத்துத் தூங்குகிறார். முன்பதிவில்லா ரயில் பெட்டிகளில் பிதுங்கி வழிந்து பயணம் செய்கிறார். ஓம்காரேஸ்வரிலும் காசியிலும் வேலியைக் காட்டித்தரும்படி சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கிறார். அது கொஞ்சம் அதிகமோ என எண்ணித் தன் குடும்பத்தைக் காக்கும்படி வேண்டிக்கொள்கிறார்.
பல விஷயங்கள் புன்னகை வரவழைக்கின்றன. ராய் மாக்ஸ்ஹாம் இந்தியாவில் முதல்வகுப்பு கூபேயில் பயணம்செய்பவர்களே நாகரீகமற்ற அகங்காரம்கொண்ட மக்கள் என நினைக்கிறார். செல்பேசியில் கத்திக்கொண்டே இருக்கிறார்கள். வெளியே வேடிக்கை பார்க்கவும் முடிவதில்லை. இரண்டாம் வகுப்பில் நட்பான சுமுகமான சூழல் உள்ளது, என் அனுபவமும் அதுவே. அவரது பயணப்பதிவுகளில் உள்ள மெல்லிய வேடிக்கை இந்நூலை சுவாரசியமான அனுபவமாக ஆக்குகிறது.
ராய் மாக்ஸ்ஹாம் கடைசியில் சம்பலில் அந்த வேலியின் எஞ்சிய பகுதியயைக் கண்டுகொள்கிறார். முன்னாள் கொள்ளையரும் இந்நாள் அனுமார்கோயில் பூசாரியுமான ஒருவரின் உதவியால். பிற எல்லா இடங்களிலும் நவீனமயமாக்கல் வேலியை அழித்துவிட்டது. அதற்குக் காரணம் மிக எளிது. இந்த வேலியை ஒட்டியே பெரும்பாலும் சாலைகள் உருவாகி வந்தன. சாலைகள் விரிந்து வேலியை விழுங்கிவிட்டன.
நம்மை நாமே ஆராயத்தூண்டும் முக்கியமான நூல் இது. சுங்கவேலி நம் முதுகின் ஒரு சாட்டைத்தழும்பு. அது மறைந்தாலும் நம் மொழியில் கனவில் மிஞ்சியிருக்கிறது.

விக்கிபீடியா பக்கம்
ராய் மாக்ஸ்ஹாம் இணையப்பக்கம்
மூதாதையர் குரல்
பசியாகி வரும் ஞானம்
ஹிட்லரும் காந்தியும்
அள்ளிப்பதுக்கும் பண்பாடு,கடிதங்கள்
பன்னாலால் பட்டேலின் ‘வாழ்க்கை ஒரு நாடகம்’
வெங்கடேஷ் மாட்கூல்கரின் ‘பன்கர் வாடி’
மார்க்ஸ் கண்ட இந்தியா
இந்தியாவில் பஞ்சங்கள் இருந்தனவா?

தமிழ் படித்த புத்தர்

0 c
ஒரு பொருள் இன்னொரு பொருளோடு நெருக்கமாக இயையும் போதில் - கல்லோடு கல் உரசுதல் -வெப்பக் கருத்தும் ஒளிக் கருத்தும் தோன்றுகின்றன என்றும் - ‘இலங்குதல்’ என்னும் ஒளி குறித்த தமிழ்ச் சொல் இப்படித்தான் தோன்றிற்று என்றும் மொழி இயலாளர்கள் சொல்கிறார்கள்.

இலங்குதல் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதே ‘இலங்கை’ என்னும் சொல்லாகும்.இச் சொல்லையே சிங்களர்கள் ‘லங்கா’ ஆக்கினார்கள்.

விலைவாசி உயர்வு

0 c
இந்தியாவில் உணவுப் பொருள் விலை ஏற்றத்துக்கு இரண்டு, மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவது,       பணவீக்கம். அதாவது, இன்ஃப்ளேஷன். 

இரண்டாவது,  பற்றாக்குறை. 

மூன்றாவது  .   போக்குவரத்துச் செலவு.

பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்

0 c

ருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

கடல்வளமும், நிலவளமும் கார்பரேட் கைகளில்? 100 சதுர கிலோமீட்டர்,75 கிராமங்கள்

0 c

கடந்த திமுக அட்சியின் போது கடலூர் மாவட்டம் துவங்கி நாகை மாவட்ட எல்லைவரை உள்ள கடற்கரை பகுதிகளை மொத்தமாக இந்திய பெரு முதலாளிகளிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் விற்பனை செய்த அவலம் நடந்தது. இந்த பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களை தங்களது கடுமான பணிகளை துவங்கி உள்ளனர். விவசாய நிலங்களும், கடற்கரையும் இந்த நிறுவனங்களால் ஆக்ரமிக்கபட்டன. குறிப்பாக கடலூரில் இந்த ஆக்ரமிப்பு அதிகம் நடத்தது. கிட்டதட்ட 7000 ஏக்கர்& (100 சதுர கிலோமீட்டர்,75 கிராமங்கள்)மேல் நிலங்கள் பல நிறுவனங்களால் வாங்கப்பட்டது. அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட இந்த நிலங்கள் ஏதோ எதற்கும் பயன்படாத நிலங்கள் அல்ல. சவுக்கை, முந்திரி, மணிலா, நெல் என பல வகை சாகுபடிகள் நடந்த இடங்களாகும்

ஜல்லிக்கட்டு கள்ளர், மறவரிடையே பெண் கொடுப்பதற்கான தேர்வு களனாக உள்ளது

0 c

தமிழர் நாட்டுப்புற விளையாட்டுகள்-5

ஜல்லிக்கட்டு 
ஜல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக்
குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும்
வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது.

ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை
அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத்
தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக்
கூறப்படுகிறது.

ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? - சில முக்கிய தரவுகள்

0 c
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

உலகம் முழுக்க நாம் ஒன்றை கவனிக்கலாம், எந்த மன்னன் ஒற்றை அதிகாரத்தை உருவாக்கி நீடித்த அமைதியைக் கொடுக்கிறானோ அவனே அந்த சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசென்றவனாக இருந்தான். அவ்வாறு எங்கெல்லாம் மேம்பட்ட நிலவுடைமைச்சமூகம் உருவாகி உற்பத்திஉபரி திரட்டப்பட்டு நாகரீகமும் பண்பாடும் வளர்ந்தது என்று அறிகிறோமோ அங்கெல்லாம் மிகக்கொடுமையான வன்முறை மூலமே அது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். பத்தாம் நூற்றாண்டு சீனா அல்லது ஜப்பான் அல்லது ஐரோப்பா அல்லது அரேபியாவின் வரலாறு என்பது குருதியில் தோய்ந்த கதை. சும்மா விக்கியை தட்டிப்பாருங்கள் தெரியும்.

அங்குதான் இந்திய மன்னர்கள் வேறுபடுகிறார்கள். இந்திய மன்னர்களின் அடைமொழிகளீல் குலசேகரன் என்ற பெயர் பெரும்பாலும் காணப்படும்.

தமிழில் சாதி நூல்கள் (19, 20 ஆம் நூற்றாண்டு)

0 c
சாதியம் என்பது இந்தியச் சமூக அமைப்பில் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகின்ற வாழ்க்கை முறையாகும். இந்தியச் சமூக அமைப்பில் சாதிகள் தோன்றிய காலம் எது என்று வரையறுப்பது ஆய்வாளர்களிடம் விவாதப் பொருளாகவே உள்ளது. தொழில் பிரிவினையே சாதிகளாக மாறி வந்தன என்றும், நான்கு வர்ணங்களே சிதைந்து சாதிகளாயின என்றும், நிலவுடை மைக் காலகட்டமே சாதிகளின் தோற்றத்திற்கு காரணம் என்றும் பல்வேறு கருத்துகள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன.

கொடும்பாளுர்ராயர்---- என்ற கள்ளர் அரச குலத்தினர்

0 c
கொடும்பாளுர் மன்னர்களான  வேளிர் மரபினர்   கள்ளர் குலத்தின்
பட்டங்களுக்கு உரியவர்கள்ஆவர்கள்
THANKS TO.(http://kallarperavai.weebly.com/296529953021299529923021-296530092994-298629753021297529693021296529953021.html)

புதுக்கோட்டையிலிருந்து 35கிலோ மீட்டர் தொலைவில் குடுமியான்மலை  மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது கொடும்பாளுர்.

கள்ளர் ---- SOME HINTS

0 c
கள்ளர்  சாதியினர் மீது இச் சட்டம் 1911 இல் தமிழகத்தில் போடப்பட்டிருந்தாலும் 1914 ல் முதன்முதலாக கீழக்குயில் குடிக் கிராமத்தில் முதலில் கேடிகளைப் பதிவு செய்தார்கள்.

அதன்படி 11 வயதுக்கு மேற்பட்ட அனைத்துக் கள்ளர் இனத்து ஆண்கள் அனைவரும் சாயங்காலம் ஆனவுடன் பொலிஸ் நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டனர்.

குழந்தைகள் கல்விக்காக அதிகம் செலவிடும் இந்தியர்கள்!

0 c
இந்தியக் குடும்பங்கள் தங்களது குழந்தைகளின் கல்வி மற்றும் உடல் நலத்திற்காக அதிக அளவில் செலவிடுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இது தொடர்பாக NSSO எனப்படும் "தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்" மேற்கொண்ட ஆய்வில், இந்தியக் குடும்பங்கள் தங்களது வருவாயில் உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளோடு, குழந்தைகளின் கல்விக்காக அதிக அளவில் செலவிடுவதாகவும், அதேப்போன்று அவர்களது சுகாதாரத்திற்காகவும் கணிசமாக கூடுதலாக செலவிடுவதாகவும் தெரியவந்துள்ளது.

கழுகுமலை

0 c
கழுகுமலை …. இது எங்கே உள்ளது - தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம். அங்கே அப்படி என்ன விநோதம். … இப்போது வெட்டுவான்கோவில் படங்களை பாருங்கள்…
vettuvankoil1.jpg


அனந்தபத்மநாபனின் களஞ்சியம்,

0 c
திருவிதாங்கூர் மட்டுமல்ல இந்தியாவின் எல்லா அரசுகளும் வளமான அரசுகளாகவே இருந்திருக்கின்றன என்பதே வரலாற்று உண்மை. அதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.  பருவமழையை நம்பி இருக்கும் இந்தியாவில் அரசுகளும் மக்களும்கூட சேமிப்பை ஒரு வழக்கமாக கொண்டிருந்தார்கள். தங்கம் அந்த சேமிப்புக்கான நாணயமாக இருந்தது. ஆலயங்கள் சேமிப்பு மையங்கள். அவை மாபெரும் பஞ்சம்தாங்கும் அமைப்புகள். அந்த ஒட்டுமொத்த அமைப்பே 1750களுக்கு பின் பிரிட்டிஷாரால் இருநூறாண்டுக்காலம் கொள்ளையிடப்பட்டது. அதன் விளைவே இந்தியாவை சூறையாடிய மாபெரும் பஞ்சங்கள்.

பதினெட்டுபட்டி---சுதந்திர விவசாயிகளினாலான கிராம சமூகங்களின் கூட்டமைப்பு

0 c
பழைய இந்திய பொருளியல் அமைப்பு பற்றியும் , நிதி நிர்வாகம் பற்றியும் நீங்கள் வாசிகக் ஆரம்பித்தால் மலைமலையாக இருக்கின்றன நூல்கள்.

இங்கிருந்த கிராமப்பொருளியல் அமைப்பு பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்தும்கூட சிதையாமல் இருந்தது என்பது வரலாறு.

அவற்றில் பஞ்சம்தாங்கும் சமூகஅமைப்புகள் இருந்தன. பிரிட்டிஷாரின் ஒருங்கிணைந்த தொடர்ச்சியான சுரண்டல் மூலமே கிராமப்பொருளியல் அழிந்தது.