காடவராயர் -- என்ற கள்ளர் அரச குலத்தினர்

காடவராயர் ----  காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...
இவர்கள் கள்ளர் குலத்தினர் .
thanks to http://kallarperavai.webs.com/kallarkulapattangal.htm 
காடவர்கள் எனப்படுவோர் கிபி 13, 14-ம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின்பல்லவர்களோடுகடலூர் பகுதியில் சில பகுதிகளை ஆண்ட அரசக் குலத்தவர் ஆவர்.


இவர்கள் முதலாம் கோப்பெருஞ்சிம்மன், இரண்டாம் கோப்பெருஞ்சிம்மன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் வல்லமை தழைத்தோங்கி விளங்கியது. இவர்கள், மூன்றாம் இராசராசன், மூன்றாம் இராசேந்திரன் ஆகியோரின் தலைமையில் பெருமை மங்கத் துவங்கியிருந்த சோழப் பேரரசையே எதிர்க்கும் வல்லமைப் பெற்றிருந்தார்கள். வட ஆற்காட்டிலும், தென் ஆற்காட்டிலும், செங்கற்பட்டிலும் இவ்விரு மன்னர்கள் பலக் கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளனர்.

தோற்றம்

மகேந்திரவர்மன் I, நரசிம்மவர்மன் I, நரசிம்மவர்மன் II ஆகியோரின் பட்டப் பெயர்களுள் ஒன்றாகக் காடவன் என்பதுக் காணப்படுகிறது. எழுத்தாசிரியர்கள், பல்லவர்களைக் காடவர், தொண்டையார், காடுவெட்டி என்ற பெயர்களால் குறிப்பிடுவதைப் பல்வேறு நூல்களில் காணலாம். காடவர்களுக்கும் பல்லவர்களுக்கும் உள்ள உறவு குறித்து காஞ்சிபுரத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிம்மவிஷ்ணுவின்நந்திவர்மன் II 'காடவர்களின் குலப்பெருமையை உயர்த்தப் பிறந்தவன்' என்றுப் போற்றப்பட்டான். சகோதரன் பீமவர்மன் வழி வந்த மன்னர்களே இந்தக் காடவர்கள்.

காடவராயர் ----  காடவர் + அரையர் === காடவ அரசர்கள் என பொருள்படும் காடவரயர்கள் காடவர் என்ற அரசகுலத்தை சேர்ந்தவர்கள் ...
இவர்கள் கள்ளர் குலத்தினர் .கள்ளர் குலத்தில் இன்றும் காடவராயர் வம்சத்தை சேர்ந்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள் .இவர்கள் பல்லவர்களின் கிளை குலத்தினர்.இவர்களை போன்று தொண்டைமான் அரசர்களும் பல்லவர் குலத்தினர் .பல்லவர்களுக்கு பல பெயர்கள் உண்டு அவற்றில் 
 பல்லவதரையர்
பல்லவநாடர்
பல்லவர்.
காடவராயர்
காடுவெட்டி,
காடுவெட்டியார்.
தொண்டையர்
தொண்டைப்பிரியர்,
தொண்டாப்பிரியர்
தொண்டைமான்,
தொண்டைமார்
தொண்டைமான்கிளையார்
தொண்டையர்
பல்லவராயர் 

போன்றவை இன்றும் கள்ளர் குலத்தில் கிளை குடும்பங்களுடைய பெயர்களாக பட்ட பெயர்களாக உள்ளன.எடுத்துகாட்டாக புதுகோட்டைதொண்டைமான் அரசகுடும்பத்தை கூறலாம் ..இவர்களும் பல்லவர்களின் கிளை குலத்தவர்கள் தான் .இவர்களும் கள்ளர்கள் என்பதை உலகம் அறியும் .

வளர்ச்சி

சோழர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த காடவர்களின் ஆதிக்கம் குலோத்துங்க சோழன் III காலத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. காடவக் குறுநில மன்னர்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் அதிகம் கிடைக்கவில்லை. முதலாம் கோப்பெருஞ்சிம்மன், 1186-ம் ஆண்டுக் காலத்தில் கூடலூரை ஆண்ட வீரசேகரனின் வழிவந்த மணவாளப்பெருமாளின் மகனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
சோழநாட்டுப் பெண்ணை மணம் புரிந்திருந்த முதலாம் கோப்பெருஞ்சிம்மன், மூன்றாம் குலோத்துங்கனின் அவையில் அதிகாரியாக இருந்தான். 1216-ல் பாண்டியர்கள் சோழ நாட்டின் மீது படையெடுத்தபோது முதலாம் கோப்பெருஞ்சிம்மன் சேந்தமங்கலத்தில் ஒளிந்துக்கொண்டு தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுக் காடவர்கள் தங்கள் ஆதிக்கத்தை சிறிது சிறிதாக அதிகரித்து வந்தனர். இறுதியில், இலங்கை மன்னன் இரண்டாம் பராக்கிரம பாகூவின் உதவியுடன் மூன்றாம் இராசராச சோழனைத் தோற்கடித்துச் சிறைப்படுத்தினான். முதலாம் கோப்பெருஞ்சிம்மனின் மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் ஆட்சிக் காலத்தில் காடவர்களின் அரசு மேலும் விரிவடைந்தது. கடைசி சோழ மன்னனான மூன்றாம் இராசேந்திரன் இரண்டாம் கோப்பெருஞ்சிம்மனின் உதவியுடந்தான் அறியணை ஏறினான். அவர்களுடைய உறவு பகையும் நட்பும் கலந்த ஓர் உறவாக விளங்கியது.

சமயப் பணி

காடவ மன்னர்கள் கோயில்களுக்குக் கொடைகளை வாரி வழங்கினர். பல புதியக் கோயில்கள், சிற்றூர்கள், சத்திரங்கள், சாலைகள் ஆகியவற்றைத் தோற்றுவித்தனர். ஆளப்பிறந்தீசுவரம் உடையார், அழகியப் பல்லவந்தோப்பு, அழகிய பல்லவன் சந்தி, கோப்பெருஞ்சிங்கன் தெரு போன்ற இடங்கள் அவற்றுக்குச் சான்றாக இன்றும் விளங்குகின்றன. சேந்தமங்கலத்தில் காணப்படும் கோட்டைச் சிதிலங்கள் சிறிதுக் காலமேத் தழைத்தோங்கியக் காடவர்களின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.

முதலாம் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன். காடவர் குலத்தைச் சேர்ந்தவன். இவன் கிட்டத்தட்ட கிபி 1216 முதல் 1242 வரை அரசாண்டவன்.
ஹொய்சாள தண்டநாதர்களின் படையெடுப்பை பற்றி விவரமாகத் தெரிவிக்கும் திருவேந்திபுரம் கல்வெட்டு இராஜராஜனைத் தாக்கி சிறைப்பிடித்து பிறகு விடுதலை செய்த காடவச் சிற்றரசன், புகழ் பெற்ற கோப்பெருஞ்சிங்கனே என்று தெரிவிக்கிறது. (சமஸ்கிருதத்தில் இவன் பெயர் மஹராஸ சிம்ம எனப்படும்.) இந்த காலப்பகுதியின் வரலாற்றில் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிறைந்த இடம் உண்டு, தமிழ்நாட்டிலும் கன்னநாட்டிலும் கிடைக்கும் ஏனைய கல்வெட்டுக்களும் இந்தச் செய்திகளை உறுதிபடுத்துகின்றன.
இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டில் (கி.பி 1230) விருத்தாசலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து காடவச் சிற்றரசர்கள் இன்னும் சோழரின் மேலாதிக்கத்தை ஏற்று வந்தனர் என்றும் இவர்களுள் கோப்பெருஞ்சிங்கன், தக்க வயது அடைந்ததோடு, முக்கியமானவனாக விளங்கினான் என்றும் தெரிவிக்கிறது. கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை சேந்தமங்கலத்தில் சிறைப்படுத்தியதோடு விஷ்ணு கோயில்கள் உட்பட எல்லாக் கோயில்களையும் கொள்ளையடிக்கும் படியும் ஏற்பாடு செய்தான். ஹொய்சாளர்கள் வைணவத்தில் அழுத்தமான தீவிரமான பற்றுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மன்னன் நரசிம்மன் தன் தலைநகரான துவார சமுத்திரத்திலிருந்து புறப்பட்டதாயும் சோழர்களை மீண்டும் நிலைநாட்டியவன் என்று பெயர் தனக்கு ஏற்படும் வரை போர் முழக்கம் செய்ததாயும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவனுடன் ஏற்பட்ட போரினால் கோப்பெருஞ்சிங்கன் சோழ சக்கரவர்த்தியை விடுதலை செய்து அவனுடைய சிம்மாதனத்தில் அமரச் செய்வதாக நரசிம்மனின் தளபதிகளுக்கு அறிவித்தான்.
தஞ்சை மாவட்டம் நீடுரைச் சுற்றிய பகுதி கோப்பெருஞ்சிங்கன் என்ற அழகிய சீயனால் ஆளப்பெற்றதாய் குறிப்பிடுகிறது. கோப்பெருஞ்சிங்கனின் வீரம் வெவ்வேறுவகையான ஜந்து செய்யுட்களில் பாராட்டப்படுகிறது. கோப்பெருஞ்சிங்கனுக்கு அவனி நாராயண நிருபதுங்கன், தொண்டைக்கும் மல்லைக்கும் மன்னன் என்றெல்லாம் பட்டங்கள் இருந்திருக்கிறது. கோப்பெருஞ்சிங்கனும் ஹொய்சாளர்களும் தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்தனர் என்பது கி.பி. 1236ல் துன்முகி ஆண்டில் காடவனுக்கு விரோதமான ஒரு படையெடுப்பில் வீர சோமேசுவரன் மங்கலத்தில் தங்கினான் என்று அறியப்படும் ஒரு குறிப்பால் தெளிவாகத் தெரிகிறது.

உசாத்துணை

  • Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002).
  • South Indian Inscriptions - http://www.whatisindia.com/inscriptions/
  • http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D






21 comments:

  1. அட கஷ்டமே இப்படியும் ஒரு பச்சைப்பொய்யை இன்றைய காலக்கட்டதிலும் சொல்ல முடியுமா ? "காடவரயர்கள்" தங்களை "பள்ளி" என்றும் "சம்பு மன்னவன்" என்றும் சோழர்கள் காலக் கல்வெட்டுகளில் மிகதெளிவாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். இப்படியெல்லாம் "பச்சைப்பொய்யை" சொன்னால் படிப்பவர்கள் உங்களை விமர்சிப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. எந்த கல்வெட்டு காட்டமுடியுமா?

      Delete
  2. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும். இது மிகவும் தவறான வரலாற்று திரிபு. காடவராயர்கள் வன்னிய குலத்தை சேர்ந்தவர்கள்.

    ReplyDelete
  3. வன்மையாக கண்டிக்கிறேன் வரலாற்றை திருடாதே வன்னிய குல சத்திரியர் காடவராயர்கள்

    ReplyDelete
    Replies
    1. வன்னியராக எந்த ஊரில் வாழுகிறார்கள்?

      Delete
    2. கள்ளர் dna 2000 முன் பழமைவாதிகள் நீ வன்னியர் உன் dna
      ?????

      Delete
  4. வரலாற்றை உங்களால் மட்டுமே மாற்ற முடியும் கல்வெட்டுகளில் மாற்றிட முடியாது.......

    ReplyDelete
  5. வரலாற்றை உங்களால் மட்டுமே மாற்ற முடியும் கல்வெட்டுகளில் மாற்றிட முடியாது.......

    ReplyDelete
  6. 100% உண்மை வரலாறு நாங்கள் கள்ளர்குல காடவராயர்கள் பல்லவ மரபு. சந்தேகம் இருப்பவர்கள் தஞ்சை புதுக்கோட்டை திருச்சி சிவகங்கை நாகை திருவாரூர் போன்ற மாவட்டங்களில் கள்ளர் குல காடவராயர் வாழுகிறோம். எங்கள் குலதெய்வம் பெரியநாயகி அம்மன்.

    ReplyDelete
  7. Gunabalan kadavarayar madurai melur kallar adayalam

    ReplyDelete
  8. நான் காடவராயர் . சிவகங்கை மாவட்டத்தில் மயில்ராயன் கோட்டை நாட்டின் அம்பலகாரர்களாக காடவராயர்கள் நான்கு கிராமங்களில் வாழுகிறோம். அலவாக்கோட்டை பெருங்குடி சிங்கனின்பட்டி மதகுபட்டி சத்துரு சம்காரக்கோட்டை போன்ற ஊர்களிலும் காடவராயர்கள் கள்ளர்கள் வாழுகிறார்கள். சந்தேகம் இருப்பவன் யாராக இருந்தாலும் விளக்கம் தர ஆண்மையுடன் தயார். நான் பாலகிருஷ்ணன் காடவராயர் அலவாக்கோட்டை.

    ReplyDelete
  9. நாங்கள் பல்லவத்திலிருந்து படை கொண்டு பாண்டிய நாட்டிர்க்கு வந்த கள்ளர்குல காடவராயர்கள். எங்கள் குல தெய்வம் சேந்த மங்கல கோட்டையில் கோப்பெருஞ்சிங்க காடவராயர் கட்டி வழிபட்ட அதே பெரியநாயகிதான். கோப்பெருஞ்சிங்கன் மரபினர்கன் சிங்கனின் பட்டி என்ற ஊரையேஉற்ப்பத்தி செய்து இன்றும் கள்ளர்களாக வாழுகிறார்கள்.

    ReplyDelete
  10. காடவராயர் பட்டம் கள்ளர்களுக்கு உரியது இன்றும் பெரும்பாலானோர் தஞ்சை பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்

    ReplyDelete
  11. தஞ்சை புதுக்கோட்டை திருச்சி இராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்களில் காடவராயர்கள் அதிமாகவும் பலம்படைத்தவர்களாகவும் வாழ்கின்றோம் கோப்பெருசிங்கன் மன்னனர் எங்களுடை வாம்சாவழி தோன்றல்

    ReplyDelete
  12. எனது தஞ்சாவூரில் எமது பட்டமான காடவராயன் பங்காளிகள் மிக மிகிதியாக உள்ளார்கள் இது பன்டய நாயக்கர் படயேடுப்பிர்கு பின் ஏற்பட்ட பிளவின் பின் எமது காடவராயன் குழ சிறிது சிறிதாக ஆங்காங்கே குடியேற்ற ஆனது இதை அனைவரும் புரிந்து கொள்ள எளிதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பினை பின்பற்றவும் இதை பிந்தைய கால கல்வெட்டிலும் நீங்கள் அறியலாம், ஓங்குக எம் காடவராயன் புகழ்!!! உன்மை உரக்கச் சொல்வோம் 🙏🙏🙏

    ReplyDelete
  13. நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அம்மாபேட்டை அருகே உடையார்கோவில் இங்கு கள்ளர் குல பட்டங்களில் பலர் இருக்கிறார்கள் அதிலும் காடவராயர் குடும்பத்தினர் வம்சாவளியை அதிகமாக வாழ்கிறோம் இங்கு வந்து நிறுபித்து காட்டுங்கள்

    ReplyDelete
  14. மலையமான்களாகிய எங்களையும் இவனேங்க கள்ளன் கள்ளன் என்கிறார்கள் நாங்கள் காலம் காலமாக நத்தமன் மலையமான் சுருதிமான் ஒரே குடியாக இருக்கிறோம் வரலாறுகளில் மலையமான் என்கிற பெயர் அதிகம் இருப்பதால் அந்த இனிசியல் வேண்டும் என கேட்கும் ஒரு கேடுகெட்ட கூட்டத்தை வலைதளங்களில் பார்க்கிறோம்....இப்போது காடவர் அடுத்து வன்னியர் பக்கம் வருவானுங்க இங்கு எல்லோருமே உலகத்தின் மூத்த குட தமிழினம் என சொல்ல காலம் இருந்தும் அடுத்தவர் குடி பெருமை திருடுவதில் போவது கேவலம்..அவர் அவர் குடியை தாண்டி பேசுவதுதான் சாதிவெறி .‌.குடிகளாக பிரிவது கட்டுப்பாடான சமூக வளர்ச்சிக்கு மட்டுமே..

    ReplyDelete
  15. Kallar kula thorzhial etha aduthava varlara thidrthu atha kallar peru

    ReplyDelete
  16. பல்லவ நாட்டிலிருந்து தொடங்கி தமிழக வடமாவட்டங்களில் பரவி தஞ்சை,திருவாரூர்,நாகப்பட்டினம்,கந்தர்வககோட்டை, புதுக்கோட்டை, மதுரை,நெல்லை,இராமநாதபுரம் கன்னியாகுமரி. ...வரை பரவி விரவியவர்கள் ..காடவர்கோன்,காடவர்கோன்,கார்ட்,காடுவெட்டி எனும் பட்டப்பெயர்கள் கொண்ட கள்ளர்.
    தஞ்சை மாவட்டத்தின் விண்ணமங்கலம், கஆடவரஆயன்பட்டஇ,புதுக்கோட்டை என ப்பெருமளவில் காடவராயர்கள் வாழ்கின்றனர்.
    அவர்களுக்கெல்லாம் அரசர்களாக,படைத்தளபதி களமாக,அமைச்சர்களாக,மன்னர்களாக,படை வீரர்களாக ,நாயன்மார்களில் விளங்கியவர்கள் காடவராயர்கள்.
    தஞ்சை விண்ணமங்கல காடவராயர்களுக்கெல்லாம் மன்னர், புதுக்கோட்டை மாமன்னர் இரகஉநஆத ராஜா தொண்டைமான் அவர்களே.
    எங்களுக்கெல்லாம் கோட்டை என்றால் அது புதுக்கோட்டை தான். மன்னர் என்றால் மாமன்னர் தொண்டைமான் அவர்களே.

    ReplyDelete